Jump to content

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்!

z_p16-SLC-720x450.jpg

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர், மற்றும் இத்தொடரில் விளையாடும் வீரர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

இத்தொடரில் கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ளை என நான்கு அணிகள் விளையாடுகின்றன. இதில் தம்புள்ளை அணிக்கு அஞ்சலோ மெத்தியூசும், கொழும்பு அணிக்கு தினேஸ் சந்திமாலும், கண்டி அணிக்கு திமுத் கருணாரத்னவும், காலி அணிக்கு லஹிரு திரிமன்னேவும் தலைமை தாங்குகின்றனர்.

கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திமுத் கருணாரத்னவின் மீது தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உலகக் கிண்ண அணியில் திமுத் கருணாரத்ன இடம்பெறுவார் எனவும், ஒருவேளை அவர் அணித்தலைவராகவும் செயற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் திமுத் கருணாரத்ன சர்வதேசத்தில் நடைபெறும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், இத்தொடர் முடிவடைந்தவுடன் உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்படுமெனவும், திமுத் கருணாரத்ன அணித்தலைவராக செயற்படுவாரா இல்லையா என்பது தெரியவரும் எனவும் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு, வீரர்களுக்கு மத்தியில் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த தொடரிலிருந்து சில முக்கிய வீரர்கள் உபாதை காரமணாக வெளியேறியுள்ளனர். இதில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ள சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன மற்றும் தசுன் ஷானக விலகியுள்ளதுடன், அசேன் பாண்டாரவும் உபாதை காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிரிக்கெட் சபையின் அனுமதியை அடுத்து ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, சுப்பர் ப்ரொவின்சியல் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தொடரில் முதல் இடம்பெரும் அணிக்கு கிண்ணம் மற்றும் ஒரு மில்லியன் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், இரண்டாவது இடத்திற்கு கிண்ணம் மற்றும் 750,000 ரூபாய் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

உலகக்கிண்ண தொடருக்கு முன்னர் நடைபெறும் இத்தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களே, உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிப்பர். ஆகையால் இத்தொடர் ஒவ்வொரு வீரருக்கும் மிக முக்கியமான தொடராக அமையவுள்ளது.

 

http://athavannews.com/பெரும்-எதிர்பார்ப்பை-ஏற்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாழ்ப்பாணம்.. திருகோணமலை.. மட்டக்களப்பு.. வவுனியா... முல்லைத்தீவு.. மன்னார்.. கிளிநொச்சி ஆக்கள் கிரிக்கெட் விளையாடவே மாட்டினமோ..??!🙄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.