Jump to content

மலரும் நினைவுகள் ..


Recommended Posts

1 hour ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

 

46 minutes ago, suvy said:

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... 

எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂 

Link to comment
Share on other sites

  • Replies 828
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

சிறி, இந்த தட்டி வான் அனுபவங்கள் மறக்கமுடியாதவை. இதை எழுதலாமா என்று தெரியவில்லை, தட்டி வானிலும், ட்ராக்டர் இலும் பெடியல் அடிக்கடி ஏறி இருக்கக்கூடாது என்று ஊரில் சொல்லுவார்கள். அப்பிடி இருந்தால் சந்ததி வராது என்று வெருட்டுவாங்கள்😄 இதில் அடிக்கடி போற சில பெடியல் பயத்தில் நின்றுகொண்டு போவாங்கள். இது சாவகச்சேரி நெல்லியடி ரூட் இலும் கொடிக்காமம் நெல்லியடி ரூட் இலும் பிரபலம். சங்கானை, அச்சுவேலி பக்கமும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இங்கே அமெரிக்காவில் இருக்கும் school busஉகள் இதே போன்ற ஒரு முன்பக்க தோற்றத்தை கொண்டிருக்கும் ஆனால் புதிதாக இருக்கும் 

நீர்வேலியான்.... தட்டி வானில், ஜட்டி போடாமல் ஏறினால்  தான்... 
பெடியளுக்கு,  சந்ததி விருத்தி இருக்காது என நினைக்கின்றேன்.:grin:
அங்குள்ள வெக்கைக்கு... சாரத்துடன்  ஜட்டி போடாமல், இருப்பது ... தனி சுகம்.
அதனை... வார்த்தையில்... வர்ணிப்பது மிகவும் கடினமானது.😀 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி,
உண்மையாக.... நீங்கள், கந்தர் மடத்தை சேர்ந்தவரா?
உங்களை... இந்தத், திரியில்.... காண்பதை.. இட்டு... மகிழ்ச்சி அடைகின்றேன். 😀

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

7 hours ago, நீர்வேலியான் said:

இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை 

நாங்கள் பட்டா என்று சொன்னதாக ஞாபகம் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நீர்வேலியான்.... தட்டி வானில், ஜட்டி போடாமல் ஏறினால்  தான்... 
பெடியளுக்கு,  சந்ததி விருத்தி இருக்காது என நினைக்கின்றேன்.:grin:
அங்குள்ள வெக்கைக்கு... சாரத்துடன்  ஜட்டி போடாமல், இருப்பது ... தனி சுகம்.
அதனை... வார்த்தையில்... வர்ணிப்பது மிகவும் கடினமானது.😀 🤣

சிறி, இதுக்கு ஷாக் absorber என்ற ஒன்று இருக்கிறமாதிரி இல்லை, இதன் குலுக்கல் அந்தமாதிரி, அதனால் இப்பிடி சொல்லுவது என்று நினைக்கிறேன். உங்கள் ஜட்டி அனுபவம் புல்லரிக்க வைக்குது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டம் செய்த காலங்களில் அனேகமாக நான் தான் துலா மிதிப்பது.இரண்டு பக்கமும் பிடிப்பதற்கு வசதியிருந்தும் கை பிடிக்காமலே அங்கும் இங்கும் நடப்பேன்.
சில வருடம்களின் பின் றொபின் என்னும் நீர் இறைக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து வந்தது.வந்த புதிதிலேயே வாங்கிவிட்டோம்.நல்லதொரு இயந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

எட்டுக்கோடு என்று சொல்லுவது உண்டு..... நானெல்லாம் எட்டுக்கோடு , கொக்கான் வெட்டுதல், பாண்டி விளையாடுதல் எல்லாத்திலும் சாம்பியன் தெரியுமா.....!   😇

நானும் இந்த விளையாட்டுகளை பெண்கள் போன்று விளையாடி இருக்கிறேன் 😃 மறக்க முடியாத காலங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nilmini said:

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

ஓ உங்கடை வீட்டில தான் பீட்சா கட் (Pizza Hut)திறந்திருக்கிறீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தோட்டம் செய்த காலங்களில் அனேகமாக நான் தான் துலா மிதிப்பது.இரண்டு பக்கமும் பிடிப்பதற்கு வசதியிருந்தும் கை பிடிக்காமலே அங்கும் இங்கும் நடப்பேன்.
சில வருடம்களின் பின் றொபின் என்னும் நீர் இறைக்கும் இயந்திரம் ஜப்பானில் இருந்து வந்தது.வந்த புதிதிலேயே வாங்கிவிட்டோம்.நல்லதொரு இயந்திரம்.

அண்ணை நீங்கள் துலாவில் பரத நாட்டியம் ஆடி இருக்கிறீங்கள். நானும் ஏறி இருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் பயமாக இருக்கு. அப்பொழுது பக்கத்து வீடு, முன் வீடு, கோவிலடி, பக்கத்து ஊர் என்று சொல்லிக்கொள்ளாமல் போவது எல்லோருக்கும் சாதரணமாக இருந்தது. மழையால் முட்டி இருக்கும் குளத்துக்குள் குதிப்பது , நீந்துவது இயல்பாக இருந்தது. இங்கை இப்ப நாங்கள் எங்கள் பிள்ளைகளை வீட்டின் முன்னாள் இருக்கும் ரோட்டில் தனியாக விளையாட விட முடிவதில்லை.
 றொபின் ஞாபகம் உள்ளது. ஊசிலி என்று ஒரு இயந்திரம் ஆரம்பகாலங்களில் famous. இதை கைகளால் தொடர்ந்து சுழட்டுவதான் மூலமே startபண்ண முடியும்.Alcon என்ற ஒரு வகையும் பாவிப்பார்கள். இவை எல்லாம் பெரியவை. பிற்காலதில் வந்தவை horse power குறைந்தவை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கூடுதலாக பெட்டைகள் அப் ஓ டவுன் என்று விளையாடுவார்கள்.

1 hour ago, nilmini said:

நாங்கள் பட்டா என்று சொன்னதாக ஞாபகம் 

6 hours ago, மல்லிகை வாசம் said:

 

எங்களூரில் எட்டுப்பெட்டி என்று சொல்வார்கள்... நம் மண்ணுடன் உறவாடிய இனிய நினைவுகளை மனதில் கொண்டுவரும் ஒரு விளையாட்டு. 🙂 

இப்பொழுது சிறிது ஞாபகம் வருது. சிப்பி கோடு என்றும் சொல்லுவதுண்டு. நினைவுகளை இரைபோட உதவிய எல்லோருக்கும் நன்றி. இந்த காலங்களை, இச் சூழ் நிலைகளை இனி எமது வாழ்க்கையில் காணமாட்டோம் என்பது மனதுக்கு பாரமாக இருக்கு. எமது பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இப்படித்தான் வாழ்ந்தார்கள், இப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போகப்போகிறது.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நீர்வேலியான் said:

ஊசிலி என்று ஒரு இயந்திரம் ஆரம்பகாலங்களில் famous. இதை கைகளால் தொடர்ந்து சுழட்டுவதான் மூலமே startபண்ண முடியும்.Alcon என்ற ஒரு வகையும் பாவிப்பார்கள். இவை எல்லாம் பெரியவை. பிற்காலதில் வந்தவை horse power குறைந்தவை 

இது பெருந்தோட்டக்காரருக்குத் தான் சரி.அதோடு சைக்கிளில் கொண்டு திரிய முடியாது.சிறியதொரு மாடும் இழுப்பதற்கு தேவை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ உங்கடை வீட்டில தான் பீட்சா கட் (Pizza Hut)திறந்திருக்கிறீர்களோ?

இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு 1.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

இல்லை அப்படியே பழமையை பாதுகாத்து வைத்திருக்கிறோம். இதுதான் வீடு 1.jpg

ஈழப்பிரியன் நாக்கிளி புளுதான் கொழுவினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 2:59 AM, மல்லிகை வாசம் said:

மூக்குப்பேணிlarge_view.jpeg.5c23c3bad5776f4882f6df923e151542.jpeg

எனக்கு மிகவும் பிடித்த மூக்கு பேணி

  • Like 1
Link to comment
Share on other sites

12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

chengijpg

தோழர் , படத்தில் வரிசையாக காணப்படுவது ராஜாக்கள் காலத்தில் யானை , குதிரைகளை கட்டி வைக்கும் லயங்களாகும் , மலையக மக்களின் பரிதாப வாழ்வு புலனாகிறது ..😢

தேயிலை உற்பத்தி மூலம் சிறிலங்கா ஈட்டும் வருமானத்துக்கு இந்த சிங்கள அரசு எவ்வளவோ செய்திருக்கலாம். அவர்கள் தமிழர்களாக இருப்பதாலோ என்னவோ இன்று ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு கூட எத்தனை போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

3 hours ago, nilmini said:

எனக்கு மிகவும் பிடித்த மூக்கு பேணி

சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம்.

அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்! 

Link to comment
Share on other sites

6 hours ago, நீர்வேலியான் said:

இந்த காலங்களை, இச் சூழ் நிலைகளை இனி எமது வாழ்க்கையில் காணமாட்டோம் என்பது மனதுக்கு பாரமாக இருக்கு. எமது பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இப்படித்தான் வாழ்ந்தார்கள், இப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போகப்போகிறது.   

ம்... இப்படி ஏராளமான விடயங்களை இழந்துவிட்டோம்.  புலம்பேயர்ந்து பெரும் கலாச்சார, சமூக மாற்றத்துக்குள் சிக்கித் திண்டாடுவது பெரும் வேதனை. 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மலரும் நினைவுகளை மீட்டிய கள உறவுகள் அனைவர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். .😍

SY28PLA3.jpeg

இந்த விளையாட்டை நான் சின்னவயசிலை விளையாடேக்கை.....கிட்டத்தட்ட ஒரு பெரிய லொறியை வைச்சிருக்கிறமாதிரித்தான் என்ரை கூட்டுவள் பாப்பினம்......😎

நான் ஒருக்கால் ஓடிப்பாத்துட்டு தல்லாம் எண்டு கடன் வேறை கேப்பினம்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

சில வருடங்களுக்கு முன் எனது உறவினர் ஒருவருக்காக (அவர் இப்படியான அருகிவரும் பொருட்களைச் சேகரிப்பவர்) யாழில் தேடியலைந்து வாங்கிய ஞாபகம்.

அப்போது சில கடைக்காரர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்! 

பழமைக்கு ஊரில் இப்ப இடமில்லை

10 hours ago, நந்தன் said:

ஈழப்பிரியன் நாக்கிளி புளுதான் கொழுவினார்.

நாக்கிளி புழுவுடன் இருந்தால் சரி  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nilmini said:

ஓம் கந்தர்மடம் தான். ஆலடி சந்தி பலாலி வீதி. உங்களை இந்த களத்தில் சந்தித்தது மகிழ்ச்சி . நீங்களும் அந்தப்பக்கமோ ?

நானும் அந்தப் பக்கம்தான்.. பழம் றோட்  பிள்ளையார் கோவிலுக்கு பக்கத்தில் வீடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெருவுல விளையாடுற கோலிய தேடினால் விராட் கோலி வாற கொடுமை.. ஓ.. மை..🤔

6-1533297274.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für white enamel tea cupதேனீர் குடிக்கும்.... எனாமல் கப்.
ஒருக்கால்... கீழே விழுந்தால், அதன்  வெள்ளை நிறம் போய்... அழகு கெட்டு விடும். 

Link to comment
Share on other sites

15 minutes ago, ஜெகதா துரை said:

Image associée

இதால மாங்காய்  அடிச்ச  அனுபவம் யாருக்கு இருக்கு?

இதை ஊரில் குருவிகளை விரட்டவும் பயன்படுத்துவார்கள் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.