Jump to content

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விவரங்கள் வழங்காத புள்ளி விவரங்கள்

காரை துர்க்கா / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:54 Comments - 0

தமிழ் நாட்டுக் கவிஞர் ஒருவரது ‘கைகூ’ கவிதை ஒன்றை, அண்மையில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்துவிட்டது. உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். ‘பொய், பச்சைப் பொய், புள்ளிவிவரம்’ என்பதே அதுவாகும். வெறும் மூன்று வரிகளில், அழகான கருத்தை, அற்புதமாகக் கவிஞர் சொல்லி உள்ளார்.   

அப்படியே விடயத்துக்கு வருவோம். கடந்த 25ஆம் திகதி, கொழும்பு பத்திரமுல்லயில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஆளுநரால் ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட்டது. அவர், அங்கு பல விடயங்களைத் தெரிவித்து உள்ளார்.  

வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் 75 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூறியிருக்கும் கருத்து, தவறானது என ஆளுநர் தெரிவித்தார். மாறாக, அங்கு 92சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளன எனத் தெரிவித்தார்.   

சரி அப்படியே இருக்கட்டும்! ஆனால், அவ்வாறாக ஆளுநர் தெரிவிப்பது உண்மையெனின், முழுமையாக (100சதவீதம்) வடக்கு மாகாணத்தில் படையினரின் பிடியில் சிக்கியிருக்கும் தமிழ் மக்களது காணிகளது விவரம் மிகத்தெளிவாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.   

அவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களினது விவரங்களும் கிராம அலுவலர் மட்டத்திலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகம் வாரியாக, மாவட்ட அடிப்படையில் தனித்தனியே வெளிப்படுத்தப்பட வேண்டும்.   

அவற்றில் அரசாங்கத்தின் காணிகள், தனியார் காணிகள் என்ற வகைப்படுத்தலும் வேண்டும். முக்கியமாகத் தமது பரம்பரைக் காணியை இழந்து, நித்தம் துன்பத்திலும் ஏக்கத்திலும் தவிக்கும் தமிழ் மக்களால், அந்தப் புள்ளிவிவரங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.   

ஆகவே, இதுவரை விடுவிக்கப்பட்ட 92 சதவீதமான காணிகள் எவை, இன்னமும் விடுவிக்கப்பட வேண்டிய மிகுதி எட்டு சதவீதமான காணிகள் எவை என இலகுவாக அனைவராலும் கண்டறியக் கூடியதாக இருக்க வேண்டும்.   

இவ்வாறான தெளிவுபடுத்தல்கள், வெளிப்படுத்தல்கள், இலகுபடுத்தல்கள் என்பன எவையுமே இல்லாது, வெறுமனே வடக்கில் 92 சதவீதமான காணிகள் இதுவரை படையினரால் விடுவிக்கப்பட்டு உள்ளன என்றால், அந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை எவ்வாறு அளவிடலாம்?   

இதே வேளை, கடந்த 29ஆம் திகதி, ஆளுநரின் ஒழுங்குபடுத்தலில் ஆளுநரின் தலைமையில் முதல் முறையாக வடக்கு மாகாணத்தில் (வவுனியாவில்) பௌத்த மாநாடு நடத்தப்பட்டு உள்ளது. அங்கு வடக்கில் பௌத்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மதங்களுக்கூடாக நல்லிணக்கப் பொறிமுறைகள் எனப் பல விடயங்கள் ஆராயப்பட்டு உள்ளன.   

image_f711ca68e5.jpg

வவுனியா தெற்கில் மாநாடு (மதங்களினூடாக நல்லிணக்கம்) நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், வவுனியா வடக்கில், பாரியளவில் காடுகள் அழிக்கப்பட்டு, பெரும்பான்மையினக் குடியேற்றங்களுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.   

பௌத்த மதத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருக்கையில், இந்து, கிறிஸ்தவ மக்களது (வவுனியா வடக்கு வாழ் தமிழ் மக்கள்) பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.   

வீட்டுத்திட்ட வேலைகளுக்காக சிறு தடி வெட்டினாலே காடழிப்பு எனத் தமிழ் மக்கள் மீது பாயும் சட்டம், தற்போது மௌனம் காக்கின்றது. மேலும் ஒரு மாவட்டத்தின் இரு முனைகளில் முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்த இரு விடயங்கள் அரங்கேறுகின்றன.   

இவ்வாறாகத் தமிழ் மக்கள், கடந்த காலங்களில் இழந்த, தற்போது இழந்து கொண்டிருக்கின்ற, இனியும் இழக்கப்போகின்ற காணிகளது விவரங்கள் எங்கே கணக்கு வைக்கப்படுகின்றது?  

தனி மனித கௌரவம், தனது இனத்தினுடைய கௌரவம், தனது மதத்தினுடைய கௌரவம் என்பன அடிப்படை மனித உரிமைகளில் முதன்மையானவை. நிம்மதி இழப்பதற்கான முதல் காரணமே, நிலத்தை இழப்பதாகும்; நிலத்தைத் தொலைத்தலே ஆகும்.   

விவசாய விரிவாக்கம், நீர்ப்பாசன விரிவாக்கம், நகர விரிவாக்கம் எனப் பல்வேறு போர்வைகளில் 1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை, தொடர்ச்சியாகத் தமிழினம் தனது நில(சுய)த்தை இழந்து வருகின்றது.   

தமிழ் மக்களது காணிகளைச் சிங்களப் படையினரோ, சிங்கள மக்களோ என எவர் ஆக்கிரமித்தாலும் அது அராஜகமும் அத்துமீறலுமாகும். இவை இரண்டையுமே தமிழ் மக்கள் ஒன்றாகவே பார்க்கின்றார்கள். எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?  

எனவே, கடந்த காலங்களில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படுவது மட்டும் விடுவிப்பு அல்ல. மாறாகச் சிங்களக் குடியேற்றங்களும் விடுவிக்கப்பட வேண்டும். பெரும்பான்மையின குடியேற்றங்களுக்காக ஒர் இரவில் தங்கள் ஊரை விட்டு, வற்புறுத்தித் துரத்தப்பட்ட தமிழ் மக்கள் கூட, நாதியற்றவர்களாக இன்றும் அலைந்து வரும் சூழ்நிலையே தொடர்கின்றது.   

தமிழ் மக்களது வேண்டுகைகள், வேண்டுதல்கள் இவ்வாறு இருக்கையில் மீண்டும் மீண்டும் பெரும்பான்மையின மக்களைக் கூட்டிவந்து, குடியேற்றங்களை நிறுவி, அத்துமீறல்களையே தமிழ் மக்கள் மீது அரசாங்கம் நடத்துகின்றது. தமிழ் மக்கள் தங்கள் பரிதவிப்புகளைக் கூறுகையில், அதற்குப் பதில்களைக் கூட வழங்காது, காரியமே கண்ணாகச் செயற்படுகின்றார்கள்.  

மேலும், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009 மே மாதம் வரை, தமிழ் மக்கள் நன்கு அறிந்திராத தொல்பொருள் திணைக்களம், இன்று தமிழ் மக்களால் அச்சத்துடன் பார்க்கப்படும் திணைக்களமாக உருவெடுத்துள்ளது.   

அடுத்து, வடக்கு மாகாணத்தின் உண்மையான நிலைவரத்தை அறிய, புலம்பெயர்ந்து உள்ள தமிழர்கள் மீண்டும் வடபகுதி வர வேண்டும் என வடக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அதற்கான வசதிகளைச் செய்து தருவதாகவும் தெரிவித்து உள்ளார்.  

புலம்பெயர் தமிழர்கள் கோவில் விழாக்கள், நண்பர்கள், உறவினர்களின் சுப காரியங்கள், துயர காரியங்கள், ஏனைய வைபவங்கள் என்பவற்றில் கலந்து கொள்ளும் பொருட்டு வந்து செல்கின்றார்கள்.   

இதனைவிட, இன்றைய தொழில்நுட்ப வசதிகள் மூலம், இங்குள்ள புதினங்கள் அங்கு சில நொடிகளில் சென்றடைந்து விடுகின்றன. ஆனால், ஆளுநர் கூறுவது போல இங்கு வந்து பார்க்க என்ன இருக்கின்றது?   

முல்லைத்தீவு, கேப்பாபுலவில் தங்களுடைய பிறந்த மண்ணை மீட்க ஆண்டுக்கணக்கில் வீதியில் தவம் இருக்கும் மக்களைக் காணவா? தாங்கள் ஒப்படைத்த த(எ)ங்கள் உறவுகள் எங்கே என கிளிநொச்சியில் வீதியில் ஒப்பாரியிடும் அப்பாவி மக்களைக் காணவா?   

மன்னாரில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்தாலும் அது தமிழ் மக்களுடையவை அல்ல 300 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்ற அறிக்கையை பார்க்கவா? வவுனியாவில் வேகமாக சிங்களத்துக்கு உருமாறும் தமிழ்க் கிராமங்களைக் காணவா? வாள் வெட்டில் வாயடைந்(த்)துப் போயிருக்கும் யாழ்ப்பாணத்தைக் காணவா? இவை துன்பங்களின் சில துளிகள் மாத்திரமே ஆகும்.  

அல்லது, இதனை விட மேலும் பல உடல், உளக் காயங்களுடன் கண்டு கொள்ளப்படாது இருக்கும் கிழக்கு மாகாணத்தைக் காணவா? இதுவே ஈழத்தில் தமிழர்களின் உண்மை நிலைவரம். இதனைத் தமிழ் மக்கள் சொல்வதே உண்மை; அதுவே செய்தி. நாங்கள் (தமிழ் மக்கள்) நன்றாக இருப்பதாக ஏனையோர் சொன்னால் அது வெறும் வதந்தி.   

தமிழ் மக்கள் புறத்தே ஆனந்தமாக இருப்பதாகக் காணப்பட்டாலும் (காட்டிக்கொண்டாலும்) அகத்திலே அதிர்ந்து கொண்டே இருக்கின்றார்கள். 

இவ்வாறாகப் போருக்குப் பிந்திய பத்து ஆண்டு காலங்களில், தமிழ் மக்களது அபிலாஷைகள், உள்ளக்கிடக்கைகள் எவராலுமே கண்டு கொள்ள முயற்சிகள் கூட எடுக்காததே பெருந்துயரம் ஆகும்.   
மூன்று தசாப்த யுத்தத்தை முடித்தவர்கள் என்று (தற்)பெருமை பேசுபவர்கள் ஒரு தசாப்த காலமாக (2009 - 2019) நல்லிணக்கம், தீர்வுத்திட்டம், புதிய அரசமைப்பு எனப் பல்வேறு வார்த்தை ஜாடைகளில் ஏமாற்றுகின்றார்கள். ஆனால் உண்மையில், இவர்கள் இவை எவற்றிலுமே, அக்கறை அற்றவர்கள் என்பதையும் தமிழ் மக்கள் நன்கு அறிவர்.   

பொதுவாக ஏழைகள், நோயாளிகள், பலவீனமானவர்கள் போன்றோர் மீது அனைவருமே அன்பு பாராட்டுவார்கள்; பாராட்ட வேண்டும். இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன.  ஆனால், கொடூரப் போர் தந்த விளைவுகள், இன்று தமிழ் மக்களை மேலே உள்ள அனைத்து நிலைகளிலும் வாழ நிர்ப்பந்தித்துள்ளது. வாழ்க்கையினுள் துன்பம் துன்பத்துக்குள் வாழ்க்கை எனச் சக்கரம் போல சுழலுகின்றது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விவரங்கள்-வழங்காத-புள்ளி-விவரங்கள்/91-231618

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) KKR     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
    • இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை........ ஆயினும் எங்கு பார்த்தாலும் ஆண்கள் குடித்துவிட்டு புரளுவதும் பெண்கள் ஆலயம் ஆலயமாய் அலைவதும்தான் எல்லோருக்கும் தெரிகின்றது ......அதுதான் ஆண்களின் சார்பாய் எனக்கு வேதனை தருகின்றது.......!  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.