Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவன தடங்கள் 🐪 ...................................🐫🐫🐫

2003 உயர்தர பரீட்சை  ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்ததுஎப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி  போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது  . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அதுஅதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது  மாவிலாறு பகுதியில் சமாதான  புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல்  கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்)

இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது   போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது  அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள்  எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது .

விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன்  ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் .

அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன்அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு  விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு .

தொடரும்.....  🐫🐫🐫

 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த நேர நிலை அப்படி யார் யார் பிள்ளைகளை கடத்தி செல்கிறார்கள் என்ற நிலையில் பெற்றவர்கள் என்னதான் செய்யலாம் சொல்லுங்கள்  கவலை கஸ்ரம் தந்து என்னை ஓர் சமுதாயத்திற்கும் வாழ்க்கையெனும் பாடத்தை அணுஅணுவாக செதுக்கியும் விட்டது 

கருத்துக்கு நன்றி ஏராளன்

22 hours ago, நீர்வேலியான் said:

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

ம்ம் இருக்கலாம் ஆனால் கிழக்கிலிருந்து மத்திய கிழக்குக்கு வேலைக்காக சென்றவர்களுக்கு இது புரியும்  மிக்க நன்றி நீர்வேலியான் அவர்களுக்கு

22 hours ago, suvy said:

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

ஊக்கத்திற்கு நன்றி சுவி அண்ணா

 

21 hours ago, குமாரசாமி said:

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 

நன்றி குமாரசாமி அண்ணை 

 

21 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 

ம்ம் தொடர்ந்து பந்திகளாக வந்து முழுமை பெறும் நன்றி உங்கள் கருத்துக்கும் ஊக்கம் கொடுத்தலுக்கும்

 

21 hours ago, nedukkalapoovan said:

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

ம்ம் நிறைய சம்பவம் இருக்கு நெடுக்ஸ் நன்றி தல

 

19 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா...!

நன்றி புங்கையூரான் 

 

17 hours ago, நிலாமதி said:

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

நன்றி நிலா அக்கா  வரும் வரும் பந்திகளில் கண்ணீர் வரலாம் 

 

4 hours ago, putthan said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

நன்றி புத்தன் அண்ணா

 

3 hours ago, நந்தி said:

நல்லதொரு அனுபவப் பகிர்வு,நல்ல உரைநடையில்.தொடரட்டும் உங்கள் ஆக்கம்.

நன்றி கிழக்கு பேச்சு தமிழ் புரியும் என நினைக்கிறேன் நன்றி கருத்துக்கு 

 

அனைவரின் ஊக்கத்திற்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

✈️✈️✈️

விமான நிலையத்தில் என்னுடன் சேர்ந்து ஒரு 30 பேர் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள் எல்லோரும் என் வயதை ஒத்தவர்கள் அந்த நாட்டு காசு மாற்றி எல்லோரிடமும் வெறும் 50 திர்ஹம் மட்டும்  இருந்தது. என்னைப்போலவே வயல்காணிகளையும் , வீடுகளையும் விற்று வந்தவர்ளும் மற்றும் பிள்ளை பிடித்தலில் இருந்து தப்பித்து வந்தவர்களும் படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும்.

 விமான நிலைய உள்ளக சம்பவங்களை கண்டதும் நாங்கள் எங்களை மறந்து போனோம். விமானம் ஏர்லங்கா அழைப்பு கொடுக்கிறது  அடிமாடுகளாய் செல்ல போகும் அடிமைகளே அனைவரும் வருக வருக என.

வாருங்கள் வாருங்கள் உங்களை இன்னொரு நாட்டுக்கு விற்க ஆவலாக உள்ளோம் எனவும். எல்லோரும் உள்ளே சென்றோம் முதல் விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். எல்லாச்சாமிகளும் ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து விளையாடிப்போனார்கள் . விமானம்  பறக்க ஆரம்பமானது உச்சியை தொடும் வரை கொஞ்சம் நெஞ்சில் தண்ணீ இல்லை எல்லோருக்கும்.

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம் எல்லோரும் . விமானத்தில் சாப்பாடும் கொஞ்ச தண்ணீரும் சோடா பானங்கள் கொடுக்கப்பட்டது குடித்துவிட்டு அந்த விமான பெண்களை அழைக்கும் ஒரு சுவிட்ச் இருந்தது அதை அவர்களை அழைப்பதென்று தெரியாமல் இவனுகள் எல்லோரும் அவளை காண்பதற்க்காகவா? இல்லை தெரியாமல் அழுத்துகிறார்களா!!!! என்று தெரியாமலே அழைத்துக்கொண்டிருந்தானுகள் சிலர் அவளிடம் பியர் வாங்கி குடிப்பதற்க்காகவும் அழுத்திக்கொண்டே இருந்தானுகள்.

அவளோ சிரித்து வந்து ஏசிப்போனாள் மணித்தியாலங்கள் செல்ல செல்ல ஊரும் உறவினர்களும் ஞாபகத்திற்குள் வந்து விட்டார்கள் விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. விமானம் தரை இறங்கியதும் வெள்ளைக்காரன் போய் கெப்டனை (பைலட்டை) கட்டி அணைத்து நன்றி சொல்லி இறங்கி சென்றான் நானும் தங்கியூ கெப்டன் என்று சொல்லி விமானநிலையத்தினுள் உள் நுழைகிறேன் வெல்கம் துபாய் என்ற அழைப்பும் அரபு மொழியும் ஆங்கிலமும் கலந்து வரவேற்றது . ஆங்கிலம் புரிந்தது ஆனால் அரபியோ சுத்தமாக ஒன்றுமே புரியல.

கண்ணிலிருந்து, கைரேகை வரைக்கும் பதிவு செய்து எல்லாம் சரி செய்த பின்னரே வெளியே விட்டார்கள் வெளியே வந்து பார்த்தால் சரியான வெயில் நம்ம ஊரில் பாண் செய்யும் போறணைக்குள் (பேக்கரி) இருக்கும் தணலில் தூக்கி போட்டமாதிரி இருந்தது. எங்களுக்கு என்னடா இப்படி வெயிலா இருக்கு என்று ஆளாளுக்குள் பேசிக்கொண்டாலும் எங்களை அழைத்து செல்ல நாங்கள் வந்த ஒப்பந்த கம்பனிகாரர்கள் வரவில்லை இரண்டு மணிநேரமாக காத்திருக்க போட்டு வந்த சேட் எல்லாம்  வியர்வையால் (உருகி) நனைந்து நனைந்து  ஈரமாகிகொண்டே இருந்தது.

தொடரும்..........ð«ð«ð«

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

Link to comment
Share on other sites

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

✈️✈️✈️

...

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம்...

...

...விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது...

...

முனிவர்ஜீ,

இந்த வெளிப்படை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு..

****

இருப்பத்தோரு வருடங்களுக்கு முன் நானும் இதையே தான் அனுபவித்தேன். அப்பொழுது சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இல்லையென நினைக்கிறேன்..

எனது வேலைக்கான நிறுவனம் விசா, மற்றும் பயணத்திற்கான டிக்கட்டை கல்ஃப் ஏர் (Gulf Air) மூலம் ஏற்பாடு செய்திருந்தது. நான் சென்னை வந்து 'மான்டியத்' சாலையிலிருந்த 'கல்ஃப் ஏர்' விமான அலுவலகத்திற்கு போனால், "நீங்கள் பாம்பே மூலம் கத்தார் தோஹா சென்று அங்கிருந்து துபாய் செல்லவேண்டுமென" விமான டிக்கட்டை பதிவு செய்து கொடுத்தனர்.

வேறு வழியின்றி ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி, பாம்பேக்கு மாலை 4 மணியளவில் சென்றடைந்தேன். மறுநாள் அதிகாலை 03:50 க்கு தோஹா செல்ல கல்ஃப் ஏர் விமானம்.

என்ன செய்வது..?

பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது..

வட இந்தியா எனக்கு புதுசு..

எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார்.

நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, "எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்..? என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே..?" என ஆங்கிலத்தில் கேட்டேன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்..?" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. "இந்தி தெரியாது" என்றேன்..

"ஆர் யூ இன்டியன்..?" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்..

மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார்.

இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன்.

(இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.)

****

விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்..

கடல்போல் மணல் திட்டுகள்..! அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்..!!

தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி..

ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி..

வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு..!

ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று..!!

இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்..!

நீங்கள் அடிக்கடி கேட்கும் ரஷிதியா மற்றும் ரிக்கா ரோடுக்கும் செல்கிறேன்..!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவன வாழ்க்கை மனதிலும்  வெளியிலும் சோதனையாகத்தான் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

ஒவ்கோர்ஸ் ....அவுஸ்,கனடா ,யுரோப் எல்லாம் கூல் லைவ் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

 

இருக்கு இருக்கு நிறைய சங்கதிகள் இருக்கு 

 

20 hours ago, nunavilan said:

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மறக்க முடியாத தடங்கள் அவை நூணா

 

19 hours ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ம்ம் என்ன வாழ்க்கையென நினைத்து வெறுத்த நாட்களாக அமைந்த நாட்களாக இருந்தது

21 hours ago, suvy said:

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

என்ன்னை மாற்றியதும் பொறுமை கற்றுக்கொடுத்தும் போனது அதான் பழகிடுச்சிண்ணே

 

12 hours ago, ராசவன்னியன் said:

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

 

ஹாஹா நல்ல சம்பவம் நீங்களும் இந்த தடங்களுக்குள் இருக்குறீர்கள் ராசவன்னியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை மணிநேரத்தின் பின்பே நாங்கள் வந்த விசா பொறித்த வான் ஒன்று வந்தது வந்த அந்த வானில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். ஸ் ரீ லங்காவில் இருந்து வந்த நீங்களா? என கேட்டு அத்தனை பேரிடமும் முதலில் பாஸ்போட்டை பறித்துக்கொண்டார். பறித்துக்கொண்ட பின்பே அதனை ஒவ்வொன்றாக சரிபார்த்துவிட்டு வாகனத்தினுள்ளே ஏற்றினார். வாகனம் குளிரூட்டப்பட்டிருந்தது நிம்மதியான பெருமூச்சு விட்டு எல்லோரையும் மீண்டும் எண்ணி சரிபார்த்து வாகனம் புறப்பட்டது. நகர்களை பார்த்தால் எல்லாம் கண்ணாடிகளால் ஆனதாகவே இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் அழகிய கானல் நீர் கரை புரண்டு ஓடும் தார் சாலைகள் இரு மருங்கிலும் அழகான பூ மரங்களென மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அந்த பாலைவனத்தில் மிளிரும் துபாய் நாடு.

சுமார் ஓர் மணி நேரம் சென்ற பிறகு எங்கோ ஓர் தூரத்தில் நகர்கள் மொதுவாக மறைந்து செல்ல செல்ல மணல் மேடை ,மணல் குவியல்கள் சூழ்ந்த சிறிய பாலைவனச் செடி நிறைந்த ஒட்டிய பகுதியில் இருந்த கம்ப் (Camp) ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே இறக்கிவிட்டு ஒரு தமிழர் (இந்தியர்) இவர்களுக்கு றூமை கொடு என்று சொல்லிவிட்டு என்ன வேலை? எத்தனை மணிக்கு வரவேண்டும்?  எந்த தகவலும் சொல்லாமல் வான் பறந்தது. அவர்தான் அந்த விடுதிக்கு காப்பாளரும் கூட

வந்த களைப்பில் ஒருவன் கால் கை மேலை கழுவித்து வருகிறேன் என குளிக்கும் அறைக்கு போனவன் ஓடிவருகிறான் ஐயோ அம்மா , அப்பா காப்பாற்றுங்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என நாங்களும் பயந்து என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என விசாரிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடம்பில் நீர் மட்டும் ஊற்றப்பட்டு இருந்த்து.  சிறிது நேரம் கழிந்த பின்னர் அழுகையை நிறுத்திவிட்டு முதுகை பார்க்க சொன்னான் அவனது முதுகு தோல் மெதுவாக உரிய ஆரம்பித்தது என்னடா நடந்தது? என விசாரிக்க தண்ணீரை திறந்து முதுகை காட்டினேன் சுடுதண்ணி வந்து ஊற்றுப்பட்டதென கூறினான் அவன்.

உடனே அந்த கம்ப்(Camp)  காவலரிடம் சென்று கேட்க இப்ப ஜீலை மாதம் தண்ணி கொதிநீராகத்தான் வரும் நீங்கள் கேன்களில் பிடித்து குளிக்க வேண்டும் என்று சொன்னார் நாங்களும் அவனுக்கு சிக்னலை (பற்பசை) எடுத்து பூசிவிட்டு கொஞ்சம் இருடா என ஆளை இருத்தி விட்டு. ஒரு ரூமுக்கு எட்டு எட்டு பேராக பிரிக்கப்பட்டு அறை வழங்கப்பட்டது. நான்கு கட்டில்கள் ஒரு கட்டிலில் இருவர் இருக்கலாம் கீழும் மேலும். ஏசியை போட்டு அறையை குளிராக்கி அவனையும் அழைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டோம்.

கையில் இருந்த காசை கொண்டு கம்ப் எதிரே இருந்த மலையாளியின் கடைக்கு சென்று ஒரு ரெலிபோண் காட்டை வாங்கி ஊருக்கு அழைத்து நான் இங்கு வந்து விட்டேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு  நான் அழுது கொண்டேன் . கையில் இருந்த காசில் 20 திர்ஹம் காட் அந்த காட் முடிந்து விட்டது நான் அடுத்தமாதம் தான் இனி எடுப்பன் என கடைசி வார்த்தை சொல்லிவிட்டு மீதி இருந்த 30 திர்ஹம்(ரூபா) க்குள் எப்படி காலத்தை கடத்துவதென தெரியாமல் முழுசிக்கொண்டு இருந்தேன் .

நேரம் மாலை 6 மணியாக காகங்கள் கூடு வந்து சேர்வது போல எல்லா   வேலையாட்களும் கவலையுடனும் வேலைக் களைப்பில் வருவதும் அவதானிக்க முடிந்தது முதலில் நேபாள் காரர்கள் வந்து எட்டிப்பார்த்து விட்டு செல்ல , பிறகு வங்களாதேஷ், ஆந்திரா, கர்னாடகா, சிங்களவர்களும் களும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர் கடைசியில் நம்ம பொடியங்கள் தமிழ் பொடியங்கள் வந்திருக்கிறார்கள் என பல நூறு பேர் பொடியங்கள் ,நடுத்தர வயதானவர்கள் வந்தார்கள் எல்லோரும் என்னுடன் வந்தவர்களுக்கு பரீட்சியமானவர்கள் ஊரீல் இருந்து கொண்டு வந்த  தீன் பண்டங்களையெல்லாம் மேய்ந்து விட்டு.

ஊர்நிலமைகளை கேட்டார்கள் நிலமையை சொல்ல ஓர் தலைவனின் வழிநடத்தலில்  வந்தவர்களது அறைக்கு வேறொரு நாள் சென்ற போதே பார்க்க முடிந்தது அத்தனை பேரின் அறைகளிலும் தலைவர் நிமிர்ந்து நின்றது இப்பவும் கண்ணுக்குள் இருக்கிறது . சாப்பிட்ட அவர்கள் இங்க கவனமாக இருக்க வேண்டும் களவு எடுக்க கூடாது தனியாக செல்லக்கூடாது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரிந்த பொடியங்களுக்கு அவர்களும் 50 ரூபா கொடுத்துவிட்டு போனார்கள் செலவுக்கு  எனக்கோ அங்கே யாரையும் தெரியாது எங்க ஊர் பொடியங்கள் அங்கு யாரும் இருக்க வில்லை  போகும் போது இந்த கம்பனி கூடாது சம்பளம் குறைவு நாங்களெல்லாம் ஊருக்கு போக முடியாது என்ற காரணத்திற்க்காகதான் இங்கே வேலை செய்கிறோம் என்று சொல்லி விட்டு.

அந்த இந்த வேலையை செய்ய சொன்னால் செய்ய கூடாது உங்களுக்குரிய  அடையாள அட்டை வரும் வரைக்கும் உங்களை மேய்ச்சு போடுவாங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னானுகள். கம்பனியில் ஒருவன் இருக்கிறான் அவந்தான் எல்லாமே அவனுக்கு ஒட்டுமொத்த பேரும் நடுங்குவானுகள் நம்ம பயத்தை காட்டினால் அவன் நமக்குமேல் ஏறிவிடுவான் எனவும் அவன் பெயர் இடிஅமின் என்று சொல்லி போனார்கள்

சுமார் 2000 பேர் இருந்தார்கள் அந்த கேம்பில்(Camp)

அடுத்த நாள் காலை .............. தொடரும் 1f42b.png1f42b.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 1:02 PM, தனிக்காட்டு ராஜா said:

யாருடைய ள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. ன்னடா எனக்கு ந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் ல்லை

சண்டை தொடங்கிய நேரம் மட்டக்களப்பிலிருந்து நிறைய போராளிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பெருவாரியாக போனதாக சொன்னார்கள்.ஆனபடியால்த் தான் உங்களையும் எந்த குறூப் என்று கேட்டிருக்கிறார்கள்.கருணா குறூப் என்று சொல்யிருந்தால் அவர்களே பாதுகாப்பு கொடுத்து கொண்டு போய் விட்டிருப்பார்களே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.