Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவன தடங்கள் 🐪 ...................................🐫🐫🐫

2003 உயர்தர பரீட்சை  ஒரு படியாக 2 கொடியுடன் கையில் சேர்ந்ததுஎப்பவும் விளையாட்டுத்தான் உனக்கு என ஏச்சும் பேச்சும் காதை நிறைத்த வண்ணம் வீட்டில் ஓயாத ரேடியோ பெட்டி  போல எந்த நேரமும் ஒலித்துக்கொண்டிருந்தது. காரணம் விளையாட்டில் அதிக மோகம் ஒரு பைத்தியம் போல இருந்துவிட்டேன் அதனால் என்னவோ சமாதான காலத்தில் கிளிநொச்சி வரைக்கும் சென்று விளையாடி வர சந்தர்ப்பம் கிடைத்தது  . 2004ல் சமாதான காலம் வெள்ளைப்புறா சிறகடித்து பறந்து திரிந்த காலம் அதுஅதன் சிறகுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு , வேட்டையாட காத்துக்கொண்டிருந்தது  மாவிலாறு பகுதியில் சமாதான  புறா மெதுவாக இறக்க ஆரம்பிக்க வெள்ளைவான் ஊர்வலம் வரத் தொடங்கியது கிழக்கு வீதிகளில். யார் யார் உலா வருகிறார்கள் என்று தெரியாமல்  கண்டம் விட்டு கண்டம் பாய்வது போலும் ஊரை விட்டு அயல் முஸ்லீம் ஊர்களில் ஒழித்துக்கொள்வோம் பகல் , இரவு வேளைகளில் அந்த நாட்களில் . (காலத்தில்)

இப்படி இருக்க வேண்டாம் எங்கேயாவது போய்விடு என்று அம்மா சொல்ல கடனையும் வாங்கி ,இருந்த நகைகளையும் வித்து மத்திய கிழக்குக்கு போக தயாராகுகிறேன் . மெடிக்கல் , பாஸ்போட் என எல்லாம் கொழும்பில் வைத்து எடுத்து பயணம் 2004 ... . ....ல் ஆரம்பமாகிறது   போகும் இரவு நேரத்தில் மட்டக்களப்பை தாண்டியதும் வெடியோசைகள் காதை கிழிக்க ஆரம்பித்தது என்னவோ ஏதோ? என மனது  அடித்துக்கொண்டாலும் உயிரை தப்பித்துக்கொள்ள எங்கேயாவது ஓடிடு என்ற குரல் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது மனதுக்குள்  எல்லா சோதனைகளை தாண்டி அதிகாலை கொழும்பை அடைந்ததும் மட்டக்களப்பில் சண்டைகள் அரங்கேற்றப்பட்டு இருந்தது என்று அறிய முடிந்தது .

விமான நிலையம் போக பஸ்ஸை தவற விட்டு ஆட்டோ ஒன்றை பிடித்தாலும் விமான நிலையம் இருக்கும் அந்த பாதையோ மிக வாகன நெருசல் மிக்க தாக இருந்தது விமான நிலய அருகாமையில் இருக்கும் சோதனை சாவடியில் வைத்து என்னை மட்டும் இறக்கி நீ யாருடைய ஆள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. என்னடா எனக்கு வந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் இல்லை படித்து முடித்து விட்டேன்  ஊர்பக்கம் பிரச்சினை அதுதான் வெளிநாடு செல்ல போகிறேன் என்றேன் அவனும் ஒரு மணி நேரம் வரை வைத்துவிட்டு நாட்டை விட்டு செல்வது அவர்களுக்கு நல்லதென்று பட்டுதோ என்னவோ சரி போ என தூரம் வைத்திருந்த அப்பா, சித்தப்பாவிடம் அனுப்பினார்கள் .

அந்த நேரம் விமான நிலையம் கண்ணாடி பொருந்த்தப்படவில்லை வெறும் பலகைகளாலும் மட்டைகளாலும் வைத்து மறைக்கப்பட்டிருந்தது , அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் கையை அசைத்துவிட்டு புறப்படலாகினேன்அங்கேயும் போகும் வழியில் ஒரு நன்றாக தமிழ் தெரிந்த புலனாய்வு துறை ஒருவர் வந்து மீண்டும் கூட்டிக்கொண்டு விசாரித்தார் எந்த ஊர்? எந்த ஏரியா என? அவர் எங்கள் பகுதியில் இருந்திருப்பார் என்னவோ தெரியாது! சகல இடங்களையும் விசாரித்து விட்டு  விலாசத்தையும் மனதுக்குள் முணுமுணூத்து பார்த்துவிட்டு விட்டு விட்டார் அவர் தமிழ் தெரிந்த சிங்களவர் அல்ல அவர் ஒரு தமிழர் என்பது அவர் பேசிய மொழி பாஷையில் அறிய முடிந்தது எனக்கு .

தொடரும்.....  🐫🐫🐫

 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஏராளன் said:

தனியின் கதை ஆரம்பமே கவலையா இருக்கு, எல்லா உயிரிகளும் தன்னை தற்காத்து கொள்ள முயலும். பெற்றோர் உங்களை பாதுகாக்க மத்தியகிழக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த நேர நிலை அப்படி யார் யார் பிள்ளைகளை கடத்தி செல்கிறார்கள் என்ற நிலையில் பெற்றவர்கள் என்னதான் செய்யலாம் சொல்லுங்கள்  கவலை கஸ்ரம் தந்து என்னை ஓர் சமுதாயத்திற்கும் வாழ்க்கையெனும் பாடத்தை அணுஅணுவாக செதுக்கியும் விட்டது 

கருத்துக்கு நன்றி ஏராளன்

22 hours ago, நீர்வேலியான் said:

உங்களை கதையை கேட்க ஆவலாக உள்ளேன். தொடர்கிறேன். இலங்கையில்  இப்பிடியான அனுபவத்தை சந்திக்காத தமிழர்கள் குறைவு.  

ம்ம் இருக்கலாம் ஆனால் கிழக்கிலிருந்து மத்திய கிழக்குக்கு வேலைக்காக சென்றவர்களுக்கு இது புரியும்  மிக்க நன்றி நீர்வேலியான் அவர்களுக்கு

22 hours ago, suvy said:

தொடருங்கள் தனி .... வாசிக்க ஆவலாக இருக்கிறோம்......!   😁

ஊக்கத்திற்கு நன்றி சுவி அண்ணா

 

21 hours ago, குமாரசாமி said:

உங்களது இந்த ஆக்கம் தனித்தன்மை பெறும்.
 

நன்றி குமாரசாமி அண்ணை 

 

21 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி அதிக இடைவெளி விடாதீர்கள் 
 

ம்ம் தொடர்ந்து பந்திகளாக வந்து முழுமை பெறும் நன்றி உங்கள் கருத்துக்கும் ஊக்கம் கொடுத்தலுக்கும்

 

21 hours ago, nedukkalapoovan said:

மீண்டும் முனிவர்ஜீயின் ஆக்கத்தைப் படுத்த சுவை.. உள்ளூர ஒரு கவலை அலை தெறிக்கினும். 

ம்ம் நிறைய சம்பவம் இருக்கு நெடுக்ஸ் நன்றி தல

 

19 hours ago, புங்கையூரன் said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா...!

நன்றி புங்கையூரான் 

 

17 hours ago, நிலாமதி said:

தொடருங்கள்  ஆவலுடன் வாசிக்கின்றோம்.

நன்றி நிலா அக்கா  வரும் வரும் பந்திகளில் கண்ணீர் வரலாம் 

 

4 hours ago, putthan said:

தொடருங்கள் தனிக்காட்டு ராஜா

நன்றி புத்தன் அண்ணா

 

3 hours ago, நந்தி said:

நல்லதொரு அனுபவப் பகிர்வு,நல்ல உரைநடையில்.தொடரட்டும் உங்கள் ஆக்கம்.

நன்றி கிழக்கு பேச்சு தமிழ் புரியும் என நினைக்கிறேன் நன்றி கருத்துக்கு 

 

அனைவரின் ஊக்கத்திற்கு நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

✈️✈️✈️

விமான நிலையத்தில் என்னுடன் சேர்ந்து ஒரு 30 பேர் செல்ல ஆயத்தமானார்கள் அவர்கள் எல்லோரும் என் வயதை ஒத்தவர்கள் அந்த நாட்டு காசு மாற்றி எல்லோரிடமும் வெறும் 50 திர்ஹம் மட்டும்  இருந்தது. என்னைப்போலவே வயல்காணிகளையும் , வீடுகளையும் விற்று வந்தவர்ளும் மற்றும் பிள்ளை பிடித்தலில் இருந்து தப்பித்து வந்தவர்களும் படுவான்கரையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும்.

 விமான நிலைய உள்ளக சம்பவங்களை கண்டதும் நாங்கள் எங்களை மறந்து போனோம். விமானம் ஏர்லங்கா அழைப்பு கொடுக்கிறது  அடிமாடுகளாய் செல்ல போகும் அடிமைகளே அனைவரும் வருக வருக என.

வாருங்கள் வாருங்கள் உங்களை இன்னொரு நாட்டுக்கு விற்க ஆவலாக உள்ளோம் எனவும். எல்லோரும் உள்ளே சென்றோம் முதல் விமான பயணம் என்பதால் கொஞ்சம் பதட்டமாக இருந்தாலும். எல்லாச்சாமிகளும் ஒரு நிமிடம் மனதுக்குள் வந்து விளையாடிப்போனார்கள் . விமானம்  பறக்க ஆரம்பமானது உச்சியை தொடும் வரை கொஞ்சம் நெஞ்சில் தண்ணீ இல்லை எல்லோருக்கும்.

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம் எல்லோரும் . விமானத்தில் சாப்பாடும் கொஞ்ச தண்ணீரும் சோடா பானங்கள் கொடுக்கப்பட்டது குடித்துவிட்டு அந்த விமான பெண்களை அழைக்கும் ஒரு சுவிட்ச் இருந்தது அதை அவர்களை அழைப்பதென்று தெரியாமல் இவனுகள் எல்லோரும் அவளை காண்பதற்க்காகவா? இல்லை தெரியாமல் அழுத்துகிறார்களா!!!! என்று தெரியாமலே அழைத்துக்கொண்டிருந்தானுகள் சிலர் அவளிடம் பியர் வாங்கி குடிப்பதற்க்காகவும் அழுத்திக்கொண்டே இருந்தானுகள்.

அவளோ சிரித்து வந்து ஏசிப்போனாள் மணித்தியாலங்கள் செல்ல செல்ல ஊரும் உறவினர்களும் ஞாபகத்திற்குள் வந்து விட்டார்கள் விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. விமானம் தரை இறங்கியதும் வெள்ளைக்காரன் போய் கெப்டனை (பைலட்டை) கட்டி அணைத்து நன்றி சொல்லி இறங்கி சென்றான் நானும் தங்கியூ கெப்டன் என்று சொல்லி விமானநிலையத்தினுள் உள் நுழைகிறேன் வெல்கம் துபாய் என்ற அழைப்பும் அரபு மொழியும் ஆங்கிலமும் கலந்து வரவேற்றது . ஆங்கிலம் புரிந்தது ஆனால் அரபியோ சுத்தமாக ஒன்றுமே புரியல.

கண்ணிலிருந்து, கைரேகை வரைக்கும் பதிவு செய்து எல்லாம் சரி செய்த பின்னரே வெளியே விட்டார்கள் வெளியே வந்து பார்த்தால் சரியான வெயில் நம்ம ஊரில் பாண் செய்யும் போறணைக்குள் (பேக்கரி) இருக்கும் தணலில் தூக்கி போட்டமாதிரி இருந்தது. எங்களுக்கு என்னடா இப்படி வெயிலா இருக்கு என்று ஆளாளுக்குள் பேசிக்கொண்டாலும் எங்களை அழைத்து செல்ல நாங்கள் வந்த ஒப்பந்த கம்பனிகாரர்கள் வரவில்லை இரண்டு மணிநேரமாக காத்திருக்க போட்டு வந்த சேட் எல்லாம்  வியர்வையால் (உருகி) நனைந்து நனைந்து  ஈரமாகிகொண்டே இருந்தது.

தொடரும்..........ð«ð«ð«

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

Link to comment
Share on other sites

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

✈️✈️✈️

...

பக்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்களோ அதை கவனித்து அதன் பிறகு  எல்லாம் தெரிந்தவர்கள் போல செய்து பல தடவை விமானத்தில் சென்று வந்தது போல காட்டிக்கொண்டோம்...

...

...விமானம் தரை இறங்க உள்ளதால் சீட் பெல்ட்டை அணிய சொல்லி விமானி அறிவித்தல் கொடுக்க பட்டியை இறுக்கி யன்னல் வழியே எட்டிப்பார்க்க எல்லாம் மணல் தரைகளாகவும் மணல் குன்றுகளாகவும் கண்ணாடி கட்டிடங்களின் ஒளி பிளம்புகள் பளபளவவென மின்னல்  வெளிச்சம் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது...

...

முனிவர்ஜீ,

இந்த வெளிப்படை எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு..

****

இருப்பத்தோரு வருடங்களுக்கு முன் நானும் இதையே தான் அனுபவித்தேன். அப்பொழுது சென்னையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை இல்லையென நினைக்கிறேன்..

எனது வேலைக்கான நிறுவனம் விசா, மற்றும் பயணத்திற்கான டிக்கட்டை கல்ஃப் ஏர் (Gulf Air) மூலம் ஏற்பாடு செய்திருந்தது. நான் சென்னை வந்து 'மான்டியத்' சாலையிலிருந்த 'கல்ஃப் ஏர்' விமான அலுவலகத்திற்கு போனால், "நீங்கள் பாம்பே மூலம் கத்தார் தோஹா சென்று அங்கிருந்து துபாய் செல்லவேண்டுமென" விமான டிக்கட்டை பதிவு செய்து கொடுத்தனர்.

வேறு வழியின்றி ஜெட் ஏர்வேய்ஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பி, பாம்பேக்கு மாலை 4 மணியளவில் சென்றடைந்தேன். மறுநாள் அதிகாலை 03:50 க்கு தோஹா செல்ல கல்ஃப் ஏர் விமானம்.

என்ன செய்வது..?

பாம்பேயில் ஒரு பயலையும் தெரியாது..இந்தி, மராத்தி தெரியாது..

வட இந்தியா எனக்கு புதுசு..

எந்தக் கடைக்கு போனாலும் இந்தியில் பேசினார்கள், நான் ஆங்கிலத்தில் கேட்டால் இந்தியில் நக்கலாக பதில் சொன்னார்கள்.. 10 மணி நேரம் பாம்பே விமான நிலையத்திலேயே காத்திருந்துவிட்டு, அதிகாலை விமானம் ஏறச் சென்றால், மற்ற பயணிகளிடம் செய்தது போல, சுங்க அதிகாரி இந்தியில் பேசி என்னிடம் மாமூல் கறக்க கை நீட்டினார்.

நான் ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு, "எதற்காக உங்களுக்கு பணம் தரவேண்டும்..? என்னிடம் விசா, பாஸ்போர்ட், விமான டிக்கட் எல்லாமே இருக்கே..?" என ஆங்கிலத்தில் கேட்டேன்.

"எங்கிருந்து வருகிறீர்கள்..?" என இந்தியில் மறுபடியும் கேட்டார்.. "இந்தி தெரியாது" என்றேன்..

"ஆர் யூ இன்டியன்..?" என ஆங்கிலத்தில் கேட்க, நான் எனது தமிழ் மாநில அரசாங்கத்தில் வேலையிலிருந்த அடையாள அட்டையை காண்பித்தேன்..

மறு பேச்சு பேசாமல் உள்ளே அனுப்பி வைத்தார்.

இந்தியை இனிமேல் கற்றுக்கொள்ளவே கூடாதென்று அன்றே முடிவு செய்தேன்.

(இதற்கு முன் 80களில் அலுவலக நண்பரின் நச்சரிப்பை ஏற்று தனியாக இந்தி கற்றுக்கொள்ளப் போய் மூன்று-நான்கு வகுப்புகளிலேயே கைவிட்டுவிட்டேன்.)

****

விமானம் பாலைவனத்தின் மீது காலை வெயிலில் தோஹா நோக்கி பறக்கும்போதுதான் வாழ்க்கையில் முதன் முறையாக பாலைவனத்தை நேரில் பார்த்தேன்..

கடல்போல் மணல் திட்டுகள்..! அதில் வளைவு சுளிவே இல்லாமல் ஒரே நேர்கோட்டில் கறுப்பு தார் சாலைகள்..!!

தோஹாவிலிருந்து மறு விமானமெடுத்து துபாய் வந்திறங்கும்போது நன்பகல் 1 மணி..

ஜூலை மாத கடும் வெப்பம், ஏறக்குறைய 50 டிகிரி..

வியர்வை மழையில் நனைந்து வெறுத்தே போச்சுது.. எப்படி இங்கே காலம் கழிக்கப் போகிறோமென மலைப்பு..!

ஆனால், செல்வம் வந்தது.. செழிப்பான நகரம், ஒழுங்கான கட்டமைப்பு வசதிகள், திறமையான நிர்வாக அமைப்புகள், பெரும்பாலும் ஊழலற்ற அரசாங்கப் பணி.. நாளடைவில் பிடித்துப் போயிற்று..!!

இப்பொழுது, இங்கே 21வது வருடத்திலிருக்கிறேன்..!

நீங்கள் அடிக்கடி கேட்கும் ரஷிதியா மற்றும் ரிக்கா ரோடுக்கும் செல்கிறேன்..!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலைவன வாழ்க்கை மனதிலும்  வெளியிலும் சோதனையாகத்தான் இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஈரோப் லைவ் வெரி கூல் லைவ் யு நோ...😎

ஒவ்கோர்ஸ் ....அவுஸ்,கனடா ,யுரோப் எல்லாம் கூல் லைவ் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ரதி said:

தொழில் எடுத்து ஒப்பந்த அடிப்படையில் சென்று இருக்கிறீர்கள்...தொடருங்கள்..நன்றாய் கஸ்டப் பட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 😮

 

இருக்கு இருக்கு நிறைய சங்கதிகள் இருக்கு 

 

20 hours ago, nunavilan said:

முனிவர் உங்கள் பகிர்வுகளை வாசிக்க ஆவலாக உள்ளோம். நிறைய கஸ்டப்பட்டு உள்ளீர்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மறக்க முடியாத தடங்கள் அவை நூணா

 

19 hours ago, putthan said:

இதே அனுபவம் 1987 ஆம் ஆண்டு எனக்கு  சவுதிஅரேபியாவில் ஏற்பட்டது ....கிட்ட தட்ட 9 வ‌ருடங்கள் சவுதி 7 வ‌ருடம், 2 வ‌ருடம் கட்டார்.....பாலைவன ராஜா வாழ்க்கை

ம்ம் என்ன வாழ்க்கையென நினைத்து வெறுத்த நாட்களாக அமைந்த நாட்களாக இருந்தது

21 hours ago, suvy said:

அது முதல் மூன்று கிழமைதான் கஷ்டமாய் இருக்கும். இனி இதுதான் என்னும் தெளிவு பிறந்ததும் எல்லாம் பழகிடும்......!  😁

என்ன்னை மாற்றியதும் பொறுமை கற்றுக்கொடுத்தும் போனது அதான் பழகிடுச்சிண்ணே

 

12 hours ago, ராசவன்னியன் said:

இங்கே ஒரு சுவாரசியமான விசயத்தையும் சொல்ல வேண்டும்.. வெளிநாட்டுப் பயணம் அதுவே எனக்கு முதன்முறை..

பாம்பேயிலிருந்து காலை 8 மணிக்கு தோஹா வந்திறங்கியதும் விமான நிலையத்தை விட்டு வெளியேறாமல் துபாய் செல்ல 'ட்ரான்ஸிட் (Transit)' பகுதியிலிருக்கும் கல்ஃப் ஏர் (Gulf Air) கவுண்டருக்கு என்னை போகச் சொன்னார்கள்..

எனது அடுத்த துபாய் விமானம் புறப்படும் நேரம் மதியம் 12 மணி.. !

இன்னும் நான்கு மணிநேரமிருந்ததால், அங்கிருந்த அரபி அலுவலர், "எதிரிலிருக்கும் இருக்கைகளில் உட்காருங்கள், சிறுது நேரத்தில் மாற்று அலுவலர் வந்தவுடன் கூப்பிடுவார்கள்.." என சொன்னார்..

நான் இருக்கையில் அமர்ந்து சுற்றுமுற்றும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்..

அப்பொழுது ஒரு பெருங்கூட்டம் ஆரவாரத்துடன், பெரும்பாலும் தாடிகளுடன் வந்தார்கள்..

ஒரே கூச்சலும், சத்தமும் அந்த பெரிய ஹாலில்..

உடனே கத்தார் போலீஸ்காரர்கள் வந்து ஓங்கி உரத்த குரலில் அரபியில் சத்தமிட்டு, அவர்கள் பலரையும் நெட்டித் தள்ளி ஒரு மூலைக்கு சென்று உட்கார சொன்னார்கள்.. அங்கே அனைவரும் குத்துகாலிட்டு அமர்ந்தார்கள்..!

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரே நிறத்தில் 'சுடிதார்' போன்று உடையணிந்திருந்தார்கள்..

என் பக்கத்திலிருந்த ஒரு மலையாள பயணியிடம், "இவர்கள் யாராக இருக்கும்..? இவர்களிடம் ஏன் போலீஸ் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறது..?" எனக் கேட்டேன்..

அதற்கு அவர் சொன்னது, "இவர்கள் ஆப்கானியர்கள், படிப்பறிவு மிகவும் கம்மி, முரடர்கள் அவர்களை இப்படித்தான் கையாள வேண்டும்.. ஒருவேளை இவர்கள் கல்லி வல்லி ஆட்களாக இருப்பார்கள்.." என சொன்னார்.

நான் கல்லி வல்லி என்றால் என்ன என புரியாமல்,அப்படியா..?” என கேட்டுவிட்டு அமைதியாக கவுண்டரில் எனது அழைப்பிற்க்காக காத்திருந்தேன்..

மாற்று அலுவலர் வந்தும் என் பெயர் அழைக்கப்படவே இல்லை.. காலை வயிற்றுப் பசி வேறு..!

பொறுமையிழந்து மறுபடியும் கவுண்டர் சென்று அந்த அரபியிடம் ஏன் என்னை இன்னமும் அழைக்கவில்லை..?” என விசாரித்தேன்.

அவர் எனது விமான டிக்கட், விசா, பாஸ்போர்ட் ஆகியவற்றை பார்த்துவிட்டு சற்று முன் பலமுறை உங்கள் பெயரை உச்சரித்து கூப்பிட்டேனே..? எங்கே போனீர்கள்..?” என என்னை திருப்பிக் கேட்டார்..

"அடப்பாவி, குத்துக்கல் மாதிரி உன் முன்னே தூரத்தில் இருக்கையில்தான் இருந்தேனே...?" என சொன்னேன்..

அவர் எனது பெயரை மறுபடியும் வாசித்தார்.. விசயம் அப்பொழுதுதான் புரிந்தது..

அவர் இதுவரை வாசித்து கூப்பிட்டது எனது தந்தையின் பெயரில் ஒரு பகுதியை மட்டும்.. மீதமுள்ள எனது பெயரை வாசிக்கவே இல்லை..

அடப்பாவிகளா..! அன்று புரிந்தது..!!  '

'எங்குமே பாஸ்போர்ட்டிலிருக்கும் முதல் பெயரைதான் அனைவரும் அழைக்க பயன்படுத்துகிறார்கள்..' என்பது..!

கடுப்புடன் 'கல்ஃப் ஏர்' வழங்கிய உணவுக் கூப்பனையும், போர்டிங் அட்டையையும் சரிபார்த்து வாங்கிக்கொண்டு அருகிலிருந்த உணவகம் சென்றேன்.

இன்றும் எனது உண்மை பெயரை அலுவலகத்திற்கு வரும் புது அரபிகள் உச்சரிப்பதில்லை, எனது தந்தை பெயரின் முதற்பகுதி பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள்..

சென்ற நவம்பரில், வட அயர்லாந்து பெல்ஃபாஸ்ட் நகரத்திற்கு அலுவலக வேலை நிமித்தம் சென்றபோது, பர்மிங்காம் விமான நிலையத்திலும், பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்திலும் அப்படியே அழைத்தார்கள்..!

எங்கேயும், எனது பெயரையோ அல்லது எனது தந்தையின் பெயரையோ கேட்க அவதானமாக இருக்கவேண்டுமென இப்பொழுது எனக்கு பழகி விட்டது..!

 

ஹாஹா நல்ல சம்பவம் நீங்களும் இந்த தடங்களுக்குள் இருக்குறீர்கள் ராசவன்னியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை மணிநேரத்தின் பின்பே நாங்கள் வந்த விசா பொறித்த வான் ஒன்று வந்தது வந்த அந்த வானில் இருந்து ஒருவர் இறங்கி வந்தார். ஸ் ரீ லங்காவில் இருந்து வந்த நீங்களா? என கேட்டு அத்தனை பேரிடமும் முதலில் பாஸ்போட்டை பறித்துக்கொண்டார். பறித்துக்கொண்ட பின்பே அதனை ஒவ்வொன்றாக சரிபார்த்துவிட்டு வாகனத்தினுள்ளே ஏற்றினார். வாகனம் குளிரூட்டப்பட்டிருந்தது நிம்மதியான பெருமூச்சு விட்டு எல்லோரையும் மீண்டும் எண்ணி சரிபார்த்து வாகனம் புறப்பட்டது. நகர்களை பார்த்தால் எல்லாம் கண்ணாடிகளால் ஆனதாகவே இருந்தது வானுயர்ந்த கட்டிடங்கள் அழகிய கானல் நீர் கரை புரண்டு ஓடும் தார் சாலைகள் இரு மருங்கிலும் அழகான பூ மரங்களென மிக அழகாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. அந்த பாலைவனத்தில் மிளிரும் துபாய் நாடு.

சுமார் ஓர் மணி நேரம் சென்ற பிறகு எங்கோ ஓர் தூரத்தில் நகர்கள் மொதுவாக மறைந்து செல்ல செல்ல மணல் மேடை ,மணல் குவியல்கள் சூழ்ந்த சிறிய பாலைவனச் செடி நிறைந்த ஒட்டிய பகுதியில் இருந்த கம்ப் (Camp) ஒன்றிக்கு கொண்டு சென்றார்கள். அங்கே இறக்கிவிட்டு ஒரு தமிழர் (இந்தியர்) இவர்களுக்கு றூமை கொடு என்று சொல்லிவிட்டு என்ன வேலை? எத்தனை மணிக்கு வரவேண்டும்?  எந்த தகவலும் சொல்லாமல் வான் பறந்தது. அவர்தான் அந்த விடுதிக்கு காப்பாளரும் கூட

வந்த களைப்பில் ஒருவன் கால் கை மேலை கழுவித்து வருகிறேன் என குளிக்கும் அறைக்கு போனவன் ஓடிவருகிறான் ஐயோ அம்மா , அப்பா காப்பாற்றுங்க காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என நாங்களும் பயந்து என்ன நடந்ததோ ஏது நடந்ததோ என விசாரிக்க அவனால் சொல்ல முடியவில்லை உடம்பில் நீர் மட்டும் ஊற்றப்பட்டு இருந்த்து.  சிறிது நேரம் கழிந்த பின்னர் அழுகையை நிறுத்திவிட்டு முதுகை பார்க்க சொன்னான் அவனது முதுகு தோல் மெதுவாக உரிய ஆரம்பித்தது என்னடா நடந்தது? என விசாரிக்க தண்ணீரை திறந்து முதுகை காட்டினேன் சுடுதண்ணி வந்து ஊற்றுப்பட்டதென கூறினான் அவன்.

உடனே அந்த கம்ப்(Camp)  காவலரிடம் சென்று கேட்க இப்ப ஜீலை மாதம் தண்ணி கொதிநீராகத்தான் வரும் நீங்கள் கேன்களில் பிடித்து குளிக்க வேண்டும் என்று சொன்னார் நாங்களும் அவனுக்கு சிக்னலை (பற்பசை) எடுத்து பூசிவிட்டு கொஞ்சம் இருடா என ஆளை இருத்தி விட்டு. ஒரு ரூமுக்கு எட்டு எட்டு பேராக பிரிக்கப்பட்டு அறை வழங்கப்பட்டது. நான்கு கட்டில்கள் ஒரு கட்டிலில் இருவர் இருக்கலாம் கீழும் மேலும். ஏசியை போட்டு அறையை குளிராக்கி அவனையும் அழைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டோம்.

கையில் இருந்த காசை கொண்டு கம்ப் எதிரே இருந்த மலையாளியின் கடைக்கு சென்று ஒரு ரெலிபோண் காட்டை வாங்கி ஊருக்கு அழைத்து நான் இங்கு வந்து விட்டேன் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு  நான் அழுது கொண்டேன் . கையில் இருந்த காசில் 20 திர்ஹம் காட் அந்த காட் முடிந்து விட்டது நான் அடுத்தமாதம் தான் இனி எடுப்பன் என கடைசி வார்த்தை சொல்லிவிட்டு மீதி இருந்த 30 திர்ஹம்(ரூபா) க்குள் எப்படி காலத்தை கடத்துவதென தெரியாமல் முழுசிக்கொண்டு இருந்தேன் .

நேரம் மாலை 6 மணியாக காகங்கள் கூடு வந்து சேர்வது போல எல்லா   வேலையாட்களும் கவலையுடனும் வேலைக் களைப்பில் வருவதும் அவதானிக்க முடிந்தது முதலில் நேபாள் காரர்கள் வந்து எட்டிப்பார்த்து விட்டு செல்ல , பிறகு வங்களாதேஷ், ஆந்திரா, கர்னாடகா, சிங்களவர்களும் களும் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர் கடைசியில் நம்ம பொடியங்கள் தமிழ் பொடியங்கள் வந்திருக்கிறார்கள் என பல நூறு பேர் பொடியங்கள் ,நடுத்தர வயதானவர்கள் வந்தார்கள் எல்லோரும் என்னுடன் வந்தவர்களுக்கு பரீட்சியமானவர்கள் ஊரீல் இருந்து கொண்டு வந்த  தீன் பண்டங்களையெல்லாம் மேய்ந்து விட்டு.

ஊர்நிலமைகளை கேட்டார்கள் நிலமையை சொல்ல ஓர் தலைவனின் வழிநடத்தலில்  வந்தவர்களது அறைக்கு வேறொரு நாள் சென்ற போதே பார்க்க முடிந்தது அத்தனை பேரின் அறைகளிலும் தலைவர் நிமிர்ந்து நின்றது இப்பவும் கண்ணுக்குள் இருக்கிறது . சாப்பிட்ட அவர்கள் இங்க கவனமாக இருக்க வேண்டும் களவு எடுக்க கூடாது தனியாக செல்லக்கூடாது எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவர்களுக்கு தெரிந்த பொடியங்களுக்கு அவர்களும் 50 ரூபா கொடுத்துவிட்டு போனார்கள் செலவுக்கு  எனக்கோ அங்கே யாரையும் தெரியாது எங்க ஊர் பொடியங்கள் அங்கு யாரும் இருக்க வில்லை  போகும் போது இந்த கம்பனி கூடாது சம்பளம் குறைவு நாங்களெல்லாம் ஊருக்கு போக முடியாது என்ற காரணத்திற்க்காகதான் இங்கே வேலை செய்கிறோம் என்று சொல்லி விட்டு.

அந்த இந்த வேலையை செய்ய சொன்னால் செய்ய கூடாது உங்களுக்குரிய  அடையாள அட்டை வரும் வரைக்கும் உங்களை மேய்ச்சு போடுவாங்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் சொன்னானுகள். கம்பனியில் ஒருவன் இருக்கிறான் அவந்தான் எல்லாமே அவனுக்கு ஒட்டுமொத்த பேரும் நடுங்குவானுகள் நம்ம பயத்தை காட்டினால் அவன் நமக்குமேல் ஏறிவிடுவான் எனவும் அவன் பெயர் இடிஅமின் என்று சொல்லி போனார்கள்

சுமார் 2000 பேர் இருந்தார்கள் அந்த கேம்பில்(Camp)

அடுத்த நாள் காலை .............. தொடரும் 1f42b.png1f42b.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2019 at 1:02 PM, தனிக்காட்டு ராஜா said:

யாருடைய ள் என வினாக்கள் தொடுக்கப்பட்டது பிரபாகரன் ஆளா? அல்லது கர்ணா ஆளா என?. ன்னடா எனக்கு ந்த சோதனை என முழுசிக்கொண்டு இருந்தன் . பிறகே நான் யாருடைய ஆளும் ல்லை

சண்டை தொடங்கிய நேரம் மட்டக்களப்பிலிருந்து நிறைய போராளிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பெருவாரியாக போனதாக சொன்னார்கள்.ஆனபடியால்த் தான் உங்களையும் எந்த குறூப் என்று கேட்டிருக்கிறார்கள்.கருணா குறூப் என்று சொல்யிருந்தால் அவர்களே பாதுகாப்பு கொடுத்து கொண்டு போய் விட்டிருப்பார்களே?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.