Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன நடந்தது இதை கொஞ்சம் விபரமாக எழுதலாமே!

ஈழப்பிரியன் அண்ண கிழக்கில் அழகிய கிராமம் மேற்கே வயலும் கிழக்கே கடலும் சூழ்ந்தது அரச வேலை முதல்வேலையாகவும் பகுதி நேர வேலைகள்(உழைப்பு) கடல் , வயல் இந்த மூன்று தொழில்களும் முதன்மையானது. எங்கள் வீடுகள் எல்லாம் கடற்கரை ஓரத்தில் இருந்தது சொந்தங்கள் அனைவரும் அம்மாவுக்கு 8 தங்கைகைள் அப்பவுக்கு 6 தம்பி இரண்டு தங்கைகள் எல்லோரும் அருகருகில் தான் வாழ்ந்து வந்தோம் சுனாமி அன்று நான் கொடுத்தனுப்பிய போணுக்கு ஒரு சிம் காட் போடுவதற்கு தம்பி சென்றுள்ளான் என் நண்பனைக்கூட்டிக்கொண்டுள்ளான் சிம் கிடைத்தும் போணை வீட்டில் வைத்துவிட்டு ஒரு சித்தியின் வீட்டுக்கு சென்று அவரது மகனை எங்கள் வீட்டூக்கு தூக்கிவர சென்ற போது கடல் முதலாவது அலை பரவி வருவதைக்கண்டு  அம்மாவையும் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு போவதற்கு வீடு தேடி ஓடிவர அம்மாவும் தங்கையும் கடல் வருவதைக் கண்டு அவனைக்கூப்பிட்டு பார்த்தவாறே முதலில்  ஓடி இருக்கிறார்கள். ஆனால் அந்த அல்லோல கல்லோல சத்தத்தில் அவனுக்கு அது விளங்கவில்லை தெரியவும் இல்லை  அவர்கள் ஓடியது. அவனோ   ஓடி வீட்டுக்குள் செல்ல அடுத்த அலை வீட்டுக்கு மேலால சென்று விட்டது இதுவரைக்கும் அவனது சடலம் கிடைக்கவில்லை  அன்றிலிருந்து அம்மா  2 வருடம் சுயநினைவு இழந்த

 

து போல் இருந்திருக்கிறா கவுண்சிலிங் எடுத்து ஆனால் இதெல்லாம் எனக்கு யாரும் சொல்லவில்லை அறிந்தால் நான் மனஉழைச்சலுக்கு ஆளாவேன் என. எனது தம்பி மாமி இருவரும் அவர்கள் குழந்தைகளும் இறந்து போயினர் சுனாமியால் .

தற்போது நாங்கள் இருந்த காணியில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளனர் அரச காணியாக்கி

3 hours ago, நீர்வேலியான் said:

தனிக்காட்டுராஜா,
படிப்பதுக்கு மிகவும் கனமாக உள்ளது, தொடர்கிறேன். 

 

இதனால் தான் யாரிடமும் இதை சொல்வதில்லை என்னைச் சந்திந்த வீடு தேடி வந்த களஉறவுகள் ஜீவன் அண்ண , அக்னி, அர்ஜின் அண்ண, மீராஅண்ண, இவர்களுக்கு தெரியும் 

 

1 hour ago, ஏராளன் said:

தம்பியின் இழப்பு தாங்க முடியாத துயரம் தான், துன்பத்துக்கு மேல துன்பம்.

நன்றி நண்பா இழப்பு என்பதும் சோகம் என்பதும் ஈழத்தமிழனுக்கு கிடைத்த பரிசுகள் அது மனதில் மட்டும் இருந்து கோண்டே இருக்கும் 

27 minutes ago, சுவைப்பிரியன் said:

சோகமான ஆனால் மற்றவர்களுக்கு படிப்பினையான பதிவு.தொடருங்கள் தனி.

ஓம் அண்ண படிப்பினையாக இருக்கட்டுமே என எழுத தோன்றியது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் 

வாசித்தமைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாசிக்க விறுவிறுப்பாகவும் கவலையாகவும் இருக்கு தம்பியா

நன்றி அக்கா நீங்களும் என்னை சந்திச்சது ஆனால் இதெல்லாம் பேச நேரம் கிடைக்கல 

 

12 hours ago, suvy said:

வாசிக்க மனம் மிகவும் வேதனைப்படுகிறது தனி....தொடருங்கள், எம்முடன் பகிர்ந்து கொள்வது உங்களின் மனதுக்கு மிக மிக ஆறுதலாக இருக்கும்.....!   

ஓம் அண்ண அதுதான் முழுமூச்சாக எழுதிக்கொண்டு இருக்கிறன் நடந்த சம்பவங்களை ஏதோ ஓர் மன ஆறுதல் ஏற்படுகிறது 

 

9 hours ago, ஏராளன் said:

ராஜா மிகுந்த கவலையாக இருக்கு, ஆனால் இதையும் தாங்கி குடும்பத்தை பொறுப்போடு கவனித்த மனிதனாக வாழ்கிறீர்கள்.

என்னைப்போல பலபேர் இன்றுவரைக்கும் மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் வெயிலிலும் , குளிரிலும்  தங்கள் குடும்பத்துக்காக

Link to comment
Share on other sites

உங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம்  சகோதரனே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஜெகதா துரை said:

உங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம்  சகோதரனே.

ம்ம் நிட்சயமாக் கருத்துக்கு நன்றி சகோ

 

8 hours ago, ரதி said:

தொடருங்கள் முனி...உங்களது தம்பியின் ஆத்மா சாந்தியடைந்து இருக்கும்...அவரை நினைத்து வருந்தாது வாழ்க்கையில் நீங்கள் மேலும் முன்னேறி போய்க் கொண்டு இருக்க வேண்டும்...அவர் உங்களுக்கு துணை இருப்பார் 

 

மிக்க நன்றி ரதி

அந்த நிறுவன முதலாளி கூப்பிட்டிருந்தார் பயந்து போய் நின்றேன்  போட்டுக்கொடுத்தவர் ஈரான் நாட்டை சேர்ந்தவன் ஏன் கார் கழுவுகிறாய் உனக்கு என்ன வேலை!!! என்ன செய்கிறாய் நீ ?......... என...... .நான் பதில் பேசாமல் நின்று விட்டு மன்னிக்கவும் சேர் வீட்டில் சரியான கஸ்ரம் எல்லோரும் அகதிகள் முகாமில் இருக்கிறார்கள் சுனாமி அடிச்சதால. எனக்கு கம்பனி தரும் சம்பளம் போதாது அதற்குத்தான் கார் கழுவினேன் தொழும் நேரம் என்பதால் எனக்கும் வேலை இல்லை அதானலதான் என்றேன். முழுவிபரங்களை கேட்ட அவர் பரிதாபப்பட்டார் சரி அப்படியென்றால் நமது நிறுவன கார்களையும் சேர்த்து கழுவி விடு அதற்கு செக் தருகிறோம் நாங்கள் என்றார். எனது சம்பளம் 800 +1000( கார் ) =64000

இந்த கார் கழுவுவது கம்பனிக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சினை உடனே வேறு இடத்துக்கு மாற்றிவிடுவார்கள் அதுபோக அடிக்கடி வந்து செக் பண்ணிவிட்டு செல்வார்கள் எங்களை. பொலிசுக்கும் தெரியக்கூடாது தெரிந்தால் பிடிச்சி போய் விடுவார்கள் இப்படி இருக்க எங்க மேனேஜரோ பொலிசுக்கும் மேலாக இருந்தவர் அவர்.

இப்படி நல்ல மனிதரா என நினைத்தாலும் அவரிடம் போட்டுக்கொடுப்பது மற்ற நாட்டுக்காரன்கள் ஈரானி, மிசிறி (எஜிப்ற்) சூடானி , எத்தியோப்பியா, இவனுகள் போய் அவரிடம் கோள் சொல்வது வழமைதானாம் என்று சொன்னார்கள் மற்றவர்கள்.  எங்களுக்கு அங்கு வேலை காலை 7.30 ற்கு ஆரம்பமாகி பகல் 2.30 ற்கு முடிந்து விடும் அதிகாலை நேரத்துடன் வேலைக்கு வருவதால் அந்த நிறுவன கார்களை நேரத்துடனே கழுவி விட்டு பகலில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும்  அரபி பெண்களின் கார்களையும் கழுவிக்கொள்வேன். அதற்கும் காசு தருவார்கள் மாதா மாதம் எனது வேலையையையும் திறமையையும் பார்த்த அவர்களுக்கு பிடித்து போக நானும் அங்கே ஓர் நம்பிக்கை மிகுந்த ஓர் சேவையாளன் ஆனேன்.

 (காலையில் டீ, அரபி கோப்பி வகைகள் எல்லாம் போட்டுக்கொடுத்து விட்டு  , புத்தகம் கட்டுவது , அங்கு வரும் அரபிகளுக்கு சகல வேலைகளையும் (போட்டோ கொப்பி, வைன்டிங்) செய்து கொடுத்து ஹிந்தி ,ஓரளவு அரபி விளங்கி கொள்ளும் பேச வராது ஆங்கிலம் ஓரளவுக்கு பேச கற்றுக்கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தேன்.

மேனேஜருக்கும் அரபி பெண்களுக்கும் பிடித்தவனானேன் என்னை விடமாட்டார்கள் போல் ஆகிவிட்டது காரணம் களவு இல்லை வேலை தரமாக இருக்கும் ஒர் வேலை சொன்னால் அது எத்தனை மணியானாலும் செய்து முடிப்பது அதனால் ஆண்களை விட அரபி பெண்களுக்கு மிகவும் பிடித்து போனது. ஹிந்திப்படம் பார்ப்பார்களாம் அரபி பெண்கள் அதில் ராஜா என்ற பெயரில் சாருக்கான் வருவராம் சாருக்கான் மிகவும் பிடிக்குமாம்.

இன்று வரை பிடித்த நாடு துபாய்தான் சுரண்டல்கள் இல்லாமல் இருந்தால் ஊழியர்களும் வாழ்வார்கள் அவர்கள் சிந்தும் வியர்வைக்கும் சரியான கூலி கிடைக்கும்.

மற்ற நாட்டுக்கார்கள் வேலைசெய்யவும் விடமாட்டார்கள் வேலை செய்யவும் மாட்டார்கள் மெனேஜரை. இதனால் மேனேஜரோ வெள்ளிக்கிழமையும் வந்து காலையில் வேலை செய்து விட்டு  போவார் வெள்ளிக்கிழமை எனக்கு வேலைவரும் காரணம் செக்கியுருட்டி லீவு எடுத்துக்கொள்வான் அங்கே பரீட்சியம் ஆன ஆள் என்ற படியால் வெள்ளிக்கிழமையும் நான் வேலை செய்வது இதனால் எனக்கு விடுமுறை இல்லை ஓவர் டைம் வழங்கப்படும்.  

இப்படி இருக்க கணணியில் ஊர் செய்திகளை ஆவல் கொண்ட எனக்கு இணையத்தளங்களை பார்க்க பழகி அதை பிரின்ட் எடுத்து எங்கள் தங்குமிடங்களில் போட்டோ கொப்பிகள் அடித்து அதை பத்திரிகை போல எல்லா றூம்களுக்கும் அனுப்பிவிடுவேன் ஏனென்றால் ஊர் செய்திகளை படிக்க ஆவலாக இருப்போர் அதிகம் (சண்டைகள் ஆரம்பம்) அத்தனை பேரும் விலகி வந்தவர்களும் ஓடிவந்தவர்களும். இயக்கத்தை விட்டு அந்த இணையத்தளங்களை பார்க்கும் போது முதல் தடவையாக தட்டும் போது பரீட்சியமானதுதான் யாழ் இணையம். 2.30 ற்கு பிறகு எங்கள் நிறுவனத்தை கிளின் பண்ண ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு எல்லா கதவுகளையும் (றூம்களையும்) திறந்து கொடுத்து விட்டு செய்திகள் பார்ப்பேன் படிப்பேன்.  கணணி பற்றி பெரிதாக தெரியாது 6 மாதம் பயின்ற கொஞ்ச அனுபவத்தை வைத்து புரட்டலானேன் யாழ் இணையத்தில் விவாதங்கள் ,கதைகள் , கவிதைகள் பிடித்துப்போக ஏன் நானும் இணையக்கூடாது என இணைந்துகொண்டேன் முனிவர் ஜீ என அந்த பெயருக்கும் ஓர் காரணம்  எனது ரூமில் இருப்பவர் ஒருவர் கல்யாணம் கட்டவில்லை வயது வந்தும் அவருக்கு நாங்கள் வைத்த பெயரை அப்படியே நான் புனைப்பெயராக மாற்றிக்கொண்டேன்.  யாழை திறக்கும் போது முள் உள்ள பலாப்பழம் போல தான் இருந்தது உள்ளே நுழைந்ததும் அதன் சுவை அறிந்தேன் நான். (2008)ம் ஆண்டு

ஓர் நாள் ராஜவன்னியன் என்று அறிமுகமான சேகர் அண்ணையிடமும் தொலைபேசியில் கதைக்க முடிந்தது ஆனால் சந்திக்க நேரம் கிடைக்கவில்லை துபாயில் மன்னிக்கணும் அண்ண வேலைப்பழு அப்படி   

மேனேஜர் (லீவு நாளில் வெள்ளிக்கிழமை) வேலைக்கு வரும் போது எனக்கும் சேர்த்தும் சாப்பாடு வாங்கி வருவார் போகும் போது காசும் தந்து விட்டு செல்வார். வெள்ளிக்கிழமை. எல்லோருக்கும் லீவு என்பதால் வாகனம் வராது என்னைச் ஏற்றி செல்ல டிரைவருக்கும் விடுமுறை.  என்னுடைய காசை கொடுத்தே பஸ்ஸில் செல்வேன் ஆனால் மாலை ஆறு மணிக்கு பஸ்தரிப்பிடத்துக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறையென்பதால் பஸ்லில்கூட்டம் அதிகமாக இருக்கும் அதனால் சாரதி ஏற்றிகொள்ளமாட்டான் காரணம் பஸ்ஸில் நின்று கொண்டு செல்ல முடியாது 10 ற்கு மேற்பட்டோர் சட்டம் அப்படி 10 மணிக்கு ஓரளவு கூட்டம் குறைய பஸ்ஸில் ஏறி தங்குமிடம் செல்ல 11.30 மணி ஆகும்.

நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.

தொடரும்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

நான் வேலைசெய்யும் அரச நிறுவனத்தில் ஓர் எகிப்து நாட்டுக்காரன் எங்கள் நிறுவனத்துக்கு சாப்பாடு கொண்டு வரும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணியை கூட்டிக்கொண்டு வந்தான். விடுமுறை நாளில் வந்த அவனோ அவளை றூமுக்குள் வைத்து விட்டு என்னிடம் யாருக்கும் சொல்லாத என்று சொல்லிவிட்டு என்ன செய்தான் என்பது அந்த நாலு சுவருக்கே வெளிச்சம்.

தொடரும்.....................

நம்பிட்டம் தம்பி நம்பிட்டம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பிட்டம் தம்பி நம்பிட்டம்🤣

நம்பலாம் தம்பிக்கு பெண் என்றாக் அலர்ஜிக்கா இருந்தீச்சு அந்த நேரம் அதுவும் பிலிப்பைன்ஸ் ஆட்களை கண்டால் உவாக்தான் அவங்க சாப்பாட்டை கண்டியள் அடுத்த நொடி வாந்தி தான் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம் 😆
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில்   ஊமைக்கோபமும்   ஊமை அழுகையும் வருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன  கஷ்ட  பட்டு  வருகிறது காசு என  என விளங்காது ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

பிலிப்பீன்ஸ் ஆட்கள் சரியான குப்பையாளாய் இருப்பினம் 😆
 

அதே ஆட்கள் மட்டும் தான் வெள்ளையும் சொள்ளையும் பக்கா குப்பைகள்

4 hours ago, குமாரசாமி said:

நீண்ட கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளீர்கள். வாசிக்க மனம் கனக்கின்றது. சில இடங்களில்   ஊமைக்கோபமும்   ஊமை அழுகையும் வருகின்றது.

நன்றி அண்ணை 

எனக்கே வாழ்கையே வெறுத்த காலம் அது ஏழையாக இருந்திடக்கூடாது என ஆனால் வாழ்க்கை யாரைத்தான் விட்டது அதன் வட்டத்தில் சுழலத்தானே வேண்டும் 

2 hours ago, நிலாமதி said:

இந்தக் கதையை தம்பி வெளிநாட்டில என வீண் செலவு செய்யும் தாயக உறவுகள் வாசிக்க வேண்டும். என்ன  கஷ்ட  பட்டு  வருகிறது காசு என  என விளங்காது ..

ஓம் ஓம் இது கனபேருக்கு புரிய வேண்டும்  நன்றி அக்கா கருத்துக்கு 

 

உள்ளே என்ன நடந்தது எனக்கும் தெரியாது ஆனால் கொஞ்ச ரிசு பேப்பரை அள்ளி ரொய்லெட்டில் போட்டு விட்டு சென்றான் அவன் சென்ற ரூமை திறக்க முடியாது ஏனென்றால் நம்பர் லாக் பண்ணிருப்பார்கள். அந்த நம்பர் தெரிந்திருக்க வேண்டும் அடுத்த நாள் காலை மேனேஜர் வந்து என்னைக்கூப்பிட்டு நேற்று என்ன நடந்தது என்று கேட்க (அவர் எங்கோ இருந்து பார்த்திருப்பார் போல இவன் அவளை உள்ளே கூட்டி வந்ததை) நான் விபரங்களை சொன்னேன் ஏன் நீ எனக்கு முதலில் சொல்ல வில்லை என்று கேட்க??  அவர் என்ன செய்தார் என்று நான் என் கண்ணால் பார்க்கவில்லை அப்படி இருக்க எப்படி பொய் சொல்ல முடியும் அவர் ஒர் பெண்ணைக்கூட்டி வந்தது தெரியும் அதை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லலாம் என்று நினைந்திருந்தேன் எனவும் சொன்னேன்.

நிறுவனத்தில் அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் பயங்கர மேட்டர்க்காரன் என்பது அவர்களுக்கும் ஏன் எனக்கும் தெரியும். அவனுக்கு ஆப்பு அடிக்கப்பட்டது வேலையில் இருந்து மாற்றப்பட்டான் .

மீண்டும் நம்பிக்கைக்கு ஆளான நான் மேனேஜரின் ரூம் நம்பரும் எனக்கு மட்டுமே கொடுப்பட்டது வேற யாரும் உள் செல்ல முடியாது ஏனென்றால் அவர் துபாயில் மிகவும் முக்கிய புள்ளிகளில் ஒருவர். ஒரு மனிதாபிமானம் உள்ள நேர்மையான மனிதரும் கூட மதம் பார்க்காதவர்.

மற்றவர்கள் எங்கள் மதத்துக்கு வா உன்னை இங்கே எல்லோருக்கும் பிடிச்சிருக்கு இங்கே வசிக்க விசாவும் தருவார்கள் நல்ல சம்பளம் , இருக்க றூம் எல்லாம் தருவார்கள் என்று சொல்ல நானோ உங்களுக்கு என் வேலை மட்டும் தானே வேண்டும் அதை நான் இங்கு இருக்கும் வரைக்கும் செய்கிறேன் ஆனால் மதம் மாற என்னால் முடியாது என்றேன். என்னுடன் இருந்தவர்களில் வங்காளிக்கு விசா கிடைத்தது மற்றவன் மட்டக்களப்பு அவனோ தான் ஒரு கிறிஸ்டீன் என பொய் சொல்லி விசா எடுத்தான் நான் மட்டும் விரும்பல காசுக்காக மதத்தையெல்லாம் விட்டுச் செல்ல முடியாது என கூறிவிட்டேன். ஆனால் அங்கிருந்த ஒரு லெக்சர் ஒருவர் என்னை அழைத்து அந்த மெனேஜரிடம் கூட்டிச்சென்று இவனுக்கும் விசா கொடுத்து இங்கே வைத்துக்கொள்ளுங்கள் என சொல்ல மெனேஜரும் ஓ நல்ல விடயம் என கூறி ஒரு எஜிப்ற் நாட்டுக்காரரிடம் இவருடைய விளக்கத்தை சரிபார்த்து கம்பனியிடம் கதைத்து முடிவு எடுங்கள் என்றார் .

இப்படி பல வருடங்கள் ஓடியது

அவனும் அவர் முன் தலையாட்டிவிட்டு மந்தமாகவே இருந்தான் ஏனென்றால் அவனுக்கு மதம் முக்கியமாக இருந்தது நான் இதைப்பற்றி கவலைப்படவில்லை எத்தனை வருடத்துக்கு இங்கே இருப்பது?? நான் நாட்டுக்கு செல்ல வேண்டும் நினைத்தாலும் நல்ல சம்பளம் அரச வேலை ஆர்வமும் இருந்தது  இப்படி வருடங்களும் சென்றது 2009 தங்கைகு கல்யாணம் என அழைப்பு வர நான் நாட்டுக்கு போக தயாரானேன் என் வேலைக்கு பதிலாக இன்னுமொரு வங்களாதேஷ் காரன் வந்தான் அவன் கொஞ்ச நாள் வேலை பழக்கியதும் நான் ஊர் செல்ல ஆயத்தமானேன்  அந்த அலுவலகத்திலிருந்த அனைவரும் காசு சேர்த்து தந்தார்கள் அரபி பெண்களோ போய் வந்துடவேண்டும் வராமல் விட்டால் கொன்று விடுவோம் என்றும் சொன்னார்கள். ஊர் வந்து தங்கையின் திருமணத்தை) செய்து) கல்யாணமும் சிறப்பாக முடித்து விட்டேன் ஒருவரது (வளவு வாங்கி வீடு கட்டி அதன் மேலதிக வேலைகளயெல்லாம் நான் துபாயி இருக்கும் போது செய்துவிட்டன்)

ஊர் சென்ற போது

பொலிஸில் சேர இன்றவியுவிக்கு சென்றேன் அங்கே எனது ரிசேல்ட்ஸ், விளையாட்டுச் செட்டிபிகேட் எல்லாவற்றையும் பார்த்து விட்டு கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னார்கள் உயரத்தை பார்த்துவிட்டு 5.5 அடி பார்போம் நீங்கள் 5.3 அடி இருக்கிறீர்கள் அடுத்த வருடம் முயற்ச்சி செய்யுங்கள் என்று அனுப்பி வைத்தார்கள் , ரயில்வே ஊழியராக இன்றவியுக்கு சென்றேன் வவுனியாவில் அல்லது கிளிநொச்சியில் வேலை வரும் போவீர்களா போவேன். எனக்கூறிவிட்டு வந்தேன்ஆனால் வேலை கிடைக்கல அடுத்தது நில அளவை உதவியாளர் சகலதும்கேட்டார்கள் பார்த்தார்கள் ஆனால் வேலையென்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இப்படி இருக்க அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் ஆட்கள் சென்றது அதிகம் அந்த வருடம் சரி இலங்கையில் வேலை கிடைக்காது நமக்கு இனியென்ன படகேறுவோம் என நினைத்து  இருந்தேன் . ஆனால் நீ படகேறினால் அங்கு செல்கிறாயோ  இல்லையோ இங்கே இருவர் இறந்து கிடப்பார்கள் என அம்மா அப்பா சொல்ல அதையும் கைவிட்டேன்.

விடுமுறை கழியும் தறுவாயில் இருக்க மீண்டும் விமானமேறினேன் அதே இடத்துக்கு செல்ல அங்கே நான் வேலை பழக்கிய வங்காளிக்கு விசா கொடுத்து அழகு பார்த்தான் அந்த எஜிப்ற்காரன் எனக்கு அங்கு இருக்க பிடிக்கல ஊருக்கு போய் வந்ததனாலும் சொந்தங்களும் பழகிவிட்டு வந்ததாலும் மேனேஜரிடம் போய் ஏன் எனக்கு விசா கொடுக்கல இத்தனை வருடமாக வேலை செய்கிறேன் என சொல்ல எனக்கு ஒன்றும் தெரியாது ராஜா நான் அவரிடம் தானே சொல்லி இருந்தேன் என அவர் கூற அந்த எஜிப்ற் நாட்டுக்காரன் உள்ளே வர மேனேஜர் கேட்கிறார் என்ன நடந்ததென அவரோ நான் இருவருக்கு அப்பிளே பண்ணினேன் அவருக்கு கிடைத்தது இவருக்கு கிடைக்கல என்று சாதரணமாக சொன்னார். மேனேஜரோ உனக்கு வேலை நான் தருகிறேன் என அவர் காரில் ஏற்றி சென்றார் (இதுவரை யாரையும் அவர் காரில் ஏற்றியதில்லை அவர் காரின் பின்பே பல கார்கள் செல்லும் முக்கியமானவர்) பயத்தில் பின்சீட்டில் இருக்க எனக்கு நீ முதலாளியா முன்னுக்கு என் அருகில் வா என கூட்டிக்கொண்டு அந்த வாகனம் பறந்து சென்றது.

அங்கே ஓர் கடையில் நிறுத்தினார் நல்ல சம்பளம் நீ இங்கே வேலை செய் என்றார் அங்கே கடையில் நின்றவர்கள் எல்லாம் பெண்கள் எனக்கு பிடிக்கல யோசித்து சொல்கிறேன் சேர் என மீண்டும் காரில் ஏறி வந்துவிட்டேன் வந்த நான் அம்மாவுக்கு உடல் நலமில்லை நான் நாட்டுக்கு போகபோகிறேன் என கூறி கேன்சல் செய்துவிட்டுவர ஆயத்தமானேன் கணக்கு எல்லாம் பார்கப்பட்டு பிடித்து வைத்த காசயெல்லாம் கொடுத்தது கம்பனி நானும் ஊர் புறப்பட தயார் ஆனேன் 2010 ம் ஆண்டு

அப்பாவும் ஊரில் 5 ஏக்கர் வயல் எடுத்தவர் நானும் போணைப்போட்டு நானும் வருகிறேன். இன்னும் 5 ஏக்கர் வயல் மேலதீகமாக எடுங்கள் என்று சொல்லியும் ஊருக்கு வந்து விட்டேன். வயல் எடுத்து செய்ய அறக்கொட்டியும் , வெள்ளைக்கதிரும் நோயும் அடித்து மொத்தமாக நஷ்டம் வெள்ளாமை வெறும் மரமாக நின்றது கொண்டு வந்த காசும் மொத்தமாக செல்ல 5 லட்சத்துக்கு மேல் நட்டமும் அப்பாவுக்கு காட் அட்டக் வர என்ன செய்வதென்று தெரியாமல் உதவி யாழ் இணையத்திடமும் கேட்டிருந்தேன் நேசக்கரம் ஊடாக சிறிய உதவி மிக பெரியதாக இருந்தது. எப்பவும் சொல்லிக்கொள்வேன் இரண்டு வருடங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூலி வேலைகளெல்லாம் செய்தேன் .

வேலைக்கு இண்டவியுக்கு கூட்டி சென்றார் ஒருவர் பல கேள்விகள் கேட்கப்பட்டது எனது பதில் சரியாக இருக்கும் ஆனால் வேலை கிடைக்காது என்ற நிலையில்தான் நான் இருந்தேன்

அதிஸ்ரம் கிடைத்ததா என்று தெரியவில்லை வேலை கிடைத்தது , ஒருவருடத்தில் பதவி உயர்வும் கிடைத்தது மீண்டும் முகாமைத்து உதவியாளருக்கு (M.A) பரீட்சை எழுத காத்துக்கொண்டிருக்கிறேன்.

மறக்க முடியா சம்பவங்கள் மனதிலிருந்து இறக்கி வைத்து இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது

வாசித்த கருத்துகூறிய அனைவருக்கும் நன்றிகள்✍️🙏🙏🙏.       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்காக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது. :(

இருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.

நாளை சந்திப்போம்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

வாழ்க்கையில் இவ்வளவு கஸ்டங்கள் பட்டு முன்னேறி வந்ததையிட்டு சந்தோசம்...நீங்கள் ஊரை விட்டு வெளிக்கிடும் போது ஏ லெவல் பரீட்சை மட்டும் தான் எடுத்தக்காக எழுதியிருந்தீர்கள்...திரும்பி ஊருக்குப் போய் படித்தீர்களா?

வேற பிரிவில் படிக்க ஆயத்தமானேன் ஆனால் எல்லாம் புதிய சிலபஸ் (பாட திட்டம்) அதனால் கைவிட்டு விட்டேன் இருக்கின்ற ஓ/ எல் தகமையும் ஏ /எல் படித்த சான்றிதழ்களை வைத்தே வேலையும் எடுத்துக்கொண்டேன்.

 

3 hours ago, குமாரசாமி said:

ஒரே சோகமயமாக உங்கள் துபாய் வாழ்க்கை ஒடியிருக்கின்றது. :(

இருந்தாலும் ஒரு சில கிளுகிளுப்புகளையும் உங்களை அறியாமலே எழுதி விட்டீர்கள்.

நாளை சந்திப்போம்.:grin:

இதை சொல்வது ரண களத்திலும் ஓர் கிளுகிளுப்பு என்று  நன்றி குமாரசாமி அண்ண  எனக்கே ஓர் சலஞ்சாக இருந்தது அதாவது ஒரு போர்தான் என்றும் சொல்லலாம் எனக்கும் வாழ்க்கைகக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா  , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன். 

மேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, colomban said:

நானும் உங்களை போல் கஷ்டப்பட்டுள்ளேன் ராஜா  , ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து வாழ்க்கையில் முன்னேயேறிவிட்டேன். 

மேலும் இதுபோல் பிலிப்பின் / எகிப்து அனுபவங்களையும் நிறைய சந்தித்துள்ளேன். ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

ம்ம் நானும் தான் கொழும்பான் சவாலாக எடுத்து இன்று வென்று விட்டேன் ஆனால் இலங்கையில் வாழ்வதென்பதும் பாரிய சவால் தான் 

ஒருமுறை ஒரு பாட்ரிசியன் அடித்த ரூம்பில் அடுத்த ரூம்பிலிருந்தேன், இரவெல்லாம் வேகமாக எக்ஸ்பிரஸ் ரயில் ஒருவதுபோல் கடகட வென சத்தம் வந்து கொண்டிருந்தது.

இதைப்பற்றி சொல்லுங்களன் எனக்கு விளங்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழையவற்றை நினைத்து கவலை கொண்டுஇனிப் பயனில்லை. எமக்கெமக்கு எழுதியிருப்பதுபோல்தான் நடக்கும். இப்பதான் குடும்பத்தார் ஆகிவிட்டீர்களே. இனி எல்லா நல்லதே நடக்கும்.
 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.