Jump to content

மனைவி சொல்லே மருந்து


Recommended Posts

பிடரிப்பகுதியிலே -எனக்குப்

பெரியதாய் ஒரு தசைப்பிடிப்பு.

ஆட்டிச் சொல்ல முடியுதில்லை-  தலையை

ஆம் என்றும், இல்லை என்றும்.

பின்னாலே பார்ப்பதற்கு நான்

பிரள வேண்டும் பாதி வட்டம்.

முயன்றுதான் பார்த்தேன்- பல மருந்தும்

முன்னேற்றம் மட்டும் பூச்சியமே.

வாட்டி இழு எருக்கிலையை

வலி மறையும் என்றார் பாட்டி.

வாட்டி,வாட்டி இழுத்துப் பார்த்தேன் -பிடரி

மயிரெல்லாம் எரிந்து போச்சு.

வா வீ கியூ மணம் வருதே நானும்

வரட்டா ஒரு பிடிபிடிக்க என

மயிரெரியும் வாசனையை என்

மச்சான் வா வி கியூ என நினைத்துக் கேட்டான்.

டைகிளோ பீனைல் போடு என

ரை கட்டிய நண்பன் சொன்னான்.

போட்டுத்தான் பார்த்தேன் நானும்

ம்கும் போகவில்லை தசைப்பிடிப்பு.

பிசியோ தெரபி சிகிச்சை செய்யும்

பிரிந்து போன பழைய காதலி சொன்னாள்.

செய்துதான் பார்த்தேன்-

செலவாய்ப் போச்சு பெருமளவு.

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நந்தி said:

கட்டிப்பிடித்து உம்ம்ம்மா கொடுத்து

காரணம் என்ன என்று கேட்டேன்.

தலையணைக்கும் மெத்தைக்கும்

சரியான பொருத்தமில்லை,

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

Link to comment
Share on other sites

46 minutes ago, நந்தி said:

தலையணையை மாற்றுங்கள் அத்தான் 

தயவாய் எந்தன் மனைவி சொன்னாள்.

மாற்றினேன் தலையணையை-அதிசயம்,

மாயமாச்சு தசைப்பிடிப்பு.

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவையான கவிதை

Link to comment
Share on other sites

9 hours ago, புங்கையூரன் said:

கவிதை நன்று....நந்தி..!

சிவப்பு நிறத்தில் உள்ள வரிகள்.....ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொல்லி நிற்க்கின்றன!

மிக்க நன்றி புங்கையூரன்.

8 hours ago, மல்லிகை வாசம் said:

ஆரோக்கியம் சம்பந்தமான முக்கிய ஓர் அறிவுரையைக் கவிதையாக வடித்துள்ளீர்கள், நந்தி. இப்படி சிறு சிறு காரணங்கள் பலவற்றைப் புறக்கணிப்பதாலும் நமது ஆரோக்கியம் கெடுகிறது. 

மேலும் தொடருங்கள் நந்தி 🙂

நன்றி சகோதரா.

3 hours ago, suvy said:

ஒரு தசைப்பிடிப்பு தரமான ஒரு கவிதையை எங்களுக்கு தந்திருக்கு......நல்ல நகைச்சுவையுடன் கூடிய கவிதை நந்தி, தொடர்ந்து எழுதுங்கள்.........!   👍

நன்றி நண்பா.யாவும் கற்பனையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நல்ல நகைச்சுவையுடனான கவிதை .மனைவியின் சொல்லும்  மருந்தாக அமையும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்குள்ள நந்திபோல ஒருத்தி குந்திக் கொண்டிருக்க ஊரெல்லாம் மருந்து கேட்டு கடைசியில வீட்டுக்காரியிடம் கேட்க வேணுமென்று தோன்றியுள்ளது. நல்ல நகைச்சுவையுடன் கவ pதை எழுதியுள்ளீர்கள் தொடர்ந்தும் எழுதுங்கள் நந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாய் வந்த பலர் புதுமையா கலுக்குகிறார்கள்.

கடலை வடையுடன் ஒருவர் வந்தால், கழுத்துப் பிடிப்புடன் இன்னுமொருவர் வருகிறார்.

வாருங்கள் வணக்கம், வழங்குங்கள் வரிசை கட்டி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மெத்தையை மாற்றுதற்கு

மெத்தச் செலவு ,

அதனாலேதான்- தலையணையில்

கையை வைத்தேன் தயங்காமல்

இதையும் சொன்னாள்.

மனைவி சொல் மந்திரமாம் -மட்டுமில்லை

மனைவி சொல் மருந்துமாகும்.

ஆதலினால் மனைவி சொல்லைக்

கருத்தில் கொள்ளும் -அது உங்கள் துன்பம் போக்கும்,துயரம் தீர்க்கும் !.

 

அடி பலம் போல் இருக்கின்றது....

 

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அடி பலம் போல் இருக்கின்றது....

 

மனைவியின் கையால் அடி வாங்காத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா அண்ணன்.வாங்கிப்பாருங்கள் வாழ்க்கை ருசிக்கும்.அடிக்கிற கைதான் அணைக்கும்.அது மட்டுமில்ல அதுக்கும் மேல.

Link to comment
Share on other sites

On 4/4/2019 at 5:47 AM, நந்தி said:

மற்றையவர் பொருந்தாட்டியும்

நமக்கும் வலிகள் வரும்.

மனைவி சொன்னாள் இந்த உண்மை.

மனைவி சொல் மந்திரமோ! மருந்தோ!! ஏன் சொன்னாள்? எதற்காகச் சொன்னாள்?? நந்தியவர்களுக்கு இன்னுமா புரியவில்லை.!! 🤣🤣🤣🤣 

கவிதை அருமை நந்தி. 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசிக்கத்தக்க  கவிதை  வாழ்த்துக்கள்  நந்தி   நல்வரவுகளும்.  

மனைவி  சொல்லே   மந்திரம்  எனும்  தந்திரத்தைத்    தானே  இந்த  அப்பாவி  ஆண்வர்க்கம்  காலாகாலமாக  கடைப்பிடித்து    வருகிறது. ஆப்பிள்  ஆய்ந்து  கொடுத்ததில்  தொடங்கி   மாயமானைத்  தேடி  ஓடுப்பட்டதில்    தொடர்ந்து  இன்று  வரையும்  .. ஓய   மாட்டோம் மாட்டோம்    …

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.