Jump to content

சிக்கும் பணம்: மக்கள் கோபம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கும் பணம்: மக்கள் கோபம்

சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம்

"உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...?" எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது

சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம்

காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், 'தங்களுக்கு சொந்தமானது' என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது? பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள்


Tamil_News_large_2248585.jpg       gallerye_124243524_2248585.jpg

'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே?' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா? உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை? தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன? ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா?' என, கேட்கின்றனர்.

'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்?' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 

'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா?' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். 

எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது.

'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா? அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை.

பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள்.

தினமலர்

Edited by ராசவன்னியன்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.