Jump to content

2009 இனவழிப்புப் போரில் ஐ. நா ஆற்றிய பங்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா அதிகாரிகளால் பத்திரிக்கையாளர் மாநாடுகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகள், விக்கிலீக்கின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்ட உண்மைகள், படுகொலைக் களத்தில் பணியாற்றிய 12 ஐ. நா அதிகாரிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது எத்தகைய பொதுமக்கள் அழிவுகள் ஏற்படினும் புலிகளை தோற்கடித்து அழித்துவிடவேண்டும் என்று ஐ. நா திட்டமிட்டுச் செயற்பட்டது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

 

பாரிய மனிதப்படுகொலைகளை மறைப்பதற்காகத் திரும்பத் திரும்ப சிங்கள அரசாங்கத்தினது "போர் சூனியப் பிரதேசம் மீது கனரக ஆயுதங்களைப் பாவிக்க மாட்டோம்" எனும் பொய்யை முழுமையாக வேண்டுமென்றே நம்பியது மட்டுமல்லாமல், வேண்டுமென்றே வன்னிக் கொலைக்களத்தில் நடந்த படுகொலைகளை மறைத்தது, அங்கே நடைபெற்ற படுகொலைகளின் எண்ணிக்கை என்று சிங்கள அரசு சொன்னதையே பத்திரிக்கையாளர்களுக்கும் சொல்லியது போன்ற அந்நாள் ஐ. நா வின் மனிதாபிமான, இடர் நிவாரண பணிப்பாளராக விளங்கிய ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அந்நாள் பதுகாப்புச்சபைத் தலைவரான யுக்கியோ டகாசு கூறிய ஐ. நா வின் ரகசியத் திட்டமான "பலமுறை பேச்சுவார்த்தைகளைக் குழப்பிய பயங்கரவாதிகளான புலிகளை முற்றாக அழிப்பது, அதன்பின்னரே பொதுமக்கள் அழிவுகள் பற்றிச் சிந்திப்பது" என்பதன் அடிப்படையிலேயே அவர் செயற்பட்டிருக்கிறார் என்று தெளிவாகிறது.

 

பாரிய அமைப்பு ரீதியான தவறுகளை ஐ. நா இழைத்திருப்பதன் மூலம் போரின் இறுதிக்கட்டத்தில் ஒரு சில மாதங்களில் மட்டுமே 40,000 இற்கு மேலான தமிழர்கள் கொல்லப்பட்டக் காரணமாக அது இருந்திருக்கிறது என்று ஐ. நா வின் உள்ளக விசாரணைக் குழுவொன்றே அண்மையில் ஐ. நாவை குற்றம் சாட்டியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த அறிக்கைய விமர்சித்திருக்கும் ஜோன் ஹோம்ஸ், ஐ. நா வின் அன்றைய நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருப்பதுடன், அன்றைய இக்கட்டான காலகட்டத்தில் ஐ. நா இதைவிட வேறு வழியில் செயற்பட்டிருக்க முடியாது என்று கூறியிருக்கிறார். "நாம் எமது நடவடிக்கைகளை மாற்றியிருந்தால், சிறிலங்கா அரசும் தனது நடவடிக்கைகளை மாற்றியிருக்கும், முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும், ஆகவேதான் நாம் அப்படிச் செய்தோம்" என்று கூறியிருக்கிறார்.

 

அபோதைய ஐ. நா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராக இருந்த யுக்கியோ டகாசு கூறுகையில், " மனித அவலம் என்பது ஒரு பிரச்சினையில் சிறிய பகுதி மட்டுமே. ஆனால் அதற்குமப்பால் நாம் அரசியல், பாதுகாப்பு நிலமை பற்றிச் சிந்திக்க வேண்டும். நிலமை மிகவும் சிக்கலானது, பலமுறை கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தங்களப் பயங்கரவாத இயக்கமான புலிகள் முறித்திருக்கிறார்கள், யுத்த நிறுத்தங்களைப் பாவித்து புதிய இராணுவ தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அப்படியிருக்க நாம் அரசாங்கத்தைப் பார்த்து யுத்தத்தை நிறுத்துங்கள் என்று கோருவது நியாயமற்றது" ஆகவேதான் நாம் வாளாவிருந்தோம் என்று சொல்கிறார்.

 

பாதுகாப்புச் சபை தலைவரின் அறிக்கைக்குப் பின்னர் வந்த 5 மாதங்களிலும், ஐ. நா நடந்துகொண்ட விதத்தினையும், அதற்கேற்றாப்போல் அவ்வப்போது வெளிவந்த ஜோன் ஹோம்சின் அறிக்கைகளையும் பார்க்கும்போது ஐ. நா புலிகளை முற்றாக அழிப்பதையே விரும்பியிருந்தது என்பது தெளிவாகிறது. இந்தத் திட்டத்தை ஐ. நா வின் இரு உயரதிகாரிகளான ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் நியூ யோக்கில் இருந்து அமுல்ப்படுத்த, களத்திலிருந்த உள்ளூர் அதிகாரிகளான நீல் பூனே, பிலிப்பே டுவாமெல்லே, அமின் அவாட், அண்டி புறூக்ஸ் ஆகியோர் பாரிய படுகொலைகளுக்கான ராசதந்திர பாதுகாப்பையும், பட்டினிச் சாவுக்கான முழு அளவிலான மறைப்பையும் வழங்கிக் கொண்டிருந்தனர். மாசி மாதத்திலிருந்து மே மாதம் வரையிலான காலப்பகுதியில் ஜோ ஹோம்ஸ் ஐ. நா சபையில் ஐந்து தடவை போர் பற்றிய பத்திரிக்கையாளர் மாநாடுகளை நடத்தியிருந்ததோடு, பல முறை மக்கள் அழிவுகள் பற்றிய கேள்விகளுக்கும் உள்ளாக்கப்பட்டார். இன்னர் சிட்டிப் பிரெஸ் வெளியிட்ட ஐ. நாவின் ரகசியத் தகவல் குறிப்பொன்றின் மூலம் மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தின் செல்த்தாக்குதலினால் கொல்லப்பட்ட 2800 பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி ஐ. நா வுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தும் கூட, பத்திரிக்கையாளர் பொதுமக்கள் அழிவுகள் பற்றிக் கேட்ட போது எந்தவித பதிலையும் அவர் கூற மறுத்து விட்டார். "உங்களால் சரியான பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கையைச் சொல்ல முடியாவிட்டாலும் பறவாயில்லை, அண்ணளவாக எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள், அதன் மூலமாவது அங்கே நடக்கும் மனித அவலத்தை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்து, இந்த அழிவுகர யுத்தத்தை நிறுத்தலாமே?" என்று ஒரு பிரெஞ்சுப் பத்திரிக்கையாளர் கேட்டதற்கும், எதுவித பதிலையும் அவர் கூறவில்லை.

 

ஐ. நா உள்ளக விசாரணைக் குழுவின் விசாரனை அறிக்கைப்படி, "நீங்கள் உண்மையான பொதுமக்கள் அழிவுகளை வெளியே கூறினால் அது ஐ. நா வை பாரிய சங்கடத்துக்குள் தள்ளிவிடும், ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் உண்மையான அழிவுகளை வெளியே சொல்லக்கூடாது" என்று ஜோன் ஹோம்ஸும், விஜய் நம்பியாரும் அந்நாள் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலின் தலைவரான நவிப்பிள்ளையைக் கடுமையாக நிர்ப்பந்தித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் பகுதியிலிருந்த பொதுமக்களின் எண்ணிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கும்போது, ஜோன் ஹோம்ஸ் தொடர்ந்தும் சிங்கள அரசு கூறிய வெறும் 70,000 எனும் எண்ணிக்கையயே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டிருந்தார். ஆனால் அதேவேளை, ஐ. நா வின் வேறு அதிகாரிகளின் மதிப்பீடோ குறைந்தது 200,000 பொதுமக்களாவது அங்கிருக்கலாம் என்று கூறியிருக்க, தமிழர் தரப்புக்களோ இந்த எண்ணிக்கை 300,000 ஐயும் தாண்டும் என்று கணிப்பிட்டிருந்தன. அந்நாட்களில் கொழும்பிலிருந்து ரொபேட் பிளேக்கினால் அமெரிக்க ராசாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்ட செய்திகள்கூட, இந்த 300,000 என்கிற எண்ணிக்கையயே மேற்கோள்காட்டி,சிங்கள அரசு உணவை ஒரு ஆயுதமாகப் பாவித்து, புலிகளின் பின்னாலிருந்த மக்களை தம்பக்கம் இழுக்க முயன்று கொண்டிருக்கிறது என்றதும் குறிப்பிடத்தக்கது. இதற்கும் மேலாக, செய்மதிப்படங்களின் அடிப்படையில் வைத்துப் பார்த்தபோது சிங்கள அரசு கூறிய 70,000 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் மிக அதிகளாவான மக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது ஐ. நா வுக்கு நன்கே தெரிந்திருந்தும் அது சிங்கள அரசுமீது உணவு மற்றும் மருந்துப் பொருள் நிவாரணங்களை அதிகப்படுத்துங்கள் என்று எந்தவித அழுத்தத்தையும் கொடுக்கத் தயாராக இருக்கவில்லை என்பதும் உள்ளக அறிக்கை மூலம் தெரிய வந்திருக்கிறது. இவ்வாறான ஐ. நா வின் நடவடிக்கைகளால் பல ஐ. நா அதிகாரிகள் ஜோன் ஹோம்ஸ் தலமையிலான அமைப்பிலிருந்து விலகியதுடன், பெருமளவு மக்கள் கொல்லப்படவும், பட்டினிச் சாவை எதிர்நோக்கவும் காரணமாக இருந்த ஐ. நாவையும் கடுமையாகச் சாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருக்க, உள்ளூர் ஐ. நா அதிகாரிகள், மக்களுக்கு கிரிக்கெட் ஆட்ட மட்டைகளையும், பந்துகளையும் நிவாரணப் பொருட்களாக விநியோகித்தமையும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பொதுமக்களின் எனண்ணிக்கையை ஜோன் ஹோம்ஸ் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டது, பின்னால் நடக்கவிருந்த பாரிய மனிதப் படுகொலைய எதிர்பார்த்துத்தான் என்பதும் இவரதும், ஐ. நா வினதும் நடவடிக்கள் மூலம் தெரிய வருகிறது.

 

எல்லாப் பத்திர்க்கியாளர் மாநாடுகளிலும், சிங்கள அரசுக்குச் சார்பாக கருத்துத் தெரிவித்த ஜோன் ஹோம்ஸ், புலிகள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களைத் தம்முடன் வைத்திருப்பதால், மக்களின் இழப்புக்களுக்கு அவர்களே பொறுப்பு என்றும் தவறாமல் கூறி வந்தார். போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்த அனைத்து பொதுமக்கள் மட்டுமல்லாமல், போர் வலயப் பகுதிக்கு வெளியே இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ர்கள் கூட இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டது பற்றியும், அங்கே நடைபெற்ற இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றியும் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய ஜோன் ஹோம்ஸ், "அங்கிருக்கும் எல்லாப் பகுதிகளும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, ஆகவே, இராணுவம் அப்படி நடந்துகொண்டதில் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை" என்று ராணுவத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் தவறவில்லை. உலகின் இனச் சிக்கல்களின்போது பாதிக்கப்படும் இனத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய அமைப்பான ஐ. நா வே ஒரு இனத்தைத் திட்டமிட்டு அழிக்கத் துணை போனதென்றால், இவ்வாறான அமைப்பொன்றின் தேவையென்ன என்கிற கேள்வியும் பலரின் மனதில் எழுகிறது.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா சபைக்கு பின்னால் அமெரிக்க, இந்திய அரசுகளே இருந்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா உண்மையை மறைத்தது போர் நடந்து கொண்டிருந்த சமகாலத்திலேயே உள்ளூரில் வெளிவந்து விட்டது. ஆனால், புலிகள் மக்களை கேடயமாகத் தடுத்து வைத்திருந்த குற்றசாட்டு அங்கேயிருந்த மக்களாலேயே உறுதிப் படுத்தப் பட்ட ஒரு தகவல்! ஏன் அப்படிச் செய்தார்கள்? இழப்புகளைக் காட்டி யுத்தத்தை நிறுத்த வைக்கும் தந்திரமாக இதைச் செய்தார்கள் என்பதைத் தவிர வேறெந்த விளக்கமும் யாரிடமும் இல்லை!

ஐநா, ஜப்பான் நாட்டவர், பிளேக், அமெரிக்கா, இந்தியா இவர்கள் தமிழர்களின் உயிரை துச்சமாக மதித்தது பற்றி எனக்கு அதிர்ச்சியில்லை! புலிகளிடம் வன்னி மக்களின் உயிர்களை காத்திருக்கக் கூடிய இயலுமையும் தெரிவும் (choice) இருந்தன! அவர்கள் செய்யவில்லை என்பது தான் வன்னி மக்களின் மேல் விழுந்த கடைசி சவப் பெட்டி ஆணி என்பது என் கருத்து!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓமண்ணை மக்களுக்காக போராடப் போனவை செய்த தவறு உங்களுக்கு பூதாகரமாக தெரியுது!
ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய ஐ.நாவும் அரசுகளும் செய்தது சின்ன விடயம், நல்லா இருக்கு நியாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

ஓமண்ணை மக்களுக்காக போராடப் போனவை செய்த தவறு உங்களுக்கு பூதாகரமாக தெரியுது!
ஆனால் மக்களை பாதுகாக்க வேண்டிய ஐ.நாவும் அரசுகளும் செய்தது சின்ன விடயம், நல்லா இருக்கு நியாயம்.

ஏராளன், மக்களுக்காகப் போராடப் போகிற ஒரு அமைப்புக்கு அந்த மக்கள் கூட்டத்தின் மொத்த உயிரும் collateral ஆக எழுதி வைக்கப் பட வேண்டுமா? அவர்கள் செய்தது ஐநா போன்ற வந்தார் வரத்தானான வெளியார் செய்ததை விட பெரிய தவறு என்பது என் கருத்து! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இவ்வளவு மக்கள் உயிரோடு மீண்டு வந்தார்களே அது எப்படி?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Justin said:

ஐநா உண்மையை மறைத்தது போர் நடந்து கொண்டிருந்த சமகாலத்திலேயே உள்ளூரில் வெளிவந்து விட்டது. ஆனால், புலிகள் மக்களை கேடயமாகத் தடுத்து வைத்திருந்த குற்றசாட்டு அங்கேயிருந்த மக்களாலேயே உறுதிப் படுத்தப் பட்ட ஒரு தகவல்! ஏன் அப்படிச் செய்தார்கள்? இழப்புகளைக் காட்டி யுத்தத்தை நிறுத்த வைக்கும் தந்திரமாக இதைச் செய்தார்கள் என்பதைத் தவிர வேறெந்த விளக்கமும் யாரிடமும் இல்லை!

யுத்தத்தின் இழப்புகளைக் காட்டி சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயன்றிருக்கலாம் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் தம்முடனிருந்தால், சிலவேளை தாக்குதலின் தீவிரத்தையாவது குறையுங்கள் என்று சிங்களத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், புலிகளாகவிருந்தால் என்ன, பொதுமக்களாக இருந்தாலென்ன, கொல்லப்படுவது தமிழர்களாக இருந்தால்ச் சரி என்கிற மனநிலையில் இருக்கும் சிங்கள ராணுவத்திற்கு புலிகளின் எந்த முயற்சியும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்பதே உண்மை.

 

20 minutes ago, Justin said:

புலிகளிடம் வன்னி மக்களின் உயிர்களை காத்திருக்கக் கூடிய இயலுமையும் தெரிவும் (choice) இருந்தன!

எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படியான வலுவோ அல்லது பலமோ அவர்களிடம் அப்போது முற்றாக இல்லாமல்ப் போயிருந்தது என்பதே உண்மை.

தெரிவு என்று வரும்போது, மக்களை வெளியேற விட்டு விட்டு, கடைசிச் சமரை செய்திருக்கலாம். 

ஆனால், இறுதியில் நடந்ததும் அதுதானே? மக்கள் வெளியேறுவதை இறுதியில் தடுக்காமல் விட்ட புலிகள், மக்களுடன் மக்களாக தமது உறுப்பினர்களையும் சரணடயச் சொல்லியிருந்தார்கள். 

இறுதியில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள், சண்டையிட்டவர்களும் கொல்லப்பட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இதுவும் நடந்ததுதான். போரின் ஆரம்ப நாட்களில், புலிகள் சென்ற இடங்களுக்கு மக்களும் பிந்தொடர்ந்து சென்றார்கள். வன்னிச் சமர்களில் முன்னர் பலவிடங்களில் பின்வாங்கியிருந்த புலிகள், சில காலங்களில் தாம் இழந்த நிலப்பரப்பை மீட்டிருந்தார்கள். இந்த நம்பிக்கையின் காரணமாக ஆரம்ப நாட்களில் மக்கள் புலிகளின் பின்னால் சென்றார்கள். அதுமட்டுமல்லாமல், ராணுவத்தின் கைகளில் அகப்பட்டால் நடப்பது என்னவென்பதை நன்கே உணர்ந்திருந்த அம்மக்களுக்கு வேறு தெரிவும் அப்போது இருந்திருக்கவில்லை. 

பின்னர் போர் கடுமையாகி, மக்கள் வகை தொகையின்றிக் கொல்லப்படும்போது, புலிகளைக் காரண்மாகக் காட்டி ராணுவம் அழிக்க நினைப்பது தம்மைத்தான் என்கிற உண்மை தெளிவாகியபோது, புலிகளை விட்டு அகல முடிவெடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல், உணவு மற்றும் மருந்துப் பொருட்களை போரியல் ஆயுதமாகப் பாவித்துச் சிங்களமும், ஐ. நா வும் மக்களை புலிகளிடமிருந்து அந்நியப்படுத்த பகீரதப் பிரயத்தனம் எடுத்துக்கொண்டிருந்தபொழுது பலர் வேறு வழியின்றி ராணுவத்தின் பக்கம் சென்றார்கள்.

சுமார் நான்கு லட்சம் மக்களை மனிதக் கேடயங்களக, வாழ்விற்கும் சாவிற்குமிடையே போராட்டம் நடத்திக்கொண்டிருந்த ஒரு சில நூறு புலிகளால் வைத்திருந்திருக்க முடியுமா என்கிற கேள்வி இருந்தபொழுதும் கூட, சில சந்தர்ப்பங்களில் மக்கள் வெளியேறுவதை புலிகள் தடுத்தார்கள் என்பது உண்மையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொல்லவேண்டும் என்கிற தேவை புலிகளுக்கு எந்த விதத்திலும் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. எவர்களைக் காப்பதற்காக பல்லாயிரம் வீரர்களைக் காவுகொடுத்தார்களோ, அவர்களையே கொல்லுமளவிற்கு அவர்கள் கீழிறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தம்முடன் மக்களும் இருக்கவேண்டும் என்று ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்ப்பது வியப்பில்லை. தமக்கு அரணாக, தமது புதிய வீரர்களுக்கான வழங்கலாக, தம்மீதான அழுத்தத்தினைக் குறைக்கக் கூடிய காரணியாக மக்களை அவர்கள் பார்த்திருக்கலாம் என்பதையும் மறைப்பதற்கில்லை. 

ஆனால், சிங்களமும், ஐ. நா வும், சர்வதேசமும் சொல்லிவந்ததுபோல பொதுமக்களை தமது அரணாக வைத்து பின்னாலிருந்து புலிகள் சுடுகிறார்கள், அதனால் ஒரு கைய்யில் ஐ. நா மனிதவுரிமை சாசனத்தையும் மறுகைய்யில் மனிதாபிமான யுத்தத்தையும் நடத்தினோம் என்பதையும் நம்புவதற்கில்லை. 

நடத்தப்பட்டது அப்பட்டமான இனக்கொலை. அது புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, சிங்களத்தால் நடத்தித்தான் முடிக்கப்பட்டிருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

யுத்தத்தின் இழப்புகளைக் காட்டி சர்வதேச அழுத்தம் ஒன்றின் மூலம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவர முயன்றிருக்கலாம் என்பது ஓரளவிற்கு உண்மைதான். அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் தம்முடனிருந்தால், சிலவேளை தாக்குதலின் தீவிரத்தையாவது குறையுங்கள் என்று சிங்களத்தின் மீது அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால், புலிகளாகவிருந்தால் என்ன, பொதுமக்களாக இருந்தாலென்ன, கொல்லப்படுவது தமிழர்களாக இருந்தால்ச் சரி என்கிற மனநிலையில் இருக்கும் சிங்கள ராணுவத்திற்கு புலிகளின் எந்த முயற்சியும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்பதே உண்மை.

 

எப்படி இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படியான வலுவோ அல்லது பலமோ அவர்களிடம் அப்போது முற்றாக இல்லாமல்ப் போயிருந்தது என்பதே உண்மை.

தெரிவு என்று வரும்போது, மக்களை வெளியேற விட்டு விட்டு, கடைசிச் சமரை செய்திருக்கலாம். 

ஆனால், இறுதியில் நடந்ததும் அதுதானே? மக்கள் வெளியேறுவதை இறுதியில் தடுக்காமல் விட்ட புலிகள், மக்களுடன் மக்களாக தமது உறுப்பினர்களையும் சரணடயச் சொல்லியிருந்தார்கள். 

இறுதியில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சரணடைந்தவர்களும் கொல்லப்பட்டார்கள், சண்டையிட்டவர்களும் கொல்லப்பட்டார்கள். 

ரஞ்சித், நான் இயலுமை என்று சொன்னது போர் செய்து காக்கும் இயலுமையை அல்ல! மக்களைப் போக விடும் முடிவைப் புலிகளே எடுத்திருக்க வேண்டும்! இப்படியான மக்களைப் பணயம் வைத்து யுத்தத்தின் போக்கை மாற்ற நினைத்தது கிட்டத் தட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆப்கானிலும் சிரியாவிலும் செய்த வேலைக்கு ஒப்பானது! உங்கள் இறுதியில் போக விட்டார்கள் என்பது நான் பல புலி apologists சொல்லக் கேட்கும் ஒரு மிக நொய்மையான வாதம்! மே 17 க்கு அண்மையில், புலிகளே சில எல்லைகளைக் காக்க முடியாமல் போன பின்னர் மக்களாகவே வெளியேறினார்கள்! புலிகள் கதவைத் திறந்து "போய் வாருங்கள்" என்று யாரையும் அனுப்பி வைக்கவில்லை! வந்த எல்லாரும் கொல்லப் பட்டார்களா? வெள்ளைக் கொடியுடன் வந்த தலைவர்களும், பஸ்ஸில் ஏற்றி போன போராளிகளும் மக்களும் கொல்லப் பட்டார்கள் காணாமல் போனார்கள்! மிகுதி மக்கள் பெருந்தொகையினர் முகாம்களில் உழன்று பின்னர் விடுவிக்கப் பட்டனர். வெளியே வந்து கொல்லப் பட்ட மக்களை விட உள்ளே புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்து தாக்குதலில் இறந்த மக்கள் அதிகம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொல்கிறீர்களா?

இந்த "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்பது எங்கே இருந்து வருகிறது எனத் தெரியவில்லை! புலிகள் திட்டமிட்டு மக்களை போக விடாமல் தடுத்தார்கள்! இருந்த மக்களில் இருந்து இளையோரை கட்டாயமாக இணைத்து முன்னரங்கில் canon fodder ஆக சாகக் கொடுத்தார்கள்! தப்பியோட முற்பட்ட மக்கள் அல்லது புதிய போராளிகள் புலிகளால் சுடப்பட்ட சம்பவங்களும் நடந்தன! இவையெல்லாம் "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்ற வசனத்தினால் எப்படி மறைக்கப் பட்டிருக்கின்றன என உங்களுக்குப் புரிகிறதா?

 

28 minutes ago, ஏராளன் said:

மக்களை பிணையாக வைத்திருந்தார்களா? இல்லை மக்கள் பாதுகாப்புக்காக அவர்களோடு சென்றார்களா?
தங்களால் பாதுகாக்க முடியாத நிலை வந்தபோது மக்களை வெளியேற சொல்லி போரிட்டு மடிந்தவர்கள் யார்?

இவ்வளவு மக்கள் உயிரோடு மீண்டு வந்தார்களே அது எப்படி?

 

அப்படியா? இதெல்லாம் உங்கள் கனவில் நடந்ததா? உங்கள் கனவை நம்பவும், நிஜமாக ஏற்றுக் கொள்ளவும் உங்களுக்கு உரிமையுண்டு! எனக்கு அதை நம்பிப் பதில் கொடுக்கக் கடப்பாடெதுவும் இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனசில பட்டத கேட்டன் அண்ணா!
அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை.
நான் கண்டது கனவு என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

தமிழர்களைக் கொல்லவேண்டும் என்கிற தேவை புலிகளுக்கு எந்த விதத்திலும் இருந்திருக்கும் என்று நான் நம்பவில்லை. எவர்களைக் காப்பதற்காக பல்லாயிரம் வீரர்களைக் காவுகொடுத்தார்களோ, அவர்களையே கொல்லுமளவிற்கு அவர்கள் கீழிறங்க வேண்டிய அவசியம் இல்லை.

தம்முடன் மக்களும் இருக்கவேண்டும் என்று ஒரு விடுதலை இயக்கம் எதிர்பார்ப்பது வியப்பில்லை. தமக்கு அரணாக, தமது புதிய வீரர்களுக்கான வழங்கலாக, தம்மீதான அழுத்தத்தினைக் குறைக்கக் கூடிய காரணியாக மக்களை அவர்கள் பார்த்திருக்கலாம் என்பதையும் மறைப்பதற்கில்லை. 

ஆனால், சிங்களமும், ஐ. நா வும், சர்வதேசமும் சொல்லிவந்ததுபோல பொதுமக்களை தமது அரணாக வைத்து பின்னாலிருந்து புலிகள் சுடுகிறார்கள், அதனால் ஒரு கைய்யில் ஐ. நா மனிதவுரிமை சாசனத்தையும் மறுகைய்யில் மனிதாபிமான யுத்தத்தையும் நடத்தினோம் என்பதையும் நம்புவதற்கில்லை. 

நடத்தப்பட்டது அப்பட்டமான இனக்கொலை. அது புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, சிங்களத்தால் நடத்தித்தான் முடிக்கப்பட்டிருக்கும். 

ரஞ்சித், புலிகள் மக்களின் உயிரை தங்கள் கேடயமாகவும் வெற்றி வாய்ப்பாகவும் பயன் படுத்த வேண்டிய நிலைக்குக் கீழிறங்கிய பின்னர் தான் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் இப்போது! இதில் அவசியம் இருக்கவில்லை இருந்தது என்பதெல்லாம் இப்போது தேவையில்லாத வாதம்! இதையெல்லாம் எங்கள் நலன் மீது அக்கறை செலுத்த எந்தக் கடப்பாடும் இல்லாத தரப்புகள் மீது சாட்டி விட்டு வரலாற்றை பிழையாக பதிவு செய்ய வேண்டிய தேவை ஏன் இப்போது வந்தது என்று தான் விளங்கவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

ரஞ்சித், நான் இயலுமை என்று சொன்னது போர் செய்து காக்கும் இயலுமையை அல்ல! மக்களைப் போக விடும் முடிவைப் புலிகளே எடுத்திருக்க வேண்டும்! இப்படியான மக்களைப் பணயம் வைத்து யுத்தத்தின் போக்கை மாற்ற நினைத்தது கிட்டத் தட்ட இஸ்லாமியத் தீவிரவாதிகள் ஆப்கானிலும் சிரியாவிலும் செய்த வேலைக்கு ஒப்பானது! உங்கள் இறுதியில் போக விட்டார்கள் என்பது நான் பல புலி apologists சொல்லக் கேட்கும் ஒரு மிக நொய்மையான வாதம்! மே 17 க்கு அண்மையில், புலிகளே சில எல்லைகளைக் காக்க முடியாமல் போன பின்னர் மக்களாகவே வெளியேறினார்கள்! புலிகள் கதவைத் திறந்து "போய் வாருங்கள்" என்று யாரையும் அனுப்பி வைக்கவில்லை! வந்த எல்லாரும் கொல்லப் பட்டார்களா? வெள்ளைக் கொடியுடன் வந்த தலைவர்களும், பஸ்ஸில் ஏற்றி போன போராளிகளும் மக்களும் கொல்லப் பட்டார்கள் காணாமல் போனார்கள்! மிகுதி மக்கள் பெருந்தொகையினர் முகாம்களில் உழன்று பின்னர் விடுவிக்கப் பட்டனர். வெளியே வந்து கொல்லப் பட்ட மக்களை விட உள்ளே புலிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்து தாக்குதலில் இறந்த மக்கள் அதிகம் என்பதை நீங்கள் ஏற்றுக் கொல்கிறீர்களா?

இந்த "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்பது எங்கே இருந்து வருகிறது எனத் தெரியவில்லை! புலிகள் திட்டமிட்டு மக்களை போக விடாமல் தடுத்தார்கள்! இருந்த மக்களில் இருந்து இளையோரை கட்டாயமாக இணைத்து முன்னரங்கில் canon fodder ஆக சாகக் கொடுத்தார்கள்! தப்பியோட முற்பட்ட மக்கள் அல்லது புதிய போராளிகள் புலிகளால் சுடப்பட்ட சம்பவங்களும் நடந்தன! இவையெல்லாம் "சில சமயங்களில் தடுத்தார்கள் தான்" என்ற வசனத்தினால் எப்படி மறைக்கப் பட்டிருக்கின்றன என உங்களுக்குப் புரிகிறதா?

 

புலிகள் ஆரம்பத்திலிருந்தே மக்களை மனிதக் கேடயங்களாகக் வைத்திருந்தார்கள் என்று நம்புகிறீர்களா?? அப்படியில்லை என்பதுதான் உண்மை.

சுமார் நான்கு லட்சம் மக்களை சிலநூறு புலிகளால் எப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கமுடியும் என்பதையும் நினைத்துப் பார்த்தீர்களா? 

ஆனால், பலவந்தமாக ஆட்களை இணைத்தது, பயிற்சியில்லாமல் முன்னரங்கிற்கு அனுப்பியது, கடலைக் கடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதென்பவை நடந்தவைதான். அதில் மறுபேச்சிற்கு இடமில்லை. 

போராட்டத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்லமுடியும் என்கிற ஒரு நப்பாசை புலிகளுக்கு இறுதிவரை இருந்திருக்கலாம். அதன் காரணமாக மக்களைத் தம்முடன் வைத்திருக்க முயன்றிருக்கலாம்.

வெளியே இருந்த மக்களைவிட, உள்ளேயிருந்தவர்கள்தான் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், உள்ளேயிருந்தவர்களை கணக்கு வழக்கின்றி ராணுவத்தால் கொல்லமுடிந்தது, சரணடைந்து முகாம்களில் இருந்தவர்களைக் கொல்வதென்பது புலிகளோடு உள்ளேயிருந்தவர்களைக் கொல்வதுபோல இலகுவாக இருக்கவில்லை என்பதே எண்ணிக்கை குறைவானதற்குக் காரணமேயன்றி, ராணுவம் நல்லவர்களாக இருந்தமையால் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

மனசில பட்டத கேட்டன் அண்ணா!
அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு ஏதுமில்லை.
நான் கண்டது கனவு என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?!

தம்பி ஏராளன், இதில் என்ன கஷ்டம்?  இங்கே நான் சொல்லும் தகவல்கள் போர் நடந்த சம காலத்திலேயே வெளியே வந்த தகவல்கள், பின்னர் புலிகளுடன் இருந்த போராளிகள் மக்களாலேயே நூல்களாகவும் ஆவணங்களாகவும் பதிவானவை. இதை இன்னும் நம்பாமல் சந்தேகிப்போரும் மறுத்துரைப்போரும் கனவில் இருக்கிறார்கள் என்று ஊகிப்பது கடினமா? ஆனால் நீங்கள் தனியே இல்லை! பல பேர் இப்படியான கனவில் இருக்கிறார்கள்! போர் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது, அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகளின் வாசல் படிகளில் ஏறி "மக்களைப் பாதுகாருங்கள்" என்று வேண்டியவர்களில் நானும் ஒருவன். அந்த நேரம் அவர்கள் "புலிகள் மக்களைப் பணயமாக வைத்திருக்கிறார்கள், அதுவும் பிரச்சினை" என்று சொன்னதை நானும் மறுத்திருக்கிறேன், அப்ப நான் அதை நம்பாத கனவில் இருந்தேன். பின்னர், உள்ளே இருந்து தப்பி வந்த வன்னி மக்கள் உறவுகள் மூலம் அறிந்த போது, கனவு கலைந்து போனது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இதையெல்லாம் எங்கள் நலன் மீது அக்கறை செலுத்த எந்தக் கடப்பாடும் இல்லாத தரப்புகள் மீது சாட்டி விட்டு வரலாற்றை பிழையாக பதிவு செய்ய வேண்டிய தேவை ஏன் இப்போது வந்தது என்று தான் விளங்கவில்லை! 

நான் எழுதியது ஐ. நா இறுதிப்போரின்போது, புலிகளை அழிப்பதற்கு எவ்வளவு விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதை விளக்கத்தான். 

ஐ. நா வோ அல்லது போரின் முக்கிய பங்குதாரர்களோ சிங்கள ராணுவத்தின்மீதும், அரசின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தால் இந்த மனித அழிவு நடந்திருக்காது என்பதை விளக்கத்தான்.

புலிகள் தமிழர்களைப் பலியிட்டார்கள் என்னும் சரித்திரத்தை எழுதத் துடிக்கும் நீங்கள் அதற்கு முன்னரான சரித்திரத்தையும் சேர்த்தே எழுதுங்கள். அப்போதுதான் சரித்திரம் சரியாக இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின்னாலிருந்து தமிழர்களின் அவலங்களைப் பற்றிய சரித்திரத்தை மறந்துவிட்டு, புலிகள்தான் 2009 இல் மக்களைக் கொன்றுகுவித்தார்கள் என்றும் சரித்திரம் எழுதுவது எனக்குச் சரியாகப் படவில்லை.

புலிகள் மீதான உங்களின்கோபம் சிங்களத்தின் இனக்கொலையை நியாயப்படுத்துமளவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

புலிகள் ஆரம்பத்திலிருந்தே மக்களை மனிதக் கேடயங்களாகக் வைத்திருந்தார்கள் என்று நம்புகிறீர்களா?? அப்படியில்லை என்பதுதான் உண்மை.

சுமார் நான்கு லட்சம் மக்களை சிலநூறு புலிகளால் எப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருந்திருக்கமுடியும் என்பதையும் நினைத்துப் பார்த்தீர்களா? 

ஆனால், பலவந்தமாக ஆட்களை இணைத்தது, பயிற்சியில்லாமல் முன்னரங்கிற்கு அனுப்பியது, கடலைக் கடந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதென்பவை நடந்தவைதான். அதில் மறுபேச்சிற்கு இடமில்லை. 

போராட்டத்தை தொடர்ந்தும் கொண்டுசெல்லமுடியும் என்கிற ஒரு நப்பாசை புலிகளுக்கு இறுதிவரை இருந்திருக்கலாம். அதன் காரணமாக மக்களைத் தம்முடன் வைத்திருக்க முயன்றிருக்கலாம்.

வெளியே இருந்த மக்களைவிட, உள்ளேயிருந்தவர்கள்தான் அதிகம் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், உள்ளேயிருந்தவர்களை கணக்கு வழக்கின்றி ராணுவத்தால் கொல்லமுடிந்தது, சரணடைந்து முகாம்களில் இருந்தவர்களைக் கொல்வதென்பது புலிகளோடு உள்ளேயிருந்தவர்களைக் கொல்வதுபோல இலகுவாக இருக்கவில்லை என்பதே எண்ணிக்கை குறைவானதற்குக் காரணமேயன்றி, ராணுவம் நல்லவர்களாக இருந்தமையால் அல்ல. 

ரஞ்சித், ஆரம்பம் என்றால் எப்போது? பாஸ் நடைமுறை எப்போது நடைமுறைக்கு வந்தது என்று சொல்லுங்கள்? அதை விடுங்கள்! போர் உக்கிரமான பொழுதில் தப்பியோட முற்பட்ட மக்களைத் தடுத்ததே உயிர்ப்பலிகளுக்கு பிரதான காரணம்! அது நிலப் பரப்புக் குறைந்து வரும் போது அதிகமாகியது!

இந்த நூறு புலிகள் இலட்சம் மக்கள் கதைகளெல்லாம் உங்கள் புத்தி சாலித் தனத்தையே நீங்கள் கேலி செய்வது போல இருக்கிறது! எல்லைகளில் துவக்கோடு நிற்கிற நூறு புலிகள் தான் தடுத்தனர், சுட்டனர். சில இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கியதும் நடந்தது! தன் மகளை வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல வந்த புலிகளைத் தாக்கிய முதிய தந்தையொருவர், அதே இடத்தில் மற்றோருக்குப் பாடமாக பச்சை மட்டையால் பின் இடுப்பில் தாக்கப் பட்டார்! கால்கள் பலவீனமாகி தொழில் இன்றி இப்போது வவுனியாவில் வசிக்கிறார்! மகளும் இல்லை! இப்படி பல கதைகள்! ஆயுதத்துடன் நிற்கும் புலிகளுடன் மக்கள் மோதி தப்பிச் செல்ல எந்த முன்முயற்சியும் எடுக்காமல் இந்த மாதிரியான தண்டனைகள் உதவின! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

நான் எழுதியது ஐ. நா இறுதிப்போரின்போது, புலிகளை அழிப்பதற்கு எவ்வளவு விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தது என்பதை விளக்கத்தான். 

ஐ. நா வோ அல்லது போரின் முக்கிய பங்குதாரர்களோ சிங்கள ராணுவத்தின்மீதும், அரசின் மீதும் அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தால் இந்த மனித அழிவு நடந்திருக்காது என்பதை விளக்கத்தான்.

புலிகள் தமிழர்களைப் பலியிட்டார்கள் என்னும் சரித்திரத்தை எழுதத் துடிக்கும் நீங்கள் அதற்கு முன்னரான சரித்திரத்தையும் சேர்த்தே எழுதுங்கள். அப்போதுதான் சரித்திரம் சரியாக இருக்கும்.

சுதந்திரத்திற்குப் பின்னாலிருந்து தமிழர்களின் அவலங்களைப் பற்றிய சரித்திரத்தை மறந்துவிட்டு, புலிகள்தான் 2009 இல் மக்களைக் கொன்றுகுவித்தார்கள் என்றும் சரித்திரம் எழுதுவது எனக்குச் சரியாகப் படவில்லை.

புலிகள் மீதான உங்களின்கோபம் சிங்களத்தின் இனக்கொலையை நியாயப்படுத்துமளவிற்குச் செல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

எங்கே இப்படிப்பட்ட என் நியாயப் படுத்தல் இருக்கிறது என்று நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் விலகி விடுகிறேன் யாழில் இருந்து!

இது உணர்ச்சி வசப்பட்ட கோபம் அல்ல! ஒரு பெரும் தவறு அப்பாவிகள் மேல் அவர்களைப் பாதுகாக்கும் முடிவை எடுக்கும் சக்தியுடையோரால் இழைக்கப் பட்டிருக்கிறது! குற்றமிழைத்தோர் இன்றில்லை, எனவே தண்டனை பற்றிய தேவையும் இல்லை! ஆனால், குற்றத்திற்காளானவர்கள் இருக்கிறார்கள்! புலிகளை புனிதப் படுத்தும் வகையில் நாம் சம்பவங்களையும் வரலாற்றையும் மீள்வியாக்கியானம் செய்யும் போது, அப்படிப் பாதிக்கப் பட்டோரை இன்னொருமுறை காலில் போட்டு மிதிப்பது மாதிரி இருக்கிறது. இப்படியான மீள் வியாக்கியானங்களும் நொய்மையான விளக்கங்களும் அவசியம் அற்றவை என்பதே என் கருத்து. ஐ.நாவும் மற்றையோரும் கள்ள மௌனம் சாதித்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால், கோடரியின் கூர்மையான பாகமாக புலிகள் மாறி விட்டனர் என்பது என் கருத்து! இதை நான் சொன்னால், அது சிங்கள அரசை சுத்தவாளிகள் என்பதாகப் புரிந்து கொள்வது இங்கே பலரது குறைபாடு, இதுக்கு நான் பொறுப்பல்ல! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ரஞ்சித், ஆரம்பம் என்றால் எப்போது? பாஸ் நடைமுறை எப்போது நடைமுறைக்கு வந்தது என்று சொல்லுங்கள்? அதை விடுங்கள்! போர் உக்கிரமான பொழுதில் தப்பியோட முற்பட்ட மக்களைத் தடுத்ததே உயிர்ப்பலிகளுக்கு பிரதான காரணம்! அது நிலப் பரப்புக் குறைந்து வரும் போது அதிகமாகியது!

இந்த நூறு புலிகள் இலட்சம் மக்கள் கதைகளெல்லாம் உங்கள் புத்தி சாலித் தனத்தையே நீங்கள் கேலி செய்வது போல இருக்கிறது! எல்லைகளில் துவக்கோடு நிற்கிற நூறு புலிகள் தான் தடுத்தனர், சுட்டனர். சில இடங்களில் மக்கள் திருப்பித் தாக்கியதும் நடந்தது! தன் மகளை வலுக்கட்டாயமாக கூட்டிச் செல்ல வந்த புலிகளைத் தாக்கிய முதிய தந்தையொருவர், அதே இடத்தில் மற்றோருக்குப் பாடமாக பச்சை மட்டையால் பின் இடுப்பில் தாக்கப் பட்டார்! கால்கள் பலவீனமாகி தொழில் இன்றி இப்போது வவுனியாவில் வசிக்கிறார்! மகளும் இல்லை! இப்படி பல கதைகள்! ஆயுதத்துடன் நிற்கும் புலிகளுடன் மக்கள் மோதி தப்பிச் செல்ல எந்த முன்முயற்சியும் எடுக்காமல் இந்த மாதிரியான தண்டனைகள் உதவின! 

வன்னியிலிருந்து வந்த உங்களின் உறவுகளின் அனுபவங்களைப் போலவே எனக்கும் சிலர் சொன்னார்கள். 

2008 இல் போர் தொடங்கிய காலப்பகுதியில் புலிகள் பின்வாங்கத் தொடங்கியபோது, மக்களும் அவர்களுடன் சேர்ந்து சென்றதாக நான் கேள்விப்பட்டேன். நான் முன்னரே சொன்னதுபோல, மீண்டும் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தமையால் இது நடந்தது. ஆனால், போர் நெருங்கிவந்து, இனி சாத்தியமில்லை என்கிற நிலை வந்தபோதுதான், மக்கள் வெளியேறும் முடிவினை எடுத்தார்கள். 

பதின்ம வயதினரைக் கட்டாயப்படுத்தி போர்முனைக்கு இட்டுச் சென்றதும், பெற்றோருடனான புலிகளின் சண்டைகளும் நான் கேள்விப்பட்டதுதான். அதை மறுக்கவில்லை. புலிகளோடு இருந்தபடியினால்த்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் என்றும் புலிகளென்றும் சிங்கள ராணுவம் பிரித்துப் பார்த்ததாக நான் அறியவில்லை. தமிழர்கள் எல்லாம் புலிகள் - புலிகள் எல்லாம் தமிழர்கள், ஆகவே எவரைக் கொன்றாலும் தகும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

புலிகள் செயற்பட்ட விதத்தை சரியென்று வாதிடுவது எனது நோக்கமில்லை.  2009 இல் அவர்கள் நடந்துகொண்ட முறை மட்டுமல்லாது, இன்னும் பல தருணங்களில் அவர்களின் நடத்தைகள் பற்றியும் விமர்சிக்கப்பட வேண்டும்.

நான் இங்கு சொல்ல வந்தது ஐ. நா எனும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டிய ஒரு அமைப்பு, எவ்வாறு ஒரு இனக்கொலை அரசுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மையினத்தை அழிக்கத் துணை போனதென்பதுபற்றி விளக்கத்தான். 

ஐ. நா நடந்துகொண்ட முறையினை நான் விமர்சிப்பது தவறு, ஏனென்றால், ஐ நா எனும் அமைப்போ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளோ எம்மீது அக்கறைகொள்ளத் தேவையில்லை, அவர்கள் மீது நாம் பழியைப் போட முடியாது என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் எமது போராட்டத்தில் எந்தவிதத்திலும் பங்கினைச் செலுத்தியிருக்கக் கூடாது.

பேச்சுவார்த்தைக்கு அணுசரணையாளர்களாக வந்தது முதல், எம்மைத் தடைசெய்து, சிங்களத்திற்கு பண, ஆயுத, சர்வதேச அணுசரணை வழங்கியதைத் தொடர்ந்து, இறுதி யுத்தத்தைச் செய்யவும், மறைக்கவும் என்று எதையுமே செய்திருக்கத் தேவையில்லையே? அப்படிச் செய்துவிட்டு, அவர்கள் மீது பழிபோடவேண்டாம், புலிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் என்ன செய்வது? 

2 minutes ago, Justin said:

எங்கே இப்படிப்பட்ட என் நியாயப் படுத்தல் இருக்கிறது என்று நீங்கள் சுட்டிக்காட்டினால் நான் விலகி விடுகிறேன் யாழில் இருந்து!

ஜஸ்டின்,

நீங்கள் சிறந்த ஒரு எழுத்தாளர், அறிவாற்றல் மிக்கவர். நீங்கள் தொடர்ந்து எழுதவேண்டும்.

அடுத்தது, நீங்கள் இனவழிப்பை நியாயப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. நான் சொல்ல வந்தது, புலிகளை விமர்சிக்கும் பொழுது, சிலவேளைகளில் நீங்கள் சிங்களம் செய்த இனவழிப்பை மறந்துவிடுவீர்கள் என்பதைத்தான்.

நீங்கள் இதுவரை இனவழிப்பை நியாயப்படுத்தியதாக நான் நினைக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

வன்னியிலிருந்து வந்த உங்களின் உறவுகளின் அனுபவங்களைப் போலவே எனக்கும் சிலர் சொன்னார்கள். 

2008 இல் போர் தொடங்கிய காலப்பகுதியில் புலிகள் பின்வாங்கத் தொடங்கியபோது, மக்களும் அவர்களுடன் சேர்ந்து சென்றதாக நான் கேள்விப்பட்டேன். நான் முன்னரே சொன்னதுபோல, மீண்டும் பிடிப்பார்கள் என்கிற நம்பிக்கை மக்களுக்கு இருந்தமையால் இது நடந்தது. ஆனால், போர் நெருங்கிவந்து, இனி சாத்தியமில்லை என்கிற நிலை வந்தபோதுதான், மக்கள் வெளியேறும் முடிவினை எடுத்தார்கள். 

பதின்ம வயதினரைக் கட்டாயப்படுத்தி போர்முனைக்கு இட்டுச் சென்றதும், பெற்றோருடனான புலிகளின் சண்டைகளும் நான் கேள்விப்பட்டதுதான். அதை மறுக்கவில்லை. புலிகளோடு இருந்தபடியினால்த்தான் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நாம் நம்பவில்லை. ஏனென்றால், தமிழர்கள் என்றும் புலிகளென்றும் சிங்கள ராணுவம் பிரித்துப் பார்த்ததாக நான் அறியவில்லை. தமிழர்கள் எல்லாம் புலிகள் - புலிகள் எல்லாம் தமிழர்கள், ஆகவே எவரைக் கொன்றாலும் தகும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

புலிகள் செயற்பட்ட விதத்தை சரியென்று வாதிடுவது எனது நோக்கமில்லை.  2009 இல் அவர்கள் நடந்துகொண்ட முறை மட்டுமல்லாது, இன்னும் பல தருணங்களில் அவர்களின் நடத்தைகள் பற்றியும் விமர்சிக்கப்பட வேண்டும்.

நான் இங்கு சொல்ல வந்தது ஐ. நா எனும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டிய ஒரு அமைப்பு, எவ்வாறு ஒரு இனக்கொலை அரசுடன் சேர்ந்து ஒரு சிறுபான்மையினத்தை அழிக்கத் துணை போனதென்பதுபற்றி விளக்கத்தான். 

ஐ. நா நடந்துகொண்ட முறையினை நான் விமர்சிப்பது தவறு, ஏனென்றால், ஐ நா எனும் அமைப்போ அல்லது ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது உதவிவழங்கும் இணைத்தலைமை நாடுகளோ எம்மீது அக்கறைகொள்ளத் தேவையில்லை, அவர்கள் மீது நாம் பழியைப் போட முடியாது என்று நீங்கள் நினைத்தால், அவர்கள் எமது போராட்டத்தில் எந்தவிதத்திலும் பங்கினைச் செலுத்தியிருக்கக் கூடாது.

பேச்சுவார்த்தைக்கு அணுசரணையாளர்களாக வந்தது முதல், எம்மைத் தடைசெய்து, சிங்களத்திற்கு பண, ஆயுத, சர்வதேச அணுசரணை வழங்கியதைத் தொடர்ந்து, இறுதி யுத்தத்தைச் செய்யவும், மறைக்கவும் என்று எதையுமே செய்திருக்கத் தேவையில்லையே? அப்படிச் செய்துவிட்டு, அவர்கள் மீது பழிபோடவேண்டாம், புலிகள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்றால் என்ன செய்வது? 

அவர்கள் வந்தது உதவி செய்ய ஒரு 50% வீதம், தெற்காசியாவில் கால் பதிக்க ஒரு 50% காரணத்துடன் என நான் நம்புகிறேன். ஆனால், தமிழ் மக்கள் ஐநாவிற்கோ, அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சோறு போட்டு வளர்க்கவில்லை! எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய சட்ட ரீதியான (legal) கடமை மட்டுமல்ல, தார்மீக ரீதியான (ethical)  கடமை கூட இந்த வெளித்தரப்புகளுக்கு இல்லை! யாருக்குப் போட்டார்கள் சோறு தமிழர்கள்? பதிலை உங்களிடமே விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அவர்கள் வந்தது உதவி செய்ய ஒரு 50% வீதம், தெற்காசியாவில் கால் பதிக்க ஒரு 50% காரணத்துடன் என நான் நம்புகிறேன். ஆனால், தமிழ் மக்கள் ஐநாவிற்கோ, அமெரிக்காவிற்கோ இந்தியாவிற்கோ சோறு போட்டு வளர்க்கவில்லை! எங்களுக்கு எதுவும் செய்ய வேண்டிய சட்ட ரீதியான (legal) கடமை மட்டுமல்ல, தார்மீக ரீதியான (ethical)  கடமை கூட இந்த வெளித்தரப்புகளுக்கு இல்லை! யாருக்குப் போட்டார்கள் சோறு தமிழர்கள்? பதிலை உங்களிடமே விட்டு விட்டு நான் கிளம்புகிறேன்!

இறுதியாக புலிகளை, செல்லப்பிராணிகளாக்கிவிட்டுச் சென்றுவிட்டீர்கள் ??!! சோறுபோட்டு வளர்த்ததைத்தான் சொல்கிறேன் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியை விட்டு ஐ.நா. அமைப்புக்கள் வெளியேறியபோதே புலிகளை அழிக்க மேற்குநாடுகள் சம்மதம் கொடுத்துவிட்டனர் என்று தெரிந்திருந்தது. ஐ.நா. அமைப்பு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடக்கும்போது பார்வையாளர்களாக இருந்தார்கள்.  யுத்தத்தை தடுத்து நிறுத்த ஆர்வமாக இருக்கவில்லை. மக்களைக் காக்கவும் ஒன்றும் செய்யவில்லை.

இறுதிப் போர்க்காலத்தில் புலிகள் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்து போர் முன்னரங்கில் கொண்டுபோய் விட்டதும், மக்கள் வெளியேற முயற்சித்தபோது தடுத்ததும் சிலரைச் சுட்டுக்கொன்றதும் நடந்தைவதான். 

ஆக மொத்தத்தில் சிறிலங்காவின் போர்ப்படைகள் இறுதியில் செய்த மோசமான இனப்படுகொலையை புலிகளின் தவறுகள் மூலம் சமப்படுத்தத்தான் எல்லோரும் முனைகின்றார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

கிளிநொச்சியை விட்டு ஐ.நா. அமைப்புக்கள் வெளியேறியபோதே புலிகளை அழிக்க மேற்குநாடுகள் சம்மதம் கொடுத்துவிட்டனர் என்று தெரிந்திருந்தது. ஐ.நா. அமைப்பு தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை நடக்கும்போது பார்வையாளர்களாக இருந்தார்கள்.  யுத்தத்தை தடுத்து நிறுத்த ஆர்வமாக இருக்கவில்லை. மக்களைக் காக்கவும் ஒன்றும் செய்யவில்லை.

இறுதிப் போர்க்காலத்தில் புலிகள் கட்டாயமாக ஆட்சேர்ப்புச் செய்து போர் முன்னரங்கில் கொண்டுபோய் விட்டதும், மக்கள் வெளியேற முயற்சித்தபோது தடுத்ததும் சிலரைச் சுட்டுக்கொன்றதும் நடந்தைவதான். 

ஆக மொத்தத்தில் சிறிலங்காவின் போர்ப்படைகள் இறுதியில் செய்த மோசமான இனப்படுகொலையை புலிகளின் தவறுகள் மூலம் சமப்படுத்தத்தான் எல்லோரும் முனைகின்றார்கள்!

இதில் சிங்கள - புலிகள் சமப் படுத்தல் என்று இல்லை! ஆனால், சிங்களப் படைகளின் இனவழிப்பை நாம் சொல்ல சர்வதேசம் நம்ப வேண்டுமென்றால் (நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை!) புலிகளின் தவறால் மக்கள் இறந்ததும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும்! என்னைப் பொறுத்த வரை, தமிழர்களின் உயிர் மீது புலிகளுக்கு சிங்களவனை விட நூறு மடங்கு அதிக அக்கறை இருந்திருக்க வேண்டும் அந்த இறுதி யுத்த நேரங்களில்! அதுவே பாரிய தவறாக புலிகளின் 2008/2009 கால நடவடிக்கைகளை அடையாளப் படுத்துகிறது! சிங்களவருக்கு எங்கள் உயிர் மீதான மதிப்பு என்னவென்று அவர்கள் 1958 இலேயே காட்டி விட்டார்களே? பிறகேன் அவர்கள் கொல்வதை நாம் அதிர்ச்சியுடன் பார்க்கிறோம்? ஆனால் புலிகள் தங்கள் துப்பாக்கிகளை அப்பாவித் தமிழர் மீது திருப்பியது தான் அதிர்ச்சியானதும் அநியாயமானதும்! இதில் குத்தி முறிய ஒரு காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கத்தில் சார்ள்ஸ் அன்ரனியின் தவறான முடிவுகள் தளபதிகளுக்கே பிடிக்காமல் இருந்தன என்றும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தனர் என்றும் பீஷ்மர் எழுதியதை படித்துத்தான் இருந்தேன். புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசகர்களும் பெரும் அவலம் நடந்தால்தான் தலையீடு வரும் என்று ‘அறிவுரை’ கொடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களை இனவழிப்புச் செய்தவர்கள் சிறிலங்காப் படையினரே. அவற்றை ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று புறந்தள்ளி புதிய வரலாற்றை எழுதமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

புலிகள் இயக்கத்தில் சார்ள்ஸ் அன்ரனியின் தவறான முடிவுகள் தளபதிகளுக்கே பிடிக்காமல் இருந்தன என்றும் ஆனால் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தனர் என்றும் பீஷ்மர் எழுதியதை படித்துத்தான் இருந்தேன். புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளின் ஆலோசகர்களும் பெரும் அவலம் நடந்தால்தான் தலையீடு வரும் என்று ‘அறிவுரை’ கொடுத்திருக்கலாம்.

ஆனால் தமிழ் மக்களை இனவழிப்புச் செய்தவர்கள் சிறிலங்காப் படையினரே. அவற்றை ‘மறப்போம் மன்னிப்போம்’ என்று புறந்தள்ளி புதிய வரலாற்றை எழுதமுடியாது.

இதை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்! இரண்டு தரப்பையும் மன்னிக்க வேண்டியதில்லை! ஆனால் ஒரு தரப்பு மட்டுமே இன்றும் இருப்பதால் அது தண்டனை பெற வேண்டும்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழித்துவிட்டோம்.

இப்போது அதன் சாம்பலையும் அதிர்வுகளையும்  சுவடுகளையும் அழிக்கவேண்டும்.

அதுதான் புலிவாந்திகளின்  இன்றைய இலட்சியம்.


சரி எல்லாம் நடந்து முடிந்துவிட்டது எல்லோரும் சம உரிமையுடன் வாழ்வோம் என்று இறுதி 10 வருடங்களில் ஒரு சிங்கள அரசியல்வாதியாவது சொல்லியிருக்கின்றாரா?

 

புலி என்று சொன்னால் மட்டும் எப்படிப்பட்ட திரியானாலும் கொலரை மேலுக்கு இழுத்து விட்டு வியாக்கியானம் புசத்த வந்துவிடுவார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.