Jump to content

மண்புழுக்களும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Worm-and-farming.jpg

 

எனக்குப் பூங்கன்றுகள் செடி கொடிகள் என்றால் பயித்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே.

இருவாரங்களுக்கு முன்னர் இணையத்தில் இயற்கை உரம் பற்றிப் பார்த்தபோது மரக்கறிக் கழிவுகளை மண்ணின் மேல் கொட்டி ஒரு ஐந்து மண்புழுக்களை விட்டால் அவை அவற்றை உண்டு வெளிவரும் கழிவுகள்  நல்ல இயற்கை உரம் என்று போட்டிருந்ததை நம்பி ஒரு வாளியில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி ஒரு ஆறு மண்புழுக்களையம் போட்டு மரக்கறிக்கழிவுகளையும் போட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்தால் புழுக்கள் எதையுமே உண்டதாகத் தெரியவில்லை. மரக்கறித் தோல்கள் தான் வரவர வாடிச் சுருங்கிக் கிடக்கின்றன.

ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வைச்ச சாப்பாடு பிடிக்கேலயோ!
மண்புழுக்கள் மண்ணைத்தானே உண்டு கழிப்பவை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Worm-and-farming.jpg

 

எனக்குப் பூங்கன்றுகள் செடி கொடிகள் என்றால் பயித்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே.

இருவாரங்களுக்கு முன்னர் இணையத்தில் இயற்கை உரம் பற்றிப் பார்த்தபோது மரக்கறிக் கழிவுகளை மண்ணின் மேல் கொட்டி ஒரு ஐந்து மண்புழுக்களை விட்டால் அவை அவற்றை உண்டு வெளிவரும் கழிவுகள்  நல்ல இயற்கை உரம் என்று போட்டிருந்ததை நம்பி ஒரு வாளியில் அரைவாசிக்கு மண்ணை நிரப்பி ஒரு ஆறு மண்புழுக்களையம் போட்டு மரக்கறிக்கழிவுகளையும் போட்டுவிட்டு ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்தால் புழுக்கள் எதையுமே உண்டதாகத் தெரியவில்லை. மரக்கறித் தோல்கள் தான் வரவர வாடிச் சுருங்கிக் கிடக்கின்றன.

ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

 

பக்கற்றில் சிறு துளைகள் இருக்கவேண்டும் ( காற்றோட்டத்துக்கு) இரண்டு நாளைக்கு ஒருக்கா கிளற வேண்டும். மண்ணும் மரக்கறி கழிவுகளும் மாறி மாறி போடவேண்டும். மூடி வைத்தால் தான் சூடாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

 

மண்புழுவுக்கும் புதிய மரக்கறி தான் பிடிக்கும் போல.

இப்போ கொம்போசுக்கு என்று நல்ல வடிவாக செய்து விற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் குளிர் சரியா முடியவில்லை. இதற்குள் மண் புழுவை மனிதர்கள் ரேஜ்ஜில் வைச்சு.. பார்க்கக் கூடாது. அது தனக்கு சாதகமான தட்பவெப்ப சூழலில் தான் செயற்பட முடியும். இன்றேல்.. அது இறக்க நேரிடும் அல்லது உறங்கு நிலைக்குப் போய்விட்டும்.. மண்ணில் குறிப்பிட்ட ஆழத்தில். 

எதுவும் இயற்கையாக நிகழ அனுமதிப்பதே சிறந்தது. செயற்கையாக நாம் உயிரினங்களை கையாள ஆரம்பித்து இறுதியில் உயிர் பன்மைத்துவம் மற்றும் உயிர்ச் சமநிலை எல்லாத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இன்று தேனீக்களில் பல வகைகளை காணவில்லை. அதனால்... உணவு...பயிர்களின்.. பழங்களின்... உற்பத்திகள் பாதிக்கப்படும் நிலை. 

இந்த தேனீக்களின் இழப்பில்.. புகுத்தப்பட்ட சில வண்டுவகைகள் மற்றும் பாவிக்கப்படும் பூச்சி கொல்லிகள் என்பனவும் சூழல் மாற்றமும்.. செல்வாக்குச் செலுத்துவதாக கருதப்படுகிறது. 

மண்புழுக்கள் சரியாக இயற்கையாக தொழிற்பட அவைக்கு தகுந்த வெப்பமான சூழல்.. போதிய மண்ணின் காற்றடக்கம்.. மற்றும் ஈரப்பதன் அவசியம். இவை இல்லாத சூழலில்.. அவற்றை திணிப்பதும் அவற்றிடம் பயனை எதிர்பார்ப்பதும்.. உயிர் வன்கொடுமைக்கு நிகரானது. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

There may be differences in vermicomposting method depending on the climate. ... The most common worms used in composting systems, redworms (Eisenia foetida, Eisenia andrei, and Lumbricus rubellus) feed most rapidly at temperatures of 15–25 °C (59-77 °F). They can survive at 10 °C (50 °F).

https://en.wikipedia.org/wiki/Vermicompost

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

இன்னும் குளிர் சரியா முடியவில்லை. இதற்குள் மண் புழுவை மனிதர்கள் ரேஜ்ஜில் வைச்சு.. பார்க்கக் கூடாது. அது தனக்கு சாதகமான தட்பவெப்ப சூழலில் தான் செயற்பட முடியும். இன்றேல்.. அது இறக்க நேரிடும் அல்லது உறங்கு நிலைக்குப் போய்விட்டும்.. மண்ணில் குறிப்பிட்ட ஆழத்தில். 

எதுவும் இயற்கையாக நிகழ அனுமதிப்பதே சிறந்தது. செயற்கையாக நாம் உயிரினங்களை கையாள ஆரம்பித்து இறுதியில் உயிர் பன்மைத்துவம் மற்றும் உயிர்ச் சமநிலை எல்லாத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

இன்று தேனீக்களில் பல வகைகளை காணவில்லை. அதனால்... உணவு...பயிர்களின்.. பழங்களின்... உற்பத்திகள் பாதிக்கப்படும் நிலை. 

இந்த தேனீக்களின் இழப்பில்.. புகுத்தப்பட்ட சில வண்டுவகைகள் மற்றும் பாவிக்கப்படும் பூச்சி கொல்லிகள் என்பனவும் சூழல் மாற்றமும்.. செல்வாக்குச் செலுத்துவதாக கருதப்படுகிறது. 

மண்புழுக்கள் சரியாக இயற்கையாக தொழிற்பட அவைக்கு தகுந்த வெப்பமான சூழல்.. போதிய மண்ணின் காற்றடக்கம்.. மற்றும் ஈரப்பதன் அவசியம். இவை இல்லாத சூழலில்.. அவற்றை திணிப்பதும் அவற்றிடம் பயனை எதிர்பார்ப்பதும்.. உயிர் வன்கொடுமைக்கு நிகரானது. 🙄

சுமே ஏதோ ஆசைக்கு ஆறு மண்புழு மட்டும்தான் எடுத்து மண் வாளிக்குள் விட்டு மரக்கறியும் போட்டிருக்கிறா. ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்திருக்கிறா. அதுகள் உண்ணாவிரதம் இருந்து மயங்கி கிடப்பதற்கு அவ என்ன செய்வா பாவம். அதுக்காக காணாமல் போன தேனீக்கள் எல்லாவற்றையும் அவ எடுத்து ஒளிச்சு வைத்திருக்கிறது மாதிரி சொல்ல கூடாது. நீங்கள் சுலபமாய் சொல்லி விட்டீர்கள். இனி சுமே சமையலிலும் தேன் சேர்க்க மாட்டா....... பார்த்தேன் சிரித்தேன் என்னும் பாட்டும் கூட பாட மாட்டா....!   🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 2:36 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...ஏன் அவை அவற்றை உண்ணவில்லை என்று தெரியவில்லை. கிளறிப் பார்த்தால் மண்புழுக்களும் மயங்கிக் கிடப்பதுபோல் கிடக்கின்றன. யாராவது தெரிந்தால்  என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள்.???

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

உந்தாள்,சுமோவை பார்த்திட்டு ஓடாமல் நின்று கொண்டு தான் இல்லை என்று மழுப்பினவர்...நான் என்டால் இவவை கண்டவுடன் மற்றப் பக்கத்தால் ஓடி இருப்பன்🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 12:00 PM, ஏராளன் said:

நீங்க வைச்ச சாப்பாடு பிடிக்கேலயோ!
மண்புழுக்கள் மண்ணைத்தானே உண்டு கழிப்பவை? 

அதுகளுக்கு என்ன பிடிக்கும் எண்டு நான் எப்பிடிக் கேட்பது ??? இணையத்தில் மரக்கறிக் கழிவுகளை போடுங்கள் என்று போட்டிருந்ததால் போட்டேன்.

On 4/7/2019 at 3:46 PM, nilmini said:

பக்கற்றில் சிறு துளைகள் இருக்கவேண்டும் ( காற்றோட்டத்துக்கு) இரண்டு நாளைக்கு ஒருக்கா கிளற வேண்டும். மண்ணும் மரக்கறி கழிவுகளும் மாறி மாறி போடவேண்டும். மூடி வைத்தால் தான் சூடாக இருக்கும். 

ஓ அவற்றுக்குச் சூடு தேவையா??? குளிரில் வெளியே இருப்பவைதானே???

On 4/7/2019 at 3:47 PM, ஈழப்பிரியன் said:

மண்புழுவுக்கும் புதிய மரக்கறி தான் பிடிக்கும் போல.

இப்போ கொம்போசுக்கு என்று நல்ல வடிவாக செய்து விற்கிறார்கள்.

நான் என்ன பழைய அழுகிய மரக்கறியா போட்டேன் ???? எமக்குச் சமைக்க வாங்கியதன் தோல்கள் தானே ???

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

On 4/7/2019 at 10:53 PM, nedukkalapoovan said:

மண்புழுக்கள் சரியாக இயற்கையாக தொழிற்பட அவைக்கு தகுந்த வெப்பமான சூழல்.. போதிய மண்ணின் காற்றடக்கம்.. மற்றும் ஈரப்பதன் அவசியம். இவை இல்லாத சூழலில்.. அவற்றை திணிப்பதும் அவற்றிடம் பயனை எதிர்பார்ப்பதும்.. உயிர் வன்கொடுமைக்கு நிகரானது. 🙄

உண்மைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/7/2019 at 11:27 PM, nedukkalapoovan said:

There may be differences in vermicomposting method depending on the climate. ... The most common worms used in composting systems, redworms (Eisenia foetida, Eisenia andrei, and Lumbricus rubellus) feed most rapidly at temperatures of 15–25 °C (59-77 °F). They can survive at 10 °C (50 °F).

https://en.wikipedia.org/wiki/Vermicompost

இது இந்தளவு வேலை என்று தெரியாமல் போச்சு.பகிர்வுக்கு நன்றி நெடுக்ஸ்.

பகிர்தலுக்கு நன்றி.

21 hours ago, suvy said:

சுமே ஏதோ ஆசைக்கு ஆறு மண்புழு மட்டும்தான் எடுத்து மண் வாளிக்குள் விட்டு மரக்கறியும் போட்டிருக்கிறா. ஒவ்வொரு நாளும் எட்டிப் பார்த்திருக்கிறா. அதுகள் உண்ணாவிரதம் இருந்து மயங்கி கிடப்பதற்கு அவ என்ன செய்வா பாவம். அதுக்காக காணாமல் போன தேனீக்கள் எல்லாவற்றையும் அவ எடுத்து ஒளிச்சு வைத்திருக்கிறது மாதிரி சொல்ல கூடாது. நீங்கள் சுலபமாய் சொல்லி விட்டீர்கள். இனி சுமே சமையலிலும் தேன் சேர்க்க மாட்டா....... பார்த்தேன் சிரித்தேன் என்னும் பாட்டும் கூட பாட மாட்டா....!   🙂 

ஐயோ அண்ணா. சிரித்து முடியவில்லை. வன்னியில இருந்து இப்பதான் கொண்டுவந்த காட்டுத்தேன் வீண்.😁

20 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா ஆட்கள் தான் தங்களை பார்த்து ஓடி ஒளிகிறார்களென்றால் பாழாய்ப்போன இந்த மண் புழுக்களுமா மயங்கிவிழுகின்றன..?

கரகரத்த குரலை விட்டொழித்து இனிமையான குரலில் ஏதாவது பாட்டு பாடுங்கம்மா, சுதாரித்து எழுந்துவிடும்.

என் குரல் துல்லியமான கணீர் குரல் என்றுதான் எல்லோரும் சொல்வது. நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். இனிமைக் குரலுக்கு நான் யாரைக் கூப்பிட்டுப் பாடுவது ??????பிள்ளைகளைக் கேட்கலாம் என்றால் பாக்கிற வேலையைப் பாரம்மா என்பார்கள்.🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உந்தாள்,சுமோவை பார்த்திட்டு ஓடாமல் நின்று கொண்டு தான் இல்லை என்று மழுப்பினவர்...நான் என்டால் இவவை கண்டவுடன் மற்றப் பக்கத்தால் ஓடி இருப்பன்🤨

என்னைக் கெட்டவள் ஆக்கிறதே எல்லாருக்கும் வேலையாய் போச்சு. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்பக்கம் வந்தால் நல்ல பசு சாணி இருக்கிறது நல்ல உரம் இந்த புழுக்களுக்க இருந்து   ஏன் மெனக்கெடுவான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ஊர்பக்கம் வந்தால் நல்ல பசு சாணி இருக்கிறது நல்ல உரம் இந்த புழுக்களுக்க இருந்து   ஏன் மெனக்கெடுவான் 

ஆட்டுப் பிழுக்கைக்கும்  சாணிக்கும் இரண்டு மூன்று பாமுக்கு அலைந்து அவர்கள் தரவில்லை. ஒன்லயினில் வாங்கலாம் என்றால் இந்தியாவின் விபரம் தான் வருகிறது . அவர்களை நம்பி காசைக் கொடுக்க முடியாது. ஏனெனில் கடந்த ஆண்டு நீல அல்லி விதைகள் என்று அமசோனில் பணம் செலுத்தினால் வந்தவை புற்களின் விதைகள் தான். இப்ப குதிரை லத்திதான் வாங்கியிருக்கிறேன்.

எங்கள் ஊர்ப் பக்கமும் இப்ப மாடுகள் ஆடுகள் இல்லை. நான் வரும்போது கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்தேன். கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆட்டுப் பிழுக்கைக்கும்  சாணிக்கும் இரண்டு மூன்று பாமுக்கு அலைந்து அவர்கள் தரவில்லை. ஒன்லயினில் வாங்கலாம் என்றால் இந்தியாவின் விபரம் தான் வருகிறது . அவர்களை நம்பி காசைக் கொடுக்க முடியாது. ஏனெனில் கடந்த ஆண்டு நீல அல்லி விதைகள் என்று அமசோனில் பணம் செலுத்தினால் வந்தவை புற்களின் விதைகள் தான். இப்ப குதிரை லத்திதான் வாங்கியிருக்கிறேன்.

எங்கள் ஊர்ப் பக்கமும் இப்ப மாடுகள் ஆடுகள் இல்லை. நான் வரும்போது கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்தேன். கிடைக்கவில்லை.

ஒன்லைனை நம்பி கன சனம் ஏமாந்து இருக்கு கண்டியளோ 

மண் புழுக்கு பாம்பை அனுப்பாதவரைக்கும் ஓகே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒன்லைனை நம்பி கன சனம் ஏமாந்து இருக்கு கண்டியளோ 

மண் புழுக்கு பாம்பை அனுப்பாதவரைக்கும் ஓகே

ஐயோ அதுவும் நடக்கும் 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ அதுவும் நடக்கும் 😟

ஒரு காட் டிஸ்க் ஒன்றுக்கு ஓடர் கொடுக்க ஒர் அழகான செங்கல் பார்சலாக  வந்தது இடயில் யார் மாற்றினார்கள் என்பது இதுவரைக்கும் தெரியாது நண்பனுக்கு ஒன் லைன் கம்பனிகள் விளையாட்டுக்கள் அவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுகளுக்கு என்ன பிடிக்கும் எண்டு நான் எப்பிடிக் கேட்பது ??? இணையத்தில் மரக்கறிக் கழிவுகளை போடுங்கள் என்று போட்டிருந்ததால் போட்டேன்.

ஓ அவற்றுக்குச் சூடு தேவையா??? குளிரில் வெளியே இருப்பவைதானே???

நான் என்ன பழைய அழுகிய மரக்கறியா போட்டேன் ???? எமக்குச் சமைக்க வாங்கியதன் தோல்கள் தானே ???

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

உண்மைதான்

கொஞ்சம் சூடு இருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொம்போசுக்கென்று இதைச் செய்து விற்கிறார்கள் ???? மரக்கறிகளையா ???

Try Compost buckets.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடு வேண்டும் என்றால் 100 வாட்ஸ் பல்ப் ஒன்றை அதற்குள் மாட்டி விடுங்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

Try Compost buckets.

இத்தனை நாட்கள் அதைத்தான் பயன்படுத்தியது. ஆனால் அதற்குள்ளும் புற்கள் எல்லாம் வளர்கிறது

52 minutes ago, suvy said:

சூடு வேண்டும் என்றால் 100 வாட்ஸ் பல்ப் ஒன்றை அதற்குள் மாட்டி விடுங்கள்......!   👍

கீற்றறைப் போடச்சொல்லாதவரை ஓகே

Link to comment
Share on other sites

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். ஆனாலும் இன்று அதிகம் இயற்கையை நம்  நிலத்தில் இருக்கும் மண் புழுக்களை பயன்படுத்தாமல் எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை பயன் படுத்தி மண் புழு உரம் தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இதை தான் இயற்கை உரம் இரண்டும் அழைத்து கொள்கிறார்கள் .

குதிரை சாணம் கூட தேங்காய் நார் கலந்து பயன் படுத்தலாம் .

நன்றி 
பண்ணையார் 

Just now, Pannaiyar said:

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். ஆனாலும் இன்று அதிகம் இயற்கையை நம்  நிலத்தில் இருக்கும் மண் புழுக்களை பயன்படுத்தாமல் எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை பயன் படுத்தி மண் புழு உரம் தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இதை தான் இயற்கை உரம் இரண்டும் அழைத்து கொள்கிறார்கள் .

குதிரை சாணம் கூட தேங்காய் நார் கலந்து பயன் படுத்தலாம் .

நன்றி 
பண்ணையார் 

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Pannaiyar said:


பண்ணையார் 

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 

வணக்கம் பண்ணையார்.நான் உங்கள் எனது தோட்டம் என்னும் ஆக்கத்தை தொடர்ந்து படித்தவன்.இப்பொழுது உங்கள் தொட்டம் என்னமாதிரி உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 4:52 PM, Pannaiyar said:

சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய குப்பை கூளங்களை எல்லாம் மண்புழுக்களை பயன்படுத்தி கம்போஸ்ட் உரமாக மாற்றி விட முடியும். இந்த வகையில் தோட்டத்தில் கிடைக்கும் இலைதழைகள், காகிதங்கள் உள்பட மக்கும் அனைத்து இயற்கை கழிவுகளையும் மண்புழுவைக் கொண்டு கம்போஸ்ட் உரமாக தயாரிக்கலாம். ஆனாலும் இன்று அதிகம் இயற்கையை நம்  நிலத்தில் இருக்கும் மண் புழுக்களை பயன்படுத்தாமல் எய்சீனியா பிப்டியா மற்றும் யூடிரலஸ்யூஜிசினே ஆகிய இரண்டு வகை இனங்களை பயன் படுத்தி மண் புழு உரம் தயாரித்து விற்பனைக்கு வருகிறது. இதை தான் இயற்கை உரம் இரண்டும் அழைத்து கொள்கிறார்கள் .

குதிரை சாணம் கூட தேங்காய் நார் கலந்து பயன் படுத்தலாம் .

நன்றி 
பண்ணையார் 

மேலும் விவரங்கள் அறிய இங்கு  https://www.pannaiyar.com/மண்புழு-உங்களுக்கு-தரும்/     விளக்கமாக பதிந்து உள்ளேன். பயன் படும் எனில்  படிக்கவும் .

நான் புதியவன் இங்கு இப்படி பதியலாமா என்று தெரியவில்லை. 
 

தாராளமாகப் பதியலாம். நான் இன்றுதான் உங்களை பார்க்கிறேன். வேறு பெயரில் இருந்தீர்களா முன்னர்.
நன்றி உங்கள் கருத்துக் பகிர்வுக்கு.

குதிரைச் சாணம் என்று வாங்கினேன். ஆனால் அதற்குள் வேறு என்ன போட்டார்களோ  தெரியவில்லை.

மண் புழுக்களைக்  நான் கையால் கூட தொட மாட்டன். இதில் ஆயிரம் மண்புழுக்களை விடுவதா ?? ஐயோ கடவுளே வாசிக்கவே முள்ளந்தண்டு சில்லிடுது.

10 hours ago, சுவைப்பிரியன் said:

வணக்கம் பண்ணையார்.நான் உங்கள் எனது தோட்டம் என்னும் ஆக்கத்தை தொடர்ந்து படித்தவன்.இப்பொழுது உங்கள் தொட்டம் என்னமாதிரி உள்ளது.

இவர்தான் விவசாயி என்ற பெயரில் வந்தவரோ சுவைப்பிரியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவர்தான் விவசாயி என்ற பெயரில் வந்தவரோ சுவைப்பிரியன்

இவர் அவர் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.