Jump to content

Recommended Posts

செளசம்

236. மலசல மோசனஞ் செய்யின் எப்படிச் செளசஞ் செய்தல் வேண்டும்?

எழுந்து புண்ணிய தீர்த்த மல்லாத சலக்கரையை அடைந்து, சலத்துக்கு ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு, மூன்று விரலால் அள்ளிய மண்ணுஞ்சலமுங் கொண்டு இடக்கையினாலே குறியை ஒருதரமும், குதத்தை ஐந்து தரத்துக்கு மேலும், இடக்கையை இடையிடையே ஒவ்வொரு தரமும், பின்னும் இடக்கையைப் பத்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து; கால்களை முழங்கால் வரையுங் கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரமுங் கழுவிச் சுத்தி செய்து, செளசஞ் செய்த இடத்தைச் சலத்தினால் அலம்பிவிட்டு, அவ்விடத்தினின்று நீங்கி, வேறொரு துறையிலே போய், வாயையும் கண்களையும் நாசியையுங் காதுகளையுங் கைகால்களிலுள்ள நகங்களையுஞ் சுத்தி செய்து, எட்டுத்தரஞ் சலம் வாயிற் கொண்டு, இடப் புறத்திலே கொப்பளித்துத், தலைக்கட்டு இல்லாமற் பூணூலை முன்போலத் தரித்துக், குடுமியை முடித்து, மந்திரங்கள் உச்சரியாது ஒரு தரமும் மந்திரங்கள் உச்சரித்து ஒரு தரமுமாக இரண்டு தரம் ஆசமனம் பண்ணல் வேண்டும். (ஆசமனம் - உறிஞ்சுதல்)

237. சலமோசனஞ் செய்யின் எப்படி செளசஞ் செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமுங்கொண்டு, குறியை ஒரு தரமும், இடக்கையை ஐந்து தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து மூன்று தரமும், இரண்டு கால்களையும் ஒவ்வொரு தரமுஞ் சுத்தி செய்து, நான்கு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

238. செளசத்துக்குச் சமீபத்திலே சலம் இல்லையாயின் யாது செய்தல் வேண்டும்?

பாத்திரத்திலே சலம் மொண்டு ஓரிடத்தில் வைத்துக் கொண்டு, மலசல மோசித்துச் செளசஞ் செய்துவிட்டுப், பாத்திரத்தைச் சுத்தி செய்து, சலம் மொண்டு, வாய் கொப்பளித்துக், கால் கழுவி, ஆசமனம் பண்ணல் வேண்டும். சல பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு சலமல விசர்க்கஞ் செய்யலாகாது. (விசர்க்கம் = கழித்தல்)

239. ஆசமனம் எப்படிச் செய்தல் வேண்டும்?

கிழக்கையேனும் வடக்கையேனும் நோக்கிக், குக்குடாசனமாக இருந்து, இரண்டு முழங்கால்களுக்கும் இடையே கைகளை வைத்துக்கொண்டு, வலக்கையை விரித்துப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தை ஆசமித்தல் வேண்டும்.

240. குக்குடாசனமாவது யாது?

இரண்டு பாதங்களையும் கீழே வைத்துக் குந்திக் கொண்டிருத்தல்.

241. தடாக முதலியவற்றில் எப்படி ஆசமனஞ் செய்தல் வேண்டும்?

முழங்காலளவினதாகிய சலத்திலே நின்று, இடக் கையினாலே சலத்தைத் தொட்டுக்கொண்டு, வலக்கையினாலே ஆசமனம் பண்ணல் வேண்டும். முழங்காலளவினதாகிய சலத்திற் குறைந்தால் கரையை அலம்பி, அதிலிருந்து கொண்டு ஆசமனம் பண்ணல் வேண்டும்.

தந்ததாவனம்

242. தந்த சுத்திக்குக் கருவியாவன யாவை?

விதிக்கப்பட்ட மரங்களின் கொம்பும் இலையுந் தூளுமாம்.

243. இல்வாழ்வானுக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

மருது, இத்தி, மா, தேக்கு, நாவல், மகிழ், ஆத்தி, கடம்பு, விளா, நாயுருவி, அசோகு, குருக்கத்தி, பூல், வேல், சம்பகம் என்பவைகளாம்.

244. துறவிக்கு விதிக்கப்பட்ட மரங்கள் எவை?

பெருவாகை, நொச்சி, பெருங்குமிழ், புன்கு கருங்காலி, ஆயில், மருது என்பவைகளாம்.

245. தந்த காட்டம் எப்படிப்பட்டதாய் இருத்தல் வேண்டும்?

நேரியதாய்த், தோலோடு பசப்புள்ளதாய்க், கணுவுந் துளையும் இடைமுறிதலும் இல்லாததாய், சிறுவிரற் பருமை யுடையதாய் இருத்தல் வேண்டும். இல்வாழ்வானுக்குப் பன்னிரண்டங்குல நீளமும், துறவிக்கு எட்டங்குல நீளமும், பெண்களுக்கு நாலங்குல நீளமுங் கொள்ளப்படும். (காட்டம் = குச்சி)

246. தந்த சுத்திக்குக் கருவி யாகாதன யாவை?

பட்டமரம், பாளை, வைக்கோல், கைவிரல், செங்கல், கரி, சாம்பல், மணல் என்பவைகளாம்.

247. தந்த சுத்தி எப்படிச் செய்தல் வேண்டும்?

விதிக்கப்பட்ட தந்த காட்டத்தையேனும், இலையையேனுஞ் சலத்தினாலே கழுவி, மெளனம் பொருந்திக், கிழக்கு நோக்கியேனுங் குக்குடாசனமாக இருந்துகொண்டு, பல்லின் புறத்தையும் உள்ளையுஞ் செவ்வையாகக் சுத்தி செய்து, ஒரு கழியை இரண்டாகப் பிளந்து, ஒவ்வொரு பிளப்பை மும்மூன்று தரம் உண்ணாவளவாக ஓட்டி, நாக்கை வழித்து, இடப்புறத்தில் எறிந்துவிட்டுச் சலம் வாயிற்கொண்டு, பன்னிரண்டு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, முகத்தையுங் கைகால்களையுங் கழுவி ஆசமனம் பண்ணல் வேண்டும். நின்றுகொண்டாயினும் நடந்து கொண்டாயினும், போர்த்துக்கொண்டாயினும் தந்த சுத்தி பண்ணலாகாது.

Link to comment
Share on other sites

  • Replies 479
  • Created
  • Last Reply

அற்றேல் வியாகரணம் முதலியன வேதாங்கமாதலின், வேதமே பிரமாணம்; ஆகமம் பிரமாணமன்றெனின்; அற்றன்று. யோகரூடி நாமத்தால் சிவாகமமே நால்வகைப் பிரமாணங்களாலும் முடிந்த ஆகமம் எனப்படுதலாலும், "சித்தாந்தமே சித்தாந்தம்." என்று இரத்தினத்திரயத்திலே கூறப்படுதலாலும் அதுவே பிரமாணம்; வேதம் பிரமாணமன்று. அற்றேல், வேதமும் ஆகமம் சித்தாந்தம் என்னும் சத்தங்களாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமெனின், ஆகமமும் வேதசத்தத்தாலே கெளணவிருத்தியாற் சொல்லப்படுமென்று சமநீதியாமே. ஆதலால் சிவாகமமே முக்கிய விருத்தியால் ஆகமமெனவும் சித்தாந்தமெனவும் படுதலில், சருவோத்கிருஷ்டப் பிரமாணமாமென்று சாதிக்கப்பட்டது. இருக்கு வேதத்திலும், இருக்கு வேதசிரசிலும், யசுர்வேதத்திலும், யசுர்வேதசிரசிலும், சாமவேதத்திலும், சாமவேதசிரசிலும், ஒரோவிடத்தில் அதர்வவேதத்திலும், அதர்வவேதசிரசிலும், லெளகிகநூற்பொருளும், வைதிக நூற் பொருளும், அத்தியான்மக நூற்பொருளும், அதிமார்க்க நூற்பொருளும், யதோசிதமாக எவ்வாற்றானும் சொல்லப்பட்டன; அதர்வசிரசிலே மாந்திர நூற்பொருள் விசேஷித்துச் சொல்லப்பட்டது. செளர சங்கிதையிலே "ஆகமத்தைப் பற்றிக் கொண்டன்றோ சில புராணங்கள் சில சில இடங்களில் பிரத்தியட்சமாக வேதத்துக்கு விருத்தமாகிய பொருளைக் கூறுகின்றன" என்று சொல்லியபடியே சைவாகமம் வேதவிரோதப் பொருள் கூறுதலும், சாமானிய வேதத்தைக் குறித்து விசேஷவேதமாயிருத்தலாலேயாம். விசேஷசாமானியங்கள் சிலவிடத்து விரோதப் பொருள் கூறினாலும், விருத்த சாத்திரமென்னுந் தோஷமும் வாகியத்தன்மையுஞ் சாற்றலாகாது, காமிகத்திலே "வேதம் முதலிய நூல்களெல்லாம் இரெளத்திரங்களாம்; சித்தாந்தமே செளமியமாம்" என்று கூறப்பட்டது. ஞானசித்தி முதலியவற்றிலே, சாமானிய சைவநூல்களும், அவற்றின் உபபேதங்களும் பூருவகாண்டமென்றும் காமிகம் முதலிய சைவசித்தாந்தங்களும் அவற்றின் உபபேதங்களாகிய பெளட்கரம் சருவ ஞானோத்தரம் முதலியனவும் உத்தரகாண்டம் என்றும் உணர்த்தப்பட்டது. சூதசங்கிதையிலே பதினெண் புராணங்களையும் சத்தியவதியின் புத்திரர் செய்தார்; காமிகம் முதலியவற்றைப் பரமசிவனே செய்தார் என்று கூறுதலால் சிவாகமங்களைச் சாக்ஷாத்தாகச் சிவனே செய்தனர் என்று துணியப்பட்டது.

வேதநெறி வழுவிய மாந்தர்க்கே தந்திரங்கள் கூறப்பட்டன எனச் சில நூல்களிற் கூறியதென்னையெனின்; ஆண்டுக் கூறியது வாமசோம லாகுள பைரவ முதலிய தந்திரங்களை அன்றிச் சிவசித்தாந்தத்தை அன்றென்க. அது அப்பதீக்ஷிதர் இயற்றிய சிவதத்துவ விவேக விருத்தியில் பல பிரமாணங் கொண்டு சாதிக்கப்பட்டது. காந்தத்திலே "சிவன் அழிவற்ற தக்ஷிணாமூர்த்தியாய்த் தோன்றி, ஆலமரத்தின் அடியிலே இருந்து, குற்றமில்லாத இவர்களை ஓதுவித்தார். இவர்கள் விதிப்படியே வேதங்களையும் உபநிடதங்களையும் நெடுநாள் வரையும் ஓதியும், சிவனது மாயையினாலே ஞானம் நிலை பெறாதவராயினர். அவர்கள் ஒருங்குகூடி, உமாபதியாகிய சிவனிடத்திற் கேட்க விரும்பி, வெள்ளிமயமாகிய கைலாசத்திற்போய், தவஞ் செய்தார்கள். இந்த எல்லையில் சிவன் வெள்ளியங் கைலாசமலையிலே சனகர் முதலிய முனீந்திரர்களுக்குத் திரிபதார்த்த சம்மிதமும் இரகசியமுமாகிய ஆகமாந்தம் என்னும் பெயரையுடைய சித்தாந்தத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்" என்றும், சைவ புராணத்திலே " பசு சாத்திரங்களைப் பற்றாதுவிட்டுச் சிவசாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாருமே ஆசாரியராவாரென்று புகழப்படுவர். சிவாகமத்திற் கூறப்பட்ட ஞானமே ஞானமென்று சொல்லப்படும். அதுவே சிவனனப் பற்றின பெரியோருக்கு முத்திசாதனம்" என்றும் கூறுதலாலும்; சுவேதர் உபமன்னியு கிருஷ்ணர் அருச்சுனர் முதலியோர் சிவசித்தாந்த மார்க்கச் சிரவணாசரணஞ் செய்தமையாலும், சிவசித்தாந்தம் வேதநெறி வழுவிய மாந்தர்க்குக் கூறியதென்பதே கூடாது. இன்னும், பிரம மீமாஞ்சைக்கு நீலகண்ட சிவாசாரியர் இயற்றிய பாஷ்யத்திலே "வேதசிவாகமங்களுக்குப் பேதங்காண்கின்றிலம், வேதமே சிவாகமம்" என்று கூறப்பட்டது. வேதங்கள் சிலவிடத்துச் சிவசாத்திரப் பொருளைச் சிரசிலே தாங்கி இருத்தலால், "வேதமே சிவாகமம்" என்று உபசரிக்கப்பட்டது. விரோதப்பொருள் மாத்திரமே தள்ளப்படுதலால், இவ்விரண்டற்கும் பெரும்பாலும் ஒற்றுமை உண்டாம். அப்படியே வேதம் முதலிய சகல சாத்திரங்களும் சிவாகமத்துக்கு விரோதமில்லாத வழியே பிரமாணங்களாகும். சிவாகமம் தனது பொருட்டன்மையால், மகாமாயையும் அதனிற்றோன்றிய சிவம் முதற் சுத்தவித்தை ஈறாகிய காரியங்களும், மல மாயா கர்மங்களும், கலைமுதற் பிருதிவி ஈறாயுள்ள காரியங்களும் ஆகிய அமிதார்த்தங்களை விளக்கலால் வியாபகமாம். வேத முதலியன தம் பொருண்மையால், பிரகிருதி முதல் பிருதிவி ஈறாயுள்ள காரியங்கள் மாத்திரமாகிய மிதார்த்தங்களை விளக்கலால் வியாப்பியங்களாம். அது பெளட்கரத்திலே "புருஷ வாக்கியங்களாலே இருஷி வாக்கியமும், இருஷிகளாலே தெய்வ வாக்கியமும், தேவராலே பிரம வாக்கியமும், பிரமாவாலே விஷ்ணு வாக்கியமும், விஷ்ணுவினாலே உருத்திர வாக்கியமும், உருத்திரனாலே சிவவாக்கியமும், வாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால், ஒன்றினொன்று மேன்மேலும் சிறந்தனவாம்; மேல் உள்ளனவற்றால் கீழுள்ளவைகளே வாதிக்கப்படல் வேண்டும். சிவ சாஸ்திரத்துக்கு விரோதமில்லாமலே சகல சாஸ்திரங்களும் நிற்கும். ஆனால் மற்றை நூல்களுக்கு விரோதம் இல்லாமல் சிவசாஸ்திரம் இருக்க வேண்டுவதில்லை. ஏனெனில், சிவதந்திரம், வியவஸ்தாபகம், ஏனையன வியவஸ்தாப்பியம். ஆதலில், சிவதந்திரத்தால் வாதிக்கப்பட்டது பிரமாணமன்று" என்றும், மிருகேந்திரத்திலே "மிதார்த்தத்திலும் அமிதார்த்தத்துக்கு மேன்னம (உண்டென்பர் புலவோர்கள்)" என்றும் கூறியவாற்றால் உணர்க. இனியமமயும்.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்தில்லை வாழந்தணர் மூவாயிரரும் தமக்குச் சிவகணநாதராய்த் தோன்றக் கண்டு, அத்தன்மையைத் திருநீலகண்டயாழ்ப்பாணருக்கு

Link to comment
Share on other sites

நன்றி. ஈழவ நண்பரே! இந்தப் பதிப்புக்களை எல்லாம் சேமித்து வையுங்கள். நண்பர்களுக்கும் அனுப்புங்கள். கிடைத்தற்கரிய சொத்துக்கள் இவை.

ஸ்நானம்

248. ஸ்நானஞ் செய்யத் தக்க நீர்நிலைகள் யாவை?

நதி, நதிசங்கமம், ஓடை, குளம், கேணி, மடு முதலியவைகளாம். நதிசங்கமமாவது இரண்டு யாறுகள் சந்தித்த இடமாம்; யாறுங் கடலுங் கூடிய இடம் எனினும் அமையும்.

249. ஸ்நானஞ் செய்யுமுன் யாது செய்தல் வேண்டும்?

கெளபீனத்தைக் கசக்கிப், பிழிந்து, தரித்து, இரண்டு கைகளையுங் கழுவி வஸ்திரங்களைத் தோய்த்து, அலம்பித், தரித்து, உடம்பைச் சலத்தினாலே கழுவி செவ்வையாகத் தேய்த்துக் கொள்ளல் வேண்டும்.

250. ஸ்நானம் எப்படிச் செய்தல் வேண்டும்?

ஆசனம் பண்ணிச் சகளீகரணஞ் செய்து, கொப்பூ ழளவினதாகிய சலத்தில் இறங்கி, நதியிலேயாயின் அதற்கு எதிர்முகமாக நின்றும், குள முதலியவைகளிலாயிற் கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் நின்றும், இரண்டு காதுகளையும், இரண்டு பெருவிரல்களினாலும், இரண்டு கண்களையும் இரண்டு சுட்டுவிரல்களினாலும், இரண்டு நாசிகளையும் இரண்டு நடுவிரல்களினாலும் மூடிக்கொண்டு சிவபெருமானைச் சிந்தித்து ஸ்நானஞ் செய்ய வேண்டும். இப்படி மூடுவது சண்முகி முத்திரை எனப் பெயர் பெறும்.

251. இப்படி ஸ்நானஞ் செய்தவுடனே யாது செய்தல் வேண்டும்?

ஆசமனஞ் செய்துகொண்டு, கரையிலேறி, வஸ்திரங்களைப் பிழிந்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினாலே தலையிலுள்ள ஈரத்தைத் துவட்டி, உடனே நெற்றியில் விபூதி தரித்து, உடம்பிலுள்ள ஈரத்தைத் துவட்டிக், குடுமியை முடித்து, ஈரக் கெளபீனத்தைக் களைந்து, உலர்ந்த கெளபீனத்தைத் தரித்து, இரண்டு கைகளையுங் கழுவிச், சுத்தமாய்க் கிழியாதனவாய் வெள்ளியனவாய் உலர்ந்தனவாய் உள்ள இரண்டு வஸ்திரந் தரித்துக் கொண்டு, ஈர வஸ்திரங்களையுங் கெளபீனத்தையும் உலரும்படி கொடியிலே போடல் வேண்டும். ஒரு கொடியிலே தானே தோய்த்த வஸ்திரமுந் தோயாத வஸ்திரமும் போடுதலும், ஒருவர் வஸ்திரம் போட்ட கொடியிலே மற்றொருவர் வஸ்திரம் போடுதலும் ஆகாவாம். நக்கினனாயேனும், கெளபீன மாத்திரமுடையனாயேனும், ஒரு வஸ்திரந் தரித்துக் கொண்டேனும், யாதொரு கமருமுஞ் செய்யலாகாது.

(நக்கம் - அம்மணம்)

252. குளிர்ந்த சலத்திலே ஸ்நானஞ் செய்ய மாட்டாத பிணியாளர் யாது செய்தல் வேண்டும்?

ஸ்நானஞ் செய்தவர் சுத்திசெய்யப்பட்ட தானத்திலே சுத்தி செய்யப்பட்ட பாத்திரத்தில் வைத்த வெந்நீரை ஒரு பாத்திரத்தில் விடவிட, அவர் எடுத்து ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரத்தினால் ஈரத்தைத் துவட்டி, உலர்ந்த வஸ்திரந் தரித்துப், பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம்.

253. வியாதியினாலே ஸ்நானஞ் செய்ய மாட்டாதவர் யாது செய்தல் வேண்டும்?

கழுத்தின்கீழ், அரையின்கீழ், கால் என்னும் இவைகளுள் ஒன்றை, இயன்றபடி சலத்தினாலே கழுவிக் கொண்டு, கழுவாமல் எஞ்சிய உடம்பை ஈர வஸ்திரத்தினால் ஈரம் படும்படி துடைத்து, அவ்வீரத்தைத் துவட்டித் தோய்த் துலர்ந்த வஸ்திரந் தரித்துப் பதினொரு மந்திரத்தை ஒருதரஞ் செபித்துக் கொண்டு, சந்தியாவந்தனம் முதலியன செய்யலாம். இந்த ஸ்நானங் காபில ஸ்நானம் எனப் பெயர் பெறும்.

254. இராத்திரி ஸ்நானஞ் செய்யலாமா?

யாகம், சந்திரகிரகணம், சிவராத்திரி, மாசப் பிறப்பு, மகப்பேறு என்பவைகளின் மாத்திரம் இராத்திரி ஸ்நானஞ் செய்யலாம்.

255. நியமகாலத்திலன்றி, இன்னும் எவ்வெப்பொழுது ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்?

சண்டாளருடைய நிழல் படினும், இழிந்த சாதியாரும் புறச்சமயிகளும், வியாதியாளரும், சனன மரணா செளசமுடையவரும், நாய், கழுதை, பன்றி, கழுகு, கோழி முதலியவைகளும் தீண்டினும், எலும்பு, சீலை முதலியவற்றை மிதிக்கினும், க்ஷெளரஞ் செய்து கொள்ளினும், சுற்றத்தார் இறக்கக் கேட்கினும், துச்சொப்பனங் காணினும், பிணப் புகை படினும், சுடுகாட்டிற் போகினும், சர்த்தி செய்யினும் உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்வது ஆவசியகம்.

(சர்த்தி = வாந்தி)

256. தீண்டலினாலே எவ்வெப்பொழுது குற்றமில்லை?

சிவதரிசனத்திலும், திருவிழாவிலும், யாகத்திலும், விவாகத்திலும், தீர்த்த யாத்திரையிலும், வீடு அக்கினி பற்றி எரியுங் காலத்திலும், தேச கலகத்திலும், சன நெருக்கத் தீண்டலினாலே குற்றமில்லை.

257. ஸ்நானஞ் சரீர சுத்திக்கு மாத்திரந்தான் காரணமா?

சரீர சுத்திக்கு மாத்திரமின்றிச் சரீராரோக்கியத்துக்கும், சித்தசோபனத்துக்கும், ஒருப்பாட்டுக்கும், இந்திரிய வடக்கத்துக்கும், யோக்கியத்துவத்துக்குங் காரணமாம். விடியற்கால ஸ்நானத்தினாலே பசி உண்டாகும்; நோய் அணுகாது.

Link to comment
Share on other sites

திருநீலகண்ட நாயனார் புராண சூசனம்

காமம்

பிறவிப் பிணிதீர்ந்து உய்தற்குத் தடையாய் உள்ள காமமானது, எத்துணைப் பெரியோர்களாலும் நீக்குதற்கு அரியது. அது நினைப்பினும், காணினும், கேட்பினும் தள்ளினும், விஷமானது தலைக் கொண்டாற் போல எத்துணை நுண்ணறிவாளருடைய அறிவையும் கெடுக்கும் இயல்புடையது. அது கல்வியறிவொழுக்கங்களால் ஆன்ற பெரியோர்களுடைய உள்ளத்திலே தலைப்படினும்; அவ்வுள்ளமானது தான் செல்லத்தகும் இடம் இது எனவும், செல்லத் தகாத இடம் இது எனவும், ஆராய விடாது. அது மேலிடம் பொழுது, குணமும் குலமும் ஒழுக்கமும் குன்றுதலையும், பழியும் பாவமும் விளைதலையும் சிறிதும் சிந்திக்க விடாது. அக்காமமே கொலை, களவு, கள்ளுண்டல் முதலிய பாவங்களுக்கெல்லாம் காரணமாய் உள்ளது. ஆதலால் அக்காமமே ஆன்மாக்களை நரகங்களிலே எண்ணிறந்த காலம் வீழ்த்தி, வருத்தும் பெருங்கொடுமையை உடையது. இதற்குப் பிரமாணம், கந்தபுராணம். "கண்டதோர் நறவமே காம மேயென - வெண்டருத் தீம்பொரு ளிருமைத் தென்பரா - லுண்டுழி யழிக்குமொன் றுணர்வை யுள்ளமேற் - கொண்டுழி யுயிரையுங் கொல்லு மொன்றரோ" எ-ம். 'உள்ளினுஞ் சுட்டிடு முணர்வு கேள்வியிற் - கொள்ளினுஞ் கட்டிடுங் குறுகி மற்றதைத் - தள்ளினுஞ் சுட்டிடுந் தன்மை யீதினாற் - கள்ளினுங் கொடியது காமத் தீயதே." எ-ம். "ஈட்டுறும் பிறவியும் வினைகள் யாவையுங் காட்டிய தினையதோர் காம மாதலில் - வாட்டமில் புந்தியான் மற்றந் நோயினை - வீட்டின ரல்லரோ வீடு சேர்ந்துளார்." எ-ம். "நெஞ்சினு நினைப்பரோ நினைந்து ளார்தமை - யெஞ்சிய துயரிடை யீண்டை யுய்த்துமேல் - விஞ்சிய பவக்கடல் வீழ்த்து மாதலா - னஞ்சி璽ுந் தீயது நலமிலகாமமே." எ-ம். "மண்ணாசை தன்னிற் பொருளாசையின் மாய வாழ்க்கைப் - பெண்ணாசை நீங்க லெளிதோ பெரியோர் தமக்கும்." எ-ம். திருவிளையாடற் புராணம் - "அணங்குநோ யெவர்க்குஞ் செய்யு மனங்கனா லலைப்புண்டாவி - யுணங்கினா ருள்ளஞ் செல்லு மிடனறிந் தோடிச் செல்லா - குணங்குல னொழுக்கங் குன்றல் கொலை பழி பாவம் பாரா - விணங்குமின் னுயிர்க்கு மாங்கே யிறுதிவந் துறுவ தெண்ணா." எ-ம். "கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வ - வெள்ளுண்ட காமம் போல வெண்ணினிற் காணிற் கேட்கிற் - றள்ளுண்ட விடத்தி னஞ்சந் தலைக்கொண்டா லென்ன வாங்கே - யுள்ளுண்ட வுணர்வு போக்கா துண்டபோ தழிக்குங் கள்ளூண்." எ-ம். "காமமே கொலைகட் கெல்லாங் காரணங் கண்ணோ டாத - காமமே களவுங் கெல்லாங் காரணங் கூற்ற மஞ்சங் - காமமே கள்ளுண் டற்குங் காரண மாதலாலே - காமமே நரகபூமி காணியாக் கொடுப்ப தென்றான்." எ-ம். நாலடியார் - "அம்பு மழலு மவிர்கதிர் ஞாயிறும் - வெம்பிச் சுடினும் புறஞ்சுடும் - வெம்பிக் - கவற்றி மனத்தைச் சுடுதலாற் காம மவற்றினு மஞ்சப்படும்." எ-ம். "ஊரு ளெழுந்த வுருகெழு செந்தீக்கு - நீருட் குளித்து முயலாகு - நீருட் - குளிப்பீனுங் காமஞ் சுடுமேகுன் றேறி - யொளிப்பினுங் காமஞ் சுடும்." எ-ம். நீதிசாரம் - "ஊரு ரெனும்வனத்தி லொள்வேற்கண் மாதரெனுங் - கூருர் விடமுட் குழாமுண்டு - சீரூர் - விரத்திவை ராக்கிய விவேகத் தொடுதோ - லுரத்தணியா தேகலெவனோ." எ-ம். வரும். ஆதலால், காமம் மனசிலே சிறிதாயினும் எழ ஒட்டாமல் அடக்கல் வேண்டும். சிறிது எழுங்காலத்து, சிவனடியாரோடு கலத்தல் சிவசாத்திரம் பொருள்களைச் சிந்தித்தல், கேட்டல் முதலிய நற்செய்கைகளாலே, அதனிடத்தே கருத்து இறங்காவண்ணம் காலம் போக்கல் வேண்டும். மனைவியைப் புணர்தல் மாத்திரமே வேதாகமாதிகளில் விதிக்கப்பட்டதாம். மனனவியையும், புத்திரநிமித்தமன்றிப் போக நிமித்தம் புணர்தல் பாவமேயாம்.

சிவபத்தி அடியார்பத்திகளிற் சிறந்தவராய் இல்லறத்தில் வாழும் இயல்புடைய இத்திருநீலகண்ட நாயனார், தம்முடைய மனைவி இருப்பவும். தம் மனசிலே தலைப்பட்ட காம மிகுதியினாலே, நூல்களில் விலக்கப்பட்டதாகிய பரத்தைப் புணர்ச்சியைச் செய்தார். செய்தாராயினும், தம்முடைய மனைவியார் கொண்ட ஊடலைத் தீர்க்கும் பொருட்டு, அவரைத் தீண்டும்படி சென்றபொழுது, அவர், "நீர் எம்மைத் தீண்டுவீராயில் திருநீலகண்டம்" என்று சிவனைச் சுட்டி ஆணையிட்டதைக் கேட்டவுடனே, அவரைத் தீண்டாமல், நீங்கினமையாலும்; அதுமாத்திரமன்றி, இவர் எம்மை என்று பன்மையாகச் சொன்னதனால் இவரை மாத்திரமன்று மற்றைப் பெண்களையும் மனசினால் நினைத்தலுஞ் செய்யேன் என்று உறுதி கொண்டமையாலும்; இவருடைய மனசிலே காமந்தலைப்பட்ட போதும் சிவபத்தி அதினும் மிகத் தலைப்பட்டிருந்தது என்பதும், அதனால் அச்சிவபத்தியானது பின் ஒருபோதும் இவர் மனசிலே காமம் சிறிதாயினும் எழவொட்டாமல் தடுத்தது என்பதும் துணியப்படும்.

இவ்விருவரும், மிக்க இளமைப் பிராயத்தினராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், தங்களுள்ளே நிகழ்ந்த சபதம் சிறிதாயினும் வழுவாவண்ணம், காமத்தை முற்றும் ஒழித்து வாழ்ந்த பெருந்தகைமையை நினைக்குந்தோறும், இவர்களிடத்துள்ள சிவபத்தியின் வலிமை விளங்குகின்றது. விட்டுணு, சலந்தராசுரன் இறந்துவிட, காம மிகுதியினால் அவனது சரீரத்திலே பிரவேசித்து, அவனுடைய மனைவியைப் பலநாட் புணர்ந்து, பின்பு தம்மை விட்டுணு என்று உணர்ந்த அவளாலே சபிக்கப்பட்டு, வருத்தமுற்றார். பிரமா தம்மாலே படைக்கப்பட்ட திலோத்தமையினது அழகைக் கண்டு மயங்கி, அவளைப் புணரின் மகட்புணர்ச்சிக் குற்றமாம் என்பது பாராமல், அவளைத் தொடர்ந்தார். இந்திரன் கெளதம முனிவருடைய மனைவியாகிய அகலிகையைப் புணர்ந்து தன்னுடம்பிலே ஆயிரம் யோனி உண்டாகும்படி அம்முனிவராலே சபிக்கப்பட்டான். சந்திரன் தன் குருவாகிய வியாழனுடைய மனைவியைப் புணர்ந்து, கயரோகம் அடைந்தான். இன்னும் முனிவர்கள் பலர் உண்டி முதலியவற்றை ஒழித்து, மலைகளினும், காடுகளினும் தவஞ்செய்யும் பொழுதும், தேவப் பெண்களையும் அசுரப் பெண்களையும் இராக்ஷசப் பெண்களையும் கண்டு மயங்கி, பாவம் என்பதும் பழியென்பதும் பாராமல், அவர்களைப் புணர்ந்து, தங்கள் தவத்தை இழந்தார்கள். தருமம் வளர்ந்தோங்கும் முன்னை யுகங்களிலே, தேவர்கள், முனிவர்கள் தாமும், காமமிகுதியினாலே பரஸ்திரீ கமனம் புத்திரிகமனம் குருபன்னிகமனம் முதலிய பெருங்கொடும் பாவங்களைச் செய்தார்களே! இக்கலியுகத்திலே இந்நாயனாரோ, தமது மனைவியார் சிவனைச் சுட்டி இட்ட ஆணைகடத்தல் சிவத்துரோகமாம் என்பது பற்றி, மனைவியைத் தானும் புணராதொழிந்தார்! இதனால் இவரது பத்தி மகிமை எவ்வளவு வியக்கத்தக்கது! இவ்வியப்பு நோக்கி அன்றோ, பட்டணத்துப் பிள்ளையாரும் "மாது சொன்ன சூளா லிளமை துறக்கவல் லேனல்லன்" என்றார்.

கற்புடைய மகளிரும், அழகிற் சிறந்த ஆடவரைக் காணில், அவர் தமக்குத் தந்தையராயினும், சகோதராயினும், புதல்வர்களாயினும், தமது நிலை கலங்கி, அவரையும் நிலைகுலைப்பார்களே! அது "தந்தையாயினும் விழைவிற் றன்னுடனே யொருவயிற்றிற் சார்ந்தாரேனு - மைந்தரா யினு மிகவும் வனப்புடைய ரெனிலவர் மேன் மடநல்லார்தஞ் - சிந்தைநடந் திடுமதனாற் சாம்பன் மலர்க் கணைவேளிற் செவ்வி வாய்ந்தோன் - பைந்தொடியாரினதமரு முவளகத்திற் றனிவருதல் பான்மை யன்றே." என்னுங் காசிகண்டச் செய்யுளால் அறிக. இவ்வாறாகவும், இந்நாயனாரும் மனைவியாரும், மிக்க இளமைப்பருவத்தராய் இராப்பகல் ஒரே இடத்தில் இருந்தும், புணர்ச்சி இன்றிச் சபதத்தைப் பேணினமையால், இவர்களது சிவபத்தியின் பெருமை இவ்வளவு என்று சொல்லத் தக்கதன்று. இந்நாயனார் பரமசிவன் சிவயோகியாராய் வந்து தம்மிடத்துவைத்த ஓட்டைத் தாம் கவராமைக்குத் தமது மனைவியைக் கைப்பிடித்துக் குளத்திலே முழுகிச் சத்தியம் பண்ணித்தரச் சொன்ன வழியும், சபதம் வழுவாமற் காத்தார்.

இவர்கள், தங்களுக்குள்ளே நிகழ்ந்த சபதம் தங்கள் இருவருக்கு மாத்திரமன்றி அயலவருக்கும் வெளிப்படாதிருப்பவும், அதனை வழுவாது காத்தமையாலும்; இவர் மனைவியைக் கைப்பிடித்துச் சத்தியம் பண்ணித் தரும்படி சிவயோகியார் நெருக்கியபோதும், தமது செயற்கருஞ்செயலை வெளிப்படுத்தாமையாலும்; இறுதியிலே மிக நெருக்கியபோது, தாம் அதனை வெளிப்படுத்தாதொழியில், அவரது சந்தேகம் தீராதென்பது பற்றியே வெளிப்படுத்தினமையாலும்; இவர்கள் புகழை விரும்பிச் சீவர்களைச் சாட்சியாகக் குறியாமல், உயிர்க்குயிராகிய சிவனுடைய திருவடியையே சாக்ஷியாகக் குறித்து ஒழுகினார்கள் என்பது செவ்விதிற்றுணியப்படும்; இவ்வியப்பு நோக்கியன்றோ, ஆசிரியர் சேக்கிழார் "இளமையின் மிக்குளார்க ளிருவருமறிய நின்ற - வளவில்சீ ராணை போற்றி" என்றும், "அயலறியாத வண்ண மண்ணலாராணை யுய்த்த - மயலில் சீர்த் தொண்டனாரை." என்றும், திருவாய் மலர்ந்தருளினார். சீவர்களைச் சாக்ஷியாகக் குறியாமல் தமது திருவடியே சாக்ஷியாகக் குறித்துப் புண்ணியம் இயற்றும் பெருந்தன்மை உடையோருக்கு, சிவனே வெளிப்பட்டு வந்து, உலகமெங்கும் அவர் புகழை விளக்கி, யாவரும் அவரை வணங்கும்படி இடையறாத பேரின்பத்தைக் கொடுத்தருளுவர், அது, சிவன் இவர்களுக்கு வெளிப்பட்டு, இவர்களது செயற்கருஞ் செய்கையை உலகமெங்கும் அறியும்படி வெளிப்படுத்தி, "வென்றவைம் புலனான்மிக்கீர்" என்று தமது அருமைத் திருவாயினாலே புகழ்ந்து; இவர்களுக்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளினமையால். உணர்க. இக்கருத்து நோக்கியன்றோ, வைராக்கிய சதக நூலாரும் "உன்னுகின்றனை யுனை மணோர் பெரியனென் றுணருமா செயவுன்பான் - மன்னு மீசனே பந்தம்வீ டளிப்பவன் மற்றைய ரறிந்தென்னா - மன்னவன் றிருப் பொன்னடி கரியதா வருந்தவஞ் செய் நெஞ்சே - பின்னை முன்னவ னுலகறிந்திறைஞ்சுமா பெருமைசெய் குவனோரே." என்றார்.

Link to comment
Share on other sites

சந்தியாவந்தனம்

258. சந்தியாவந்தனம் எத்தனை?

பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி, அர்த்தயாமசந்தி என நான்காம்.

259. இன்னார் இன்னாருக்கு இன்ன இன்ன சந்தியா வந்தனங்கள் உரியன என்னும் நியமம் உண்டோ?

சமயதீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி யொன்றே உரியது; விசேஷ தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, சாயங்காலசந்தி என்னும் இரண்டு சந்திகள் உரியன; நிருவாண தீக்ஷிதருக்குப் பிராதக்காலசந்தி, மத்தியானசந்தி, சாயங்காலசந்தி என்னும் மூன்று சந்திகள் உரியன; ஆசாரியருக்கு நான்கு சந்திகளும் உரியன. சமய தீக்ஷிதர், விசேஷ தீக்ஷிதர்கள் மூன்று சந்திகளுஞ் செய்யலாம் என்று சில ஆகமங்களில் விதிக்கப் பட்டிருக்கின்றது.

260. பிராதக் காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் உத்தமம்; நக்ஷத்திரங்கள் மறைந்தபோது செய்தல் மத்திமம்; சூரியன் பாதி உதிக்கும்போது செய்தல் அதமம்.

261. மத்தியானசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

பதினைந்தாம் நாழிகையாகிய மத்தியானத்திலே செய்தல் உத்தமம்; மத்தியானத்துக்கு முன் ஒரு நாழிகையிலே செய்தல் மத்திமம்; மத்தியானத்துக்குப் பின் ஒரு நாழிகையிலே செய்தல் அதமம்.

262. சாயங்காலசந்தி எந்நேரத்திலே செய்தல் வேண்டும்?

சூரியன் பாதி அத்தமிக்கும்போது செய்தல் உத்தமம்; அத்தமயனமானபின் ஆகாசத்திலே நக்ஷத்திரங்கள் தோன்றுமுன் செய்தல் மத்திமம்; நக்ஷத்திரங்கள் தோன்றும்போது செய்தல் அதமம்.

263. சந்தியாவந்தனம் முதலிய கிரியைகளுக்கு ஆகாத நீர்கள் எவை?

நுரை குமிழி உள்ள நீர், புழு உள்ள நீர், வடித்து எடாத நீர், இழிகுலத்தார் தீண்டிய நீர், கலங்கல் நீர், பாசி நீர், உவர்நீர், வெந்நீர், பழநீர், சொறிநீர் என்பவைகளாம்.

போசனம்

264. போசனபந்திக்கு யோக்கியர் யாவர்?

சமசாதியாராயும், சிவதீக்ஷை பெற்றவராயும், நியமாசார முடையவராயும் உள்ளவர்.

265. போசனஞ் செய்தற்குரிய தானம் யாது?

வெளிச்சம் உடையதாய்ப், பந்திக்கு உரியரல்லாதவர் புகப் பெறாததாய்க் கோமயத்தினாலே மெழுகப் பட்டதாய் உள்ள சாலை.

266. போசனத்துக்கு உரிய பாத்திரங்கள் யாவை?

வாழையிலை, மாவிலை, புன்னையிலை, தாமரையிலை, இருப்பையிலை, பலாவிலை, சண்பகவிலை, வெட்பாலையிலை, பாதிரியிலை, பலாசிலை, சுரையிலை, கமுகமடல் என்பவைகளாம். வாழையிலையைத் தண்டுரியாது அதனுடைய அடி வலப் பக்கத்திலே பொருந்தும்படி போடல் வேண்டும். கல்லை தைக்குமிடத்துக், கலப்பின்றி ஒரு மரத்தினிலை கொண்டே ஒரு கல்லை முழுதுந் தைத்தல் வேண்டும். (கல்லை = இலைக் கலம்)

267. போசன பாத்திரங்களை எப்படி இடம் பண்ணிப் போடல் வேண்டும்?

போசன பாத்திரங்களைச் சலத்தினாலே செவ்வையாகக் கழுவி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முழவளவை சதுரச் சிரமாகப் புள்ளியின்றி மெழுகி அததின் மேலே போடல் வேண்டும்.

268. இலை போட்டபின் யாது செய்தல் வேண்டும்?

அதிலே நெய்யினாலே புரோக்ஷித்து, லவணம், கறி, அன்னம், பருப்பு, நெய் இவைகளைப் படைத்தல் வேண்டும்.

269. போசனம் எப்படி பண்ணல் வேண்டும்?

இரண்டு கால்களையும் முடக்கி, இடமுழந்தாளின் மேலே இடக்கையை ஊன்றிக் கொண்டிருந்து, விதிப்படி அன்ன முதலியவற்றைச் சுத்தி செய்து, சிவபெருமானுக்கும் அக்கினிக்குங் குருவுக்கும் நிவேதனம் பண்ணி, அன்னத்திலே பிசையத்தக்க பாகத்தை வலக்கையினாலே வலப்பக்கத்திலே வேறாகப் பிரித்துப் பருப்பு நெய்யோடு பிசைந்து, சிந்தாமற் புசித்தல் வேண்டும்; அதன்பின் சிறிது பாகத்தை முன்போலப் பிரித்துப், புளிக்கறியோடாயினும் ரசத்தோடாயினும் பிசைந்து புசித்தல் வேண்டும். கறிகளை இடையிடையே தொட்டுக் கொள்ளல் வேண்டும். இலையினுங் கையிலும் பற்றறத் துடைத்துப் புசித்தபின், வெந்நீரேனுந் தண்ணீரேனும் பானம் பண்ணல் வேண்டும். உமிழத் தக்கதை, இலையின் முற்பக்கத்தை மிதத்தி, அதன்கீழ், உமிழ்தல் வேண்டும்.

270. போசனம் பண்ணும்பொழுது செய்யத்தகாத குற்றங்கள் எவை?

உண்பதற்கிடையிலே உப்பையும் நெய்யையும் படைத்துக் கொள்ளல், போசனத்துக்குப் உபயோகமாகாத வார்த்தை பேசுதல், சிரித்தல், நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும், புலையர் ஈனர் அதீக்ஷதர் விரதபங்கமடைந்தவர் பூப்புடையவள் என்பவர்களையும் பார்த்தல் முதலியனவாம்.

271. புசிக்கும்போது அன்னத்திலே மயிர், ஈ, எறும்பு, கொசு முதலியன காணப்படின், யாது செய்தல் வேண்டும்?

அவைகளை சிறிதன்னத்தோடு புறத்தே நீக்கி விட்டுக், கை கழுவிக் கொண்டு, சலத்தினாலும், விபூதியினாலும் சுத்திப்பண்ணிப் புசித்தல் வேண்டும்.

272. போசனம் முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, வீட்டுக்குப் புறத்தே போய்க், கை கழுவி விட்டுச், சலம் வாயிற்கொண்டு, பதினாறு தரம் இடப்புறத்திலே கொப்பளித்து, வாயையுங் கைகளையுங் கால்களையுங் கழுவி, ஆசமனம் பண்ணி, விபூதி தரித்தல் வேண்டும். அன்னமல்லாத பண்டங்கள் புசிக்கின், எட்டு தரங் கொப்பளித்து, ஆசமனம் பண்ணல் வேண்டும்.

273. உச்சிட்டதை எப்படி அகற்றல் வேண்டும்?

இலையை எடுத்து எறிந்து விட்டுக் கை கழுவிக் கொண்டு உச்சிட்டத் தானத்தைக் கோமயஞ் சேர்ந்த சலந் தெளித்து, இடையிலே கையையொடாமலும், முன்பு தீண்டிய விடத்தைப் பின்பு தீண்டாமலும், புள்ளியில்லாமலும் மெழுகிப், புறத்தே போய்க் கைகழுவிவிட்டுப் பின்னும் அந்தத் தானத்திலே சலந் தெளிந்து விடல் வேண்டும்.

274. போசனஞ் செய்தபின் வாக்குச் சுத்தியின் பொருட்டு யாது செய்தல் வேண்டும்?

இல்வாழ்வார் தாம்பூலம ஒரு தரம் மாத்திரம் புசிக்கலாம். துறவிகள் கிராம்பு, ஏலம், கடுக்காய், சுக்கு, வால்மிளகு என்பவைகளுள் இயன்ற தொன்றைப் புசித்தல் வேண்டும்.

275. இராத்திரியில் எத்தனை நாழிகையினுள்ளே புசித்தல் வேண்டும்?

எட்டு நாழிகையினுள்ளே புசித்தல் உத்தமம். பதினொரு நாழிகை யளவேல் மத்திமம்; பதினான்கு நாழிகை யளவேல் அதமம்; அதன் மேற் புசிக்கலாகாது.

276. போசன காலத்தில் விளக்கவியின் யாது செய்தல் வேண்டும்?

போசனம் பண்ணாது, அவ்வன்னத்தை வலக்கையினாலே மூடி, விளக்கேற்றி வருமளவும் ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை மானசமாகச் செபித்துக் கொண்டிருந்து, விளக்கேற்றியபின், பானையில் அன்னத்தை இடுவித்துக் கொள்ளாது, அவ்வன்னத்தையே புசித்துக் கொண்டு எழும்பல் வேண்டும்.

Link to comment
Share on other sites

தம்பி நாரதா! சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறீர். தனித் தமிழ் வேண்டும் என்கிறீர். பெயரோ வடமொழி. சபேசன் பெயரும் வடமொழி. இரண்டு பேரும் எவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள். அவ்வளவு கேள்விகளுக்கும் பதில் அடியேனிடம் உண்டு. இப்போது தானே ஆறுமுக நாவலரைப் பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறார். பொறுங்கள், தங்களுடைய அன்பான கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தங்களுக்கு மிக்க நன்றிகள் ஏனென்றால் தாங்கள் வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் போது மக்களுக்கு போலி பகுத்தறிவு பற்றி தெரிய வரும்.

Link to comment
Share on other sites

சயனம்

277. எப்படிச் சயனித்தல் வேண்டும்?

கிழக்கேயாயினும் மேற்கேயாயினுங் தெற்கேயாயினுந் தலை வைத்துச், சிவபெருமானைச் சிந்தித்துக் கொண்டு, வலக்கை மேலாகச் சயனித்தல் வேண்டும், வடக்கே தலை வைக்கலாகாது. வைகறையிலே நித்திரை விட்டெழுந்துவிடல் வேண்டும். சந்தியா காலத்தில் நித்திரை செய்தவன் அசுத்தன்; அவன் ஒரு கருமத்துக்கும் யோக்கியனாகான்; அவன் தான் செய்த புண்ணியத்தை இழப்பன்; அவன் வீடு சுடுகாட்டுக்குச் சமம்.

278. இரவிலே காலம்பெறச் சயனித்து வைகறையில் விழித்தெழுந்து விடுதலினாற் பயன் என்ன?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகை உண்டென்னுங் காலம் பிராமீமுகூர்த்தம் எனப் பெயர் பெறும்; சிவத் தியானத்துக்கு மனந்தெளிவது அக்காலத்தேயாம்; அன்றியும், அக்காலத்தில் விழிக்கின் நோய்கள் அணுகாவாம். இராநித்திரைப் பங்கமும், வைகறை நித்திரையும், பகல் நித்திரையும் பற்பல வியாதிகளுக்கும் காரணம்.

மந்திரக் கிரியைகளோடு எழுதப்பட்ட ஸ்நான விதி, சந்தியாவந்தன விதி, பூசா விதி, போசன விதி என்னும் நான்குங் குருமுகமாகப் பெற்றுக்கொள்க.

Link to comment
Share on other sites

இயற்பகைநாயனார் புராண சூசனம்

அடியார் வேண்டியது மறாது கொடுத்தல்

கருணாநிதியாகிய சிவன், தம்மை உணர்ந்து தம்மிடத்து இடையறாத அன்பு செய்யும் மெய்யடியார்களுக்கு, உலகத்துள்ள இனிமையாகிய எப்பொருள்களினும் மிக இனியராய், ஒருகாலும் இடையறாத பேரின்பத்தை ஜனிப்பிப்பார். அது "சுனியினுங் கட்டி பட்ட கரும்பினும் - பனிமலர்க் குழற் பாவைநல் லாரினுந் - தனமுடிகவித்தாளு மரசினு - மினியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே" என அதனை உணர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுமாற்றால் அறிக. ஆதலால், மெய்யுணர்வுடையோர்கள், தமக்கு உரிய மனைவி மைந்தர் முதலிய உயிர்ச்சார்புகளினும், வீடுபொன் முதலிய பொருட்சார்புகளினும், இகபரமும் உயிர்க் குயிராகிய சிவனே தமக்கு மிக இனியர் என்று தெளிந்து, அச்சார்புகளோடு கல்ந்திருப்பினும் தாமரையிலையிற் றண்ணீர்போல அவைகளிடத்தே பற்றுச் சிறிதுமின்றி, அச்சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையர்களாகி, சிவனடியார்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே கண்டு, வழிபட்டு வாழ்வார்கள். சிவன் பகுப்பின்றி எங்கும் வியாபித்திருப்பினும், சிவலிங்கத்தினிடத்தும், சிவனடியாரிடத்தும் தயிரின் நெய்போல விளங்கியும், மற்றையிடங்களிற் பாலின் நெய்போல விளங்காமலும் இருப்பார்.

இவ்வியற்பகை நாயனார், முன்சென்ற பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த அளவிறந்த சிவபுண்ணியங்களினாலே இப்பிறப்பின் கண்ணே யான் எனது அற்றவர் உறவாகிய சிவனே தமக்கு இனியவர் எனத்தெளிந்து, சிவலிங்கத்தையும் சிவனடியார்களையும் சிவன் எனவே கண்டு வழிபடுவாராயினார். ஒரு காமக்கிழத்திமேல் அதிதீவிரமாய் முறுகி வளரும் காமத்தினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய ஒருவன், தனக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவள் அனுபவிக்கக் காண்டலே தனக்கு இன்பமாகக் கொள்ளுதல் போல; தமக்குச் சிவன் எனவே தோன்றும் சிவனடியார்கள்மேலே அதிதீவிரமாய் முறுகிவளரும் அன்பினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவ்வடியார்கள் அனுபவித்தலைக் காண்டலே தமக்கு இன்பமாகக்கொள்ளும் இயல்புடையார். ஆதலாலன்றோ, தம்மிடத்துள்ள பொருள்களுள் அவ்வடியார்கள் கேட்பனயாவையோ அவை எல்லாம் சிறிதாயினும் மறாது, உண்மகிழ்ச்சியோடு கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இவரிடத்துள்ள இம்மெய்யன்பை, சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும்படி, உணர்த்துதற்குத் திருவுளங்கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத்துப் பொருள்களுள் மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடங்கொண்டு வந்து, இவரிடத்தே இவர் மனைவியையே கேட்க; இவர் கற்பினிற் சிறந்து விளங்கும் அம்மனைவியையும் மறாது பெருமகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனால் இவர் "பனிமலர்க்குழற் பாவை நல்லாரினும்" சிவனே தமக்கு இனியர் என்று கொண்டார் என்பது, துணியப்படும். அன்றியும், இவர் உயர்க்குடிப் பிறப்பினாலும் பெருஞ்செல்வத்தினாலும் உலகத்தாராலே நன்குமதிக்கப்படுவோராய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவியைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகுமென்பது நோக்கிற்றிலர். இதனால் இவர் மனசைச் சிவபத்தியே விழுங்கிற்றென்று துணிக; இவர் "நாடவர் பழித்துரை பூணது வாகக்" கொண்டமையும் தேர்க.

இந்நாயனார், பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட பாவம் என்பது நோக்காது தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ எனின், ஆகாது. காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து ஆபரணம் முதலாயின, காமுகரை வசீகரித்து, நினைக்குந்தோறும் காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்குமாறுபோல; விபூதி ருத்திராக்ஷ முதலிய சிவவேடமானது, மெய்யன் புடையாரை வசீகரித்து, நினைக்குந்தோறும், காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்கும், "இது, சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் - போலும் பொடியணி மார்பிலங்கும்" என்னுந் திருப்பல்லாண்டாலும் அறிக. அவ்வாறே இந்நாயனாரும், விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடத்தைக் கண்டவுடனே அதனால் வசீகரிக்கப்பட்டு, இன்பமேலிடப் பெறுதலால் தம்வயத்தரல்லராவர்; ஆகவே, அச்சிவவேடத்தை உடையாரிடத்துக் குணங்குற்றம் ஆராயும் ஆராய்ச்சி இவருக்கு எப்படிக் கூடும் என்க. அதிதீவிரபத்தி உடையாருக்கு அடியார்களிடத்தில் குணங்குற்றம் ஆராய்தல் கூடாமை "உருப்பொ லாதவ ரிழிகுலத்தவர்நல் லொழுக்க மில்லவரென்று நம்மளவில் - விருப்பி லாதவ ரெனினு மெய்ந்நீறு மிக்க சாதன வேடமுங் கண்டாற் - றரிப்பி லாது சென்றெதிருற வணங்கித் தக்க போனக மளித்தவர்க் கெளிதா - விருப瘍பர் தாமவரடியவர்க் கடியா ரென்பர் யானென தெனஞ்செருக் கறுப்பார்." என்னும் திருவாதவூரடிகள் புராணத்தில் சிவன் கூறிய பொருளை உடைய திருவாக்காற் காண்க. சர்வலோகைக நாயகராகிய பரமசிவனாலே "செயற்கருஞ் செய்கை செய்ததீரனே" என்று வியக்கப்பட்ட இந்நாயனாரது அத்தியற்புத பத்தியின் பெருமையைப் பத்தி என்பது சிறிதும் அறிகிலாச் சிறியேனா விரித்துரைக்கவல்லன்.

Link to comment
Share on other sites

11. சிவாலய கைங்கரியவியல்

180px-Meenakshi_tample.jpg.png

279. சிவாலயத்தின் பொருட்டுச் செயற்பாலனவாகிய திருத்தொண்டுகள் யாவை?

திருவலகிடுதல், திருமெழுக்குச் சாத்துதல், திரு நந்தனவனம் வைத்தல், பத்திரபுஷ்பமெடுத்தல், திருமாலைக் கட்டுதல், சுதந்த தூபமிடுதல், திருவிளக்கேற்றுதல், தோத்திரம் பாடல், ஆனந்தக் கூத்தாடல், பூசைத் திரவியங்கள் கொடுத்தல் என்பவைகளாம்.

திருவலகிடுதல்

280. திருவலகு எப்படி இடுதல் வேண்டும்?

சூரியன் உதிக்குமுன் ஸ்நானஞ் செய்து, சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு, திருக்கோயிலுனுள்ளே புகுந்து, மெல்லிய துடைப்பத்தினாலே கிருமிகள் சாவாமல் மேற்பட அலகிட்டுக் குப்பையை வாரித், தூரத்தே கொண்டுபோய்க் குழியிலே கொட்டிவிடல் வேண்டும்.

திருமெழுக்குச் சாத்துதல்

281. திருமெழுக்கு எப்படிச் சாத்தல் வேண்டும்?

ஈன்றண்ணியதும் நோயை யுடையதும் அல்லாத பசுவினது சாணியைப், பூமியில் விழுமுன், இலையில் ஏந்தியாயினும், ஏந்தல் கூடாதபோது, சுத்தநிலத்தில் விழுந்த சாணியை மேல் கீழ் தள்ளி நடுப்பட எடுத்தாயினும், வாவி நதி முதலியவற்றில் வடித்தெடுத்து வந்த சலத்துடனே கூட்டிச், செங்கற்படுத்த நிலத்தையுஞ் சுண்ணாம்பு படுத்த நிலத்தையும் மண் படுத்த நிலத்தையும் மெழுகல் வேண்டும். கருங்கற் படுத்த நிலத்தைச் சலத்தினாலே கழுவி விடல் வேண்டும்; கருங்கல்லிலே சாணி படலாகாது.

திருநந்தனவனம் வைத்தல்

282. திருநந்தனவனம் வைக்கற்பாலதாகிய தானம் யாது?

சண்டாளபூமிக்குஞ் சுடுகாட்டுக்கும் மலசல மோசன பூமிக்குஞ் சபீபத்தி னல்லாததாய், நான்கு பக்கத்துஞ் சுவரினாலேனும் வேலியினாலேனுஞ் சூழப்பட்டதாய்க், கீழே ஆழமாக வெட்டி எலும்பு முதலிய குற்றங்கள் அறப் பரிசோதிக்கப்பட்டதாய்ப், பசு நிரை கட்டப்பெற்றுக் கோசல கோமயத்தினாலே சுத்தி யடைந்ததாய் உள்ள நிலமேயாம்.

Link to comment
Share on other sites

இளையான்குடி மாற நாயனார் புராண சூசனம்

மாகேசுர பூசை

புண்ணியங்களுள்ளே சிவபுண்ணியம் சிறந்தது. சிவபுண்ணியங்களுள்ளே சிவபூசை சிறந்தது. சிவபூசையினும் சிறந்தது மாகேசுரபூசை. மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள். மாகேசுர பூசையாவது மாகேசுரர்களை விதிப்படி பூசித்து, அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாம். மாகேசுர பூசைசெய்யு முறைமை கூறுதும். சிவனடியார்களைத் தூரத்தே கண்டவுடனே, அவர்களுடைய சாதியையும் குணத்தையும் ஆராயாமல் விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடமே பொருள் எனக் கொண்டு, அவர்களை மனிதர் எனக் கருதாது சிவன் எனவே புத்திபண்ணி, இருக்கைவிட்டு எழுந்து, அகமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் குவித்தகைகளை உடையராய் விரைந்து எதிர்கொண்டு, அவர்களுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரித்து, இன்சொற்களைச் சொல்லி, வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்து, கரகநீர் கொண்டு அவர்கள் திருவடிகளை விளக்கி, அத்தீர்த்தத்தைச் சிரமேற்றெளித்து உள்ளம்பருகி, அத்திருவடிகளை மெல்லிய வஸ்திரத்தினால் ஒற்றி, அவர்களை ஆசனத்திலே இருத்தி, பத்திரபுஷ்பங்களாலே பூசித்து, தூபதீபங் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்கரித்து, கைப்பு புளிப்பு தித்திப்பு துவர்ப்பு கார்ப்பு உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடையனவாய் உண்ணப்படுவது தின்னப்படுவது நக்கப்படுவது பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் பிரீதிப்படி அமுது செய்வித்து, "சரீரம் எடுத்ததனாலே பெறும் பயனை இன்றன்றோ பெற்றேன்" என்று சற்காரவசனம் சொல்லி, அவர்கள் போம்பொழுது அவர்களுக்குப் பின் பதினான்கு அடி போய் வழிவிடுக. சிவனடியார்களைச் சாதிகுணம் குறியாது சிவன் எனவே புத்தி பண்ணல் வேண்டும் என்பதற்குப் பிரமாணம். சிவதருமோத்தரம், "புலையரே யெனினுமீசன் பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச - மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." எ-ம் பிரமோத்தரகாண்டம், "எள்ளற் படுகீழ் மக்களெனு மிழிந்த குலத்தோ ரானாலும் - வள்ளற் பரமன் றிருநீறு மணியு மணிந்த மாணிபினரை - யுள்ளத் துள்ளே யிருபோது முணர்ந்து தெருண்டு சிவனெனவே - கொள்ளத்தகைய வறிவினரே பிறவிக் கடலிற் குளியாதார்." எ-ம். சைவசமயநெறி, "தேசிகர் தம்மைச் சிவநேசர் தம்மையு - மீசனென வேயுளத்துளெண்" எ-ம். வரும்.

இம் மாகேசுர பூசையிற் சிறந்த புண்ணியம் பிறிது இல்லை. அது, "அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்து - ளதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்று - ளதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை - யதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்" என்னுந் திருவிளையாடற் புராணத்தினாலும், "படமாடக் கோயிற் பரமற் கொன்றீயி - னடமாடுங் கோயி னம்பற்கங் காகா - நடமாடுங் கோயி னம்பற்கொன் றீயிற் - படமாடுங் கோயிற் பரமற்கங் காமே." எ-ம். "தண்டறு சிந்தைத் தபோதனர் தாமகிழ்ந் - துண்டது மூன்று புவனமு முண்டது - கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென் - றெண்டிசை நந்தி யெடுத்திசைத்தானே." எ-ம். "அகர மாயிர மந்தணர்க் கீயிலென் - சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் - பரம யோகி பகலூண் பலத்துக்கு - நிகரில்லை யென்பது நிச்சயந் தானே." எ-ம். "ஆறிடு வேள்வி யருமறை நூலவர் - கூறிடு மந்தணர் கோடிபே ருண்பதி - னீறிடுந் தொண்டர் நினைவின் பயனிலே - பேறெனி லோர்பிடி பேறது வாகுமே" என்னுந் திருமந்திரத்தினாலும், "மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் - கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா - னொட்டிட்ட பண்பினுருத்திர பல்கணத்தார்க் - கட்டி琻்டல் காணாதே போதியோ பூம்பாவாய்" என்னுந் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரத்தாலும், சோணாசலத்தில் உயர்ந்த க்ஷேத்திரம் இல்லை; பஞ்சாக்ஷரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை; மாகேச்சுரதருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை; சிவாகமத்தில் உயர்ந்த சாஸ்திரம் இல்லை" என்னும் அருணாசல மான்மியத்தினாலும் அறிக. இல்வாழ்க்கையின் பயன் இம்மாகேசுர பூசையேயாம் அது, "மறமலியுலக வாழ்க்கையே வேண்டும் வந்துநின்னன்பர்தம் பணியா - மறமது கிடைக்கின்" என்னும் தாயுமான சுவாமி வாக்கால் அறிக.

இத்துணைப் பெருஞ் சிறப்பினதாகிய மாகேசுரபூசையை, எந்நாளும் சிறிதாயினும் தவறாது சைவாகம விதிப்படி மெய்யன்போடு செய்தமையால், பெருஞ் சிறப்புற்றவர் இவ்விளையான்குடிமாற நாயனார். இவர் விதிவழுவாதே மாகேசுரபூசை செய்தனர் என்பது, இங்கே "ஆர மென்பு புனைந்த வையர்த மன்பர்" என்னுந் திருவிருத்தத்தினாலும், "கொண்டு வந்து மனைப்பு குந்து" என்னுந் திருவிருத்தத்தினாலும் உணர்த்தப்பட்டது. இம்மாகேசுர பூசையை இவர் செல்வம் உள்ள பொழுது செய்தமையினும், மிக்க வறுமை வந்தபொழுதும் மனம் சிறிதும் சுருங்குதலின்றி முன் போலவே சிறிதும் தவறாது செய்தமை இவ்வளவு என்று சொல்லக்கூடாத பெரும் வியப்பைத் தருகின்றது! இவருக்கு வந்த வறுமையின் கொடுமையோ மிகப் பெரியது. அது, இங்கே "இன்ன வாறு வளஞ்சு ருங்கவு மெம்பிரானிளை யான்குடி - மன்னன் மாறன் மனஞ்சு ருங்குதலின்றி யுள்ளன மாறியுந் - தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டுபின் - முன்னை மாறி றிருப்பணிக்கண் முதிர்ந்த கொள்கையராயினார்" என்று உணர்த்தப்பட்டது. மாகேசுர பூசை செய்தலினாலே தமது எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து இவ்வளவு மிகக் கொடிய வறுமை வந்து எய்திய பொழுதும், இவர் புண்ணியம் செய்த நமக்குக் கடவுள் இவ்வளவு இடர் செய்தாரே என்று சிவனைச் சிறிதும் நோவாமை எவ்வளவு ஆச்சரியம்! நோவாமை மாத்திரத்தில் நில்லாது நாம் சிவபுண்ணியத்தைச் செல்வம் உள்ளவழிச் செய்யாமையே குற்றம். வறுமை யெய்தியவழி நாம் யாது செய்வோம்! இப்போது செய்யாமை குற்றம் அன்றே என்று, ஒழியாது செய்தமை அதினும் ஆச்சரியமன்றோ! இன்னும், இவரும், இவர் கருத்தோடு சிறிதும் மாறுபாடின்றி ஒழுகும் இவர் மனைவியாரும், தாங்கள் பகல் முழுதும் போசனஞ் செய்யாமையாற் பசி மிகுந்து வருத்தமுறும் நேரத்தினும், பேரிருளென்பதும் பெருமழை யென்பதும் பாராமல் செய்த செயற்கருஞ் செய்கை, அதினும் ஆச்சரியமன்றோ! தாம் நல்லோர்களுக்கு வறுமையைக் கொடுத்தல் அவர்கள் நயத்தின் பொருட்டே என்பதையும், அந்நயம் இறுதியிலேயே பலிக்கும் என்பதையும், அக்கருத்தறியாது அதற்குள் புண்ணியஞ் செய்த நமக்குக் கடவுள் இடர் செய்தாரே என்று தம்மை நோதல் பழுதாம் என்பதையும், சர்வான் மாக்களும் உணர்ந்து உய்யும்பொருட்டு, பரமசிவன் இவர்களுக்கு வறுமையைக் கொடுத்து, இவர்கள் செயற்கருஞ் செய்கையை வெளிப்படுத்தி, இவர்கட்குப் பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பெருங்கருணையை யாவர் அளக்கவல்லர்! மெய்யுணர்வுடையோர் தமக்கு எத்துணை இடர்வரினும், சிவனிடத்து அன்பு குன்றார் என்பது இதனால் அறிக. காரைக்காலம்மையாரும் "இடர்களை யாரேனு மெனக்கிரங்காரேனும் - படரு நெறிபணியாரேனுஞ் சுடருருவி - லென்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் - கன்பறா தென்னெஞ் சவர்க்கு." என்று திருவாய் மலர்ந்தருளினார்

Link to comment
Share on other sites

தம்பி நாரதா! சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறீர். தனித் தமிழ் வேண்டும் என்கிறீர். பெயரோ வடமொழி. சபேசன் பெயரும் வடமொழி. இரண்டு பேரும் எவ்வளவு கேள்வி கேட்கிறீர்கள். அவ்வளவு கேள்விகளுக்கும் பதில் அடியேனிடம் உண்டு. இப்போது தானே ஆறுமுக நாவலரைப் பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களைப் போன்று பல்லாயிரக்கணக்கானவர்களைப் பார்த்திருக்கிறார். பொறுங்கள், தங்களுடைய அன்பான கேள்விகளுக்கு விடை கிடைக்கும். தங்களுக்கு மிக்க நன்றிகள் ஏனென்றால் தாங்கள் வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் போது மக்களுக்கு போலி பகுத்தறிவு பற்றி தெரிய வரும்.

வந்ததில் இருந்து ஒரு கேள்விக்குக் கூட பதில் சொல்ல வில்லை, ஆனால் இதோ சொல்கிறேன் அதோ சொல்கிறேன் என்று வாய்ச்சவடால் மட்டும் தான் வருகிறது உங்களிடம்.உந்த வட மொழிக் குப்பைகளை வெட்டி ஒட்டுறதை விட்டு விட்டு உருப்படியா எதாவது விவாதம் செய்யுங்கோ. ஆறுமுக நாலவரை நாங்கள் நன்கு அறிவோம்.அவரின் மேன்மை யாழ்ப்பாணத்தவரிடம் கட்டுடைக்கப்பட்டு வெகு காலம் ஆகி விட்டது.யாழ்ப்பானத்தவரிடம் அவர் உருவாக்கிய சைவ வேளாளச் சாதியம் அழித்து ஒழிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் உங்களைப் பற்றிச் சொல்லுங்களேன். தமிழ் நாட்டில் இருக்கும் உங்கள் ஆதீனம் பற்றியும் அதன் நோக்கம் பற்றியும், ஆறுமகத்தாருக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும், உங்கள் நிதி மூலாதாரம் பற்றியும் கொச்சம் சொல்லுங்களேன்.

தனித் தமிழ் அல்ல நான் சொல்வது, வட மொழிக் கலப்பற்ற தமிழ், எனக்கு விளங்கக் கூடிய தமிழ். நீங்கள் உரையாடும் தமிழ். ஆறுமுகத்தார் வளர்த்த வடமொழியல்ல. :lol:

Link to comment
Share on other sites

5-7-5.jpg

283. இப்படிப்பட்ட நிலத்திலே வைக்கற்பாலனவாகிய மரஞ்செடி கொடிகள் எவை?

மரங்கள்: வில்வம், பாதிரி, கோங்கு, பன்னீர், கொன்றை, புலிநகக்கொன்றை, பொன்னாவிரை, மந்தாரை, சண்பகம், குரா, குருந்து, மகிழ், புன்னை, சுரபுன்னை, வெட்சி, கடம்பு, ஆத்தி, செருந்தி, பவளமல்லிகை, வன்னி, பலாசு, மாவிலிங்கை, நுணா, விளா, முக்கிளுவை, நெல்லி, நாவல், இலந்தை, பலா, எலுமிச்சை, நாரத்தை, தமரத்தை, குளஞ்சி, மாதுளை, வாழை, செவ்விளநீர், சூரியகேளியிளநீர், சந்திரகேளியிளநீர் என்பவைகளாம். மரங்களில் உண்டாகும் பூ, கோட்டுப்பூ எனப்படும்.

செடிகள்: அலரி, நந்தியாவர்த்தம், குடமல்லிகை, வெள்ளெருக்கு, செம்பரத்தை, கொக்கிறகு, மந்தாரை, துளசி, நொச்சி, செங்கீரை, பட்டி, நாயுருவி, கருவூமத்தை, பொன்னூமத்தை, கத்தரி, தகரை, செவ்வந்தி, தும்பை, வெட்டிவேர், இலாமச்சை, தருப்பை, மருக்கொழுந்து, சிவகரந்தை, விஷ்ணுகாந்தி, மாசிப்பச்சை, திருநீற்றுப்பச்சை, பொற்றலைக்கையாந்தகரை, எள்ளு, பூளை, அறுகு என்பவைகளாம். செடிகளில் உண்டாகும் பூ, நிலப்பூ எனப்படும்.

கொடிகள்: மல்லிகை, முல்லை, இருவாட்சி, பிச்சி, வெண்காக்கொன்றை, கருங்காக்கொன்றை, கருமுகை, தாளி, வெற்றிலை என்பவைகளாம். கொடிகளில் உண்டாகும் பூ, கொடிப்பூ எனப்படும்.

284. நீர்ப்பூக்கள் எவை?

செந்தாமரை, வெண்டாமரை, செங்கழுநீர், நீலோற்பவம், செவ்வாம்பல், வெள்ளாம்பல் என்பவைகளாம்.

285. திருநந்தனவனத்தை எப்படிப் பாதுகாத்தல் வேண்டும்?

புலையர், புறச்சமயிகள், தூரஸ்திரீகள், முதலாயினோர் உள்ளே புகாமலும், யாவராயினும் எச்சில் மூக்குநீர் மலசல முதலியவைகளால் அசுசிப்படுத்தாமலும், அங்குள்ள பத்திர புஷ்பங்களைக் கடவுட் பூசை முதலியவற்றிற் கன்றிப் பிறவற்றிற்கு உபயோகப்படுத்தாமலும், மோவாமலும், அங்குள்ள மரஞ் செடி கொடிகளிலே சலந் தெறிக்கும்படி வஸ்திரந் தோயாமலும், அவைகளிலே வஸ்திரத்தைப் போடாமலும் பாதுகாத்தல் வேண்டும்.

பத்திர புஷ்பமெடுத்தல்

286. கடவுட் பூசைக்குப் பத்திர புஷ்பங்கள் எடுக்க யோக்கியர் யாவர்?

நான்கு வருணத் துட்பட்டவராய்ச், சிவதீக்ஷை பெற்றவராய், நியமாசாரமுடையவராய் உள்ளவர்.

287. பத்திர புஷ்பம் எடுக்க யோக்கியர் ஆகாதவர் யாவர்?

தாழ்ந்த சாதியார், அதீக்ஷிதர், ஆசெளச முடையவர், நித்திய கருமம் விடுத்தவர், ஸ்நானஞ் செய்யாதவர், தூர்த்தர் முதலானவர்.

288. கடவுட் பூசைக்கு ஆகாத பூக்கள் எவை?

எடுத்துவைத்தலர்ந்த பூவும், தானே விழுந்து கிடந்த பூவும், பழம் பூவும், உதிர்ந்த பூவும், அரும்பும், இரவில் எடுத்த பூவும், கைச் சீலை, எருக்கிலை, ஆமணக்கிலை என்பவற்றிற் கொண்டு வந்த பூவும், காற்றினடிப்பட்ட பூவும், புழுக்கடி, எச்சம், சிலந்தி நூல், மயிர் என்பவற்றோடு கூடிய பூவும், மோந்த பூவுமாம்.

திருக்கோயிலுள்ளும் அதன் சமீபத்தினும் உண்டாகிய பத்திர புஷ்பங்கள் ஆன்மார்த்த பூஜைக்கு ஆகாவாம்.

Link to comment
Share on other sites

வடமொழி கலப்பு அல்லாத தமிழ் வேண்டும் என்கிறீர்!. ஆனால் தனித் தமிழ் வேண்டாம் என்கிறீர்! ஆங்கில தமிழ் பிரன்சு தமிழ் வேண்டுமாக்கும்!!! . அடியேன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வில்லையா 500 கேள்வி பதில்கள் கொடுத்தாகிவிட்டது. உபரியாக 300 கேள்விகள் கேட்டு பதில் கேட்டாகிவிட்டது. எதற்கும் பதில் தாங்கள் தான் தரவில்லை.

Link to comment
Share on other sites

289. இன்ன இன்ன தேவருக்கு இன்ன இன்ன பத்திர புஷ்பம் ஆகா என்னும் நியமம் உண்டோ?

ஆம். விநாயகருக்குத் துளசியும், சிவபெருமானுக்குத் தாழம்பூவும், உமாதேவியாருக்கு அறுகும் நெல்லியும், வைரவருக்கு நந்தியாவர்த்தமும், சூரியனுக்கு வில்வமும், விஷ்ணுவுக்கு அக்ஷதையும், பிரம்மாவுக்குத் தும்பையும் ஆகாவாம்.

290. வில்வம் எடுக்கலாகாத காலங்கள் எவை?

திங்கட்கிழமை, சதுர்த்தி, அட்டமி, நவமி, ஏகாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, மாசப் பிறப்பு என்பவைகளாம். இவையல்லாத மற்றைக் காலங்களிலே வில்வம் எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

291. துளசி எடுக்கலாகாத காலங்கள் எவை?

ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, செவ்வாய்க் கிழமை, வெள்ளிக்கிழமை, திருவோண நக்ஷத்திரம், சத்தமி, அட்டமி, துவாதசி, சதுர்த்தசி, அமாவாசை, பெளர்ணிமை, விதிபாதயோகம், மாசப்பிறப்பு, பிராதக்காலம், சாயங்காலம், இராத்திரி என்பவைகளாம். இவை யல்லாத மற்றைக் காலங்களிலே துளசி எடுத்து வைத்துக் கொள்ளல் வேண்டும். இரண்டிலை கீழே உள்ள துளசிக்கதிர் எப்போதும் எடுக்கலாம்.

292. இன்ன இன்ன பத்திர புஷ்பம் இவ்வளவு இவ்வளவு காலத்துக்கு வைத்துச் சாத்தலாம் என்னும் நியமம் உண்டோ?

ஆம். வில்வம் ஆறு மாசத்திற்கும், வெண்டுளசி ஒரு வருஷத்திற்கும், தாமரைப்பூ ஏழு நாளிற்கும், அலரிப்பூ மூன்று நாளிற்கும் வைத்துச் சாத்தலாம்.

293. பத்திர புஷ்பம் எப்படி எடுத்தல் வேண்டும்?

சூரியோதயத்துக்கு முன்னே ஸ்நானஞ் செய்து, தோய்த்துலர்ந்த வஸ்திரந் தரித்துச், சந்தியா வந்தனம் முடித்து, இரண்டு கைகளையுங் கழுவித், திருப்பூங் கூடையை எடுத்து, ஒரு தண்டு நுனியிலே மாட்டி, உயரப் பிடித்துக் கொண்டாயினும், அரைக்கு மேலே கையிலே பிடித்துக் கொண்டாயினும் திருநந்தனவனத்திற் போய்ச் சிவபெருமானை மறவாத சிந்தையோடு பத்திர புஷ்பமெடுத்து, அவைகளைப் பத்திரத்தினாலே மூடிக் கொண்டு, திரும்பி வந்து, கால்களைக் கழுவிக்கொண்டு, உள்ளே புகுந்து, திருப்பூங் கூடையைத் தூக்கிவிடல் வேண்டும்.

294. பத்திர புஷ்பம் எடுக்கும்போது செய்யத் தகாத குற்றங்கள் எவை?

பேசுதல், சிரித்தல், சிவபெருமானுடைய திருவடிகளிலே யன்றிப் பிறவற்றிலே சிந்தை வைத்தல், கொம்புகள் கிளைகளை முறித்தல், கைகளை அரையின் கீழே தொங்கவிடுதல், கைகளினாலே உடம்பையேனும் வஸ்திரத்தையேனும் தீண்டுதல் என்பவைகளாம்.

திருமாலை கட்டுதல்

295. திருமாலை எப்படிக் கட்டல் வேண்டும்?

திருமாலைக் குறட்டைச் சலத்தினால் அலம்பி இடம் பண்ணித் திருப்பூங் கூடையிலுள்ள பத்திர புஷ்பங்களை எடுத்து அதில் வைத்துக்கொண்டு, மெளனியாய் இருந்து, சாவதானமாக ஆராய்ந்து, பழுதுள்ளவைகளை அகற்றிவிட்டு, இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டு முதலிய பல வகைப்பட்ட திருமாலைகளைக் கட்டல் வேண்டும்.

சுகந்த தூபமிடுதல்

296. சுகந்த தூபம் எப்படி இடுதல் வேண்டும்?

வாசனைத் திரவியங்கள் கலந்து இடிக்கப்பட்ட சாம்பிராணி கொண்டு சுகந்த தூபமிடல் வேண்டும்.

திருவிளக்கேற்றல்

297. திருவிளக்குக்கு என்ன நெய் கொள்ளத் தக்கது?

திருவிளக்குக் கபிலைநெய் உத்தமத்தின் உத்தமம்; மற்றைப் பசுநெய் உத்தமத்தின் மத்திமம்; ஆட்டு நெய், எருமை நெய் உத்தமத்தின் அதமம்; வெள்ளெள்ளினெய் மத்திமத்தின் உத்தமம்; மரக்கொட்டைகளினெய் அதமத்தின் அதமம்.

(கபிலை = கபில நிறமுடைய பசு; கபில நிறம் = சருமை சேர்ந்த பொன்னிறம்).

298. திருவிளக்குத் திரி என்ன நூல் கொண்டு எப்படிப் பண்ணல் வேண்டும்?

தாமரை நூல், வெள்ளெருக்கு நூல், பருத்தி நூல் என்பவைகளுள் இருபத்தோரிழையாலேனும் பதினாறிழையாலேனும், பதினான்கிழையாலேனும் ஏழிழை யாலேனுங் கர்ப்பூரப் பொடி கூட்டித் திரி பண்ணல் வேண்டும்.

299. மாவிளக்கு எப்படி இடுதல் வேண்டும்?

பகலிலே போசனஞ் செய்யாது, சனிப் பிரதோஷத்திலுஞ் சிவராத்திரியிலுஞ் செஞ்சம்பாவரிசி மாவினாலே அகல் பண்ணிக் கபிலநெய் மூன்று நாழியேனும் ஒன்றரை நாழியேனும் முக்கானாழியேனும் வார்த்துக் கைப் பெருவிரற் பருமையுடைய வெண்டாமரை நூற்றிரியிட்டுத் திருவிளக்கேற்றல் வேண்டும்.

Link to comment
Share on other sites

புவிக்காந்தப்புலம் சீரானது என்ற தங்கள் முன்னைய கூற்றே தவறு. நீங்களே நம்ம தரவுகளை தமிழாக்கம் செய்து மின் காந்தப்புலங்களால் மனிதருக்கு ஆபத்து என்றுவிட்டு.. இப்போ..!

புவி மின் காந்தப்புலம் சீரானது என்று எங்கு கூறி உள்ளேன்? புவியில் சாதாரணமாக் காணப்படும் மின் காந்தப்புலத்தின் செறிவு, மின்காந்தப்புலங்களில் வேலை செய்யும் உபகரணங்களுக்கு கிட்ட இருக்கும் போது இருக்கும் செறிவை விடக் குறைவு என்பதையே நீர் இணைத்த கட்டுரை சொல்லி உள்ளது.இதற்கும் கோவிலில் விழுந்து வனங்குவதற்கும் என்ன சம்பந்தம்?

சில விளைவுகளுக்கு சரியான விஞ்ஞான விளக்கங்கள் இன்னும் கிடைக்கவே இல்லாத போது உங்களால் எப்படி.. உள்ள உண்மைகளளயே புரட்டி எழுத முடிகிறது. இதைத்தான் சொல்வது விதண்டாவாதம் என்று. அறிவியல் பற்றி பேசுவதானால் நாம் பேச தயாராகவே உள்ளோம். கூகிள்.. சில தரவுகளை தரப் பாவிக்கப்படுகிறதே தவிர.. கூகிள் எமக்கு படிப்பிக்கவில்லை..! :lol: :P

யார் இங்கே விதண்டாவாதம் செய்வது ஒரு விடயத்தைக் கூறி அதனை நான் நிறுவ வரவில்லை என்றும் இதற்கு அறிவியல் விளக்கம் கிடையாது என்றும் கூறி விட்டு , நான் கூறியது தான் சரி என்றும் இப்போதும் விவாதம் செய்து கொண்டிருப்பவர் யார்? உமது கற்பனைகளை அறிவியல் ரீதியாக நிறுவ உம்மால் முடியாது என்றாகிப் போன பின்னும் நான் சொன்னது தான் சரி என்று இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பது யார்? யார் விதண்டா வாதி?

விஞ்ஞானம் விளங்க முடியாத பேர்முடா முக்கோணமே.. இவற்றிற்கு சாட்சி...! இப்படி பல விளங்க முடியாத ஆனால் உணரக்கூடிய விளைவுகள் மனிதரில் இன்னும் உண்டு..!

விஞ்ஞானத்தால் விளக்கப்படாதவற்றிக்கு எவ்வாறு விஞ்ஞான விளக்கம் அழிக்கமுடியும்?. உம்மால் கோவிலில் விழுந்து வணங்கும் போது காந்தப் புலம் உணரப் படுகிறது என்று கூறும் ஏற்றுக் கொள்கிறேன். உம்மைப் போல் பல சித்தப்பிரமை உற்றவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சொல்வதை எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.அதற்காக கோவிலில் விழுந்து கும்புடுவதால் மனிதருக்கு காந்தப்புலத்தால் நன்மை கிடைக்கிறது என்று பொய்யான விளக்கம் அறிவியலின் பெயரால் வழங்க வேண்டாம் என்பதே எனது வாதம்.அது இப்போது உமது வாயலையே நிறுவப்படுள்ளது. :lol:

Link to comment
Share on other sites

வடமொழி கலப்பு அல்லாத தமிழ் வேண்டும் என்கிறீர்!. ஆனால் தனித் தமிழ் வேண்டாம் என்கிறீர்! ஆங்கில தமிழ் பிரன்சு தமிழ் வேண்டுமாக்கும்!!! . அடியேன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வில்லையா 500 கேள்வி பதில்கள் கொடுத்தாகிவிட்டது. உபரியாக 300 கேள்விகள் கேட்டு பதில் கேட்டாகிவிட்டது. எதற்கும் பதில் தாங்கள் தான் தரவில்லை.

உம்மிடம் நான் கேட்ட கேள்வி ஈசுவர விரோதிகள் என்றால் யார் என்பதும் வாம மதத்வர் என்றால் யார் என்பதுவும், இன்னும் இதற்குப் பதில் இல்லை.

நீரே யரோ கேட்டதாக் கேள்விகளை எழுதி விட்டு அதற்குப் பதிலும் எழுதுவது வேடிக்கையிலும் வேடிக்கை.யாரோ கேட்ட கேள்விகளுக்கு எமக்கு எதற்குப் பதில்.இங்கு கேட்கப் படும் கேள்விகளுக்கோ கருதுக்களுக்கோ எந்த பதிலையும் வைக்க வில்லை.போன நூற்றாண்டில் இருந்த ஒரு சமய சாதிய வெறியர் எழுதிய வட மொழிக் குப்பைகளை இங்கே படி எடுத்துப் போட்டு வருகிறீர்.

ஏன் விவாதம் செய்தால் உமது உண்மை உருவம் வெளி வந்து விடும் என்கிற பயமா? :lol:

Link to comment
Share on other sites

மேலும் உங்களது தளத்தில் http://geocities.com/arumuganavalar/pirapanthathiradu1.html

நாவலரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பை கைலாசபதி என்பவர் திரட்டி வெளியிட்டதாக உள்ளது.ஆனால் அந்தத் திரட்டில் சில குறிப்பிட்ட கட்டுரைகள் மட்டுமே ஏன் இணயத்திலிடப்படுள்ளன?

1. தோத்திரங்கள்

2. சுப்பிரபோதம்

3. சைவ விரோதம்

4. குமாரநாயகரலங்காரம்

5. தமிழ்ப்புலமை

6. யாழ்ப்பாணச் சமய நிலை

7. சைவசமயி

8. அநாசாரம்

9. திருக்கோயிலிலுந் திருவீதியிலுஞ் செய்யத் தகாத குற்றங்கள்

10. சைவ சமயம்

11. போலியருட்பா மறுப்பு

12. நல்லறிவுச்சுடர் கொளுத்தல்

13. கரையார் வழக்கு

14. "ஓர் வினா"வுக்கு விடை

15. இழிமொழித் திமிரதீபிகைச் சண்டமாருதம்

16. வண்ணார்பண்ணைக் கதிரேசன்கோயில்

17. சமயம்! சமயம்!

18. இது நல்ல சமயம்

19. வெகுசனத் துரோகம்

20. அகோரசிவாசாரியபத்ததி தூஷண கண்டனம்

21. சபாபதிக்குருக்கள் வினா

22. கைவிளக்கு

மேற் கூறிய பட்டியலில் சிவப்பில் இருக்கும் கட்டுரைகளை இங்கு படி எடுத்துப்போட முடியுமா?

அப்படிப் போட்டால் நாவலர் என்றால் யார் என்று இங்குள்ளவர்களும் அறிந்து கொள்வார்கள் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே என்ன நடக்கிறது?

நான் கேட்கின்ற கேள்விகளுக்கு சம்பந்தம் இல்லாமல் எல்லோரும் பதில் சொல்கிறார்கள்.

" சுயமரியாதையியக்க சூறாவளி" என்பது யாரோ ஒருவரின் கருத்துக்கு யாரோ ஒருவர் சொன்ன பதில்கள். அதை எனக்கு பதிலாக தருவது பொருத்தமாக இல்லை. அதில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலும் இல்லை.

எல்லோருமே நீங்கள் கேட்டகேள்வியோடு ஒட்டிப் பதிலளிக்கவில்லை என்றால், நீங்கள் கேட்ட கேள்வியில் தான் பிழையள்ளது. அல்லது உங்களின் கருத்துக்களில் பிழையான அர்த்தம் தொனிக்கின்றது.

என்னுடைய அறிவு கொண்டு நான் கேட்கின்ற கேள்விகளுக்கு நேரடியாக உங்களுடைய அறிவு கொண்டு பதில் சொல்லுங்கள்

தூயவன்! எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேசவோ, எழுதவோ வராது. ஆங்கிலத்தில் அடிப்படை அறிவுதான் உள்ளது. ஜேர்மன் நன்றாகப் பேசுவேன். பலருக்கு ஜேர்மன் பாடமும் கற்பித்துள்ளேன். அப்படிப் பார்த்தால் நான் ஜேர்மன் மொழியைத்தான் வளர்த்துள்ளேன். :lol::lol::lol:

இங்கே நீங்கள் என்று விளிப்பது நான் சபேசன் என்ற மனிதனைக் கிடையாது என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நாங்கள் என்று நான் சொல்வது பகுத்தறிவு என்று பெரியார் சொல்வதற்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முற்பட்ட காலமும், பெரியார் காலத்தில் இந்து மதப் பிடிப்புள்ளவர்களாக இருந்தவர்களுமே. அவ்வாறே, நீங்கள் என்பதை பெரியார் காலத்தில் கடவுள்மறுப்புக் கொள்கை கொண்டவர்களை.

மற்றும்படி தனிநபர்ரீதியான அணுகுமுறை எனக்கு அவசியமில்லை. தவிர, கடவுள்மறுப்பின் தொடக்கம் பெரியார் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் பொய்யாகும். நரேன் என்று அழைக்கப்பட்ட விவேகாநந்தர் கூட, ஆரம்ப காலத்தில் தந்தை இறந்தபோது, நாஸ்தீகக் கொள்கை கொண்டு இயங்கியவராவார். பின்னர் இராமகிருஸ்ணரைச் சந்தித்த பின்னரே, அவருக்கு மெய்ஞானம் கிட்டிற்று.

தூயவன் சொன்ன பதிலும் யாருக்கோ சொல்லப்பட்ட பதில்தான். அதில் உள்ளதும் எனக்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை.

ஆறுமுக நாவலரின் படைப்புக்கள் தமிழுக்கு எந்த விதத்திலும் பயன்பாடாக இல்லை. அவருடைய எழுத்துக்கள் தமிழுக்காக போற்றப்படுவதில்லை. உயர் குல வேளாள சைவர்கள் மட்டும்தான் மத அடிப்படையில் அவரை தூக்கிப் பிடிப்பார்கள்.

தமிழ் இலக்கிய உலகில் நாவலரின் படைப்புக்களுக்கு எந்த இடமும் இல்லை.

ஈழத்தில் அச்சுப் பதிப்பில் நாவலர் ஒரு முன்னோடியாக இருந்து, பின்பு வந்த தமிழ் படைப்புக்களுக்கு அறிந்தோ அறியாமலோ துணை புரிந்திருக்கிறார். அந்த வகையில் அவர் மீது நன்றி பாராட்டுவதில் எந்த ஒரு தவறும் இல்லை.

ஆனால் அவர் செய்யாதவைகளை எல்லாம், அவர் செய்தார் என்றும், செய்தவைகளை அவர் செய்யவில்லை என்றும் சொல்வது அழகல்ல.

இங்கே நான் சொன்னது என்னவென்றால் நாவலர் வடமொழிப்பிரியர் என்றே வைத்துக் கொள்வோம். அவ்வாறு வடமொழிப்பிரியர் செய்ய தமிழ் வளர்ச்சிக்கு மேலதிகமாகத் தமிழ் பற்றுள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளும் நீங்கள்(சபேசனல்ல) என்ன செய்தீர்கள் என்பது தான்! ஒரு வடமொழிப்பிரியருக்கு இருந்த தமிழ்பற்று உங்களிடம் ஏனில்லை என்பது தான் என் கேள்வி.

இங்கே சாதிச் சிந்தனையோடு நாவலரை அணுகுபவர் நீங்கள் தான். எச் சந்தர்ப்பத்திலும், பதிலுக்கு நாங்கள் அவ்வாறு சாதிச் சிந்தனையோடு உங்களை அணுகவில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இப்படி ஏதாவது சாதிப் பிரிவோடு இணைத்துக் கதைப்பது கடினமான வேலையுமல்ல.

தமிழையும், தமிழரையும் கொச்சைப்படுத்துகின்ற இந்து மதத்தை அதிகமாக வெறுக்கிறேன்.

சைவத்தை வெறுக்கின்றேனா, சைவ புராணங்களை வெறுக்கின்றேனா என்று நீங்கள் கேள்வி கேட்பது பெரும் முரண்பாடு"சைவா" வினா விடையில் புராணங்களை முன்னிறுத்தி கேள்வி பதில் கொடுக்கப்படுகிறது. சைவத்தையும் அதன் புராணக் கதைகளையும் பிரிக்க முடியாது என்பதே இதன் பொருள். இதை நான் சொல்லவில்லை. நாவலரின் சைவ வினா விடை அப்படித்தான் இருக்கிறது.

ஆகவே இரண்டையும் பிரித்து நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது.

மேலே நான் சொன்னது போல, இந்து மதத்தில் வடமொழி ஆதிக்கத்திற்குக் காரணமே தமிழன் தான். எமக்குள் தப்புக்களை வைத்துக் கொண்டு, அடுத்தவனைத் திட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை. அந்தத் தவறுக்கு தீர்வாக அது அமையும் என்பதில் எனக்கு நம்பிக்கையுமில்லை.

ஏற்கனவே நான் சொன்னது போன்று, உருவவழிபாடு தேவைப்படுகின்றவர்களுக்குத் தான் புராணக்கதைகள் தேவைப்படுகின்றன. அப்படி இருந்தபோதும் இப்போது சொல்லப்படுகின்ற புராணக்கதைகள் அசிங்கங்கள் தவிர்க்கப்பட்டே மக்களுக்குச் சொல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் வேணுமென்றே, அந்த அசிங்கங்களை முன்னிலைப்படுத்துவது ஏன்??

தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும் கூட, நீங்கள் அதைத் திரும்பத் திரும்ப முன்னிலைப்படுத்தி மக்களுக்கு இது தான் மதம் என்ற கபடத்தனத்தைச் செய்ய முனைகின்றீர்கள். அது உண்மையில் நாஸ்தீகம் என்ற உங்களின் கொள்கையைப் பரப்புகின்ற சூழச்சியே தவிர, மற்றும்படி உண்மையான உணர்வுபூர்வமானதல்ல.

நாவலர் அடிநிலை மக்களுக்கும் மதங்கள் பற்றிச் சொல்லவேண்டும் என்பதால் கதைகள் மூலமாக பக்தியைக் கொண்டு செல்ல முயன்றார். இது புதுமையானதல்ல. அக்காலத்தில் படிப்பறிவில்லாத மக்களுக்கு கதைகள் கொண்டு தான் விளக்கம் கொடுப்பது வழக்கம். இதை இயேசு நாதரும் செய்திருக்கின்றார். இராமகிருஸ்ணரும் செய்திருக்கின்றார். ஆனால் பாலியல்ரீதியான கதைகளின் உள்வருகை என்பது கதையைத் திருஸ்டித்தவர்களின் மனநிலையால் எழுந்தவையே!

ஒவ்வொரு புராணக்கதைகளையும் எடுத்தாலும் அதில் ஏதாவுது ஒரு செய்தி சொல்வதற்கே பயன்படுத்தபட்டிருக்கும். ஆணவமே அழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதால், பெரும்பாலனவை ஆணவநீக்கியாகவே மையப்படுகின்றன. முருகன் சூரனை அழித்த கதையாகட்டும், சிவன் தத்தனை அழித்த கதையாகட்டும்.

ஆனால் சிலர் இதில் சூரன் தமிழன் என்று கதைப்பது எல்லாம் ஒரு ஊகமே. அதில் எவ்வித உண்மையும் கிடையாது. எம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்ற முறை தான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழன் என்னும் அடையாளம் தேவையாக இருப்பதால் தமிழ் படித்தேன் பேசுகிறேன் அதனை நான் எனது தாய் மொழியாக கருதுகிறேன்.எனக்கான அடையாளத்திற்கு அது அவசியம்.அடுத்ததாக அறிவியல் விடயங்கள் எனது வேலை படிப்பு இவற்றிற்காக ஆங்கிலம் படித்தேன். சிங்களமும் படித்தேன்.இவை எனக்குத் தேவையானவையாகவும் பிரியோசனம் உள்ளவையாகவும் இருப்பதால்.

என்னிடம் கேட்கப்படாத கேள்வியாக இருந்தபோதிலும், தேவை கொண்டு பதிலளிக்கின்றேன்.

இப்போது உங்களின் தேவைக்காக ஆங்கிலம் படித்ததோ, சிங்களம் படித்ததோ தவறில்லை என்று சொல்லிக் கொள்கின்றீர்கள். ஆனால் அன்றைய எம் சமூதாயத்தை இதே போன்று வடமொழி பற்றுக் கொண்டிருந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி எம் மீது, இதே போன்றதொரு திணிப்பைச் செய்திருக்கும் பட்சத்தில் அதைத் தவறு என்றோ சொல்ல முடியுமா?

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட இதே நிலை தான் அன்று நம்மவர்களுக்கு ஏற்பட்டது. இப்போது நீங்கள் செய்வது சரி, அப்போது அவர்கள் செய்தது தவறு என்றால், எப்படி இது நியாயமாகும்?

வடமொழிக்கு முக்கியத்துவமோ, அல்லது அதை ஆதரிக்கின்ற சிந்தனை கொண்ட எண்ணமோ எனக்கில்லை. ஆனால் நீங்கள் செய்கின்ற விவாதங்கள் பக்கச் சார்பானது. உங்கள் ஒவ்வொருவரின் விருப்பதுக்கு ஏற்றவிதத்திலும் மற்றவர்கள் நடக்க வேண்டுமென்றால் எங்கே போய் முட்டுவது?

மேலும் எனக்கு என்ன பெயரை வைப்பது என்று நீங்கள் சொல்ல முடியாது,எனக்கு என்ன விருப்பமோ அதனை நான் வைக்கிறேன். எனக்கு எந்தத் துவேசமும் எவர் மீதும் கிடையாது.எனக்கு எனது மொழியில் அன்பிருக்கிறது, ஆகவே எனக்குப் பிடித்தமான தூய தமிழ்ப் பெயரை எனது இயற்பெயராகக் கொண்டிருக்கிறேன் ,தமிழ்ப்பெயர்களையே வைத்தும் இருக்கிறேன். யாழ்க்களத்தில் நாரதர் என்பது சும்மா ஒரு முகமூடி உங்களைப் போலவே, அவ்வளவே.

உங்களின் பெயர் குறித்து எவ்வாறு நாங்கள் தலையிட முடியாதோ, அவ்வாறே எங்களின் வழிபாட்டு முறைகள் குறித்து நீங்கள் தலையிட முடியாது. மதம் பிடித்திருக்கின்றது. தமிழில் வழிபட வேண்டும் என்று ஆசைப்பட்டால், நிச்சயம் இந்துமதம் உங்களுக்கு கோவில் கட்டி வழிபடவோ (அது கூடக் கடினமல்ல, மரத்தின் கீழே ஒரு கோவிலைக் கூட அமைக்கலாம்) அல்லது, தமிழில் தோத்திரங்கள் சொல்லி வழிபடவோ என்றைக்குமே தடை விதிக்கவில்லை. யாரும் கோவிலை நிர்வகிக்கலாம் என்று உரிமம் கொடுத்திருக்கின்றது. தடைகள் இல்லாமல் தராளமாக வழிபடுங்கள். ஊரில் நமக்கு கூடச் சொந்தக் கோவில் என்று உண்டு. அங்கு உறவினர் ஒருவர் தான் தேவராம் பாடி ஆராதனை செய்வார். எனவே உங்களுக்கும் அது கடினமான ஒன்றல்ல.

இல்லை, எனக்கு கடவுளைப் பிடிக்காது நாத்திகன் என்ற சொல்லிக் கொண்டு திரிந்தால், உங்களின் நாத்திகக் கருத்துக்களை மட்டும் கதையங்கள். எம் வழியில் தலையிடாதீர்கள். அதற்கு உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் தலைப்புடன் சம்பந்தமாக எதாவது இருந்தால் எழுதவும் அதை விடுத்து நான் எழுதாதை எழுதியதாக் கூறுவது நேர்மை அற்ற செயல். கருத்து நிலை வறட்சி ,அது உமது கருத்தாடல்களில் ஒரு புதிய விடயமும் அன்று.அதனாலையே உம்முடன் நான் விவாதிப்பது கிடையாது.ஆனால் இங்கே ஒன்றைத் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

உங்களின் இந்த மாதிரியான கருத்தாடல் எனக்குப் புதியதொன்றல்ல, பதில் சொல்ல வராவிட்டால் ஒன்று புலிகளின் முடிந்த முடிவு இது என்பீர்கள். அல்லது இப்படி ஏதும் வழியைக் கடைப்பிடிப்பீர்கள். அவ்வளவு தான் முடியும். ஆனால் உங்களுளோடு கோபம் போட்டுக் கொண்டு எல்லாப் பக்கத்திலும், வன்வேயாகத் திரிபவன் நான் அல்ல. எனக்குப் பிடிக்காத கருத்து என்பதை மட்டும் தான் நான் நோக்குவேன். அவ்வளவே!

மற்றும்படி, நீங்கள் என் கூட விவாதிக்க வேண்டும் என்றோ, உங்களின் கருத்துக்கள் அவ்வாறு உயர்ந்தன என்றும் நான் கருதியது கிடையாது. அப்படிக் கருதுமளவு அது முக்கியமானதுமல்ல.

இங்கே நான் எங்கே கிருத்துவர்களும் இசுலாமியர்கலும் தமிழர்கள் அல்ல என்று எழுதி உள்ளேன்.

நான் எழுதியது,//கிருத்துவர்களும் இசுலாமியர்களும் எப்படி தூய தமிழில் எழுதுகிறார்கள்//

இதன் அர்த்தம் என்ன? கிரித்துவ மத்தவரும் இசுலாமிய மத்தவரும் எப்படி தூய தமிழில் தமது மதம் சம்பந்தமான் விடயங்களை எழுதி உள்ளனர் என்று, இதில் எங்கு இருக்கிறது இனவாதம்.இருக்கும் ஒரு விடயத்தைத் தானே கூறி உள்ளேன்.இல்லாத ஒரு வியாக்கியானத்தை நான் கூறியதாக் கூறி என் மீது அவப்பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் கருத்தாடலைத் திசை திருப்பவது எதனால்? இது ஒழுங்காக நியாயமாக கருத்தாடல் செய்ய வக்கிலாததன் வெளிப்பாடு அன்றி வேறென்ன.இப்படியானவர்களுடன் கருத்தாடி எனது நேரத்தை வீணக்க விரும்பவில்லை ஆகவே உமது எந்தக் கருத்தாடல்களுக்கும் நான் பதில் எழுதப்போவதில்லை.

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்கள் பெயர்கள் என்றரீதியில் கூட தமிழுக்குள் அடங்கவில்லை. அந்த நிலை மாறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை கூட இருக்கின்றது. அதை எல்லாம் தாண்டி, அவர்கள் எப்படி தூயதமிழில் எழுதுகின்றார்கள் என்று விழிப்பது ஏதோ தமிழர்களிடம் இருந்து வேறுபட்ட சமூதாயம் எப்படித் தமிழ் பற்றாளர்களாக இருக்கின்றார்கள் என்ற பொருள்படவில்லையா?

இஸ்லாமியரின் பிரபலமான சிறாப்புராணத்தைப் படித்துப் பார்த்தாலே தெரியும். அதில் எவ்வளவு தூரம் அராவிய வசனங்களும், உருது வசனங்களும் இருக்கின்றன என்று. தவிரவும் வேதகாமத்தை மொழி பெயர்த்துக் கொடுத்ததே இந்து என்ற நிலையில் உள்ளபோது, என்ன தான் அப்படி வித்தியாசம் கண்டிருக்கின்றீர்கள். சாதாரண சைவர்களை விட எவ்விதம் இதில் வித்தியாசம் தொனிக்கின்றது?

அப்படி உங்களுக்குத் தோன்றுவதால் தான் அவர்களைப் பிற இனத்தவர்: எப்படித் தமிழில் எழுதுகின்றார்கள் என்று கருதுகின்றீர்கள் என்று நினைத்துப் பதில் எழுதினே்ன. அவ்வளவே!

மற்றும்படி உங்களின் பதிலையோ, அதை எதிர்பார்த்துத் தவம் கிடக்கவோ வேண்டிய நிலை எனக்கில்லை. கருத்துக்களுக்கு மட்டுமே தான் பதில்ஃ தொடர்ந்து சீண்டினால் அது தாராளமாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் அப்படித் தான்.காற்று என்றால் என்ன அதில் என்ன இருக்கிறது அதன் குண இயல்புகள் என்ன அதில் என்ன என்ன மூலங்கள் இருக்கின்றன.அதனைப் பரிசோதிப்பதற்கான பரிசோதனைகள் என்ன என்ன.அவை பல தடவைகள் பரிசோதிக்கப்பட்டதா அதனை எல்லா அறிவியளாளரும் ஏற்றுக் கொள்கின்றனரா.அது சம்பந்தமான பரிசோதனைகள் சரியானவையா என பல நூறு பேரால் ஆரயப் பட்டே அறிவியல் ரீதியாக நிருபணமாகிறது.அப்படி நிரூபிக்கபடும் போது நானும் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வேன் , அதுவரை கடவுள் என்பது கற்பனையே.

அதே விஞ்ஞானம் தான் சொல்கின்றது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு உங்களிடம் வலுவான ஆதாரம் வேண்டுமென்று. அது இருந்தால் ஒழிய மற்றும்படி கடவுள் என்ற கருப்பொருள் இல்லையா, உண்டா என்று விஞ்ஞானம் என்றைக்குமே மறுத்தது கிடையாது.

கடவுள் மறுப்புக்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது.

உதாரணத்துக்கு ஒரு கேள்வி.

உங்களுக்குப் பிடித்த பெரியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். எவ்வளவோ எல்லாம் செய்தார். அப்படிப் பட்ட மனிதர் மறைந்தது விட்டார். ஒரு உயிர் பிறக்கின்றது, இறக்கின்றது இடையில் செயற்படுகின்றது. அந்த நிலைக்கு அப்பால் அதன் நிலை என்ன?

ஒரு செயற்பாட்டில் இருந்த ஒரு உயிர் எப்படி அழிந்து போனது? சரி. அப்படிச் செயற்பட்ட உயிர் எங்கிருந்து வந்தது?

இப்படி நிறையக் கேள்விகளைக் கேட்கலாம் விவாதத்துக்கு தயார் என்றால் நாங்களும் தயார். இப்படியான குழப்பங்களுக்கு பதிலளிக்க முடியாத, திராவிடர் கழகம் பின்னர் எமக்கு மேலே சக்தி இருக்கின்றது என்ற முடிவுக்குள் தற்போது வந்திருப்பது இணைக்கப்படுகின்ற என்னுமொரு செய்தி.

அப்படிப்பட்ட சக்தி ஒன்றைத் தான் நாங்கள் கடவுள் என்கின்றோம். அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வழிபடுகின்றனர். எனக்குப் பிடித்த வித்தில் நான் வழிபடுகின்றேன். அதில் மூக்கை நுழைக்கவோ, என் பக்தியைத் வவறு என்று சொல்வதற்கோ நீங்கள் யார்?

Link to comment
Share on other sites

அதே விஞ்ஞானம் தான் சொல்கின்றது. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கையை தகர்ப்பதற்கு உங்களிடம் வலுவான ஆதாரம் வேண்டுமென்று. அது இருந்தால் ஒழிய மற்றும்படி கடவுள் என்ற கருப்பொருள் இல்லையா, உண்டா என்று விஞ்ஞானம் என்றைக்குமே மறுத்தது கிடையாது.

கடவுள் மறுப்புக்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது.

பல ஆண்டுகளாக இருந்த மூட நம்பிக்கைகளைத் தகர்த்தது விஞ்ஞானம், உலகம் உருண்டை கடவுள் உலகத்தைப் படைத்தார் என்று பல்வேறு பட்ட நம்பிக்கைகளைத் தகர்த்தது விஞ்ஞானம்.அப்படி இருக்க எங்கே விஞ்ஞானம் சொல்கிறது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகளைத் தொடர வேண்டும் என்று? விஞ்ஞானத்தின் அடிப்படையே பல ஆண்டுகளாகக் கூறப்படுவனவற்றை மறுதலித்து புதிய விடயங்களை ஆதாரங்களுடன் கூறுவதே.கடவுள் உண்டு என்று நீங்கள் நிறுவினால் தான் நான் அதனை மறுக்க முடியும், இல்லாத ஒரு விடயத்தை எவ்வாறு மறுக்கமுடியும்?

உதாரணத்துக்கு ஒரு கேள்வி.

உங்களுக்குப் பிடித்த பெரியார் என்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். எவ்வளவோ எல்லாம் செய்தார். அப்படிப் பட்ட மனிதர் மறைந்தது விட்டார். ஒரு உயிர் பிறக்கின்றது, இறக்கின்றது இடையில் செயற்படுகின்றது. அந்த நிலைக்கு அப்பால் அதன் நிலை என்ன?

ஒரு செயற்பாட்டில் இருந்த ஒரு உயிர் எப்படி அழிந்து போனது? சரி. அப்படிச் செயற்பட்ட உயிர் எங்கிருந்து வந்தது?

இப்படி நிறையக் கேள்விகளைக் கேட்கலாம் விவாதத்துக்கு தயார் என்றால் நாங்களும் தயார். இப்படியான குழப்பங்களுக்கு பதிலளிக்க முடியாத, திராவிடர் கழகம் பின்னர் எமக்கு மேலே சக்தி இருக்கின்றது என்ற முடிவுக்குள் தற்போது வந்திருப்பது இணைக்கப்படுகின்ற என்னுமொரு செய்தி.

அப்படிப்பட்ட சக்தி ஒன்றைத் தான் நாங்கள் கடவுள் என்கின்றோம். அதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வழிபடுகின்றனர். எனக்குப் பிடித்த வித்தில் நான் வழிபடுகின்றேன். அதில் மூக்கை நுழைக்கவோ, என் பக்தியைத் வவறு என்று சொல்வதற்கோ நீங்கள் யார்?

நான் கூறியவற்றை திருப்பிக் கூற வேண்டி உள்ளது.எனக்குத் தெரியாததை நான் தெரியாது என்று தான் கூறுவேன் .அதற்கு ஒரு வடிவம் குடுத்து அதனை வழி பட மாட்டேன்.இல்லாத ஒன்றை தெரியாத ஒன்றை தெரிந்த தாகப் பாவனை செய்ய மாட்டேன்.தெரியாதது தெரியாத்தாகவே இருந்து விட்டுப்போகட்டும்.அதற்காக புனைவுளை நானே உருவாக்கி அந்தப் புனைவுகளே உண்மை என்று வாதாட மாட்டேன்.புனைவுகள் புனைவுகள் தான் .உண்மை கண்டு பிடிக்கப்படும் வரை பொறுத்திருப்பேன், அவ்வளவே.

உங்களின் தனிப்பட்ட நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை,அதற்கான அதிகாரமோ அவாவோ எனக்கு இல்லை.ஆனால் புனைவுகளை புனைவுகள் என்றும் ஏமாற்றுக்களை ஏமாற்றுக்கள் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை.தூயவன் நீ கடவுளை வணங்காதே என்று சொல்ல எனக்கு உரிமை இல்லை.ஆனால் கடவுள் என்பது ஒரு புனைவு, என்று கூற எனக்கு உரிமை இருக்கிறது.ஆகவே இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளுங்கள்.இந்து மதத்தை தூயவன் வழி படாதே என்று கூற எனக்கு உரிமை இல்லை.ஆனால் இந்து சமயமோ சைவ சமயமோ கூறும் புனைவுகளையும் கற்பனைகளையும் கட்டுடைப்பதற்கும் அந்தக் கோட்பாடுகளால் சீரழியும் சமூகத்தைச் சிந்திக்க வைப்பதற்குமான கருதுக்களைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது,அதனையும் புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

என்னிடம் கேட்கப்படாத கேள்வியாக இருந்தபோதிலும், தேவை கொண்டு பதிலளிக்கின்றேன்.

இப்போது உங்களின் தேவைக்காக ஆங்கிலம் படித்ததோ, சிங்களம் படித்ததோ தவறில்லை என்று சொல்லிக் கொள்கின்றீர்கள். ஆனால் அன்றைய எம் சமூதாயத்தை இதே போன்று வடமொழி பற்றுக் கொண்டிருந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி எம் மீது, இதே போன்றதொரு திணிப்பைச் செய்திருக்கும் பட்சத்தில் அதைத் தவறு என்றோ சொல்ல முடியுமா?

சரி அன்று விட்ட தவறை இன்றும் தொடரச் சொல்கிறீர்களா?

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட இதே நிலை தான் அன்று நம்மவர்களுக்கு ஏற்பட்டது. இப்போது நீங்கள் செய்வது சரி, அப்போது அவர்கள் செய்தது தவறு என்றால், எப்படி இது நியாயமாகும்?

இன்று என்னை இந்த மொழியைப் படி என்று எவரும் பயமுறுத்தவில்லை, திணிக்கவில்லை.( ஆனால் சிரிலங்காவில் வாழ்ந்தால் சிங்களம் படி என்று திணிக்கப்படதால் தான் நாம் போராட வேண்டி வந்தது என்பது வேறு விடயம்) மொழிகளை சுயமாகப் படிப்பதில் எந்தத் தவறும் இல்லை.இன்னொரு மொழியைப் படிக்கும் போது அதில் உள்ள பல விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.ஆகவே இங்கு இன்னொரு மொழியைப் படிப்பது அல்ல விடயம்.தமிழை வட மொழி ஆக்கினால் தமிழ் இல்லாது போய் விடும் எங்கிற ஆபாயம் உண்டு என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா.தமிழ் தமிழாக இருக்கட்டும் ஆங்கிலம் ஆங்கிலமாக இருக்கட்டும்.வட மொழி வட மொழியாக இருக்கட்டும்.வேண்டியவர்கள் வட மொழியையும் ஆங்கிலத்தையும் படிக்கட்டும்.அனக்கு ஆங்கில மொழி படிப்பதால் பல விடயங்கள் தெரிந்து கொள்ளலாம்.ஆனால் வட மொழி படிப்பதால் எதுவித பிரயோசனும் இல்லை என்று சொன்னேன்.ஒரு செத்த மொழியைப் படிப்பதில் என்ன பிரயோசனம் இருக்க முடியும்?

உங்களின் பெயர் குறித்து எவ்வாறு நாங்கள் தலையிட முடியாதோ, அவ்வாறே எங்களின் வழிபாட்டு முறைகள் குறித்து நீங்கள் தலையிட முடியாது. மதம் பிடித்திருக்கின்றது. தமிழில் வழிபட வேண்டும் என்று ஆசைப்பட்டால், நிச்சயம் இந்துமதம் உங்களுக்கு கோவில் கட்டி வழிபடவோ (அது கூடக் கடினமல்ல, மரத்தின் கீழே ஒரு கோவிலைக் கூட அமைக்கலாம்) அல்லது, தமிழில் தோத்திரங்கள் சொல்லி வழிபடவோ என்றைக்குமே தடை விதிக்கவில்லை. யாரும் கோவிலை நிர்வகிக்கலாம் என்று உரிமம் கொடுத்திருக்கின்றது. தடைகள் இல்லாமல் தராளமாக வழிபடுங்கள். ஊரில் நமக்கு கூடச் சொந்தக் கோவில் என்று உண்டு. அங்கு உறவினர் ஒருவர் தான் தேவராம் பாடி ஆராதனை செய்வார். எனவே உங்களுக்கும் அது கடினமான ஒன்றல்ல.

இல்லை, எனக்கு கடவுளைப் பிடிக்காது நாத்திகன் என்ற சொல்லிக் கொண்டு திரிந்தால், உங்களின் நாத்திகக் கருத்துக்களை மட்டும் கதையங்கள். எம் வழியில் தலையிடாதீர்கள். அதற்கு உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

தூயவன் இந்து மத்தைக் கடைப்பிடிக்காதே கடவுளை வழி படாதே , கோவிலுக்குச் செல்லாதே என்று நான் சொல்ல வில்லையே.ஏன் எனக்கு இந்து மத்தைப் பிடிக்காது ஏன் எனக்கு மதங்களையே பிடிக்காது ஏன் நான் கடவுள் என்னும் புனைவை நம்புவதில்லை என்று தானே சொல்லி வருகிறேன்.அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? நாரதர் பேரை மாற்று என்பதற்கும் , ஏன் நான் இந்து வல்ல என்பதற்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்குப் புலப்படவில்லையா?

Link to comment
Share on other sites

ஆமாம் அப்படித் தான்.காற்று என்றால் என்ன அதில் என்ன இருக்கிறது அதன் குண இயல்புகள் என்ன அதில் என்ன என்ன மூலங்கள் இருக்கின்றன.அதனைப் பரிசோதிப்பதற்கான பரிசோதனைகள் என்ன என்ன.அவை பல தடவைகள் பரிசோதிக்கப்பட்டதா அதனை எல்லா அறிவியளாளரும் ஏற்றுக் கொள்கின்றனரா.அது சம்பந்தமான பரிசோதனைகள் சரியானவையா என பல நூறு பேரால் ஆரயப் பட்டே அறிவியல் ரீதியாக நிருபணமாகிறது.அப்படி நிரூபிக்கபடும் போது நானும் கடவுள் இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வேன் , அதுவரை கடவுள் என்பது கற்பனையே.

நீங்கள் பாடசாலை செண்று காற்று பற்றி அறியும் வரை நீங்கள் காற்றை நீங்கள் உணரவில்லை என்கிறீர்கள்...! அது சரியானதா...??

காற்று என்பது அதன் என்மீதான தொடுகையினால் என்னால் உணர முடிகிறது... உங்களால் உணர முடியவில்லை ஆனால் ஆரச்சியாளர்கள் சொன்னதை தெரிந்தவர்கள் விளங்கப்படுத்தியதால் நான் அறிந்து கொள்கிறேன் என்கிறீர்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமான விடயமாக இருக்கிறது...!

காற்று போலத்தான் கடவுளும் மற்றவர்களால் கற்பிக்க படவும் முடியும் உணரவும் முடியும்... சாதியம் பற்றி மட்டும் சிந்தித்தவாறு மேலோட்டமாக பார்க்கும் போது உங்களுக்கு அப்படி புரி படலாம் ஆனால் நாங்கள் வணங்கும் சுடலை காப்பவனும், இடையன் கிருஸ்ணனும், வேடன் மருமகன் மலைவாழ் முருகனும், நாங்கள் வணங்கும் தெய்வங்கள்தான்...

ஆணவம், கன்மம், மாயை கடந்து பரப்பொருளை அடையும் மார்க்கமாய் மததை ஆளமாய் பாருங்கள்... மன அமைதியின் முக்கியத்துவம் புரிபடும்...!

மத அடிப்படைவாத நாடுகளான நேபாளம்,சவுதி அராபிய மற்றும் ஆப்கானில் தான் அடிப்படை மனித உரிமைகள் அதிகம் மீறப்பட்டன.மத நம்பிக்கை அதிகம் இல்லாத மேற்குலகில் தான் மனித உரிமைகள் அதிகம் பாதுகாக்கப்படு வருகின்றன.சிங்கள பவுத்தம் தலை விரித்தாடும் சிறிலங்காவில் இருந்து நீங்கள் அனுபவிக்காத மனித உரிமை மீறல்களா? ஆகவே மதம் என்பது மனித உரிமைகளை மறுப்பதை நாங்கள் நாவலரின் ஈசுவரத் துரோகிகளின் சித்திரவதைகளில் இருந்து வெகு தெளிவாகக் காணலாம்.சோவியத் யூனியனிலும் சீனாவிலும் நடந்தவைக்கு மத நம்பிக்கையின்மை காரணம் அல்ல.அவை பற்றியும் தனியாக இன்னொரு தலைப்பில் கருத்தாடலாம்.

பல சமூகப்பிரச்சினைகளுக்கு மதம் காரணியாக்க படுகிறது.... வெறும் கருவியாக்கப்படும் மதத்தை சில சமூக தலைவர்கள் பயன் படுத்தலாம் பயன்படுத்த படுகிறது... சமண சைவ யுத்தம் மட்டும் அல்ல சேர, சோழ, பாண்டிய, பல்லவ சண்டைகள் கூட ஒரு காரணம் கற்பிக்கப்பட்டு செய்யப்பட்டன... தமிழர்களே அவர்களுக்குள் அடிப்பட்ட பின்னர் அதுக்கு பரணிவேற பாடி இருக்கிறார்கள்...

எல்லாப்பிரச்சினைகளுக்கும் ஒரு காரணம் வேண்டும்.... அந்த காலத்தில் யாரோடாவது சண்டை போட வேணும் எண்று தேண்றினால் காரணம் தேடுவதா கடினம்..? மத்தின் பெயரால் போடப்பட்ட சண்டைகள் உண்டு இல்லை எனவில்லை... ஆனால் வேறு காரணங்களால் போடப்பட்ட சண்டைகள், கொலைகள் மிக அதிகம்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.