Jump to content

Recommended Posts

  • Replies 479
  • Created
  • Last Reply

ஆனாயநாயனார் புராண சூசனம்

ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்தல்

அநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

சிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க. அது "விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" "இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.

சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே "தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்" என்பதனால் உணர்த்தப்பட்டது. இவர் "உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம்? இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. "பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, "எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று திருவாய்மலர்ந் தருளினார்.

naaanaay_i.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

மூர்த்திநாயனார் புராணம்

வழங்குபுகழ் மதுரைநகர் மூர்த்தி யாராம்

வணிகர்திரு வாலவாய் மன்னர் சாத்தத்

தழங்குதிர முழங்கைதரத் தேய்த்த வூறுந்

தவிர்ந்தமணர் வஞ்சனையுந் தவிர மன்ன

னிழந்தவுயி ரினனாக ஞால நல்க

வெழில்வேணி முடியாக விலங்கு வேட

முழங்குபுக ழணியாக விரைநீ றாக

மும்மையுல காண்டருளின் முன்னி னாரே.

பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, வைசியர் குலத்திலே சிவபத்தியே ஒருவடிவெடுத்தாற்போலும் மூர்த்திநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் அந்த ஸ்தலத்திலே வீற்றிருக்கின்ற சோமசுந்தரக்கடவுளுக்குத் தரிக்கும் பொருட்டுத் தினந்தோறும் சந்தனக்காப்புக் கொடுத்து வருங்காலத்திலே; கருணாடதேசத்தரசன் சதுரங்க சேனைகளோடும் அம்மதுரைக்கு வந்து, பாண்டியனோடு யுத்தஞ் செய்து அவனைவென்று, அந்நகருக்கு அரசனாயினான். அவன் புறச்சமயிகளாகிய சமணர்களுடைய போதனார்த்தியினாலே ஆருகதமதத்திற் பிரவேசித்து, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்வானாயினான் ஆயினும், மூர்த்திநாயனார் தாஞ்செய்யுந் திருப்பணியைத் தவறாது செய்து வந்தார்.

அது கண்டு, அரசன் அவரை ஆருகதமதத்திலே பிரவேசிப்பித்திற்கு உத்தேசித்து, அவருக்குப் பல கொடுஞ்செய்கைகளைச் செய்தான். செய்தும், அவர் தம்முடைய திருப்பணியினின்றும் சிறிதும் வழுவாதவராயினார். அது பற்றி அவ்வரசன் அவர் சந்தனக்கட்டை வாங்குமிடங்களிளெல்லாம் அவருக்குக் கொடுக்க வொட்டாமற். றடுத்தான். அதனால் அவர் மனநொந்து, "இப்பாண்டி நாடு, துர்ச்சமயமாகிய ஆருகதசமயத்திலே பிரவேசித்துச் சிவபுண்ணியத்துக்கு இடையூறுசெய்கின்ற அதிபாதனாகிய இவ்வரசன் இறக்க, சற்சமயமாகிய சைவசமயத்தை வளர்க்கின்ற அரசரைச் சாருங்காலம் எக்காலம்" என்று நினைந்து துக்கித்து, பகற்காலமுழுதும் சந்தனக்கட்டை தேடித் திரிந்து, எங்கும் பெறாமையால் ஆலயத்துக்குவந்து, "சுவாமிக்குத்தரிப்பதற்குத் தேய்த்துக் கொடுக்கும்பொருட்டுச் சந்தனக்கட்டைக்கு இன்றைக்கு முட்டு வந்தாலும், அக்கட்டையைப் போலத் தேய்க்கத்தக்க கைக்கு ஒரு முட்டும் இல்லை" என்று ஒரு சந்தனக் கல்லிலே தம்முடைய முழங்கையை வைத்து, தோலும் நரம்பும் எலும்பு தேய்ந்து குறையும்படி தேய்த்தார். தேய்த்தலும், உதிரம் ஒழுகி நாற்புறத்திலும் பெருகி எலும்பினுள்ளே இருக்கும் துவாரந்திறந்து மூளை வெளியிலே வந்தது. அப்பொழுது, "அன்பனே! நீ பத்தியினது உறுதிப்பாட்டினால் இப்படிப்பட்ட செய்கையைச் செய்யாதே. உனக்கு இடுக்கண்செய்த, கொடுங்கோலரசன் பெற்ற இந்நாடு முழுவதையும் நீயே கைக்கொண்டு இதற்கு முன் இவ்விடத்திலே அவனாலுண்டாகிய கொடுமைகள் யாவற்றையும் நீக்கி, பரிபாலனஞ்செய்து, உன்னுடைய பணியை நடப்பித்து, பின்பு நம்முடைய சிவலோகத்தை அடைதி" என்று ஒரு அசரீரிவாக்கு எழுந்தது. மூர்த்திநாயனார் அதைக் கேட்டு, அஞ்சி, கையைத் தேய்த்தலை ஒழிந்து எழுந்தார். உடனே அவர் கையானது தேய்த்தனாலாகிய ஊறு நீங்கி முன்போலாயிற்று.

அவ்விரவிலே அந்தக்கருணாடராஜன் இறந்து, சிவனடியார்களுக்கு வருத்தஞ்செய்த அதிபாதகத்தினாலே கொடுமையாகிய நரகத்திலே விழுந்தான். மற்ற நாள் பிராதக் காலத்திலே மந்திரிமார்கள் கூடி, தகனசமஸ்காரஞ் செய்து, பின்னர்த் தங்கள் அரசனுக்குப் புத்திரர் இல்லாமையால் வேறொருவரை அரசராக நியோகித்தற்கு உபாயத்தை ஆலோசித்து, "யானையைக் கண்கட்டிவிடுவோம், அந்த யானை எவரை எடுத்துக்கொண்டுவருமோ அவரே இந்நாட்டுக்கு அரசராவார்" என்று நிச்சயித்துக்கொண்டு, யானையை விதிப்படி அருச்சித்து, "நீ இந்த நாட்டை ஆளுதற்குவல்ல ஒருவரையெடுத்துக் கொண்டு வா" என்று சொல்லி, அதை வஸ்திரங்கொண்டு கண்ணைக் கட்டி விட்டார்கள். அந்த யானை அந்தப்பட்டணத்து வீதிகளிலே திரிந்து சென்று, சொக்கநாத சுவாமியுடைய ஆலயத்தின் கோபுரத்துக்கு முன்னே போயிற்று. மூர்த்தி நாயனார் இரவிலே தமக்குச் செவிப்புலப்பட்ட அசரீரிவாக்கினால் மனத்துயரம் நீங்கி "நமது கடவுளாகிய பரமசிவனுக்குத் திருவுளமாகில் அடியேன் இந்த நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்" என்று நினைத்துக்கொண்டு, திருக்கோயிற்புறத்திலே நின்றார். யானையானது அவர் திருமுன்னே சென்று தாழ்ந்து, அவரை எடுத்து, முதுகின்மேல் வைத்துக்கொண்டது. அது கண்ட மந்திரிமார்கள் அவரை நமஸ்கரித்து, யானையின் முதுகினின்றும் இறக்கி, முடிசூட்டு மண்டபத்திலே கொண்டு போய், ஒரு சிங்காசனத்தின்மேல் இருத்தி, மூடி சூட்டுக்கு வேண்டும் மங்கலகிருத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள். மூர்த்திநாயனார் அவர்களை நோக்கி, "ஆருகதமதம் நீங்கிச் சைவசமயம் விருத்தியாபின் நான் இந்நாட்டை ஆளுதற்கு உடன்படுவேன்" என்றார். அதைக்கேட்ட மந்திரிமார்களும் சாஸ்திரபரிசயமுள்ள பிறரும் அவரை வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீருடைய ஆஞ்ஞையின்படியேயன்றி அதற்கு மாறாக யாவர் செய்வார்கள்" என்று சொன்னார்கள். பின்பு மூர்த்திநாயனார் "நான் அரசாள்வேனாகில், எனக்கு விபூதியே அபிஷேகத்திரவியமும், உருத்திராட்சமே ஆபரணமும், சடாமுடியே கிரீடமும் ஆகுக" என்றார். அவர்கள் "தேவரீர் அருளிச்செய்தபடியே ஆகுக" என்று சொல்லி, மகுடாபிஷேகத்துக்கு வேண்டும் செய்கைகளைச் செய்து நிறைவேற்றினார்கள்.

shiv.jpg

மூர்த்திநாயனார் சடைமுடி தரித்து ஆலயத்திற்சென்று சோமசுந்தரக்கடவுளை வணங்கிக்கொண்டு யானையின்மேல் ஏறி. இராசமாளிகையைச் சேர்ந்தார். அங்கே அத்தாணி மண்டபத்திலே இரத்தின சிங்காசனத்தின் மேலே தவளச் சந்திரநிழலிலே வீற்றிருந்துகொண்டு, பொய்ச்சமயமாகிய ஆருகதம் நீங்கவும், மெய்ச்சமயமாகிய சைவசமயமே எங்கும் விளங்கவும், பெண்ணாசை சிறிதுமின்றி, நெடுங்காலம் விபூதி உருத்திராக்ஷம் சடைமுடி என்கின்ற மூன்றினாலும் அரசாண்டு, பின் சிவபதப் பிராப்தியானார்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

மூர்த்தி நாயனார் புராண சூசனம்

1. சிவனுக்குச் சந்தனக்காப்புக் கொடுத்தல்.

சிவபெருமானுக்குச் சாத்தும் பொருட்டுச் சந்தனக் காப்புக் கொடுத்தல் உத்தம சிவபுண்ணியமாம். சந்தனக் குழம்போடு பனிநீர் குங்குமப்பூ கோரோசனை கஸ்தூரி பச்சைக்கர்ப்பூரம் என்பன கலந்து சாத்தல் உத்தமோத்தமம். சிவனுக்குச் செயற்பாலனவாகிய உபசாரங்கள் எல்லாவற்றுள்ளும் கந்தம் சாத்தலே சிறந்தது என்று சிவாகமம் - செப்ப甹ம். "சாத்துக சாந்துபனி நீர்பளிதங் குங்குமமுஞ் - சேர்த்தியுளத் தாதரவு செய்து." எ-ம். "கூட்டுவித்தா ரும்பளிதங் குங்குமஞ்சாந் தம்பனிநீர் - தீட்டும் விதி தன்னைத் தேர்ந்து." எ-ம் சோமவார விரத கற்பத்தினும், "சுகந்த கந்தஞ் சுலவிய லேபன - முகந்தலிங்கத் தொருதினஞ் சாத்தினோ - ரிகந்து பாவ மிமையவர் கோடியாண் - டகந்தெ ளிந்தங் கரன்பதி நண்ணுவார்." எனச் சிவபுண்ணியத்தெளிவினும் கூறுதல் காண்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்மூர்த்தி நாயனார் என்பது. இவர் தாம் நாடோறும் தவறாது செய்யச் சங்கற்பித்த இத்திருத்தொண்டை, அது பற்றி அரசன் தமக்குச் செய்த இடுக்கண் மிகுதி கண்டும் தவறாது செய்தமையானும், சந்தனக் கட்டைக்கு முட்டுவந்த பொழுது தமது முழங்கையைச் சந்தனக் கல்லிலே தேய்த்த பெருந்தன்மையானும், தாம் உலகாளும் அரசராய வழியும் செருக்கு உறாது இப்பணியைத் தாமே செய்தமையானும், தெளியப்படும். இவர் தமது சரீரத்திற் சிறிதும் பற்றின்றி, சிவனே தமக்கு இனியர் என்று துணிந்து, அவரையே இடைவிடாது பற்றி நின்று மெய்யன்பர் என்பது இச்செயற்கருஞ் செயலால் உணர்க.

2. சிவனடியாருக்குத் தீங்கு செய்தலால் பெறப்படும் பயன்

சிவனடியார்களுக்குத் தீங்கு செய்தோர் நரகத்து வீழ்ந்து வருந்துவர். அது "காட்டுமுள் ளொளியைக் கண்ட கண்ணனைக் கயந்து சொல்லக் - கேட்டவர் கேட்பித்தார்கள் கெழுமின ருடன்பட் டார்முன் - மூட்டின ரென்ற வைத்து மூடருங் கூடிமூழ்கி - மீட்டிடு வாருமின்றி யெரிநிர யத்துள் வேவார்" "மனத்தினால் வடிவு தன்னால் வழுக்கிய சழக்கர் தாமு - மினத்தொடு மிணங்கி வேவ ரெரிநிர யத்தை யெய்தி - யெனைத்துள காலந் தானு மென்றுளத் தேங்கி யெய்ப்பர் - தனக்கய லுறவி லானைத் தவறுவ ரென்னோ தாமே." "மற்றைய நரக பேத மனைத்தினு மயங்கி மூவேழ் - சுற்றமுஞ் சுழலத் தாமுங் கூடியே துயங்கி வீழ்வ - ரெற்றுவ ரியம தூத ரெமக்குற வாருமில்லை - யுற்றவித் துயரந் தன்னை யொழிக்கவென்றழிவருள்ளம்" எனச் சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால், உணர்க. சிவனடியாருக்கு இடுக்கண் செய்த இக்கருணாடராசனும் இவ்வாறே நரகத்து வீழ்ந்தமை தெளிக. ஆதலால், சிவனடியார்களுக்கு மறந்தும் தீங்கு நினையற்க.

namurthi_i.jpg

3. சைவம் தழைக்க அரசியற்றல்

அரசன் வேதாகமங்களால் உணர்த்தப்படும் சற்சமயமாகிய சைவத்தின் வழி வழுவாது ஒழுகுவானாயின்; அவன் கீழ்வாழும் குடிகளும் இவ்வரசன் தான் ஒழுகியவாறே ஒழுகாதாரைத் தண்டிப்பன் என்னும் அச்சத்தாலும், பத்தியாலும், இயல்பாலும் சைவ சமயத்தின் வழி தவறாது ஒழுகி, போகம் மோக்ஷம் என்னும் இருபயனையும் பெறுவர்கள். இதுபற்றியன்றோ; அரசனைச் சைவ மார்க்கத்தில் நிறுத்திய ஆசாரியர் உலகத்துக்கெல்லாம் ஆசாரியர் என்று சிவாகமம் கூறியதூஉம் என்க. "ஐயமற விபரீத மதுவு மீச னருண்மொழியை யாராய்ந்த வநக னாசான் - வையகமு முய்யவுனிச் சைவ தன்ம மன்னவனுக் களிக்கவவன் மருவு நீதி - யெய்தியிடு முலகச்ச மெய்தலானு மெல்லோரு மிருபயனு மெய்த லாலே - சைவநெறி தனையரசற் களித்த வாசான் சகத்தினுக்குந் தேசிகனே சாற்றுங்காலே" என்று சிவதருகோத்தரத்தில் கூறுமாற்றானும் உணர்க. அரசன் ஆருகத சமயி ஆகி, சிவனடியார்களுக்கு இடுக்கண் செய்தால்; அவன்கீழ் வாழும் குடிகள் அப்பரமதப் படுகுழியில் வீழ்ந்து எரிவாய் நரகத்துக்கு இரையாதலையும், சைவத்து நிற்பாரும் அரசனால் வரும் இடுக்கண் மிகுதி பற்றி அச்சத்தினாலே சிவபுண்ணியங்கள் செய்யாது வாளா கெடுதலையும், கண்டு இரங்கி யன்றோ; அதிபாதகனாகிய இவ்வரசன் இறப்ப, இப்பாண்டிநாடு சைவ மன்னரைச் சார்வது எக்காலம் என்று இம்மூர்த்தி நாயனார் வருந்துவாராயினார். இதனால், இவரது இரக்கமுடைமை தெளிக. மெய்யுணர்வு உடையார்க்குத் தாம் பெற்ற பேறு உலகம் பெறுதல் வேண்டும் என்பதே உள்ளக்கிடக்கை என்க. "நான் பெற்ற வின்பம் பெறுகவிவ் வையகம்" என்றார் திருமூலநாயனாரும்.

இம்மூர்த்தி நாயனார் தாம் அரசர் வாழ்வைச் சிறிதாயினும் நன்கு மதித்து விரும்பினவர் அல்லர். பிறர் பயன் நோக்கினாராயினும், தாமே அரசாள நினைந்தவரும் அல்லர். உயிர்கள்மாட்டு எழுந்த பெருங்கருணையினாலே பாண்டி நாடு சைவமன்னரைச் சார்தல் வேண்டும் என்னும் கருத்தொன்றே உடையராயினார். "அடியவர் குறைவு தீர்த்தாண்டருள்வதே விரதம்பூண்ட" கருணாநிதியாகிய சிவன் தம்மாட்டு உள்ளவாறு எழுந்த பேரன்பினாலாகிய இக்கருத்தை முடித்தருளத் திருவுளங்கொண்டு, பரசமயங்கள் பாறச் சைவசமயம் தழைக்க அரசியற்றவல்லார் இவர் அன்றிப் பிறர் இலர் ஆதலால், இவரையே அந்நாட்டிற்கு அரசராக்கினார். இதனால், சிவன் தமது அடியார் கருத்தை முற்றுவித்தருளும் பெருங்கருணையினர் என்று துணிந்து, யாவருக்கும் அஞ்சாது அவரையே நம்பி வழிபடுக. "தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளாமணிதான் கண்டாய் - காண்டற் கரிய கடவுள் கண்டாய் கருதுவார்க் காற்ற வெளியான் கண்டாய் - வேண்டுவார் வேண்டியதே யீவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதமெல்லா - மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட் டுறையு மணாளன்றானே" என்றார் திருநாவுக்கரசு நாயனார். "இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்றோற்றி - யிறைவனே யீண்டிறக்கஞ் - செய்வா - னிறைவனே - யெந்தா யெனவிரங்கு மெங்கண் மேல் வெந்துயரம் - வந்தா லதுமாற்றுவான்" என்றார் காரைக்காலம்மையார்.

இம்மூர்த்திநாயனார் அரசர் வாழ்விற் சிறிதும் பற்றிலர் ஆயினும்; சிவனது ஆஞ்ஞை உண்மையானும், அவரது திருவருள் வழிப்பட்டு நிற்கும் தமது ஆளுமையால் உலகம் உய்யும் என்னும் கருத்தானுமே, அதற்கு இசைந் தருளினார். அது, இவர் மந்திரிகளை நோக்கி, சமண சமயம் நீங்கச் சைவ சமயம் ஓங்குமாயின் அரசாள்வேன் என்றமையானும் விபூதியே அபிஷேகத் திரவியமும் உருத்திராக்ஷமே ஆபரணமும் சடா முடியே கிரீடமும் ஆகக்கொண்டே அரசாண்டமையானும், பெண்ணாசை சிறிதும் இன்றி ஐம்புலன்களை அடக்கி நின்ற பெருந் துறவுடைமையானும் துணியப்படும். இதனால், மெய்யுணர்வு உடையோர் அண்டமனைத்தும் ஒருங்கு ஆளப் பெறினும், அதனை ஒரு பொருளெனக் கருதாது, சிவனது திருவருள்வழி நின்றே அவருக்குத் திருத்தொண்டு செய்தலில் தவறார் என்பது துணிக. "கண்டெந்தை யென்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனே - லண்டம் பெறினு மதுவேண்டேன் - றுண்டஞ்சேர் - விண்ணாளுந் திங்களாய் மீக்குலக மேழினுக்குங் - கண்ணாளா வீதென் கருத்து" என்றார் காரைக்காலம்மையார். "அருடரு சீர்த்தில்லை யம்பலத் தான்ற னருளினன்றிப் - பொருடருவானத் தரசாதலிற் புழு வாதனன்றாஞ் - சுருடரு செஞ்சடை யோனரு ளேற்றுற விக்கு நன்றா - மிருடரு கீழேழ் நரகத்து வீழு மிருஞ்சிறையே" என்றார் நம்பியாண்டார் நம்பி. மெய்யுணர்வு உடையார்க்கு விபூதியே சாந்தமும், உருத்திராக்ஷமே ஆபரணமுமாம் என்பது "ஊரெலா மட்ட சோறு நம்மதே யுவரி சூழ்ந்த - பாரெல்லாம் பாய றுன்னற் கோவணம் பரிக்கு மாடை - சீரெலாஞ் சிறந்த சாந்தந் தெய்வநீ றணிபூண் கண்டி - நீரெலாஞ் சுமந்த வேணி நிருத்தனாட் கொண்டவன்றே" என்னும் திருவிளையாடற்புராணச் செய்யுளால் உணர்க. சடைமுடி தரித்தல் புண்ணியம் என்பது, "பத்தர் நூன்முறை வேணி பரித்திடி - லொத்த வற்றுறு வேணியொவ் வொன்றிற்கு - மெத்து மச்சுவ மேத பலத்தினைச் - சத்தி யம்மவர் நாடொறுஞ் சார்தலே" என்னும் சிவபுண்ணியத் தெளிவினால் காண்க. கூடாவொழுக்கம் உள்வழி இவ்வேடம் தமக்கும் பிறர்க்கும் தீமை பயக்கும் என்பது ஏனாதிநாதநாயனார் புராணத்துச் சூசனத்திற் கூறினம்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

முருகநாயனார் புராணம்

மன்னுதிருப் புகலூர்வாழ் முருகனாரா

மறையவர்கோ வர்த்தமா னீச்ச ரத்தார்

சென்னியினுக் கழகமரு மலர்கள் கொய்து

திருமாலை புகழ்மாலை திகழச் சாத்திக்

கன்னிமதிற் கழுமலநா டுடைய நாத

காதன்மிகு மணங்காணுங் களிப்பினாலே

யின்னல்கெட வுடன்சேவித் தருளான் மீளா

திலங்கு பெரு மணத்தரனை யெய்தி னாரே.

சோழமண்டலத்தில், திருப்புகலூரிலே, பிராமண குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவராகிய முருகநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தினந்தோறும் சூரியோதயத்துக்குமுன் எழுந்து ஸ்நானம்பண்ணிச் சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு போய், கோட்டுப்பூ கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என்கின்ற நால்வகைப் பூக்களில் உரிய பூக்களைக் கொய்து திருப்பூங்கூடைகளிலே இட்டுக்கொண்டு வந்து, தனியிடத்திலிருந்து, பலவகைப்பட்ட திருமாலைகள் செய்து, அந்த ஸ்தலத்திலுள்ள வர்த்தமானீச்சரம் என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தும், திவ்விய மந்திரமாகிய ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தைச் செபித்தும் வருவார்.

161-B.jpg

நன்றி:

http://www.dinamalar.com

இப்படிச் செய்துவருங்காலத்திலே, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்குச் சிநேகராகிய பெருமையையும் பெற்றார். பெற்ற அம்முருகநாயனார் அந்தத் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணத்தில் தம்முடைய சிவபூசாபலத்தினாலே போய், பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

முருக நாயனார் புராண சூசனம்

பூக் கொய்து மாலைதொடுத்துச் சிவனுக்குச் சாத்தல்

சிவனுக்கு உரியனவெனச் சிவாகமங்களில் விதிக்கப்பட்ட பூக்களை, மெய்யன்போடு விதிப்படி கொய்து, பல வகைப்பட்ட மாலைகள் செய்து, சிவனுக்குச் சாத்தி அருச்சனை செய்தலும், ஸ்ரீபஞ்சாக்ஷரம் செபித்தலும் மிகச் சிறந்த புண்ணியமாம்." "நிலைபெறுமா றெண்ணுதியே னெஞ்சே நீவா நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் - புலர்வதன்மு னலகிட்டு மெழுக்கு மிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் - தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கரா சயபோற்றி போற்றி யென்று - மலை புனல்சேர் செஞ்சடையெம் மாதீ யென்று மாரூரா வென்றென்றே யலறா நில்லே." "பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் - நாக்கைக் கொண்டர னாம நவில்கிலா - ராக்கைக் கேயிரை தேடி யலமந்து - காக்கைக் கேயிரையாகிக் கழிவரே" என்னுந் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களாலும், "முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் - பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் - சித்தனே செல்வத் திருப்பெருந் துறையிற் செழுமலர்க் குருந்தமே வியசீ - ரத்தனே யடியே னாதரித் தழைத்தா லதெந்துவே யென்றரு ளாயே" என்னுந் திருவாசகத்தானும், "நிலத்திற் றிகழ்ந்த நறுமலரு நீருற் பவித்த போதெவையும் - புலத்தி னழுந்தாவன் பினொடும் போதா னந்தன் கழற்க ணிந்தோர் - மலத்த男 னநாதி முத்தன்மல வயிரி யுறையுஞ் சிவலோகத் - தலத்திற் புகுந்து நலத்தகைய தலைவராகி நிலவுவரால்" என்னும் சிவபுண்ணியத் தெளிவானும் உணர்க.

இத்திருப்பணி செய்ய விரும்புவோர், நாடோறும் சூரியன் உதிக்குமுன் எழுந்து, ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரம் தரித்து, சந்தியா வந்தனம் முடித்துக் கொண்டு, சுத்தி செய்யப்பட்டு நாபியின் கீழ்ச் செல்லாது மேலே உயர்ந்த கைகளை உடையவராய், திருப்பூங் கூடையை எடுத்துக் கொண்டு, சிவனது திருவடிக்கணன்றிப் பிறிதொன்றினும் சிறிதும் இறங்காத சிந்தையோடு மெளனம் பொருந்தி, சென்று, பத்திர புஷ்பங்கள் கொய்து, திருப்பூங்கூடையில் இட்டுக்கொண்டு வந்து, சுத்தி செய்யப்பட்ட காலினையுடையராய், புஷ்பமண்டபத்திற் புகுந்து, விதிப்படி சுத்தி செய்யப்பட்ட பூக்குறட்டில் வைத்து, இண்டை முதலிய திருமாலைகளைச் செய்க, சிவலிங்கத்தைத் தீண்டற்கு உரியார் தாமே சாத்துக. அல்லாதார் அதற்கு உரியாரைக் கொண்டு சாத்துவிக்க., திருப்பூங்கூடையை நாபிக்குக் கீழே பிடியாது ஒரு தண்டின் நுனியிலே கட்டி உயரப் பிடித்துக் கொண்டு வருக. அன்றேல், நாபிக்கு மேலே உயர்ந்த கையினாற் பிடித்துக் கொண்டு வருக. பத்திரபுஷ்பம் கொய்யும் போது மெளனம் வேண்டும் என்பது, "வைகறை யெழுந்து போந்து புனன்மூழ்கி வாயுங்கட்டி - மொய்ம்மலர் நெருங்கு வாசநந்தன வனத்து முன்னி" என எறிபத்த நாயனார் புராணத்தில் கூறியவாற்றால் உணர்க. மனம் வேறுபடலாகாது என்பது திருமலைச்சிறப்புச் சூசனத்திற் காண்க. தீக்ஷையில்லாதான், இழிகுலத்தான், மிகுநோயாளன், தூர்த்தன், ஆசாரமில்லாதான், ஆசெளசமுடையான் என்னும் இவர்கள் கொண்டுவரும்பூ, எடுத்து வைத்து அலர்ந்தபூ, பழம்பூ, உதிர்ந்தபூ, காற்றில் அடிபட்டபூ, கையிலேனும் உடுத்த புடைவையிலேனும் எருக்கிலை ஆமணக்கிலைகளிலேனும் வைத்தபூ, அரையின் கீழே பிடித்தபூ, புழுக்கடி எச்சம் சிலந்திநூல் மயிர் என்னும் இவற்றோடு கூடியபூ, ஸ்நானம் பண்ணாமல் எடுத்தபூ பொல்லா நிலம் மயானசமீபம் சண்டாளர் வசிக்கும் இடம் முதலிய அசுத்த ஸ்தானங்களில் உண்டாகியபூ, இரவில் எடுத்தபூ, இவை முதலாயின சிவனுக்குச் சாத்தலாகாது. "எடுத்துவைத்தே யலர்ந்த மலர் பழம்பூக்கண் மற்ற வெருக்கிலையா மணக்கிலையி னிற்பொதிந்த பூக்க - ளுடுத்தபுடை வையிற் கரத்தி ளடைத்த நறும் பூக்க ளுதிர்ந்திடுபூ வரையின்கீ ழுற்றவிரைப் பூக்களடுத்த புழுக் கடியெச்சஞ் சிலந்திமயி ருறுத லங்கை யில்வைத் தங்கைகுவித் திடுதல்கங்குறனிலே - யெடுத்தமலர் நீரமிழ்த்தல் புறங்காட்டி லெய்த லெச்சில்குளி யாதெடுத்த லிழிபெனுமா கமமே." என ஞானப்பிரகாசதேசிகர் புஷ்ப விதியினும்; "மடியினிற் பறித்தி டும்பூ மலர்ந்துகீழ் விழும்பூ முன்னா - ளெடுபடு மலரி ளம்பூ விரவினி லெடுத்தி டும்பூ - தொடர் நோயன் றீக்கை யில்லான் றூர்த்தனா சார மற்றோன் - கொடுவரும் பூவ னைத்துங் குழகனுக் காகா வன்றே." எனப் பிறிது புஷ்ப விதியினும் கூறுமாற்றால், உணர்க.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இம்முருகநாயனார். இவர் விதிவழுவாது சிவனிடத்து இடையறாத மெய்யன்போடும் இப்புண்ணியத்தைச் செய்தமையால் அன்றோ, பரசமய கோளரியாகிய திருஞானசம்ப்ந்த மூர்த்தி நாயனாருக்குத் தோழராகிய பெரும்பேற்றைப் பெற்றும், அவராலே, "தொண்டர் தண்கய மூழ்கித் துணையலுஞ் சாந்தமும் பகையுங் - கொண்டு கொண்டடி பரவிக் குறிப்பறி முருகன்செய் கோலங் - கண்டு கண்டுகண் குளிரக் களிபரந் தொளிமல்கு கள்ளார் - வண்டு பண்செயும் புகலூர் வர்த்தமா னீச்சரத் தாரே." எ-ம். "ஈசனேறமர் கடவுளின்னமிர் தெந்தையெம் பெருமான் - பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புகலூரின் - மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல் - வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத்தாரே." எ-ம். புகழப்பட்டும், அவருடைய திருமணத்திலே சிவனது திருவடி நிழலை அடைந்தார். "ஏந்துமுலகுறு வீரெழி னீலநக் கற்கு மின்பப் - பூந்தண் புகலூர் முருகற்குந் தோழனைப் போகமார்ப்பைக் - காந்துங் கனலிற் குளிர்ப்படுத் துக்கடற் கூடலின் வாய் - வேந்தின் றுயர் தவிர்த் தானையெப் போதும் விரும்புமினே" என்று திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவந்தாதியிற் கூறினார் நம்பியாண்டார்நம்பி என்க.

namuruga_i.jpg

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

உருத்திரபசுபதிநாயனார் புராணம்

பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்

பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே

னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு

மகலாதே யாகளமா யமர்ந்து நின்று

திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித்

திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி

மங்கையிட முடையபிரா னருளான் மேலை

வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.

சோழநாட்டிலே, திருத்தலையூரிலே, பிராமணகுலத்திலே, பரமசிவனுடைய திருவடிகளிலே பதிந்த அன்பே தமக்குச் செல்வமெனக் கொண்ட பசுபதி என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தாமரைத்தடாகத்திலே அகோராத்திரம் கழுத்தளவினதாகிய தண்ணீரிலே நின்றுகொண்டு, இரண்டு கைகளையும் சிரசின்மேலேறக் குவித்து, பரமசிவனுடைய திருவடிகளை மறவாத சிந்தனையோடு வேதபுருஷனுக்குக் கண்ணாகிய ஸ்ரீ ருத்திரத்தை ஓதி, சிலநாட்சென்றபின் சிவபதத்தை அடைந்தார். அதனால் அவர்பெயர் உருத்திரபசுபதி நாயனார் என்றாயிற்று.

shivchalisa.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

உருத்திரபசுபதி நாயனார் புராண சூசனம்

ஸ்ரீ உருத்திரம் ஓதல்

வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும் நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும் ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும் வேதமே மேலானது; வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது; அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது; இவ்வாறு சிவதத்துவ விவேக விருத்தியிற் கூறப்பட்டது. வேதபுருஷனுக்கு இந்த உருத்திரம் கண்ணும், இதனுள் இருக்கும் பஞ்சாக்ஷரம் கண்மணியுமாம். இது சதுர்வேத தாற்பரிய சங்கிரகத்திற் காண்க. இவ்வுருத்திரத்தில் பகுப்பின்றி உயிர்ப் பொருள் உயிரில் பொருள் எல்லாவற்றையும் தனித்தனி எடுத்தோதி வழிபாடு கூறுதல் ஏற்றுக்கெனின்; எப்பொருள்களினும் சிவன் கலந்திருப்பர் என்பது தெரிந்து கொள்ளுதற் பொருட்டென்க. தமிழ் வேதமாகிய தேவாரத்துள் நின்ற திருத்தாண்டகம் முதலியவற்றினும் "இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி - யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப் - பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி - நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே" என்பது முதலாக இவ்வாறு பகுப்பின்றிக் கூறுதல் காண்க. சிவனிடத்து இடையறாத மெய்யன்போடு இந்த ஸ்ரீ ருத்திரத்தை நியமமாக ஓதுவோர் முத்தி பெறுவர். இவ்வுருத்திரத்தை, தடாகத்திலே இரவு பகல் கழுத்தளவினதாகிய ஜலத்திலே நின்றுகொண்டு, ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ஓதினமையால், முத்திபெற்றவர் இவ்வுருத்திரபசுபதி நாயனார். ஆதலால், இவ்வுருத்திரத்துக்கு உரியவர், தமது வாணாளை வீணாளாகப் போக்காது சிவனை மறவாத சிந்தையோடும், இதனை நியமமாக ஓதுக.

naurutht_i.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

விபூதி உண்மையில் மகத்துவமானது...

நான் சிறுவயதில் விபூதியை அடிக்கடி வாயினுள் அள்ளிப் போட்டு சாப்பிடுவேன். சுவையாக இருக்கும்...

கோயிலுக்கு போய் திருநூற்றை அணிந்து நெற்றியில் ஒரு சந்தனப் பொட்டையும் வைக்கும்போது ஒரு இனிய அனுபவம் ஏற்படும்...

இதற்காக நான் இந்து சமயத்தை சேர்ந்தவன் என கூறவில்லை... அனைவரும் விபூதியை, சந்தனத்தை அணிந்துகொள்ள முடியும்... மதவேறுபாடு தேவையில்லை...

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

திருநாளைப்போவார்நாயனார் புராணம்

நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ

நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்

பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்

பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி

வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற

மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்

விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

சோழமண்டலத்திலே கொள்ளிடநதியின் பக்கத்துள்ள மேற்காநாட்டிலே, ஆதனூரிலே, புலையர்குலத்திலே, நந்தனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி, மற்றொன்றையும் மறந்தும் நினையாதவர். அவ்வூரிலே தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமாகிய நிலத்தின் விளைவினாலே சீவனஞ் செய்து கொண்டு, தாஞ்செய்யவேண்டும் தொழிலை நடத்துகின்றவர்; சிவாலயங்கடோறும், பேரிகைமுதலாகிய ஒருமுகக்கருவிகளுக்கும் மத்தளமுதலாகிய இருமுகக்கருவிகளுக்கும் தோலும் வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுக்கின்றவர்; ஆலயங்களின் திருவாயிற்புறத்தில் நின்றுகொண்டு அன்பின் மேலீட்டினால் கூத்தாடிப் பாடுகின்றவர்.

162-B.jpg

அவர் ஒருநாள் திருப்புன்கூரிலே போய்ச் சுவாமிதரிசனம் பண்ணித் திருப்பணி செய்தற்கு விரும்பி, அங்கே சென்று திருக்கோயில்வாயிலிலே நின்றுகொண்டு, சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிடவேண்டும் என்று நினைத்தார். சுவாமி அவருடைய விருப்பத்தின்படியே தமக்கு முன்னிருக்கின்ற இடபதேவரை விலகும்படி செய்து, அவருக்குக் காட்சி கொடுத்தருளினார். நந்தனார் அந்த ஸ்தலத்திலே ஒரு பள்ளத்தைக் கண்டு, பெரிய குளமாக வெட்டித் தம்முடைய ஊருக்குத் திரும்பினார்.

அவர் இப்படியே பல ஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்து வந்தார். ஒருநாள், சிதம்பர ஸ்தலத்திற்குப் போகவேண்டும் என்று ஆசைகொண்டு, அவ்வாசை மிகுதியினாலே அன்றிரவு முழுதும் நித்திரை செய்யாதவராகி, விடிந்தபின் "நான் சிதம்பர ஸ்தலத்திற்குப் போனால் திருக்கோயிலினுள்ளே பிரவேசிக்கும் யோக்கியதை என் சாதிக்கு இல்லையே" என்று துக்கித்து, "இதுவும் சுவாமியுடைய அருள்தான்" என்று சொல்லிப் போகாதொழிந்தார். பின்னும் ஆசைவளர்தலால் "நாளைக்குப் போவேன்" என்றார். இப்படியே "நாளைக்குப் போவேன் நாளைக்குப் போவேன்" என்று அநேக நாட்கள் கழித்தார். அதனால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும் பெயர் உண்டாயிற்று.

ஒருநாள் அவர் சிதம்பர தரிசனம் பண்ணவேண்டும் என்னும் ஆசை பிடித்துந்துதலால், தம்முடைய ஊரினின்றும் பிரஸ்தானமாகி, சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.

cb.jpg

அத்திருப்பதியைச் சுற்றிய திருமதில்வாயிலிலே புகுந்து, அங்குள்ள பிராமணர்களுடைய வீடுகளிலே ஓமஞ் செய்யப்படுதலைக் கண்டு, உள்ளே போதற்கு அஞ்சி, அங்கே நமஸ்கரித்து அத்திரு வெல்லையை வலஞ்செய்துகொண்டு போவார். இப்படி இராப்பகல் வலஞ் செய்து உள்ளே போகக் கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார் "சபாநாயகரை எப்படித் தரிசிக்கலாம்? இந்த இழிந்த பிறப்பு இதற்குத் தடைசெய்கின்றதே! என்று துக்கத்தோடும் நித்திரை செய்தார். சபாநாயகர் அவருடைய வருத்தத்தை நீக்கி அவருக்கு அருள் செய்யத் திருவுளங்கொண்டு, அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி, "நீ இந்தப் பிறப்பு நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து, பிராமணர்களோடும் நம்முடைய சந்நிதானத்தில் வருவாய் என்று அருளிச்செய்து, தில்லைவாழ்ந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி, அந்தத் திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும்படி ஆஞ்ஞாபித்து மறைந்தருளினார். தில்லை வாழந்தணர்கள் எல்லாரும் விழித்தெழுந்து, திருக்கோயிலிலே வந்துகூடி, சபாநாயகர் ஆஞ்ஞாபித்தபடி செய்வோம்" என்று சொல்லி, திருநாளைப்போவாரிடத்திலே சென்று "ஐயரே! சபாநாயகருடைய ஆஞ்ஞையினாலே இப்பொழுது உம்பொருட்டு நெருப்பு வளர்க்கும்படி வந்தோம்" என்றார்கள். அதைக்கேட்ட திருநாளைப்போவார் "அடியேன் உய்ந்தேன்" என்று சொல்லி வணங்கினார். பிராமணர்கள் தென்மதிற்புறத்திலே கோபுரவாயிலுக்கு முன்னே ஒரு குழியிலே நெருப்பு வளர்த்து, அதைத் திருநாளைப் போவாருக்குப் போய்த் தெரிவித்தார்கள். திருநாளைப்போவார் அந்நெருப்புக் குழியை அடைந்து, சபாநாயகருடைய திருவடிகளை மனசிலே தியானம் பண்ணி, அதனை வலஞ்செய்து கும்பிட்டுக்கொண்டு, அதனுள்ளே புகுந்தார். புகுந்த நாயனார் அந்தத் தேகத்தை ஒழித்து, புண்ணிய மயமாகிய பிராமணமுனி வடிவங்கொண்டு உபவீதத்தோடும் சடைமுடியோடும் எழுந்தார். அதுகண்டு தில்லைவாழந்தணர்களும் மற்றைச் சிவபத்தர்களும் அஞ்சலிசெய்து களிப்படைந்தார்கள். திருநாளைப்போவார், அவர்கள் உடன் செல்லச் சென்று கோபுரத்தை அணுகி, அதனை நமஸ்கரித்து எழுந்து, உள்ளே போய் கனகசபையை அடைந்தார். பின் அவரை அங்கு நின்ற பிராமணர் முதலியோர் யாவரும் காணாமையால் ஆச்சரியங்கொண்டு ஸ்தோத்திரஞ் செய்தார்கள். சபாநாயகர் திருநாளைப்போவாருக்குத் தம்முடைய ஸ்ரீபாதங்களைக் கொடுத்தருளினார்.

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்

1. உடல் நாற்றத்தைப் போக்கும்.

விபூதியில் இயற்கையான வாசனை எதுவும் கிடையாது. குளித்து சுத்தமாக இல்லாமல் விபூதியைப் பூசக் கூடாது.

2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.

விபூதிலுள்ள எந்த இரசாயனப் பொருள் கிருமிகளைக் கொல்லும் என்று கூறுங்கள்.

3. தீட்டுக் கழிக்கும்.

பிறந்தால் தீட்டு. இறந்தால் தீட்டு. தீண்டினால் தீட்டு. விபூதிக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று விளக்குவீர்களா ?

4. உடலைச் சுத்தம் செய்யும்.

எப்படி ?

5. வியாதிகளைப் போக்கும்.

என்னென்ன வியாதிகள் ?

6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.

இவற்றில் உங்களுக்கு இன்னும் நம்பிக்கை உண்டா ?

7. முகத்திற்கு அழகைத் தரும்.

விவாதத்திற்குரிய விடயம்.

8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.

எப்படி என்று நிரூபிக்க முடியுமா ?

9. புத்திக் கூர்மையைத் தரும்.

???

10. ஞானத்தை உண்டாக்கும்.

இதுபற்றி எனக்குத் தெரியாது.

11. பாவத்தைப் போக்கும்.

எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு இறுதிக் காலத்தில் விபூதியைப் பூசினால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்துவிடுமா ?

12. பரக்தியைத் தரும்.

பரக்தி என்றால் என்ன ?

Link to comment
Share on other sites

திருநாளைப்போவார் நாயனார் புராண சூசனம்

1. தத்தம் சாதிநெறி கடவாது சிவனை வழிபடுதல்

யாவராயினும், தங்கள் தங்கள் சாதிக்கு விதித்த விதிகடவாது நின்று சிவனை வழிபடின் முத்தி பெறுவர். அவ்விதி கடந்தோர் பயன் பெறார். இத்திருநாளைப்போவார் நாயனார் தாம் முற்பிறப்பில் செய்த புண்ணிய மிகுதியினாலே சிவனிடத்து மெய்யன்பு உடையராகி, தாம் இழிவாகிய புலையர் குலத்திற் பிறந்தமையால் அதற்கு ஏற்பச் சிவனுக்குத் தொண்டு செய்தலே முறைமையாம் என்று சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய ஒருமுகக் கருவிகளுக்கும் மிருதங்கம் முதலிய இருமுகக் கருவிகளுக்கும் தோலும், வாரும், விணைக்கும் யாழுக்கும் நரம்பும், அருச்சனைக்குக் கோரோசனையும் கொடுத்தலும், ஆலயங்களின் திருவாயிற் புறத்திலே நின்றுகொண்டு ஆனந்த மிகுதியினாலே கூத்தாடிப் பாடுதலும் செய்தனர். வாத்தியங்கள் கொடுத்தல் புண்ணியம் என்பது "பொங்குபேரி பொருமுர சம்மிரு - தங்கமோடு திமில்பட காதியுஞ் - சங்கு தாளந் தகுமிசைக் காகளம் - விங்கு சீரொலி வேணுவும் வீணையும்." "சொன்ன வின்னவை சோதிநிலா வணி - மன்ன வற்கு வழங்கிய மாதவ - ரன்ன வன்றனை யொத்தயு தந்தருந் - துன்னுகற்ப மவன்பதி தோய்வரால்" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது "நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும் - விரித்த பானு வயுதம் விரிகதிர் - பொருந்து தேரிற் புலவ ரரம்பையர் - கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி." "துதியுங் கீதமுஞ் சோதிமுன் பத்தியாற் - கெதியி னோதிடக் கேட்டவர் தாவர - மதியில் கீடங் கிருமி வரன்பதி - வதியு மோதினர்க் கென்கொல் வகுப்பதே" எனச் சிவபுண்ணியத் தெளிவிலே கூறுமாற்றால் உணர்க. இவை எல்லாம் தம்மிடத்து இடையறாத மெய்யன்போடு செய்தமையால் அன்றோ; சிவன் திருப்புன்கூரிலே இவர் விரும்பியபடியே தமக்குமுன் உள்ள இடபதேவரை விலகச் செய்து இவருக்குக் காட்சி கொடுத்தருளினார்.

2. சிதம்பர தரிசனம்

சிவஸ்தலங்கள் எல்லா வற்றுள்ளும் சிதம்பரமே மேலானது. அது தில்லைவாழந்தணர் புராணத்துச் சூசனத்தில் விரித்துரைக்கப்பட்டது. இந்த ஸ்தலத்டிற் கனகசபையின் கண்ணே கருணாநிதியாகிய சபாநாயகர் செய்தருளும் ஆனந்த நிருத்தத்தை மெய்யன்போடு தரிசித்தவர் முத்தி பெறுவர்.

அது, "மெய்மைநற் சரியை பத்தி விளங்கிய ஞான மேவா - வெம்மையொப் பவர்க்கு முத்தி யிறையிலி யாகவிட்ட - மும்மைநற் பதிகடம்மின் முளைத்தவர் முடிந்தோர் மூவாச் - செம்மலர்க் கழல்கண்டோர்கள் சிவத்தினைச் சேர்வ ரன்றே. பிறந்தில மாரூர் தன்னிற் பேசிய காசி மேவி - யிறந்தில மிரண்டு முத்தி யின்பமும் பின்ப தாநா - முறைந்திடுந் தில்லை ஞான யோகமார் தான மாமாற் - செறிந்தடி காணச் சீவன் முத்தராய்த் திரியலாமே. தேசமார் மன்ற கன்று சிவகதி தேடியுற்றார் - காசியி லில்லை தில்லை கதிதரு மென்ற ணைந்தாற் - பாசமதகல முத்தி பணித்திடு மென்றா ரென்றா - லீசன தருளிரக்கத் தெல்லையார் சொல்லுவாரே. கன்றம ரன்பாலான்பால் கவர்தருங் கால மேனும் - வென்றிகொ ளம்பு வீழும் வேலையா யினுமி மைப்பிற் - சென்றுறு மமையமேனுந் திருவடி தெளிய நோக்கி - நின்றவர் காண நின்றார் நீள்பவ நீங்கி னாரே. ஆரண வுருவார் தில்லை யம்பல மெய்தப் பெற்றோ - ரோருணர் வாவ ரென்று மொன்றல ரொன்றா ரல்லர் - காரண ராகா ரொத்த கருத்திலர் நிருத்த வின்பப் - பூரண ரவர்கள் வாழும் புவனமும் பொதுவா மன்றே" என்னும் கோயிற் புராணத்து வியாக்கிர பாதமகா முனிவர் இரணியவன்ம சக்கிரவர்த்திக்கு உபதேசித்த பொருளையுடைய திருவிருத்தங்களானும், "பரையிடமா நின்றுமிகு பஞ்சாக் கரத்தா - லுரை யுணர்வுக் கெட்டா வொருவன் - வரைமகடான் - காணும் படியே கருணையுருக் கொண்டாடல் - பேணுபவர்க் குண்டோ பிறப்பு." என்னும் உண்மை விளக்கத் திருவெண்பாவானும் உணர்க.

பல சிவஸ்தலங்களுக்கும் போய் வணங்கித் திருப்பணி செய்தலே தொழிலாகக் கொண்ட இந்நாயனாருக்குச் சிதம்பர தரிசனத்திலே வேட்கை மிக்குற்றது. இவ்வேட்கையின் மிகுதி, அது விளைந்த அன்றிரவு இவருக்கு நித்திரை இன்மையானும்; மற்ற நாள் இவர் தாம் தில்லைக்குச் செல்லில் கோயிலுனுள்ளே புகுதல் தமது சாதிக்கு இயையாது என்பதை நினைந்து, போகாதொழிந்தாராயினும், அவ்வாசை குன்றாது மேன்மேலும் வளர்தல் பற்றி நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று பல நாள் கழித்து, ஆசையை அடக்கல் கூடாமையால் பின் தில்லையின் எல்லையை அடைந்தமையானும்; தெளியப்படும் இவ்வாறு மிக்க ஆசையுடன் சென்றும்; தில்லையினுள்ளே வேதவிதிப்படி ஓமம் செய்யப்படுதலைக் கண்டு, உட்புகாதொழிந்து, இரவு பகல் திருவெல்லையை வலஞ் செய்து வணங்கினமையால், வேதாகம விதிக்கு அஞ்சி, சாதிநெறி கடவாது நின்ற இவரது பெருந்தன்மை துணியப்படும். பின்னும் இவருக்குச் சிதம்பர தரிசனத்தில் ஆசை குன்றாது மேன்மேலும் வளர்ந்தமை பெருவியப்பாமே! இவ்வாறே சிவனிடத்து இடையறாது மேன்மேலும் பெருகும் மெய்யன்பினால் வளர்ந்தோங்கிய ஆசையினாலன்றோ; கருணாநிதியாகிய நடேசர் இவர் கருத்தை முற்றுவித்தருளத் திருவுளங் கொண்டு, தில்லை மூவாயிரரைக் கொண்டு திருமதிற்புறத்த்லே திருவாயிலுக்கு முன் அக்கினி வளர்ப்பித்து, இந்நாயனாரை அதிலே புகுவித்து, இவர் புலை உடம்பை ஒழித்துப் பிராமண முனிவடிவங் கொண்டு எழுந்து, கனகசபையிற் புகுந்து தமது திருவடிகளை வணங்கிக் கொண்டிருக்கும் பொருட்டு அருள் செய்தார். இதனால், சிவன் தம்மை வழிபடும் அடியார்கள் கருத்தை முடித்தருளுவர் என்பது துணியப்படும். "வாயானை மனத்தானை மனத்து ணின்ற கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் றன்னைத் - தூயானைத் தூவெள்ளை யேற்றான் றன்னைச் சுடர்த் திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்ற - தாயானைத் தவமாய தன்மையானைத் தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ் - சேயானைத்ட் தென்கூடற் றிருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேனானே" என்றார் திருநாவுக்கரசுநாயனார். ஆதலால், சிவ புண்ணியங்களை நாம் செய்வது அருமை என்று விரும்பாதொழிதல் குற்றம் என்பதும், இடைவிடாது விரும்பின், சிவனது திருவருளினால் அது முற்றும் என்பதும், இப்பிறப்பின் முற்றாதாயினும் மறுபிறப்பின் முற்றுதல் ஒருதலை என்பதும், தெளிக. "நொந்தபங்கயனை நோக்கி நுடங்குட லளவே யன்றோ - வந்தமில்காலஞ் சேய்த்தன்றதுவுமென் றயரக் கண்டு - மிந்தநீ யிறந்தாற் பேறிங்கென்னென வனந்த னின்றென் - சிந்தையிங் கிதுவாச் செத்துந் திருநடங் காண்பே னென்றான்" எனக் கோயிற் புராணத்திற் கூறியவாற்றானும் உணர்க.

nanaalai_i.jpg

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

திருக்குறிப்புத்தொண்டநாயனா

Link to comment
Share on other sites

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராண சூசனம்

சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தல்

nathiruk_i.jpg

பசுபதியாகிய சிவனே தமக்கு உறவு எனத் துணிந்த மெய்யுணர்வுடையோர் குடும்பத்தோடு கூடி இருப்பினும் உயிர்ச்சார்பு பொருட்சார்புகளினும் சரீரத்தினும் சிறிதும், பற்றுவையாது, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையவராகி, தமது மனம் வாக்குக் காயம் என்னும் மூன்றும் அவருக்குத் திருத்தொண்டு செய்தற்பொருட்டே கிடைத்தமையால், அம்மூன்றையும் அவரது தொண்டிற்கே ஆக்கி ஒழுகுவர். ஆசை அற்றாரே முத்தி பெறுவர் என்பது "மண்ணினுந் தனத்தினு மனைக்கு வாய்த்தநர் - பெண்ணினு மகவினும் பெரிய பேரினுந் - துண்ணென விழைவினைத் துறந்த தூயரே - விண்ண男னு மின்புடன் விளங்கி மேவுவார்." "ஆக்கையிற் றுயர்பெரி தற்ப மின்பமென் - றாக்க疤யை யறவெறுத் தார்வங் கூர்வரே - லாக்கையினநாதியே முத்தனுக்கவ - னாக்கையுந் துயரமு மறுப்பனாணையால்" என்னும் சிவதருமோத்தரச் செய்யுள்களால் உணர்க. மனம் முதலிய மூன்றும் சிவனுக்குத் தொண்டு செய்தற் பொருட்டே கிடைத்தன என்பது "வாழ்த்த வாயு நினைக்க மடநெஞ்சுந் - தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் - சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே - வீழ்த்த வாவினையே னெடுங் காலமே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தான் அறிக. இவ்வாறு ஒழுகும் பெருந்தன்மையினர் சிவனடியாரைச் சிவன் எனவே கண்டு, வணங்கி, அவர் குறிப்பறிந்து, அவருக்குத் தம்மால் இயலும் தொண்டை வழுவாது செய்தலே தமக்குச் செல்வம் எனக் கொள்வர். "சிவநேசர் பாதம் வணங்கிச் சிறக்க - வவரேவல் செய்க வறிந்து" என்னும் சைவசமயநெறித் திருக்குறளானும் உணர்க.

இவ்வாறு பிரபஞ்ச வைராக்கியமும் சிவபத்தியும் உடையராய், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தமையான் மிகச் சிறப்புற்றவர் இத்திருக்குறிப்புத் தொண்டநாயனார். இவர் மனம் முதலிய மூன்றும் சிவன் பணிக்கே ஆக்கினார் என்பது "மண்ணின் மிசை வந்ததற் பின் மனமுதலா யினமூன்று - மண்ணலார் சேவடியின் சார்வாக வணைவிப்பார்" என்பதனாலும், சிவனடியார்களுக்குக் குறிப்பறிந்து தொண்டு செய்தார் என்பது "புண்ணிய மெய்த்தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்று நிலைத் - திண்மையினாற் றிருக்குறிப்புத் தொண்டரெனுஞ் சிறப்பினார்" என்பதனாலும், இங்கே உணர்த்தப்பட்டன. இந்நாயனார், தாம் ஏகாலியராதலின், சிவனடியார்களுக்குச் சிரத்தையோடு வஸ்திரம் ஒலித்துக் கொடுத்தலே முக்கியத் தொண்டாகக் கொண்டனர். இவர் இத்தொண்டைச் சிரத்தையோடு செய்தார் என்பதும், குடும்பத்தோடு கூடியிருந்தும் வாசனை மாண்டு நின்றார் என்பதும், இவர் அடியார் வேடங் கொண்டு வந்த பரமசிவனுக்குத் தாம் குறித்த காலத்தில் கந்தை ஒலித்து உலர்த்திக் கொடுக்க இயலாமையாற் பதைப்புற்று, வஸ்திரங்களைப் புடைக்கும் கற்பாறையிலே தமது தலையை எற்றினமையாலே, செவ்விதிற்றுணியப்படும். இவரது மெய்யன்பினாலாகிய இச்செயற்கருஞ் செயலைத் தரிக்கலாற்றாமையனன்றோ, கிருபா சமுத்திரமாகிய சிவன் அக்கற்பாறையின் பக்கத்திலே தமது திருக்கரத்தைத் தோற்றுவித்து, இவரைப் பிடித்தருளி, பின் இவருக்கு இடபாரூடராய் வெளிப்பட்டு,

siva1.jpg

முத்தி கொடுத்தருளினார். சர்வான்மாக்களும் தம்மாட்டு மெய்யன்பு செய்து உய்தல் வேண்டும் என்னும் பெருங் கருணையினாலன்றோ, சிவன் இவரது அன்பின் செயலை மூவுலகத்திற்கும் அறிவித்தார், ஐயையோ! இது கண்டும், சிவனிடத்தே சிறிதும் அன்பு செய்யாது வாணாளை வீணாளாகப் போக்கும் எம்போலிகளது அறியாமை இருந்தபடி என்னை!

திருச்சிற்றம்பலம்

Link to comment
Share on other sites

21. திருத்தொண்டர் தொகை ஆசிரியர் யார்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

22. நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

அறுபத்து மூவர்.

23. சாத்திரத்தில் தோத்திரம், தோத்திரத்தில் சாத்திரம் என்று கூறப்படும் நூல்கள் எவை?

சாத்திரத்தில் தோத்திரம் - போற்றிப் ப·றொடை

தோத்திரத்தில் சாத்திரம் - திருமந்திரம்

24. மெய்கண்டாருக்கு உபதேசம் செய்தது யார்?

பரஞ்சோதி முனிகள்

25. மெய்கண்டாரின் மாணாக்கர்கள் எத்தனை பேர்?

49. அதில் தலையாய மாணவராக விளங்கியவர் சகல ஆகம பண்டிதர் என்று அழைக்கப்படும் அருள்நந்தி சிவாச்சாரியார். 'துகளறுபோதம்' என்ற நூலை அருளிச் செய்த சிற்றம்பல நாடிகளும் இவர் மாணாக்கரே.

26. சிவஞான போதத்திற்கு காலத்தால் முற்பட்ட சாத்திர நூல்கள் யாவை?

திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார்.

27. அருள்நந்தி சிவம் அருளிச் செய்த நூல்கள் யாவை?

1. சிவஞான சித்தியார்

2. இருபா இருப·து

28. சித்தாந்த அட்டகம் - விளக்குக

பதினான்கு சாத்திரங்களில் உமாபதிசிவம் அருளிச் செய்த நூல்கள். மொத்தம் எட்டு. அந்த எட்டு நூல்களே சித்தாந்த அட்டகம் என வழங்கப்படுகிறது.

1. சிவப்பிரகாசம்

2. திருவருட்பயன்

3. உண்மை நெறி விளக்கம்

4. போற்றிப் ப·றொடை

5. கொடிக்கவி

6. வினா வெண்பா

7. சங்கற்பநிராகரணம்

8. நெஞ்சு விடுதூது

என்பவையே அந்த எட்டு நூல்கள்.

29. ஞானாமிர்தம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

வாகீச முனிவர்

30. வேதங்கள் - குறிப்பு தருக.

வேதம் சிவபிரானால் அருளிச் செய்யப்பட்டது. இது கர்மகாண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகளை உடையது. ரிக், யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்கள் உள்ளன.

Link to comment
Share on other sites

மூன்றாவது

மும்மையாலுலகாண்ட சருக்கம்

சண்டேசுரநாயனார் புராணம்

வேதமலி சேய்ஞ்ஞலூ ரெச்ச தத்தன்

விளங்கியசேய் மறைபயிலும் விசார சன்மர்

கோதனமேய்ப் பவன்கொடுமை பொறாது தாமே

கொண்டுநிரை மண்ணியின்றென் கரையி னீழற்

றாதகியின் மணலிலிங்கத் தான்பா லாட்டத்

தாதைபொறா தவையிடறுந் தாள்கண் மாளக்

காதிமலர்த் தாமமுயர் நாமமுண்ட

கலமகனாம் பதமருளாற் கைக்கொண் டாரே.

சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன் என்பவன் ஒருவன், இருந்தான். அவனுக்கு அவன் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் வேதாங்கங்களையும் சைவாகமங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயர்கள் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்து, தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள்.

பாலியதசையிலே சான்றோர்க்கு உரிய குணத்தை அடைந்திருக்கின்ற அவ்விசாரசருமர், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் அநாதிமலபெத்தர் என்பதும், நமக்கு அம்பல சத்தியைக் கொடுத்து நித்தியமாகிய பேரின்பத்தைத் தரும் பொருட்டுச் சிருட்டிதிதி சம்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்கின்ற பஞ்ச கிருத்தியங்களையும் செய்வாராகிய ஒருபதி உண்டு என்பதும், அப்பதிக்குத் தம்வயத்தராதல், தூயவுடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல்; பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின்பமுடைமை என்னும் எட்டுக்குணங்களும் இன்றியமையாதன என்பதும், அக்குணங்களெல்லாம் உடைய பதி சிவபெருமானே என்பதும், அவர் அத்தொழில் இயற்றுதல் தம்மோடொற்றுமையுடைய சிவசத்தியாலாகும் என்பதும், அதுபற்றி அவ்விருவருமே நமக்குப் பரமபிதா மாதாக்கள் என்பதும், அதனால் அவர்களிடத்தேயே நாம் அன்புசெய்யவேண்டும் என்பதும் அவ்வன்பை மற்றோர் பிறவியில் செய்குவமெனின் அதற்குக் கருவியாய்ச் சிறந்துள்ள இம்மானுடப்பிறவி பெறுதற்கரியது என்பதும், அப்படியாகில் இப்பிறவியிற்றானே இன்னுஞ்சிலநாட் சென்றபின் செய்குவமெனின் இப்பிறவி நீங்குமவதி அறிதற்கரியது என்பதும், அங்ஙனமாகையால் அவ்வன்பு செய்தற்கேயன்றி மற்றொன்றிற்கும் சமயமில்லை என்பதும், அது செய்யுமிடத்தும் நமக்கு ஓர்சாமர்த்தியமுளதெனக் கருதி அதனை முன்னிடாது திருவருளையே முன்னிட்டு நின்று செய்ய வேண்டும் என்பதுமே வேதாகம முதலிய நூல்களெல்லாவற்றானும் துணியப்படும் மெய்ப்பொருள் என்று சந்தேகவிபரீதமறத் துணிந்து கொண்டார். அந்த யதார்த்தமாகிய துணிவு தோன்றவே, அவருக்குச் சிவபெருமானிடத்தே மெய்யன்பு கலைதோறும் வளர்வதாயிற்று.

ஒருநாள் அவர் தம்மொடு அத்தியயனஞ் செய்கின்ற பிள்ளைகளோடும் அவ்வூரவர்களுடைய பசுநிரைகளுடன் கூடிச்சென்றபொழுது, ஓரீற்றுப்பசு ஒன்று மேய்ப்பானாகிய இடையனைக் குத்தப்போயிற்று. அவ்விடையன் சிறிதும் பாவத்துக்கு அஞ்சாமல் அப்பசுவைக் கோலினால் அடித்தான் மெய்யறிவுடைய அவ்விசாரசருமர் அது கண்டு மிகுந்த பதை பதைப்போடும் அவன் சமீபத்திற்சென்று, மகாகோபங்கொண்டு, பின்னும் அடியாதபடி அவனைத் தடுத்து நின்று, பசுக்கள் சிவலோகத்தினின்றும் பூமியில் வந்த வரலாற்றையும், அவைகளின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருத்தலையும், அவை தரும் பஞ்சகவ்வியங்கள் சிவபிரானுக்கு அபிஷேகத் திரவியமாதலையும், சிவசின்னமாகிய விபூதிக்கு மூலம் அவற்றின் சாணமாதலையும் சிந்தித்து, அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்கும்படி விரும்பி, அவ்விடையனை நோக்கி, "இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான்.

விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும், தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார்.

இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பிராமணர்கள் நித்திய ஓமாகுதியின் பொருட்டு விட்டிருக்கின்ற தங்கள் பசுக்கள் விசாரசருமர் மேய்க்கத் தொடங்கியபின் முன்னிலும் அதிகமாகக் கறக்கக்காண்கையால் மிகுந்த சந்தோஷத்தை அடைந்தார்கள். பசுக்கள் எல்லாவகை யுபசரிப்பினாலும் அளவிறந்த களிப்பை அடைந்து, வீட்டிலே கட்டப்பட்டிருக்கின்ற தங்கள் கன்றுகள் பிரிந்தாலும் சிறிதும் வருத்தமுறாதவைகளாகிய, மிகுந்த அன்போடு தங்களைமேய்க்கின்ற விசாரசருமர் சற்றாயினும் பிரிவாராகில் அப்பிரிவாற்றாமல் தாய்போல உருகி, அவர் சமீபத்திலே சென்று கனைத்து, மடிசுரந்து ஒருவர் கறக்காமல் தாமே பால்பொழியும். அது கண்ட விசாரசருமர் அப்பால் பரமசிவனுக்குத் திருமஞ்சனமாந் தகுதியுடைமை நினைந்தார். நினையவே அவருக்குச் சிவார்ச்சனையினிடத்தே பேராசை தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலிருக்கின்ற ஒரு மணற்றிட்டையிலே திருவாத்திமரத்தின் கீழே மணலினாலே ஒரு சிவலிங்கங்குவித்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வகுத்து, திருவாத்திப்பூ முதலிய புஷ்பங்களும் பத்திரமும் பறித்துத் திருப்பூங்கூடையிலிட்டுக்கொ

Link to comment
Share on other sites

சண்டேசுர நாயனார் புராண சூசனம்

1. பசு ஓம்பல்

சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, பத்திரை, சுரபி, சுசீலை, கமனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன.

இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

cow.jpg

இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. அட்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். புலையர்கள் பசுக்களின் சாலையிலே புகுந்தார்களாயின், எண்ணில்லாத காலம் எரிவாய் நரகத்தில் வீழ்ந்து வருந்துவார்கள்; அவர்களுக்கு பரிகாரம் இல்லை, மலட்டுப்பழுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர். இதுகாறும் கூறியவற்றிற் கெல்லாம் பிரமாணம் சிவதருமோத்தரத்துக் கோபுரவியலின் இறுதியிற் காண்க.

இப்பசுமேய்த்தலாகிய உத்தம புண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இச்சண்டேசுர நாயனார். அது, இவர் தாம் ஒரு நாள் இடையன் பசு நிரையினுள்ளே ஒரு பசுவைக் கோலினால் அடிக்கக் கண்டபோது, இரக்கமிகுதியினாலே கோபித்து விலக்கி, பசுக்களின் பெருமையை உள்ளபடி சிந்தித்து உணர்ந்து, அவைகளை அவைகளின் கருத்துக்கு இசைய மேய்த்தலிற் சிறந்த புண்ணியம் இல்லை எனவும் சிவனை வழிபடும் நெறியும் அதுவே எனவும் துணிந்து, அவ்விடையனை அகற்றி, அன்று தொடங்கித் தாமே அந்நிரையை மெய்யன்போடு விதிப்படி மேய்த்தமையாலே தெளியப்படும்.

Link to comment
Share on other sites

2. சிவபூசை

nageswarjyotirlingam1.JPG

ஆன்மாக்களுக்கு ஆணவமாகிய மூலமல காரணத்தினாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என நால்வகைப்படும். அவற்றுள், அண்டசம் முட்டையிற் றோன்றுவன. சுவேதசம் வேர்வையிற்றோன்றுவன. உற்பிச்சம் வித்துக்களை மேற் பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையிற் றோன்றுவன. இவைகளின்விரி எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், மற்றையோனிகள் எல்லாவற்றையும் போகத்தினாலும் பிராயச்சித்தம் முதலியவற்றினாலும் நீக்கி, மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரை ஏறுதல் போலாம். இத்தன்மைத் தாகிய மனிதப் பிறப்பை எடுப்பினும், சாத்திர மணமும் வீசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர்களாய்ப் பிறவாமல், சாத்திரம் வழங்கும் தேசங்களிலும் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், ஈனசாதிகளாய்ப் பிறவாமல் பிராமணர் முதலிய நான்கு வருணத்தாராய்ப் பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், பரசமயங்களில் செல்லாமல் சிவனே பரமபதி என்று தெளிந்து வழிபடும் சைவ சமயத்தைச் சார்தல் இத்துணைத் தென்று கூறலாற்றாத பெரும் புண்ணியமாம். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார். "அண்டசஞ் சுவேத சங்க ளுற்பிச்சஞ் சராயு சத்தோ - டெண்டரு நாலெண் பத்து நான்குநூறாயிரத்தா - லுண்டுபல்யோனி யெல்லா மொழித்து மானுடத்து தித்தல் கண்டிடிற் கடலைக் கையா னீந்தினன் காரி யங்காண். நரர்பயி றேயந் தன்னினான்மறை பயிலா நாட்டில் - விரவுத லொழிந்து தோன்றன் மிக்க புண் ணியந்தா னாகுந் - தரையினிற் கீழை விட்டுத் தவஞ்செய்சா தியினில் வந்து பரசம யங்கட் செல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே. வாழ்வெனுமையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் - தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ்சாரு - மூழ்பெறலரிது சால வுயர் சிவ ஞானத்தாலே - போழிள மதியினானைப் போற்றுவா ரருள் பெற்றாரே." எனவரும்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது. பசுபதியாகிய சிவனை, மனசிலே நினைத்தற்கும், வாக்கினாலே துதித்தற்கும், கைகளினாலே பூசித்தற்கும், கால்களினாலே வலம் வருதற்கும், தலையினாலே வணங்குதற்கும், செவிகளினாலே அவரது புகழைக் கேட்டற்கும், கண்களினாலே அவரது திருமேனியைத் தரிசித்தற்குமாம். மேலுலகத்துள்ள பிரமா விட்டுணு இந்திரன் முதலியோரும் இப்பூமியின் கண்ணே வந்து சிவனைப் பூசிப்பார்கள். ஆதலால் இம்மனித சரீரம் கிடைத்தற்கு அரியது. இச்சரீரம் உள்ளபொழுதே சிவபூசையைப் பண்ணி, மோக்ஷத்தைப் பெறாதொழியில், பின்பு மோக்ஷம் கிடைத்தல் அரிது அரிது! ஆன்மாக்கள் தாம் நல்ல சரீரம் எடுத்தும், இவையெல்லாம் சிறிதும் ஆராயாமல், ஐயையோ! வீணாகத் திரிந்து காலங்கழிக்கும் அறியாமை இருந்தபடி என்னை! "மானுடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காய - மானிடத் தைந்து மாடு, மரன் பணிக்காக வன்றோ - வானிடத் தவரு மண்மேல் வந்த ரன்றனையர்ச் சிப்ப - ரூனெடுத் துழலு மூம ரொன்றையு முணரா ரந்தோ" எனச் சிவஞான சித்தியாரிலும், "கண்ணுதலா லயநோக்குங் கண்களே கண்கள் கறைக்கண்டன் கோயில்புகுங் கால்களே கால்கள் - பெண்னொருபா களைப் பணியுந் தலைகளே தலைகள் பிஞ்ஞகனைப் பூசிக்குங் கைகளே கைகள் - பண்ணவன்றன் சீர்பாடு நன்னாவே நன்னாப் பரன் சரிதை யேகேட்கப் படுஞ்செவியே செவிக - ளண்ணல் பொலங் கழனினைக்கு நெஞ்சமே நெஞ்ச மவனடிக்கீ ழடிமைபுகு மடிமையே யடிமை" எனப் பிரமோத்தர காண்டத்தினும், கூறு மாற்றானும் உணர்க.

nachande_i.jpg

சிவபூசையாவது, புட்பம், திருமஞ்சனம் முதலிய உபகரணங்கள் கொண்டு, ஆத்துமசுத்தி தானசுத்தி திரவியசுத்தி, மந்திரசுத்தி இலிங்கசுத்தி என்னும் பஞ்ச சுத்திகளும் செய்து, சிவலிங்கத்தின் பீடத்திலே சத்தியாதி சத்தி பரியந்த பதுமமாகிய சிவாசனம் பூசித்து, அதன்மேல் இலிங்கத்திலே வித்தியாதேகமாகிய மூர்த்தியை நியாசஞ் செய்து, அவ்வித்தியாதேகத்துக்குச் சீவனாய் உள்ள நிஷ்களரூபமும் ஞானானந்தமயரும் சருவகர்த்தாவும் சர்வ வியாபகருமாகும் பரமசிவனாகிய மூர்த்திமானைத் துவாத சாந்தத்தின் மேலே தியானித்து, முன்னே நியாசஞ் செய்து வித்தியாதேகத்தில் ஆவாகித்து, "சுவாமீ, சருவ சகத்துக்கும் நாதரே; பூசையின் முடிவு எதுவரையுமோ அதுவரையும் நீர் பிரீதியுடன் இவ்விலிங்கத்திலே சாந்நித்தியராய் இரும்." என்று விண்ணப்பம் செய்து, பூசித்து ஸ்தோத்திரம் பிரதக்ஷிணம் நமஸ்காரம் பண்ணி முடித்தலாம். லிங்க என்னும் தாது சித்திரித்தல் என்னும் பொருட்டாதலால், படைத்தல், காத்தல் முதலியவற்றால் உலகத்தைச் சித்திரிப்பதாகிய பரமேசுவரப் பிரபாவமேலிங்கம் எனப்படும். அவ்விலிங்கத்தின் வியத்திஸ்தானமாகிய சைலம் ஸ்பாடிகம் க்ஷணிகம் லோஹஜம் என்பனவும் உபசாரத்தாலே இலிங்கம் எனப்படும். வித்தியாதேகமாவது பஞ்ச கிருத்தியங்களை அதிட்டிக்கும் சத்தியேயாம். மூலமலம் முதலியன இன்மையால், சிவனுக்கு வைந்தவம் முதலிய சரீரம் இன்றிச் சத்தி சரீரம் உண்டாம். அச்சரீரம் பஞ்ச கிருத்திய உபயோகிகளாகிய ஈசானம் முதலிய பஞ்ச மந்திரங்களாலே சிரம் முதலாகக் கற்பிக்கப்படும். சிவன் நிராகார வஸ்துவாகிய தம்மை ஆன்மாக்கள் தியானித்தல் பூசித்தல் கூடாமையால், பத்தர் அனுக்கிரகத்தின் பொருட்டே இச்சத்தி காரியமாகிய கற்பனாசரீரம் கொண்டார் என்க.

இவ்வாறு அன்போடு பூசை செய்யப்படில், கருணாநிதியாகிய சிவன் இலிங்கத்தில் நின்று அப்பூசையை ஏற்று, அதுசெய்தார்க்கு அருள் செய்வர். அது "தாபரசங்க மங்களென்றிரண் டுருவி னின்று - மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளைவைப்ப - னீபரன் றன்னை நெஞ்சி வினைவை யேனிறைந்தபூசை - யாய் பரம்பொருளை நாளு மர்ச்சிநீ யன்பு செய்தே" என்னும் சிவஞானசித்தித் திருவிருத்தத்தால் உணர்க அன்பின்றிச் செய்யப்படும் பூசை பயன்படாமை "நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுகளே - புக்கு நிற்கும்பொன் னார்சடைப் புண்ணியன் - போக்க மிக்கவர் பூவுநீ ருங்கண்டு - நக்கு நிற்ப னவர் தம்மை நாணியே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தானும், "கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன் றெண்ணப் - பொய்யொன்று வஞ்சக தாவொன்று பேசப் புலால் கமழு - மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும் புமியான் - செய்கின்ற பூசை யெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே." என்னும் பட்டணத்துப் பிள்ளையார் வாக்கானும் உணர்க.

இச்சண்டேசுர நாயனார் முற்பிறப்பில் வேதாகமங்களை ஓதி உணர்ந்து, சிவபூசையை விதிவழுவாது செய்தமையாலன்றோ, இப்பிறப்பில் மிகுந்த இளைமைப் பிராயத்திற்றானே சகல சாத்திரப் பொருள்களையும் எளிதின் உணர்ந்து, சிவனே எம்மை உடையவர் என்னும் மெய்யுணர் வினாலே, சிவன்மாட்டு இடையறாது மேன்மேலும் பெருகி வளரும் அத்தியற்புதமாகிய மெய்யன்பே வடிவமாயினார். இவருக்கு வேதாகமங்கள் எல்லாம் முற்பிறப்பின் அறிவுத் தொடர்ச்சியினால் எளிதின் விளங்கின என்பது இங்கே "ஐந்து வருட மலர்க்கணைய வங்க மாறு முடனிறைந்த - சத்த மறைகளுட்படமுன் றலைவர் மொழிந்த வாக மங்கண் - முந்தை யறிவின் றொடர்ச்சியினன் முகைக்கு மலரின் வாசம்போற் - சிந்தை மலர வுடன்மலருஞ் செவ்வியுணர்வு சிறந்ததால்" என்பதனாலும், "குலவு மறையும் பலகலையுங் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த - நிலவு முணர்வின் றிறங்கண்டு நிறுவு மறையோ ரதிசயித்தார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது. ஒருபிறப்பிற் கற்ற கல்வி மறுபிறப்புக்களினும் பயன்படும் என்பது ஒருமைக்கட் டான்கற்ற கல்வியொருவற் - கெழுமையுமேமாப் புடைத்து" என்னும் திருக்குறளானும் உணர்க. இவர் முற்பிறப்பிலே சிவபூசை செய்தவர் என்பது, இங்கே "அங்கண் முன்னை யர்ச்சனையினளவின் றொடர்ச்சி விளையாட்டாப் - பொங்கு மன்பால்" என்பதனால் குறிப்பிக்கப்பட்டது. இவரது அன்பின் முதிர்ச்சி "நடமே புரியுஞ் சேவடியார் நன்மை யுடையா ரெனுமெய்மை - யுடனே தோன்று முணர்வின்க ணொழியா தூறும் வழியின்பின் - கடனே யியல்பாய் முயற்றிவருங் காதன் மேன்மே லெழுங்கருத்தின் - றிடநேர் நிற்குஞ் செம்மலார் திகழுநாளி லாங்கொரு நாள்" என்பதனால் உணர்த்தப்பட்டது. ஆன்மா சிவன் உடைமை என்பது "அநாதி சிவனுடைமை யாலெவையு மாங்கே - யநாதியெனப் பெற்ற வணுவை - யநாதியே - யார்த்ததுயரகல வம்பிகையோ டெவ்விடத்துங் - காத்த வைன்க டனே காண்" என்னும் திருக்களிற்றுப் படியாரானும் உணர்க. இவர் முற்பிறப்பில் விதிவழுவாது செய்த பூசையின் றொடர்ச்சியினாற்றானே, இப்பிறப்பில் மிகுந்த இளமைப் பிராயத்திலே, பசுப்பால் சிவனுக்குத் திருமஞ்சனமாந்தகுதி உடைமையை நினைந்தவுடனே சிவபூசையில் மிக்க ஆசையுடையராய், அதனைச் செய்வாராயினார். அப்பூசை பிறருக்கு விளையாட்டாகத் தோன்றியதாயினும், இடையறாத மெய்யன்பினாலே செய்யப்பட்டமையானன்றோ, உயிர்க்குயிராகிய சிவனுக்கு மிக உவப்பாயிற்று.

இந்நாயனார் சிவனது உண்மையை நினைத்தல் கேட்டல் காண்டல் செய்த பொழுதே கரையிழந்து அன்பினாலே ஒரு பயனும் கருதாது அவ்வன்புதானே தமக்கு இன்பமாகத் தம்மை மறந்து நின்றார் என்பது, இவர் சிவபூசை செய்யும் பொழுது தந்தையாகிய எச்சதத்தன் முதுகிலே பலமுறை அடித்துக் கொடுமொழிகளைக் கூறவும், தாம் அவற்றைச் சிறிதும் அறிந்திலாமையானும், அவன் பாற்குடத்தைக் காலால் இடறிச் சிந்தக் கண்டபோது அவன் தமது தந்தை என்று கண்டும், தமது பரமபிதாவாகிய சிவனுக்கு அபராதம் செய்தமை பற்றி அவன் கால்களைத் துணிந்து, முன் போலவே பூசிக்கப் புகுந்தமையானும், செவ்விதிற் றுணியப்படும். இப்பத்தி யோகத்தால் அன்றோ, உடனே கருணாநிதியாகிய சிவன் இடபாரூடராய் வெளிப்பட்டு, தமது, அருமைத் திருக்கரங்களால் இவரை எடுத்து, "நீ நம் பொருட்டு உன்னைப் பெற்ற பிதாவை வெட்டினாய்; இனி உனக்கு நாமே பிதா" என்று அருளிச் செய்து இவரை அணைத்து, இவருடைய சரீரத்தைத் தடவி உச்சிமோந்து, இவருக்கு அந்தச் சரீரத்திலே தானே தமது சாரூப்பியத்தைக் கொடுத்து, தொண்டர்களுக்கெல்லாம் தலைமையாகிய சண்டேசுர பதத்தில் இருத்தியருளினார். இவர் அச்சரீரத்திற்றானே சிவசாரூப்பியம் பெற்றமை இங்கே "செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப்பெற்ற சிறுவனா - ரங்கண் மாயை யாக்கையின்மே லளவின் றுயர்ந்த சிவமயமாய்ப் - பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமே லயன் முதலாந் - துங்கவமரர் துதிசெய்யச் சூழ்ந்த வொளியிற் றோன்றினார்" என்பதனாலும், "வந்து மிகை செய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவ - ரந்த வுடம்பு தன்னுடனேயரனார் மகனா ராயினார்" என்பதனாலும் உணர்த்தப்பட்டது. சிவஞான சித்தியாருரையிலே "அந்தத் தேகத்திலே தானே சிவசாரூப்பியத்தைப் பெற்றார்" என்றார் சிவாக்கிரயோகிகளும்.

இந்நாயனார், பிராமணனும் தமக்குப் பிதாவும் குருவுமாகிய எச்சதத்தனை மழுவினால் வெட்டியும் பிரமகத்தி பிதிர்கத்தி குருகத்தி என்னும் தோஷங்கள் பொருந்தாது, சிவசாரூப்பியம் பெற்றமை யாது காரணத்தாலெனின்; சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இன்மையானும், இவர் செய்யும் சிவபூசைக்கு எச்சதத்தன் இடையூறு செய்தமை சிவாபராதமாதலானும், இவர் பரமபிதாவும் பரமகுருவுமாகிய சிவனிடத்து உள்ள அன்பு மிகுதியினால் அவர் நிமித்தமே அவ்வெச்சதத்தனை வெட்டினமையானும், தஞ்செயலற்றுச் சிவாதீனமாய் நிற்போர் செய்தது பாதகமாயினும் அதனைச் சிவன் தமது பணியாகவே பண்ணிவிடுவராதலானும் என்க. "அரனடிக் கன்பர் செய்யும் பாவமு மறமதாகும் - பரனடிக்கன்பி லாதார் புண்ணியம் பாவமாகும் - வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி - நரரின畽ற் பாலன் செய்த பாதக நன்மையாய்த்தே." எ-ம். "இவனுலகி லிதமகிதஞ் செய்த வெல்லா மிதமகித மிவனுக்குச் செய்தார்பா லிசையு - மவனிவனாய் நின்றமுறை யேகனாகி யரன் பணியி னின்றிடவு மகலுங் குற்றஞ் - சிவனுமிவன் செய்தி யெல்லா மென்செய்தி யென்றுஞ் செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும் - பவமகல வுடனாகி நின்று கொள்வன் பரிவாற் பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கிவிடுமே." எ-ம். சிவஞானசித்தியாரில் கூறுமாற்றானும் உணர்க. இன்னும், இந்நாயனாரால் இம்மையிலே தண்டிக்கப் பட்டமையால் அன்றோ, எச்சதத்தன் சிவத்துரோகத்தால் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்தாது, தன் சுற்றத்துடன் சிவலோகத்தை அடைந்தான். அகத்திய முனிவருக்கும் இராமருக்கும், தமக்கும் பிறர்க்கும் பெருந் தீங்கு செய்த வில்வலன் வாதாவியையும் இராவணனையும் கொன்றமையாலாகிய பிரம கத்தியைச் சிவபூசையே ஒழித்தமையானும், இச்சண்டேசுர நாயனார் தமது சிவபூசைக்கு இடையூறு செய்தலாகிய சிவாபராதம் கண்ட வழிச் செய்த பிரமகத்தி முதலியன சிவசாரூப்பியம் பயந்தமையானும், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவாபராதத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெளிக.

இச்சண்டேசுரநாயனாரது பெருந்தன்மை "பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை - வேரடைந்து பாய்ந்த தாளை வேர்த்தடிந்தான் றனக்குத் - தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்த தென்னே - சீரடைந்த கோயின் மல்கு சேய்ஞலூர் மேயவனே." எ-ம். "கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல - படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு - முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி - யடி சேர்ந்த வண்ண மறிவார் சொலக் கேட்டு மன்றே." எ-ம். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராலும், "தழைத்ததோ ராத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி - யழைத்தங்கே யாவின் பாலைக் கறந்து கொண்டாட்டக் கண்டு - பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் - குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்டனாரே" எனத் திருநாவுக்கரசு நாயனார்ராலும், "ஏத நன்னில மீரறு வேலி யேயர் கோனுற்ற விரும்பிணி தவிர்த்துக் - கோதனங்களின் பால்கறந்தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற - தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமி சைமலரருள் செயக்கண்டு - பூதவாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம்பொழிற்றிருப் புன்கூரு ளானே" எனச் சுந்தரமூர்த்தி நாயனாராலும், "தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் - சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப வீசன் றிருவருளாற் றேவர்தொழப் - பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" என மாணிக்கவாசக சுவாமிகளாலும், "தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத்தொடுமுடனே - பூதலத் தோர்கள் வணங்கப் பொற் கோயிலும் போனக மும்மருளிச் - சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்கு நாயகமும் - பாதகத்துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே" எனச் சேந்தனாராலும், "பாதகமே யென்றும் பழியென்றும் பாராதே - தாதையை வேதியனைத் தாளிரண்டுஞ் சேதிப்பக் - கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தஞ்செயலாற் றான்" என உய்யவந்த தேவ நாயனாராலும் புகழப்பட்டமை காண்க. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்திலே திருமுகப் பாசுரத்தின் றாற்பரியம் கூறுமிடத்து "கருதுங் கடிசேர்ந்த வெனுந் திருப் பாட்டி லீசர் - மருவும் பெரும்பூசை மறுத்தவர்க் கோறன் முத்தி - தருதன் மையதாதல் சண்டீசர்தஞ்செய்கை தக்கோர் - பெரிதுஞ் சொலக்கேட்டன மென்றனர் பிள்ளை யார்தாம்" என்றார் சேக்கிழார் நாயனார்.

சண்டேசுரர் சிவபூசையின் இறுதியிலே பூசிக்கப்பட்டு, சிவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அன்னம் பானீயம் முதலியனவும் தாம்பூலம் மாலை சந்தனமும் ஆகிய நிருமாலியங்களை ஏற்று, சிவபூசாபலத்தைக் கொடுக்கும் அதிகாரம் உடையவர், இச்சண்டேசுர பூசை செய்யாவழிச் சிவபூசையாற் பயன் இல்லை. அது "சண்டனையர்ச் சித்தவரே சம்புவையர்ச் சித்தபலம் - கொண்டிடுவர் மற்றையர் கொள்ளார்" என்னும் சைவ சமயநெறித் திருக்குறளான் உணர்க. சிலர் ஆன்மார்த்த பூசையிலே சண்டேசுர பூசையை வேண்டாது விலக்குகின்றனர். சைவ சித்தாந்தத்திலே சண்டேசுரரை எவ்விடத்தும் எப்போதும் பூசிக்க என்னும் நியமம் உளது; சண்டேசுர பூசை விலக்கு வாமதந்திரத்தும் தக்ஷிணதந்திரத்துமாம். இது காலோத் தராகமத்திற் கூறப்பட்டது. சிருட்டிகாலத்திற்றோன்றிய சிவாகமங்களிலே சண்டேசுர பூசை விதிக்கப்பட்டதாயின் இந்நாயனாருக்கு முன்னும் சண்டேசுரர் உளர் என்பது பெறப்படுமன்றோவெனின்; சத்தியம் நீ சொல்லியது அட்டவித்தியேசுரர் முதலியோருள் ஒருவர் பரமுத்தியையேனும் தமது பதத்தின் மேலாகிய பதத்தையேனும் அடைய மற்றொருவர் அப்பதத்தை அடைதல் போலவே, இவ்விசாரசருமர் முன்னுள்ள சண்டேசுரரது பதத்தை அடைந்தார் எனக் கொள்கை.

இதுகாறும் கூறியவற்றால், சிவபூசையின் மிக்க புண்ணியமும் சிவத்துரோகத்தின் மிக்க பாவமும் இல்லை என்பது தெள்ளிதிற் பெறப்பட்டது. ஆதலால், இச்சரீரம் உள்ளபொழுதே சிவலிங்கார்ச்சனைக்கு உரியோர்கள் சைவாசாரியரை அடைந்து, சிவதீக்ஷை பெற்று, விதி வழுவாது மெய்யன்போடு சிவபூசை பண்ணுக. சிவலிங்கார்ச்சனைக்கு உரியரல்லாதவர் ஆசாரியரை யடைந்து, தங்கள் தங்கள் அதிகாரானுகுணமாகிய தீக்ஷையைப் பெற்றுக்கொண்டு, தூல லிங்கமாகிய கோபுரத்தையும் தூபியையும் பத்திர புஷ்பங்களாலே பூசித்து, துதித்து, வலஞ் செய்து வணங்குக. அது "உயர்ந்தகுலத் தோருட் பழுதுறுப்பி னோரு - முயர்ந்தாரை யல்லாதாரும். குறித்து மறுமை குரவன் பதத்தைக் - குறித்த வன்செய் தீக்கைதகக் கொண்டு குறித்துச் சிவனெனக் கோபுரத்தைப் பூவும் - பறித்தருச்சித் தேத்து கபாங் கால்" எனச் சைவ சமயநெறியினும்," தூபியினைக் கோபுரத்தை யீசனெனக் கண்டுதொழு - பாபமறும் வாய்த்துறுமின் பம்" என வருத்தமறவுய்யும் வழியினும், கூறுமாற்றானும் உணர்க. தங்கள் தங்கள் வருணத்திற்கு அருகமாகிய ஓருருவினிடத்தே உயிர்க்குறவாகிய சிவனைப் பூசை செய்யாதவர்களுக்கு ஒரு துணையும் இல்லை. அது "தமக்கருக மோருருவிற் பூசை சமையார் - தமக்க疓த் துணையாதோ தான்" என்னும் சைவ சமயநெறித் திருக்குறளால் அறிக. சிவபூசை பண்ணாதார் இழிவு "திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீறணியாத திருவி லூரும் - பருக்珗ோடிப் பத்திமையாற் பாடாவூரும் பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும் - விருப்பொடு வெண்சங்க மூதாவூரும் விதானமும் வெண் கொடியு மில்லாவூரு - மருப்போடு மலர்பறித்திட் டுண்ணாவூரு மவையெல்லா மூரல்ல வடவி காடே" "திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகிற் றீவண்ணர் திறமொருகாற் பேசாராகி - லொருகாலுந் திருக்கோயில் சூழா ராகி லுண்பதன் முன் மலர்பறித்திட்டுண்ணா ராகி - லருநோய்கள் கெடவெண்ணீ றணியாராகி லியற்றார் பிறந்தவாறேதோ வென்னிற் - பெருநோய்கண் மிகநலியப் பேர்த்துஞ் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி யிறக்கின்றாரே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களால் உணர்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.