Jump to content

“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம்

 

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது.

11.jpg

பாவனையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக் கலை தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களைமாற்றியமைக்கும் வகையில், HUAWEI P30 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான உயஅநசயவையும் கொண்டுள்ளதுடன், HUAWEIஇன் உலகின் முதலாவது SuperSpectrum சென்சர் , SuperSpectrum மற்றும் புதிய மட்டத்தில் SuperSpectrum அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் 32MP முன்புற உயஅநசய ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Huawei இன் புதிய சாதனம் அறிமுக நிகழ்வில், Huawei சாதனங்களுக்கான இலங்கைக்கான தலைமை அதிகாரி பீற்றர் லியு கருத்துத் தெரிவிக்கையில், “எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் புத்தாக்கத்தினூடாக சிறந்த ஸ்மார்ட்ஃபோன் சாதனங்களை Huawei தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. Huawei P தெரிவுகளில் புதிய உள்ளடக்கமாக Huawei P30 Pro  அமைந்துள்ளது. உலகின் முதலாவது Huawei P30 Pro சென்சர், புதிய HUAWEI Time of Flight (ToF) Camera மற்றும் மேம்படுத்தப்பட்ட optical மற்றும் AI image stabilization தொழில்நுட்பம் போன்ற பல புதிய உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த புரட்சிகரமான தொழில்நுட்பங்களுடன், optical kw;Wk; AI image stabilization இனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிறந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொள்ள முடியும்.

1/1.7-அங்குல HUAWEI SuperSpectrum  சென்சர், வெளிச்சத்தை முற்றிலும் மாறுபட்டவிதத்தில் பார்வையிடுவதுடன், பரந்தளவு நிலைகள் மற்றும் ஒளி காணப்படும் சூழலில், மிகச்சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும். குறிப்பாக மிகவும் குறைந்த ஒளி காணப்படும் பகுதிகளில் கூட, தெளிவான, வர்ணமயமான படங்களை எடுத்துக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.

புதிய HUAWEI SuperSpectrum  வடிவமைப்பினூடாக, HUAWEI SuperSpectrum லென்ஸ்கள், 5 மடங்கு HUAWEI SuperSpectrum 10 மடங்கு HUAWEI SuperSpectrum மற்றும் 50 மடங்கு digital zoom போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும். HUAWEI P30 Pro இல் காணப்படும் பிரத்தியேகமான உள்ளம்சம் யாதெனில் HUAWEI ToF (Time of Flight) Camera ஆகும். இதனூடாக, ஆழமான தகவல்கள் உள்வாங்கப்பட்டு, துல்லியமான புகைப்பட வகைப்படுத்தல் வழங்கப்படுகிறது. HUAWEI ToF (Time of Flight) Camera உள்ளம்சத்தினால், கூந்தல் போன்ற மிகவும் நுண்ணியளவிலான அம்சங்களும் உள்வாங்கப்படுகின்றன. AI HDR+ ஊடாக, முன்புற மற்றும் பின்புற cameraகளுக்கு ஒன்றிணைந்து ஒன்றுக்கு மேற்பட்ட புகைப்படங்களை துரித கதியில்எடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளன. இதனூடாக அளவுக்கதிகமாக படங்கள் ஆட்டம் கண்டு தெளிவற்றிருப்பது தவிர்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்புகள் நிறைந்த வீடியோக் கலைஞர்களுக்கு உதவும் வகையில், HUAWEI SuperSpectrum சென்சர் மூலமாக குறைந்த ஒளியில் சிறந்த வீடியோக்களை எடுத்துக் கொள்ள முடியும். இதனூடாக இரவு வேளைகளில் எடுக்கப்படும் படங்கள் பிரகாசமானவையாகவும், அதிகளவு தெளிவானவையாகவும் அமைந்திருக்கும். HUAWEI AIS மற்றும் OIS அம்சத்தினூடாக சகல வீடியோ பதிவுகளுக்கும் தெளிவான அம்சம் சேர்க்கப்படுகிறது. மேலும் SuperZoom லென்ஸ் ஊடாக நெருக்கமாக படங்களை எடுக்க முடியும் என்பதுடன், AI Video Editor மூலமாக பாவனையாளர்களுக்கு தமது வீடியோக்களுக்கு பின்புல இசை மற்றும் விசேட effects போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியும். HUAWEI P30 தெரிவுகள் மொபைல் புரொடக்ஷன் ஸ்டுடியோ ஆக அமைந்துள்ளன.

P30 Pro இல் காணப்படும் HUAWEI Dual-View வீடியோ ஊடாக, ஒன்றுக்கு மேற்பட்ட கமராக்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தி, ஒரே காட்சியை இரு தோற்றங்களில் படமெடுக்க முடியும். HUAWEI P30 தெரிவுகள் காட்சியின் முழுத் தோற்றத்தையும் வழங்குவதுடன், பொருள் ஒன்றை நெருக்கமாக படமெடுத்துக் கொள்கின்றது.இதனூடாக வீடியோ அம்சத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

12.jpg

6.47 அங்குல  HUAWEI P30 Pro மற்றும் 6.1 அங்குல HUAWEI P30 ஆகியன Breathing Crystal, Aurora Blue மற்றும் கறுப்பு ஆகிய வர்ணங்களில் கிடைக்கின்றன. FHD+ (2340x1080) Dewdrop டிஸ்பிளேயில் மிகவும் சிறிய முனைவு (notch) பகுதி காணப்படுகிறது. இதனூடாக பெருமளவு காட்சி பகுதி வழங்கப்படுகிறது. பெருமளவு bezel-less முன்புற கிளாஸில் தொடுதிரை கைரேகை உணரி உள்ளடங்கியுள்ளது. இதனூடாக துரிதமாக மற்றும் பாதுகாப்பான சாதன அன்லொக் வசதி வழங்கப்படுகிறது. HUAWEI P30 Pro இல் HUAWEI Acoustic தொழில்நுட்பம் அடங்கியுள்ளது. இதனூடாக உயர் தரம் வாய்ந்த ஓடியோக்களை sound emitting display மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

HUAWEI P30 தெரிவுகள் 7nm Kirin 980 processor இனால் வலுவூட்டப்பட்டுள்ளன. இதனூடாக சிறந்த வினைத்திறன் வழங்கப்படுவதுடன், உயர் செயற்திறன் மற்றும் அதன் Dual-NPU AI செயற்பாட்டு வலுவினூடாக வேகமான புகைப்பட இனங்காணல் போன்றன வழங்கப்படுகின்றன. இதில் Extendable Read-Only File System (EROFS) காணப்படுகிறது. இதனூடாக, கட்டமைப்பு ஏற்புத்தன்மை (System Responsiveness) மேம்படுத்தப்படுகிறது. பிந்திய EMUI 9.1 ஊடாக, ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லப்டொப்களிடையே தரவுகளை பரிமாறிக் கொள்வதற்கு HUAWEI Share OneHop வழங்கப்படுகிறது.

HUAWEI P30 Pro 4200 இல் 4200mAh battery (typical value) மற்றும் 40W HUAWEI SuperCharge போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக சாதனத்தை 30 நிமிடங்களில் 70 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். நாள் முழுவதும் கடுமையான பாவனையிலும் சாதனத்துக்கு வலுவூட்டிய வண்ணம் பேண உதவுகின்றது. இதில் காணப்படும் HUAWEI SuperCool தொழில்நுட்பத்தினூடாக, கடுமையான பாவனைகளின் போதும் தொலைபேசியை வெப்பமடையாமல் பேண முடியும். உயர் வயர்லஸ் தொடர்பாடல் ஆற்றலைக் கொண்டதாக இந்த சாதனம் அமைந்துள்ளது. இரட்டை SIM மற்றும் Dual VoLTE இணைப்புத்திறனை வழங்கக்கூடியது.

13.jpg

Huawei P30 Pro இன் விலை ரூ. 179,999 ஆக அமைந்தள்ளதுடன், இலங் கையின் பாவனையாளர்களுக்கு 8GB Ram மற்றும்  256GB ROM போன்ற அளவுகளில் கிடைக்கும். ஒருவருட உத்தரவாதம் வழங்கப்படும் என்பதுடன், நாடு முழுவதிலும் காணப்படும் சகல rfy Huawei Experience சென்ரர்களிலும், சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி போன்றவற்றினூடாகவும் நாடு முழுவதிலும் விநியோகிக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட டயலொக் மற்றும் மொபிடெல் விற்பனை நிலையங்களிலும் இந்த புதிய சாதனத்தை கொள்வனவு செய்ய முடியும்.

 

http://www.virakesari.lk/article/53272

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா..!  vil-bah.gif

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் நான் வாங்கிய ஹூவாய் P20 ப்ரோ விற்கும், இந்த ஹூவாய் P30 ப்ரோவிற்கும் அதிக வித்தியாசமில்லை..!

இதில் நான்கு கேமெராவும், மெமரி கார்ட் ஸ்லாட்டும், வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் கூடுதல் வசதியாக உள்ளது.

இவர்கள் கூறும் இந்த வசதிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவோமா என்பது கேள்விக்குறியே. இது சந்தைப்படுத்துதலின் உத்தி, பயனர்களை ஒவ்வொரு வருடமும் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப வாசகங்களைக் கூறி தன் பக்கம் இழுக்கும் மாய யுக்தி.

இதில் மயங்கினால், காசுதான் கரியாகும்..! கைபேசிகளை சந்தையில் மறுபடியும் விற்க பெறுமதியும் (Resale Value)கிடையாது.

ஒரு கைப்பேசி வாங்கினால் குறைந்தது 7 வருடங்களாவது பயன்படுத்தும் வகையில் நம் மனதை தெளிவுடன் உறுதியாக இருந்தால் இவர்களின் சந்தை படுத்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ராசவன்னியன் said:

அட போங்கப்பா..!  vil-bah.gif

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் நான் வாங்கிய ஹூவாய் P20 ப்ரோ விற்கும், இந்த ஹூவாய் P30 ப்ரோவிற்கும் அதிக வித்தியாசமில்லை..!

இதில் நான்கு கேமெராவும், மெமரி கார்ட் ஸ்லாட்டும், வயர்லெஸ் சார்ஜிங் மட்டும் கூடுதல் வசதியாக உள்ளது.

இவர்கள் கூறும் இந்த வசதிகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவோமா என்பது கேள்விக்குறியே. இது சந்தைப்படுத்துதலின் உத்தி, பயனர்களை ஒவ்வொரு வருடமும் கவர்ச்சிகரமான தொழிற்நுட்ப வாசகங்களைக் கூறி தன் பக்கம் இழுக்கும் மாய யுக்தி.

இதில் மயங்கினால், காசுதான் கரியாகும்..! கைபேசிகளை சந்தையில் மறுபடியும் விற்க பெறுமதியும் (Resale Value)கிடையாது.

ஒரு கைப்பேசி வாங்கினால் குறைந்தது 7 வருடங்களாவது பயன்படுத்தும் வகையில் நம் மனதை தெளிவுடன் உறுதியாக இருந்தால் இவர்களின் சந்தை படுத்துவிடும்.

Huawei P20 Pro வாங்குமுன் வைத்திருந்த கை தொலைபேசியை எப்போ வாங்கினீர்கள்?😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Eppothum Thamizhan said:

Huawei P20 Pro வாங்குமுன் வைத்திருந்த கை தொலைபேசியை எப்போ வாங்கினீர்கள்?😜

அதற்கு முன் 2002ல் நோக்கியா 8850.. 

அதன் பின்னர் சாம்சுங் கேலக்ஸி 2012  😋 

சாம்சுங் காலக்ஸி திடீரென உயிரை விட்டுவிட்டது. வேறு வழியின்றி சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்றால் "இன்னமுமா இதை உபயோகப்படுதுகிறீர்கள்..? சார், நீங்கள் இப்படியிருந்தால் நாங்கள் எப்படி பொழைப்பை ஓட்டுவது..?" என சிரித்தார், வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி. 

காரணம் கேட்டால், "மதர் போர்டு போச்சுது,  நீங்கள் வேறு கைப்பேசிதான் வாங்க வேண்டுமென"க் கூறிவிட்டார்.

அந்த பழுதான கைப்பேசியை இன்னமும் வைத்துள்ளேன், பொழுது போகவில்லை என்றால் அதை பிரித்து மேய்வதுதான் வேலை..!   :)

   Nokia-8855-02.jpg 41exDZBI2KL.jpg

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.