Jump to content

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு….

April 8, 2019

lasantha-gotta-sarath-mahi.jpg?resize=80முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  படுகொலைச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகளே இவ்வாறு கோத்தாபய ராஜபக்ஸவுக்கெதிராக சிவில் வழக்கொன்றை அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள கோத்தாபய எதிர்வரும் 12 ஆம் திகதி வரையிலும் அங்கு தங்கியிருப்பார் என்னும் நிலையில் மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://globaltamilnews.net/2019/117836/

Link to comment
Share on other sites

என்னுடைய வாழ்வு இலங்கைச் சிறையில் முடியுமென இறுமாப்பாக சொன்ன தலைவரே நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

என்னுடைய வாழ்வு இலங்கைச் சிறையில் முடியுமென இறுமாப்பாக சொன்ன தலைவரே நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக என வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு வெள்ளை வானை அனுப்பவில்லை என்ற பெரும் நன்றியோட இருக்க வேண்டும் கவிஞரே. ஒரு காண்டாமிருகத்தின் வாயில் சிக்கி, தப்பி வந்து இருக்கிறீர்கள்.

இவரது ஜனாதிபதி கனவு, கனவாகவே போக ஆப்பு இறுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை நீக்க மனு, இந்த வழக்கு தீரும் வரை, நகராது.  

அதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

ஒரு காண்டாமிருகத்தின் வாயில்

காண்டாமிருகம் அப்பிராணி. அது தாவரங்களை உண்ணும்.

இந்த மாதிரி நரமாமிசம் திண்ணும் சிங்களப் பேரின இனப்படுகொலை.. போர்க்குற்ற.. அரச பயங்கரவாதிகளை காண்டாமிருகத்துடன் ஒப்பிடுவது தவறு.

இந்தக் கொடூரனின் அழிவில் மனித குலம்.. ஒரு நிம்மதிப் பெருமூச்சுவிடும்.. அந்தளவுக்கு இந்தப் பிசாசு.. மனித இனத்தை கொன்று வேட்டையாடியுள்ளது. இந்த பிசாசின் உச்சத்தாண்டவத்தின்.. 10 வருடங்கள் கழிந்தும்.. அந்த வடு ஆறவில்லை. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்

கோத்தபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையின் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இருவேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா இந்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா - கலிஃபோர்னியா நீதிமன்றமொன்றில் சிவில் வழக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் இளைஞர் ஒருவரும், அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.

கனடா பிரஜையான ரோயி சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சித்தி ரவத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோத்தபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சுமத்தியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷஅமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலிஃபோனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கோத்தபய ராஜபக்ஷவை தனியார் விசாரணை குழுவொன்றின் மூலம் கண்டறிந்து, இந்த அறிவித்தலை கையளித்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்றால், தனது அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஷ்மின் சூகா, அவரை விசாரணையில் சிக்க வைக்கும் இறுதித் தருணம் இதுவெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47859882

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு வெள்ளை வானை அனுப்பவில்லை என்ற பெரும் நன்றியோட இருக்க வேண்டும் கவிஞரே. ஒரு காண்டாமிருகத்தின் வாயில் சிக்கி, தப்பி வந்து இருக்கிறீர்கள்.

இவரது ஜனாதிபதி கனவு, கனவாகவே போக ஆப்பு இறுக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை நீக்க மனு, இந்த வழக்கு தீரும் வரை, நகராது.  

அதற்கு முன்னதாக, இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிந்துவிடும்.

கேட்க... எவ்வளவு, சந்தோசமாக இருக்கின்றது.
அது நடந்தால்... நாதமுனியரின் வாயில் சர்க்கரை போட வேணும். :)

மகிந்தவின் பாரியாரும்... இவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த சம்மதம் இல்லையாம்.
அப்படி இவர் ஜனாதிபதியாக வந்தால், மகிந்த ஓரம் கட்டப்  படுவார் என்று பயப்படுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

யாழ் குடும்ப உறவுகள் நாதமுனி, நெடுக்காலபோவான், தமிழ்சிறி அனைவருக்கும் நன்றியும் அன்பும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயவிற்கு எதிராக ஏன் வழக்கு - பீரிஸ் கருத்து

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே அவரிற்கு எதிராக  அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கப்பட்டுள்ள என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் மேற்கொள்கின்ற போதிலும்  லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  பத்து வருடங்களிற்கு பின்னரே  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

gotabayaaaaaaaa.jpg

உள்நோக்கம் கொண்டவர்கள் நீதித்துறையை பயன்படுத்துகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

http://www.virakesari.lk/article/53649

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா பயங்கரமான சித்திரவதைகளை கண்முன்னே நிகழ்த்தினார் – பரபரப்புத் தகவல்

 

 

கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தமிழ் இளைஞர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரமான சித்திரவதைகளை தனது கண்முன்னே கோட்டா நிகழ்த்தினார் என றோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுபவர்களில் சிலர் எரியூட்டப்பட்டனர் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது தமிழரான றோய் சமாதானம் அமெரிக்காவில் வழக்கினைத் தொடர்ந்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

 

http://athavannews.com/கோட்டா-பயங்கரமான-சித்திர/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.