Jump to content

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 30 வருடங்களாக தென்கிழக்கு கரையோர மாவட்டமும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துடன் சேர்த்து பரணில் கிடக்கிறது.  கல்முனை அப்பமல்ல. மாகாணசபை தேர்தல் பதவிகள் என்கிற கிழக்குமாகாண அப்பக்கடையை பங்கிடுவதுதான் குரங்குகளின் நோக்கம். 
.
இத்தகைய ’போர்கால மோதல் சூழலுக்கு நேர் எதிரான’ ஒரு கிழக்கு மாகாண பனீப்போர் சூழல் இறுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் இரு சாராரது நலன்களையும் எதிர்காலத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும். கல்முனைகுடி மக்கள் தங்கள் நிலைபாடு தொடர்பாக தனிமைபடுதல் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் நிகழ்ந்தால் புறக்கணிக்க முடியும். ஆனால் சம்மாந்துறை மாளிகைக்காடு நாவிதன் வெளி போன்ற அயல் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனிமைபடுகிற சூழலை புறக்கணிக்க முடியும் என தோன்றவில்லை.கல்முனை அப்பம் மட்டுமல்ல கிழக்குமாகாண அப்பக்கடையும் தமிழ் தலைமைக்கு மட்டுமல்ல முஸ்லிம் தலைமைக்கும் முக்கியம் இதனால் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் இப்பிரச்சினையில் கல்முனை குடி நிலைபாடு சிக்கலை ஏற்படுத்தவே செய்யும். இதனை கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் விவாதிக்க வேண்டும். . 
.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பிரச்சினை முன்னைப்போலன்றி இன்று எல்லைப்புற அச்சங்களிலேயே தொக்கி நிற்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தீர்வுக்குத் தடையாக மேம்படும் அச்சம்கல்முனைகுடி மக்கள் மத்தியில் உள்ள அச்சம் இடைப்பட்ட அரச நிலங்கள் பற்றியதாகும். எல்லையோர பொது நிலங்கள் தொடர்பான கல்முனைகுடி முஸ்லிம் மக்களின் அச்சத்தை தீர்பதற்க்கு சாத்தியமான குறைந்த பட்ச்ச குடுக்கல் வாங்கல் அடிப்படையிலான விட்டுக்கொடுப்புகள் அவசியப்படலாம். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்தல் பிரச்சினைக்கு தீர்வுகாண கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் ஒத்துழைக்கும் சூழலில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் அடிப்படையில் தமிழர்களும் சாத்தியமான எல்லாவறையும் செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை மக்கள் ஒத்துக்கொண்டாலும் அரசியல் வாதிகள் பாராளுமனறத்தில் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக ஆற்றிய உரையை நீங்கள் கேட்கவில்லை போல மற்றது கல்முனையில் இயங்குவது சட்டவிரோத பிரதேச செயலகமாம் அதை தரமுயர்த்தக்கூடாது என மூஸ்லீம்கள் நோட்டீஸ் வெளியீட்டு இருக்கிறார்கள் கிடைத்ததும்  இணைக்கிறேன் .

மக்களை அரசியல் வாதிகள் கல்முனையை வைத்துகாய் நல்லா நகர்த்துகிறார்கள்  கோடிஸ்வரன் ,ஹரிஸ் மன்சூர் ம்  ஹக்கீம் போன்றவர்கள் 

Link to comment
Share on other sites

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, poet said:

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் கிழக்கு மாகாணம் நான் வசிக்கும் மாகாணம் என்பதால் சொல்கிறேன் அரசியலாலும் முள்ளில் விழுந்த சேலையை எடுக்க முடியாது  ஏனென்றால் அரசியல் அதை இன்னும் கிழிக்கத்தான் செய்கிறதே தவிர அந்த  சீலையை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முனைப்பு காட்டவில்லை அப்படி எடுக்க அரசியலில் தெம்பு இல்லை கிழக்கு அரசியல் வாதிகளுக்கு .

Link to comment
Share on other sites

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, poet said:

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

ம்ம் நான் கிழக்கு அதுவும் அம்பாறை என்றால் நம்புவீர்களா கல்முனை பக்கம் தான் அதனால் தான் சொன்னது மற்றும் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லை அது கிழக்கிலும் சரி வடக்கிலும் சரி சுயநல வாதிகள் 

Link to comment
Share on other sites

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

ஹாஹா அதே ஒவ்வொரு ஊருக்கு ஒரு வரலாறே உள்ளது ஆனால் அவை தற்போது கனபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அவை அழிக்கப்பட்டு விட்டது எனலாம் 

Link to comment
Share on other sites

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, poet said:

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

தற்போது கன ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விட்டது நீங்கள் அறிவீர்கள் தானே ஏன் சின்ன உதாரணம் எனது வீதி கூட யாரோ ஒரு வெள்ளைக்காரனின் பெயர் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்கோவன்.......... அந்த பெயருக்கு முன் எங்கள் வீதியின் பெயரோ சுத்த தமிழ் பெயர்

வடகிழக்கில் நிறைய ஊர்கள் பெயர்கள் மாற்றத்துக்கு காத்துக்கொண்டுதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

அப்படி பிரதேச சபை அல்ல பிரதேச செயலகம் கல்முனை மாநகரத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமான பிரச்சனை அது ஏராளன் அரசியலுக்குள் கிடந்து புரள்கிறது 

Link to comment
Share on other sites

On 4/9/2019 at 3:29 AM, poet said:
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

வழக்கும் போடப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எதுவும் விட்டுக்கொடுக்க கூட தயாரில்லை உரிமை இருந்தும் நந்தி ஐயாவின் காலத்தில் அவருக்கு நல்ல நண்பர்கள்  இருந்திருக்கலாம் அதனால் சொல்கிறார் என்னவோ தெரியல ஆனால் ஹரிஸ் சாய்ந்தமருது தனி பிரதேச செயலகம் கேட்ட போதும் கூட கொடுக்கல  காரணம் கல்முனை தமிழர்கள் கையில் போய்விடும் என்பதற்க்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ் மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கேட்க அதாவது நடைபவனி மூலம் 21.04.0219 அன்று கோரவுள்ளார்கள் அதற்கு முஸ்லீம் தரப்பினரது பிரசுரம் ஒன்று 

 

இதற்கு பொயட் ஐயா என்ன சொல்ல போகிறார்

No photo description available.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.