Jump to content

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 30 வருடங்களாக தென்கிழக்கு கரையோர மாவட்டமும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துடன் சேர்த்து பரணில் கிடக்கிறது.  கல்முனை அப்பமல்ல. மாகாணசபை தேர்தல் பதவிகள் என்கிற கிழக்குமாகாண அப்பக்கடையை பங்கிடுவதுதான் குரங்குகளின் நோக்கம். 
.
இத்தகைய ’போர்கால மோதல் சூழலுக்கு நேர் எதிரான’ ஒரு கிழக்கு மாகாண பனீப்போர் சூழல் இறுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் இரு சாராரது நலன்களையும் எதிர்காலத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும். கல்முனைகுடி மக்கள் தங்கள் நிலைபாடு தொடர்பாக தனிமைபடுதல் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் நிகழ்ந்தால் புறக்கணிக்க முடியும். ஆனால் சம்மாந்துறை மாளிகைக்காடு நாவிதன் வெளி போன்ற அயல் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனிமைபடுகிற சூழலை புறக்கணிக்க முடியும் என தோன்றவில்லை.கல்முனை அப்பம் மட்டுமல்ல கிழக்குமாகாண அப்பக்கடையும் தமிழ் தலைமைக்கு மட்டுமல்ல முஸ்லிம் தலைமைக்கும் முக்கியம் இதனால் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் இப்பிரச்சினையில் கல்முனை குடி நிலைபாடு சிக்கலை ஏற்படுத்தவே செய்யும். இதனை கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் விவாதிக்க வேண்டும். . 
.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பிரச்சினை முன்னைப்போலன்றி இன்று எல்லைப்புற அச்சங்களிலேயே தொக்கி நிற்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தீர்வுக்குத் தடையாக மேம்படும் அச்சம்கல்முனைகுடி மக்கள் மத்தியில் உள்ள அச்சம் இடைப்பட்ட அரச நிலங்கள் பற்றியதாகும். எல்லையோர பொது நிலங்கள் தொடர்பான கல்முனைகுடி முஸ்லிம் மக்களின் அச்சத்தை தீர்பதற்க்கு சாத்தியமான குறைந்த பட்ச்ச குடுக்கல் வாங்கல் அடிப்படையிலான விட்டுக்கொடுப்புகள் அவசியப்படலாம். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்தல் பிரச்சினைக்கு தீர்வுகாண கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் ஒத்துழைக்கும் சூழலில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் அடிப்படையில் தமிழர்களும் சாத்தியமான எல்லாவறையும் செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை மக்கள் ஒத்துக்கொண்டாலும் அரசியல் வாதிகள் பாராளுமனறத்தில் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக ஆற்றிய உரையை நீங்கள் கேட்கவில்லை போல மற்றது கல்முனையில் இயங்குவது சட்டவிரோத பிரதேச செயலகமாம் அதை தரமுயர்த்தக்கூடாது என மூஸ்லீம்கள் நோட்டீஸ் வெளியீட்டு இருக்கிறார்கள் கிடைத்ததும்  இணைக்கிறேன் .

மக்களை அரசியல் வாதிகள் கல்முனையை வைத்துகாய் நல்லா நகர்த்துகிறார்கள்  கோடிஸ்வரன் ,ஹரிஸ் மன்சூர் ம்  ஹக்கீம் போன்றவர்கள் 

Link to comment
Share on other sites

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, poet said:

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் கிழக்கு மாகாணம் நான் வசிக்கும் மாகாணம் என்பதால் சொல்கிறேன் அரசியலாலும் முள்ளில் விழுந்த சேலையை எடுக்க முடியாது  ஏனென்றால் அரசியல் அதை இன்னும் கிழிக்கத்தான் செய்கிறதே தவிர அந்த  சீலையை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முனைப்பு காட்டவில்லை அப்படி எடுக்க அரசியலில் தெம்பு இல்லை கிழக்கு அரசியல் வாதிகளுக்கு .

Link to comment
Share on other sites

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, poet said:

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

ம்ம் நான் கிழக்கு அதுவும் அம்பாறை என்றால் நம்புவீர்களா கல்முனை பக்கம் தான் அதனால் தான் சொன்னது மற்றும் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லை அது கிழக்கிலும் சரி வடக்கிலும் சரி சுயநல வாதிகள் 

Link to comment
Share on other sites

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

ஹாஹா அதே ஒவ்வொரு ஊருக்கு ஒரு வரலாறே உள்ளது ஆனால் அவை தற்போது கனபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அவை அழிக்கப்பட்டு விட்டது எனலாம் 

Link to comment
Share on other sites

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, poet said:

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

தற்போது கன ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விட்டது நீங்கள் அறிவீர்கள் தானே ஏன் சின்ன உதாரணம் எனது வீதி கூட யாரோ ஒரு வெள்ளைக்காரனின் பெயர் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்கோவன்.......... அந்த பெயருக்கு முன் எங்கள் வீதியின் பெயரோ சுத்த தமிழ் பெயர்

வடகிழக்கில் நிறைய ஊர்கள் பெயர்கள் மாற்றத்துக்கு காத்துக்கொண்டுதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

அப்படி பிரதேச சபை அல்ல பிரதேச செயலகம் கல்முனை மாநகரத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமான பிரச்சனை அது ஏராளன் அரசியலுக்குள் கிடந்து புரள்கிறது 

Link to comment
Share on other sites

On 4/9/2019 at 3:29 AM, poet said:
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

வழக்கும் போடப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எதுவும் விட்டுக்கொடுக்க கூட தயாரில்லை உரிமை இருந்தும் நந்தி ஐயாவின் காலத்தில் அவருக்கு நல்ல நண்பர்கள்  இருந்திருக்கலாம் அதனால் சொல்கிறார் என்னவோ தெரியல ஆனால் ஹரிஸ் சாய்ந்தமருது தனி பிரதேச செயலகம் கேட்ட போதும் கூட கொடுக்கல  காரணம் கல்முனை தமிழர்கள் கையில் போய்விடும் என்பதற்க்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ் மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கேட்க அதாவது நடைபவனி மூலம் 21.04.0219 அன்று கோரவுள்ளார்கள் அதற்கு முஸ்லீம் தரப்பினரது பிரசுரம் ஒன்று 

 

இதற்கு பொயட் ஐயா என்ன சொல்ல போகிறார்

No photo description available.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.