Jump to content

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 30 வருடங்களாக தென்கிழக்கு கரையோர மாவட்டமும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்துடன் சேர்த்து பரணில் கிடக்கிறது.  கல்முனை அப்பமல்ல. மாகாணசபை தேர்தல் பதவிகள் என்கிற கிழக்குமாகாண அப்பக்கடையை பங்கிடுவதுதான் குரங்குகளின் நோக்கம். 
.
இத்தகைய ’போர்கால மோதல் சூழலுக்கு நேர் எதிரான’ ஒரு கிழக்கு மாகாண பனீப்போர் சூழல் இறுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் இரு சாராரது நலன்களையும் எதிர்காலத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிடும். கல்முனைகுடி மக்கள் தங்கள் நிலைபாடு தொடர்பாக தனிமைபடுதல் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் நிகழ்ந்தால் புறக்கணிக்க முடியும். ஆனால் சம்மாந்துறை மாளிகைக்காடு நாவிதன் வெளி போன்ற அயல் முஸ்லிம் மக்கள் மத்தியில் தனிமைபடுகிற சூழலை புறக்கணிக்க முடியும் என தோன்றவில்லை.கல்முனை அப்பம் மட்டுமல்ல கிழக்குமாகாண அப்பக்கடையும் தமிழ் தலைமைக்கு மட்டுமல்ல முஸ்லிம் தலைமைக்கும் முக்கியம் இதனால் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் இப்பிரச்சினையில் கல்முனை குடி நிலைபாடு சிக்கலை ஏற்படுத்தவே செய்யும். இதனை கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் விவாதிக்க வேண்டும். . 
.
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை பிரச்சினை முன்னைப்போலன்றி இன்று எல்லைப்புற அச்சங்களிலேயே தொக்கி நிற்கிறது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தீர்வுக்குத் தடையாக மேம்படும் அச்சம்கல்முனைகுடி மக்கள் மத்தியில் உள்ள அச்சம் இடைப்பட்ட அரச நிலங்கள் பற்றியதாகும். எல்லையோர பொது நிலங்கள் தொடர்பான கல்முனைகுடி முஸ்லிம் மக்களின் அச்சத்தை தீர்பதற்க்கு சாத்தியமான குறைந்த பட்ச்ச குடுக்கல் வாங்கல் அடிப்படையிலான விட்டுக்கொடுப்புகள் அவசியப்படலாம். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச சபை தரமுயர்தல் பிரச்சினைக்கு தீர்வுகாண கல்முனைக்குடி சமூக அரசியல் சக்திகள் ஒத்துழைக்கும் சூழலில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் அடிப்படையில் தமிழர்களும் சாத்தியமான எல்லாவறையும் செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை மக்கள் ஒத்துக்கொண்டாலும் அரசியல் வாதிகள் பாராளுமனறத்தில் கல்முனை பிரதேச செயலகம் தொடர்பாக ஆற்றிய உரையை நீங்கள் கேட்கவில்லை போல மற்றது கல்முனையில் இயங்குவது சட்டவிரோத பிரதேச செயலகமாம் அதை தரமுயர்த்தக்கூடாது என மூஸ்லீம்கள் நோட்டீஸ் வெளியீட்டு இருக்கிறார்கள் கிடைத்ததும்  இணைக்கிறேன் .

மக்களை அரசியல் வாதிகள் கல்முனையை வைத்துகாய் நல்லா நகர்த்துகிறார்கள்  கோடிஸ்வரன் ,ஹரிஸ் மன்சூர் ம்  ஹக்கீம் போன்றவர்கள் 

Link to comment
Share on other sites

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, poet said:

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் வடகிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பகுதிகள் பற்றியும் என்னால் இயன்ற அளவுக்கு கவனம் செலுத்தியபடிதான் செயல்படுகிறேன். எல்லா பிரச்சினைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு. இரண்டு பக்கத்திலும் மனிதர்கள். முள்ளில்போட்ட சேலையை எடுப்பதுபோலத்தான் அரசியல்

 

உங்கள் அளவுக்கு இல்லையானாலும் கிழக்கு மாகாணம் நான் வசிக்கும் மாகாணம் என்பதால் சொல்கிறேன் அரசியலாலும் முள்ளில் விழுந்த சேலையை எடுக்க முடியாது  ஏனென்றால் அரசியல் அதை இன்னும் கிழிக்கத்தான் செய்கிறதே தவிர அந்த  சீலையை அவ்வளவு சீக்கிரம் எடுக்க முனைப்பு காட்டவில்லை அப்படி எடுக்க அரசியலில் தெம்பு இல்லை கிழக்கு அரசியல் வாதிகளுக்கு .

Link to comment
Share on other sites

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, poet said:

தனிக்காட்டுராஜா, நீங்கள் கிழக்கா?  மன்னித்துக்கொள்ளுங்கள். நான் சும்மா கிண்டலாகத்தான் சொன்னேன். உங்களைபோல  கிழக்கில் பிறக்காவிட்டாலும் கிழக்கு என் இதயத்துக்கு அருகில் உள்ளது நண்பா

என்ன செய்வது இருக்கிற காய்களை தூக்கி வீசிவிட்டு இந்த சதுரங்கத்தை ஆடமுடியாது நண்பா

ம்ம் நான் கிழக்கு அதுவும் அம்பாறை என்றால் நம்புவீர்களா கல்முனை பக்கம் தான் அதனால் தான் சொன்னது மற்றும் அரசியல் வாதிகள் மீது நம்பிக்கை இல்லை அது கிழக்கிலும் சரி வடக்கிலும் சரி சுயநல வாதிகள் 

Link to comment
Share on other sites

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நன்றி தனிக்காட்டுராஜா,

கல்முனைப்பக்கமா? மகிழ்ச்சி. யாழ் இணைய குடும்பத்தின்மீதான மதிப்பு அதிகரிக்கிறது. கல்முனைப்பக்கமென்றால் எங்கே காரைதீவா? அல்லது மருதமுனை நாய்பிடீமுனை துறை நிலாவணை பக்கமா? உங்கள் பகுதிபற்றி வடக்கைச் சேர்ந்த நான் எழுதுகிறபோது பிழைகள் அதிகம் இருக்கா? இருந்தால் திருத்துங்க. மகிழ்வேன்.

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஓம் ம் பிழை இருக்கும் போது தட்டிக்கேட்பேன் ஐயா நாய்பிடீமுனை அல்ல நற்பட்டிமுனை என்பதே சரி  அக்னியஷ்த்ரா  பக்கம் தானே தகுந்த விளக்கம் கொடுக்கலாம் தானே  ஐயாவுக்கு

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதற்க்கென்ன தனி கொடுத்தால் போச்சு ....
புலவரே நாங்கள் இருவரும் கிழக்கர்கள் தான் ,அருகருகே அடிக்கடி சந்தித்துக்கொள்வதுமுண்டு .
நாய்ப்பிட்டி ,நாய்ப்பட்டி இரண்டுமே தவறு, இந்த இடத்தின் பெயர் நெற்பிட்டிமுனை அதாவது ஒருகாலத்தில் விவசாயத்தில் செழித்து நெற்குவியல்கள் பிட்டிகளாக குவித்துவைக்கப்பட்டிருந்ததால் இந்த பெயர் வந்தது  பின் காலப்போக்கில் மருவி நற்பட்டிமுனையாகி நாய்ப்பட்டியில் வந்து நிற்கிறது 

ஹாஹா அதே ஒவ்வொரு ஊருக்கு ஒரு வரலாறே உள்ளது ஆனால் அவை தற்போது கனபேருக்கு தெரிய வாய்ப்பில்லை அவை அழிக்கப்பட்டு விட்டது எனலாம் 

Link to comment
Share on other sites

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, poet said:

aன்புக்குரிய அக்னியஷ்த்ரா, தனிக்காட்டு ராஜா, நான் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னம் யாழ்பாணநகரத்தில் மூத்த எழுத்தாளர் பதிப்பாளர் வரதரோடு பேசிக்கொண்டிருந்தேன். சின்னவயசுக்கதையொன்று சொன்னார். புன்னாலை என்ற தங்கள் ஊர்பேர் கிண்டலுக்கு உள்ளாவதால் தானும் தனது நண்பர்களும் கவலை அடைந்திருந்ததாகச் சொன்னார். ஒரு இரவில் இரண்டாம் காட்ச்சி படன் பார்த்து விட்டு வழி நெடுக அயலூர்களில் இருந்து ஊருக்கு வழிகாட்டும் பெயர்பலகைகளிலும்  புன்னாலை என்பதை பொன்னாலை என மாற்றிவிட்டார்களாம்.  இப்படி நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது வரலாற்று ஆய்வுகளில் சிக்கல்களை உருவாக்கும்.

தற்போது கன ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விட்டது நீங்கள் அறிவீர்கள் தானே ஏன் சின்ன உதாரணம் எனது வீதி கூட யாரோ ஒரு வெள்ளைக்காரனின் பெயர் வைத்துவிட்டார்கள் என்றால் பாருங்கோவன்.......... அந்த பெயருக்கு முன் எங்கள் வீதியின் பெயரோ சுத்த தமிழ் பெயர்

வடகிழக்கில் நிறைய ஊர்கள் பெயர்கள் மாற்றத்துக்கு காத்துக்கொண்டுதான் இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஏராளன் said:

இந்த விடயத்தில் அந்த அந்த கிராம மக்களும் அமைப்புகளும் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரதேச சபைக்கு வழங்கினால் மாற்றம் வரும்.

அப்படி பிரதேச சபை அல்ல பிரதேச செயலகம் கல்முனை மாநகரத்தில் உள்ள தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமான பிரச்சனை அது ஏராளன் அரசியலுக்குள் கிடந்து புரள்கிறது 

Link to comment
Share on other sites

On 4/9/2019 at 3:29 AM, poet said:
கல்முனை அப்பமும் கிழக்கு மாகாண அப்பக்கடையும்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

கடந்த 30 வருடங்களாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக கல்முனை வடக்கு தமிழரும் கல்முனைகுடி முஸ்லிம்களும் முறுகி முரண்படுகிறார்கள். நட்புறவு நிலவுவதாக சொல்வது ஆழமான உண்மையல்ல. இதுதான் அடிபடை பிரச்சினை. இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கபடதமைதான்.அடுத்தவர் தலையீடு எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம். 

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக மட்டகளப்பில் இருந்து அம்பாறை கச்சேரிக்கு கிழக்கு மாகாண தமிழர் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக செல்லபோவதாக அறிக்கை வந்துள்ளது. இதிலும் வேறு சக்திகள் கலந்து கொள்ளக் கூடும். பிரச்சினைக்கு காரணம் காரணம் அப்பம் பகிரும் குரஙல்ல. காரணம் இணங்கித் தீர்க்க முடியாத பூனைகள்தான். .
. கல்முனை வடக்கு பிரதேச சபை பிரச்சினையை நன்குணர்ந்துள்ள கல்முனை முஸ்லிம்களின் தலைவர் ஹாரிஸ் அவர்கள் இன்று சம்பத்த பட்ட துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மாண்பு மிகு ஹாரிஸ் அவர்கள் கல்முனை தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒரு பிரதேச செயலகத் தீர்வுக்கு ஒன்று சேர்க்க ஒருமுறை முயன்று பார்க்க வேண்டும். இயலாத பட்சத்தில் தமிழரின் 30 வருடக் கோரிக்கையான கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழிவிடுவதன் மூலம் கல்முனை வாழ் தமிழர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றுபட உதவ வேண்டும். 

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தி said:

இந்த அமைச்சரை கவிஞர் அவர்கள் மாண்புமிகு என அழைப்பது எனது மனதுக்கு இதமளிக்கவில்லை.ஏனெனில் இந்தப்பிரச்சனைகளின் விளைநிலமாக இன்று விஸ்வரூபத்தில் நிற்பவர் இவர்தான்.உறக்கமின்றி,உணவின்றி ஒத்தக் காலில் நிற்கிறாராம்.இந்த அமைச்சர் ஒன்றை உணரமறுக்கிறார்.சிலரது உரிமைகளை சிலகாலம் தடுக்கலாம்.பலரது உரிமைகளை பலகாலம் தடுக்கலாம்.ஆனால் எல்லாரது உரிமைகளையும் எல்லாக்காலமும் தடுக்க முடியாது.

வழக்கும் போடப்பட்டுள்ளது தமிழர்களுக்கு எதுவும் விட்டுக்கொடுக்க கூட தயாரில்லை உரிமை இருந்தும் நந்தி ஐயாவின் காலத்தில் அவருக்கு நல்ல நண்பர்கள்  இருந்திருக்கலாம் அதனால் சொல்கிறார் என்னவோ தெரியல ஆனால் ஹரிஸ் சாய்ந்தமருது தனி பிரதேச செயலகம் கேட்ட போதும் கூட கொடுக்கல  காரணம் கல்முனை தமிழர்கள் கையில் போய்விடும் என்பதற்க்காக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தமிழ் மக்கள் தங்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி கேட்க அதாவது நடைபவனி மூலம் 21.04.0219 அன்று கோரவுள்ளார்கள் அதற்கு முஸ்லீம் தரப்பினரது பிரசுரம் ஒன்று 

 

இதற்கு பொயட் ஐயா என்ன சொல்ல போகிறார்

No photo description available.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.