Jump to content

பாடசாலை கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கிய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்!!-வீடியோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

பாடசாலை கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கிய யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்!!-வீடியோ

யாழ் இந்துக்கல்லூரியை சேர்ந்த 2019ம் ஆண்டு உயர்தர பிரிவை சேர்ந்த மாணவ முதல்வர்கள் பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி அதை காணாளிப்படுத்தி “TikTok” டிக்டொக் செயலியில் பதிவேற்றியுள்ள சம்பவம் யாழ் கல்விச் சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

யாழ்ப்பாணம் உட்பட போரால் பாதிக்கப்பட்டு மரங்களிற்கு கீழும் தறப்பாள் கொட்டகைக்குள் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்க இவ்வாறான மாணவர்கள் தமக்கு இருக்கின்ற வசதிகளையே தமது சிற்றின்பத்திற்காக அடித்து நொறுக்குவது தமிழர் தேசத்தின எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தான ஒரு விடயமாகும்.

பல மாவீரர்களை இந்த மண்ணுக்காக உகந்த ஒரு பாடசாலையில் இவ்வாறான சம்பவம் நடந்தேறியிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

இவ்வாறு சமூகம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ எந்தவித சிந்தனையுமற்ற ஒரு மாணவ சமுதாயத்தை வளர்த்தெடுத்தது பெற்றோரின் தவறா அல்லது பாடசாலை சமூகத்தின் தவறா என்பதே ஒரு பெரும் கேள்வியாகும்.

பேரினவாத அரசுகள் திட்டமிட்ட வகையில் எமது கல்வியை அழித்து வர நாமே நம் தலைமீதே சேறள்ளிப்போடுவது போலானது இவ்வாறன செயற்பாடுகள்.சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒருவனால் மட்டுமே ஒரு சிறந்த சமூகப்பிரஜை ஆகமுடியும்.

 

 

http://ilakkiyainfo.com/பாடசாலை-கற்றல்-உபகரணங்கள/

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளியில் வாங்கு கதிரை மேசைகளை உடைக்கா விட்டால் அது பள்ளி வாழ்க்கை இல்லையே இருந்தாலும் அது தெரியாமல்தான் அந்த காலத்தில் செய்வது பொடியங்கள் ஆனால் இது கண்டிக்க தக்கது காணொளி எப்படி எடுக்கப்பட்டது போண் எப்படி உள்ளே கொண்டு சென்றார்கள் என்று

நான் வேலை செய்யும் பெண்கள் பாடசாலையிலே தினம் தினம் உடைத்து கிடக்கும் பாடசாலை மேசை கதிரைகள் மலசல கூட நீர்குழாய்கள் வரைக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் சிறிய விடயத்தை ஊடகங்கள் பூதாகரமாக்கி மாவீரர்களையும் துணைக்கு இழுத்து.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

ஓர் சிறிய விடயத்தை ஊடகங்கள் பூதாகரமாக்கி மாவீரர்களையும் துணைக்கு இழுத்து.....

ம்ம் பாடசாலையில் வாங்கு கதிர உடைக்கா விட்டால் அது பள்ளி வாழ்க்கை அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வினைத்திறனாக செயலாற்றவும்.. காட்சிப்படுத்தவும்.. சமூகத்துக்கு வழிகாட்டவும் எவ்வளவோ நல்ல விடயங்களை மாணவர்கள் செய்யத்தக்கதாக இருக்க.. இவ்வாறான செயல்களும் காட்சிப்படுத்தல்களும்.. பொழுதுபோக்காகக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் இவர்கள் மீது பாடசாலை நிர்வாகம் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கவும்.. இந்த மாணவர்களின் தேவைகள் அறிந்து அவர்களை சரியான திசையில் நெறிப்படுத்தி.. இவர்களின் வினைகளை.. வினைத்திறனாக்கி.. சமூகம் பயன்பெறத்தக்க வகைக்கு மாற்றி அமைக்க வேண்டியதும் பாடசாலை நிர்வாகத்தினதும் பெற்றோரினதும் கடமையாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் இப்படி செய்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.

விளையும் பயிரை முளையில் தெரியும். என்று சொல்வார்கள்.


மேலும் எந்த ஒரு பாடசாலையும் நல்ல போராளிகளை மாத்திரம் உருவாக்குவதில்லை. இதில் படித்தவர்களும் ஆவா குழுக்களில் இருக்கின்றார்கள். பிறகு சிங்களவன் வந்தான் இந்து கொலீச் மாணவர்களை இப்படி மாற்றிப்போட்டான் என கத்தகூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

பிறகு சிங்களவன் வந்தான் இந்து கொலீச் மாணவர்களை இப்படி மாற்றிப்போட்டான் என கத்தகூடாது.

இந்தக் குழுக்கள் வந்ததே.. சிங்களவின் வரவின் பின் தானே. அதுக்கு முதல் இருந்த ரவுடிக்கும்பல்கள் அனைத்தும்.. போராளிகளால் சமூகத்தின் மக்களின் நன்மை கருதி ஒழித்துக்கட்டப் பட்டிருந்தன. இது தான் நீங்கள் ஏற்றுக் கொண்டால் என்ன கொள்ளாவிட்டால் என்ன கள யதார்த்தமாகும். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணக்க வாழ்க்கையில் இதல்லாம் சகமப்பா.

திருப்தி தானே....

பெடியளுக்கு நாலு சாத்து வாங்கி கொடுத்தோம் எண்டு.

உடைந்த கதிரைகளை அகற்றும் போது, உடைக்கிறார்கள், வசதியாக லாறியில் ஏத்த...

அலம்பறை பண்ணாதீங்கப்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க செய்யும்போது இந்த டிக்டோக் இல்லை ஆனால் வாத்திகளுக்கு அச்சொட்டா தெரியும் அடுத்தநாள் எந்த ஐந்து எப்படி உடைத்தது என்று அச்சொட்டா ரிகர்சலே சொல்லி அடியும் (அடி என்று சொல்லகூடாது ஒருவிதமான சித்தரவதை )நடக்கும் பள்ளி வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் .

Link to comment
Share on other sites

16 hours ago, colomban said:

பாடசாலையின் கற்றல் உபகரணங்களை காட்டுமிராண்டித்தனமாக அடித்து நொறுக்கி அதை காணாளிப்படுத்தி

இந்தக் காணொளியை பார்வையிட முடியவில்லை.

எனினும், கதிரை மேசைகளை உடைக்கும் மாணவர்களின் காடைத்தனங்களை எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. இது போன்ற காடைத்தனங்கள் மீண்டும் நிகழாதபடி மாணவ சமுதாயத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வேலை செய்யும் பெண்கள் பாடசாலையிலே தினம் தினம் உடைத்து கிடக்கும் பாடசாலை மேசை கதிரைகள் மலசல கூட நீர்குழாய்கள் வரைக்கும்

இங்கும் அப்படித்தான் வார்த்தைகளில் சொல்லமுடியாது பெண்கள் பள்ளி என்பது பெயர் மட்டுமே ஆண்களை விட ரகளை கூடினதுகள் வேண்டாம்டா சாமி என   ஒதுங்கவும் முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கும் அப்படித்தான் வார்த்தைகளில் சொல்லமுடியாது பெண்கள் பள்ளி என்பது பெயர் மட்டுமே ஆண்களை விட ரகளை கூடினதுகள் வேண்டாம்டா சாமி என   ஒதுங்கவும் முடியாது .

ம்ம் ஆனால் அதெல்லாம் பிழையென்று அவர்கள் மனதில் நினைத்துக்கொள்ள நாட்கள் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

மாணவர்கள் இப்படி செய்வது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.

விளையும் பயிரை முளையில் தெரியும். என்று சொல்வார்கள்.


மேலும் எந்த ஒரு பாடசாலையும் நல்ல போராளிகளை மாத்திரம் உருவாக்குவதில்லை. இதில் படித்தவர்களும் ஆவா குழுக்களில் இருக்கின்றார்கள். பிறகு சிங்களவன் வந்தான் இந்து கொலீச் மாணவர்களை இப்படி மாற்றிப்போட்டான் என கத்தகூடாது.

.மூக்கிலை வியர்த்தால் புலி மணம்தான் வருகுது போல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அங்கு கற்பிக்கும் எனது நண்பனுக்கு இந்த செய்தியை அனுப்பினேன். இரவு பதில் போட்டான் "இப்படி செய்வது அவர்களின் பாரம்பரியமாம்" எங்கை போய் தலையை முட்ட?!
தாங்கள் எல்லாம் கெட்டிக்காறர் என்ற தலைக்கனத்தாலும் வந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

நேற்று அங்கு கற்பிக்கும் எனது நண்பனுக்கு இந்த செய்தியை அனுப்பினேன். இரவு பதில் போட்டான் "இப்படி செய்வது அவர்களின் பாரம்பரியமாம்" எங்கை போய் தலையை முட்ட?!
தாங்கள் எல்லாம் கெட்டிக்காறர் என்ற தலைக்கனத்தாலும் வந்திருக்கலாம்.

இது வடக்கில் மட்டும் இல்லை ஒட்டு மொத்த இலங்கையிலும் நடப்பதுதான்  தனியார் பள்ளிக்கூடங்களில் இல்லை ஏனேன்றால் ஒரு துரும்புக்கும் காசு வாங்குவார்கள் அவர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.