Jump to content

வாழ்வு என்றும் வசந்தங்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வு என்றும் வசந்தங்களே 

 

மல்லிகை பூ வாசனையும் 
வசந்தத்தின் புன்சிரிப்பும் 
உன் கண் வரைந்த சித்திரமும் 
கால் கொலுசு சந்தங்களும் 
இன்னும் என்னை விட்டு போகவில்லை 

 

கால்நடை கொஞ்சம் தளர்ந்து 
கட்டினிலே நான் படுத்தாலும் 
உன் பூ மணம் விட்டு போகுமோடி 
முடியாது போடி என் முழு நிலவின் சித்திரமே 

 

உன் கன்னத்தின் குழிகளிலே 
என் கவிதைகளை புதைத்தவளே 
காலம் ஒன்று இருந்தால் 
கல்அறையிலும் வாழ்வு செய்வோம் 

 

அதன் வழியால் செல்பவன்
 எவனாக இருந்தாலும் 
எழுதிவிட்டு செல்லட்டும்   
எம் கல்லறையின் நடுவினிலே 

 

வாழும் வரை காதல் செய்த 
வண்ணக் கிளிகள் நாங்கள் என்றும் 
காதல் கிளி இரண்டு 
கண் மூடி தூங்குதென்றும் 

 

காலத்தால் அழியாத இரு 
கவிதை தோப்பு துயலுதென்றும்  
எழுதி விட்டு செல்லுங்கள் 
எவரும் எம் தூக்கத்தை கலைக்காமல்.

 

 

பா .உதயகுமார் /Oslo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ் .....சூப்பர் கவிதை ..... வயதான தாத்தாக்களின் மனங்களை சும்மா அள்ளிக்கொண்டு போகும். தொடர்ந்து எழுதுங்கள் உதயகுமார்....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

வாவ் .....சூப்பர் கவிதை ..... வயதான தாத்தாக்களின் மனங்களை சும்மா அள்ளிக்கொண்டு போகும். தொடர்ந்து எழுதுங்கள் உதயகுமார்....!  👍

நன்றி சுவி நல்ல கருத்து .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.