Jump to content

சத்தீஸ்கர்: பா.ஜ.க எம்எல்ஏவை குறிவைத்து தாக்குதல் - 5 சிஆர்பிஎஃப் படையினர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
சத்தீஸ்கர்: பா.ஜ.க தலைவர்களை குறிவைத்து தாக்குதல், 5 பேர் பலிபடத்தின் காப்புரிமை ANI

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் ஐந்து சிஆர்பிஎஃப் படையினர் பலியாகி உள்ளனர்.

 

தண்டேவாடா-சுக்மா சாலை வழித்தடத்தில் அமைந்துள்ள நகுல்னார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்கட்ட மக்களவைத் தேர்தல் இன்னும் 36 மணி நேரத்தில் நடக்க இருக்கும் சூழலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பாஜக சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி பயணம் செய்த வாகனம் கடுமையாக சேதமடைந்து இருப்பதாக சிஆர்பிஎஃப் தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் ஏப்ரல் 11, 18 மற்றும் 23 ஆகிய மூன்று கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்கவுள்ளது.

https://www.bbc.com/tamil/india-47869655

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.