Jump to content

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஃபேல்: மோடி அரசு அளித்த சலுகைகள்!

87.jpg

7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஃபேல் ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதியன்று கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவைக் குழு பல விதிவிலக்குகளையும், சலுகைகளையும் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விதிவிலக்குகள் அனைத்தும் முன்னெப்போதும் யாருக்கும் வழங்கப்படாதவை. ராணுவக் கொள்முதல் செயல்முறைகளில் முக்கிய விதிமுறைகளிலிருந்து விலக்கு உட்பட முக்கிய சலுகைகள் டசால்ட் ஏவியேஷன், எம்பிடிஏ ஆகிய இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த சலுகைகள் அனைத்தும் இறுதிகட்ட ஆய்வுக்கும், ஒப்புதல் பெறுவதற்கும் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராணுவ கொள்முதல் நடைமுறைகளில் பல்வேறு குளறுபடிகளும், மீறல்களும் இருப்பதாக உணர்ந்த பாரிக்கர் ஒப்புதல் அளிப்பதற்கு தயக்கம் காட்டினார்.

பாதுகாப்பு கொள்முதல் செயல்முறைகளில், தகாத செல்வாக்கை பயன்படுத்தவும், ஏஜெண்டுகள்/ஏஜென்சிகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரஃபேல் விவகாரத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் விநியோக நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபடும்போது வழங்கப்பட வேண்டிய தண்டனைகளும் அமைதியாக நீக்கப்பட்டுவிட்டன. இவையனைத்தும் நீக்கப்பட்டதற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் குழுவின் ஒப்புதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களில் மேற்கூறிய உண்மைகள் தெரிவிக்கப்படவில்லை.

இவையனைத்தும் முக்கிய கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களாகும். இந்திய பேச்சுவார்த்தைக் குழு 2016ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி வெளியிட்ட இறுதி அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இந்த ஆவணத்தை தி இந்து ஊடகம் பெற்று இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

87a.jpg

பேச்சுவார்த்தையின் ஆரம்பகட்டத்தில், ஆஃப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தும்படி இந்திய தரப்பு அறிவுறுத்தியும் பிரெஞ்சு பேச்சாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். ஆப்செட் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் ‘மேக் இன் இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் இறுதி அறிக்கை கூறுகிறது.

ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடுவர் மன்ற விதிகளை சேர்க்கும்படி டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் முன்மொழிந்துள்ளன. அதன்படி, இரு தரப்புக்கும் இடையே ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்கு நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்படும். 24 மாதங்களுக்குள் பேச்சுவார்த்தையால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் நடுவர் மன்றம் அமைத்து தீர்வு காணப்படும்.

விநியோக உடன்படிக்கை பிரிவு 21இல், எல்லா பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையால் தீர்க்கப்படும்; 24 மாதங்களுக்குள் தீர்வு காணாவிட்டால் ஐநா சர்வதேச வர்த்தக சட்ட நடுவர் மன்ற விதிமுறைகளின் கீழ் மத்தியஸ்தம் செய்து தீர்வு காணப்படும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆஃப்செட் ஒப்பந்தங்களில் ராணுவக் கொள்முதல் செயல்முறைகளின் பிரிவு 9ஐ கடைப்பிடிக்கும்படி இந்திய பேச்சுவார்த்தைக் குழு தொடர்ந்து வலியுறுத்தியும் பிரெஞ்சு தரப்பு மறுத்துள்ளது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்திலய பேச்சுவார்த்தையால் இவ்விவகாரத்தில் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவின் அனைத்து முயற்சிகளும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து 2016 ஜூலை மாதத்தில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு மாதங்களுக்கு முன்பு, ஆஃப்செட் ஒப்பந்தங்களில் பிரிவு 9 கடைப்பிடிக்கப்படாத விவகாரத்தை அரசிடம் தெரிவிக்க பாதுகாப்பு கையகப்படுத்தல் குழு முடிவு செய்தது. 2016 ஆகஸ்ட் மாதத்தில் இவ்விவகாரத்தில் இரண்டு பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க பாதுகாப்பு அமைச்சரவைக் குழு தீர்மானித்தது.

பாரிஸில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் 2015 மார்ச் 28 அன்று ரிலையன்ஸ் டிஃபென்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் லிமிட்டெட் நிறுவனம் 2015 ஏப்ரல் 24 அன்று பதிவு செய்யப்பட்டது. 2016 அக்டோபர் மாதத்தில் டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், ரிலையன்ஸ் ஏரோஸ்ட்ரக்சர் நிறுவனமும் கூட்டணி அமைத்தன. இந்த கூட்டணி நிறுவனம் 2017 பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டது. இந்த கூட்டணி நிறுவனத்துக்கு டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிட்டெட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

87b.jpg

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரகசியமாக அனில் அம்பானியை உள்ளே கொண்டுவந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த சர்ச்சை 2018 செப்டம்பர் மாதத்தில் எழுந்தது. அப்போது, ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்தை முன்மொழிந்தது இந்திய அரசுதான் எனவும், அம்பானியுடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் பிரான்ஸின் முன்னாள் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்ட் தெரிவித்தார்.

பின்னர் ஊடகங்களும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. பாஜக அரசும், அனில் அம்பானியும், டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.

https://minnambalam.com/k/2019/04/09/87

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.