Jump to content

தாயகத் திட்டம்


Recommended Posts

வணக்கம்

போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.

யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன்  நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.

https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தொடர்பில் ஒரு விளக்கம் கேட்டிருந்தேன் நிழலி. நீங்கள் கவனிக்கவில்லை போலும்.

அறிவித்தல் விளம்பரங்கள் என்று தான் சொல்லப் பட்டிருந்தது.

ஏனெனில், அறிவித்தல் விளம்பரம் என்பது பிறந்தநாள், மரண அறிவித்தல் அல்லது திருமண அறிவித்தல் குறித்த விளம்பரம் மட்டுமே என்று பொருள் படுவதால் தான் கேட்டேன். (உங்கள் உறவினர் அல்லது நண்பரின் இழப்பினை அல்லது அந்தியேட்டி, நினைவு தின, திவசம் கண்ணீர் அஞ்சலி போன்றவற்றை)

அறிவித்தல், விளம்பரம் (கமாவினைக் கவனியுங்கள்) என எடுக்கலாமா என்று கேட்டிருந்தேன். அதாவது, இவை தவிர்ந்த ஏனைய சேவைகள் குறித்த விளம்பரங்கள் போட முடியுமா என்பது தான் என் கேள்வி.

இது குறித்து தெளிவு படுத்தினால் நல்லது.
 

Link to comment
Share on other sites

நன்றி நாதம்.

அறிவித்தல்கள் (பிறந்த நாள், கலியாண நாள், மரண அறிவித்தல், நினைவஞ்சலி போன்ற) மட்டுமல்ல, விளம்பரங்களும், சேவைகளை ஒட்டிய விளம்பரங்களும் தாராளமாக போட முடியும்.

பிரமிட் போன்ற போலி வியாபாரங்கள், சாமியார்கள் / சாத்திரகாரர்கள் ஆகியோர் போன்ற விளம்பரங்களை தவிர்ந்த ஏனையவற்றையும் தாரளமாக போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  முயற்ச்சி

வாழ்த்துக்கள்

ஏற்கனவே  சில  அனுபவங்களின்படி.....

1) அமைப்புக்கள் அல்லது  நிறுவனங்கள்  விளம்பரத்துக்கான பணத்துக்கு  பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்

2) எந்த எந்த  நாடுகளில்  யாழ்   இணையத்தை எத்தனை  ஆயிரம் வாசகர்கள்  பார்வையிடுகிறார்கள்  என்ற விபரத்தை வெளியில் கொண்டு  செல்லணும். அதுவே யாழில்  விளம்பரங்களை  செய்ய  அந்த  அந்த  நாட்டு  நிறுவனங்களை  தூண்டும்)

 

மற்றவர்களும்  எழுதட்டும்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. மோகன் 20  வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never!

  வீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா?

விளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர "யாழ் " என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத  முடியாது🤔

 
மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை 🤣போட நினைக்க மாட்டார்கள்.


உங்கள் கருத்தை சொல்லுங்கள்  ☺️

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

1) அமைப்புக்கள் அல்லது  நிறுவனங்கள்  விளம்பரத்துக்கான பணத்துக்கு  பற்றுச்சீட்டை எதிர்பார்ப்பார்கள்

அதற்கான ஒழுங்குகளைச் செய்ய முடியும்.

1 hour ago, விசுகு said:

2) எந்த எந்த  நாடுகளில்  யாழ்   இணையத்தை எத்தனை  ஆயிரம் வாசகர்கள்  பார்வையிடுகிறார்கள்  என்ற விபரத்தை வெளியில் கொண்டு  செல்லணும். அதுவே யாழில்  விளம்பரங்களை  செய்ய  அந்த  அந்த  நாட்டு  நிறுவனங்களை  தூண்டும்)

விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

வணக்கம் மோகன், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...உந்த விளம்பர விடயத்தில் என்னால் உதவி செய்ய முடியாது..மன்னிக்கவும்...எனக்கு வியாபரம் செய்பவர்களைத் தெரியாது ...தவிர "யாழ் " என்று ஒரு இணையம் இருக்கு அதில் போய் விளம்பரம் செய்யுங்கோ என்று சொந்தக்காரர்,தெரிந்தவர்களுக்கு சொன்னால் அவர்கள் யாழை வாசிக்க ரதியால் சுயமாய் எழுத  முடியாது🤔

 
மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்...யாரும் யாழை ஆட்டையை 🤣போட நினைக்க மாட்டார்கள்.


உங்கள் கருத்தை சொல்லுங்கள்  ☺️

மாம்பழத்துக்குள்ள, கொய்யாப்பழத்தினை கலக்காதீர்கள்.

இது விளம்பர பகுதி. நோக்கம் சிறந்தது.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

நல்ல முயற்சி. மோகன் 20  வருடங்கள் காலந்தாழ்த்தி ஆரம்பித்துள்ளார். Better than never!

  வீட்டுக்கடன், வங்கிக்கடன், காப்புறுதி போன்ற விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா?

விளம்பரங்கள், அறிவித்தல்கள் தமிழரிடம் மட்டும் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றதா அல்லது கூகிள் AdSense மூலமும் விளம்பரங்கள் காட்டப்படுமா?

 

ஆம் கிருபன். யாழ் இணையத்தின் ஊடாக தாயகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அடிக்கடி யோசித்தாலும் பல்வேறு காரணங்களால் விடுபட்டுப் போய்விட்டது. கள உறுப்பினர்களும் சேவையடிப்படையில் உள்ளூர் தொடர்பாளராக இருக்கும்பட்சத்தில் இலகுவாக இத்திட்டத்தினைக் கொண்டு செல்ல முடியும்.

விளம்பரங்கள் மேலே நிழலி குறிப்பிட்ட வரையறைக்குள் அடங்கினால் அவைகளை இணைப்பதில் பிரச்சனையிருக்காது. விளம்பரங்கள் தொடர்பாக சில விளக்கங்கள் எழுதப்படத்தான் வேண்டும்.

விளம்பரங்கள் தமிழரை நோக்கியிருக்கும்பட்சத்தில் விளம்பர விதிகளுக்கு உட்பட்டால் யாரும் இணைக்க முடியும். 

சில காரணங்களால் google AdSense யாழில் இணைக்கப்பட மாட்டது.

17 minutes ago, ரதி said:


மாதம்,மாதம் கள உறவுகள் குறிப்பிட்ட ஒரு தொகை £10 அல்லது £20 கொடுத்தால் அந்தக் காசை உந்த விளம்பர நிதியோடு சேர்த்து யாழின் பெயரால் கொடுக்க முடியாதா?...எனக்கு தெரியும் காசு கொடுப்பதால் யார் கூட கொடுப்பது,குறைய கொடுப்பது மற்றும் தாயகம்,இந்தியாவில் இருப்பவர்களை விட்டு,விட்டு புலம் பேர் நாடுகளில் இருப்பவர்களிடம் மட்டும் குறிப்பிட ஒரு தொகையே எல்லோரும் தர வேண்டும் என சொல்ல முடியாதா?...எல்லோரும் ஒரு தொகையை கொடுத்தால் ஈகோ பிரச்சனை வராது என்று நினைக்கிறேன்..

 

12 minutes ago, Nathamuni said:

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், நேரடியாக அந்த தொண்டு நிறுவனத்துக்கு ( TNRA அமைப்பு) அளிக்கலாமே.

நாதமுனி குறிப்பிட்ட பதிலே எனது பதிலுமாகும். தாயகத்திற்கு உதவி செய்ய என்று நிறைய அமைப்புகள் உள்ளன. கொடுக்க விரும்புபவர்கள் நேரடியாக அவ்வமைப்புக்களுக்கு பங்களிப்புச் செய்து தாயகத்திற்கு உதவலாம்.

இங்கு நாம் ஒரு சேவையினை வழங்கி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினையே தாயக மக்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளோம். 

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி. என்னால் இயன்றவரை இத்தகவலைப் பகிர்கிறேன். நேரம் வரும் போது எனது பங்களிப்பையும் செய்வேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மோகன் அண்ணைக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2019 at 5:48 AM, மோகன் said:

வணக்கம்

போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது.

யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் யாழ் இணையம் மூலம் விளம்பர சேவைகளை வழங்கி அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை ஏதாவது ஒரு அமைப்பிற்கு நேரடியாக வழங்குவதன் மூலம் தாயகத்தில் உள்ள மக்கள் பயன் பெறுவார்கள் என்பதுடன்  நாம் சட்டச்சிக்கல்களையும் தவிர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில் யாழில் விளம்பரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் பணம் TNRA அமைப்பிற்கே போய் சேரும் வகையில் விளம்பரப் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

யாழ் கள உறுப்பினர்களிடம் இருந்து கேட்பது என்னவெனில் உங்கள் பகுதிகளில் இருந்து விளம்பரங்களை யாழில் இணைப்பதற்கு உங்களுக்குத் தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இது பற்றிக் தெரியப்படுத்துங்கள். விளம்பரங்களையாழ் இணையத்தின் மூலம் பிரசுரிப்பதன் மூலம் அத் தகவலினை உலகமெங்கும் வசிக்கும் உறவுகள் தெரிந்து கொள்ள வழியேற்படும் என்பதுடன் கிடைக்கும் பணம் நல்நோக்கத்திற்கே பயன்படப்போகின்றது என்பதையும் தெரியப்படுத்துங்கள்.

இன்னமும் என்ன செய்யலாம் என்ன மாதிரி செய்யலாம் என்பதையும் கள உறுப்பினர்கள் ஆலோசனைகளாக இங்கு வைக்க முடியும். உங்கள் பகுதிகளில் இதற்கு என விளம்பரங்களை பெற்றுத் தர நீங்கள் இணைய விரும்பினால் சேவை அடிப்படையில் இணைந்து கொள்ள முடியும்.

https://yarl.com/order/ எனும் முகவரியில் விளம்பரங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

மோகன் அண்ணா,
இந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா?
அப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.
நிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்தமானதைத் தெரிவு செய்க*

  • மரண அறிவித்தல்
  • கண்ணீர் அஞ்சலி
  • நினைவஞ்சலி
  • வாழ்த்து
  • பிறந்தநாள் வாழ்த்து

 

இத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது ???

Link to comment
Share on other sites

33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பொருத்தமானதைத் தெரிவு செய்க*

  • மரண அறிவித்தல்
  • கண்ணீர் அஞ்சலி
  • நினைவஞ்சலி
  • வாழ்த்து
  • பிறந்தநாள் வாழ்த்து

 

இத்தனை தானே வருகிறது. விளம்பரங்கள் என்றால் எதை அழுத்துவது ???

விளம்பரம் என்பது மேலதிகமாக இணைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏதாவது தவற விடப்பட்டு இருந்தால் அறியத் தாருங்கள்.

4 hours ago, Sasi_varnam said:

மோகன் அண்ணா,
இந்த திட்டம் குறித்த சிறிய விளக்கங்களுடன் ஒரு சின்ன அறிவித்தல் கோரும் படிவத்தை தயார் செய்யலாமா?
அப்படி எதுவும் இருந்தால் அதனை காட்டி, அறிவித்து வியாபார நண்பர்களிடம், வர்த்தக மக்களிடம் தங்கு தடை இன்றி அணுகி விளம்பரங்கள் பெறலாம்.
நிச்சயம் என்னாலான முயற்சிகளை செய்வேன்.

இம்மாத இறுதிப் பகுதியிலேயே இது சாத்தியமாகும்.

எனினும் முற்கூட்டி தர முயற்சிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.

யாழ் இணையத்தின் ஆண்டு நிறைவுக்கு கூட விரும்பியவர்கள் பணம் செலுத்தி வாழ்த்துவது போல் இருந்தால் அதுவும் கணிசமான தொகையாகிவிடுமே.

Link to comment
Share on other sites

நல்லதொரு முயற்ச்சி.  இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்!

பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல்  நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு -  போன்ற பொது நிகழ்வுகள் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து என்பதிலும் மாற்றம் தேவை என நினைக்கிறேன். ஏனெனில்  மணமகளுக்கு , தாயை வாழ்த்துவதற்கு கணவரின் பெயரைத்தான் போடுவார்கள்.

பெயர் விபரம்*
முதற் பெயர்
தந்தையின் பெயர்
படம்*
Drop files here or
Accepted file types: jpg, png.
பிரசுரிக்க வேண்டிய படத்தினை இங்கு இணைக்கலாம்.
விடயம் / Body text*

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழினி said:

நல்லதொரு முயற்ச்சி.  இந்த திட்டத்திற்காக உழைக்கும் அனைவருக்கம் வாழ்த்துக்கள்!

பொது அறிவித்தல்களையும் இணைக்கலாம் அல்லவா? ( ஊர் ஒன்று கூடல்  நிகழ்வுகள் - அரங்கேற்ற நிகழ்வுகள் - இசை நிகழ்ச்சிகள் - நூல் வெளியீடு -  போன்ற பொது நிகழ்வுகள் )

ஓம் இணைக்கலாம் தமிழினி.

16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருபத்தி ஐந்தாவது, ஐம்பதாவது திருமண நாள் என்பதையும் இணைத்தால் என்ன மோகன். இப்ப வரவர அவற்றைத்தானே அதிகம் கொண்டாடுகின்றனர்.

இவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நிழலி said:

 

இவையும் வாழ்த்துகள் வகைக்குள் அடங்கும் என்பதால் இணைக்க முடியும்

அவற்றுள் அடங்கும் ஆனால் ஓர் ஆண் தான் விளம்பரங்களை இணைக்கவேண்டுமா ? ஏனெனில் முதற்பெயர் தந்தையில் பெயர் என்று கேட்டுள்ளீர்கள். தந்தையின் பெயருக்குப்பதிலாக குடும்பப் பெயர் என்றுதான் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மோகன் அண்ணா / தம்பி

வரவேற்கத்தக்க திட்டம்

தொடர்ந்து செயற்படுவதற்கு சாத்தியமானதும் கூட. இத்திட்டத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பும் உண்டு. என்னுடைய விளம்பரம் பற்றி ஏற்கனவே யாழோடு இணைந்துள்ளேன். இருப்பினும் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இணைப்பில் நேர்த்தியாக இணைவதுதான் சிறந்தது அவ்வகையில் சில கேள்விகள்...

1.

விளம்பரம் தொடர்பான அலங்கரிப்புகளை நாங்களே உருவாக்கித் தரவேண்டுமா அல்லது தகவல்களை      தந்தால் நீங்கள் தளத்தின் அளவுகளுக்கு ஏற்றாற்போல் உருவாக்கி இணைப்பீர்களா?

2.

விளம்பர சந்தா பகுதியில் கால அளவீட்டைக்குறிக்கவில்லை மாதாந்த சந்தா, காலாண்டு சந்தா, அரையாண்டு சந்தா, ஆண்டு சந்தா என்பன ( விளம்பரம் கொடுப்பவர்கள் தள்ளுபடியை எதிர்பார்த்தால் அதற்கு வழிவகைகள் உண்டா?)

3.

பேபால் மூலமாக மட்டுந்தான் கட்டணத்தைச் செலுத்த முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியிலிருந்து  சில  கருத்துக்கள்  நீக்கப்பட்டுள்ளன

அத்துடன்

இங்கே திட்டத்தை  விரைவாக்கவும்  அமுலாக்கவும்  தேவையான கேள்விகளை  விடுத்து

நேரத்தை  விழுங்கும்  வேலையே  நடப்பது

வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விதிமுறைகள்

 

பொது:
அறிவித்தல்/விளம்பர சேவைக்கான  இந்தத் தளத்தையும் சேவைகளையும் நீங்கள் உபயோகிப்பது கீழே விளக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் தளம் அல்லது இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தோன்றும், அதைக் குறிப்பிடும் அல்லது அதனுடன் இணைக்கப்படுகின்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதற்கும் உட்படும்.

தேவையான விபரங்கள்:

  • மரணமடைந்தவரின் முழுப்பெயர்
  • பிறப்பிடம் – வசிப்பிடம்
  • ஒளிப்படம்
  • பிறந்த திகதி, இறந்த திகதி,  கிரியை நடைபெறும் திகதி
  • ஏனைய விபரங்கள்
  • தகவல் தருபவரின் பெயர், தொலைபேசி இலக்கம்

பணம் செலுத்தும் முறை:
• தற்போது Paypal மூலம் மட்டுமே பணத்தினை நேரடியாக TNRA அமைப்புக்குச் செலுத்திக் கொள்ள முடியும்.

 அறிவித்தல்/விளம்பர சேவைக்கான பாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
 

  • அறிவித்தலை/விளம்பரத்தை எமக்கு அனுப்பி பணம் செலுத்திய பின்னரே பிரசுர வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
  • அனைத்து விபரங்களும் எமக்கு கிடைக்கப்பெற்ற பிற்பாடு அறிவித்தல்/விளம்பரமானது ஒரு மணிநேரத்தில் இருந்து எட்டு மணிநேரத்தில் பிரசுரிக்கப்படும்.
  • ஒரு நிறுவனத்திற்குரிய அல்லது அது சார்ந்த விளம்பரத்திற்குரிய banner விளம்பரதார் வடிவமைத்து தரவேண்டும். அவ்வாறு இல்லாத பட்டசத்தில் அடிப்படையான ஒரு banner எம்மால் இணைக்கப்படும்.
  • எமக்கு தகவல் தருபவரின் விபரம் தெளிவற்று இருந்தாலோ, உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அறிவித்தல்/ விளம்பரம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
  • குறைந்தது ஒருவருடைய தொலைபேசி இலக்கமாவது தகவலுடன் இணைக்கப்பட வேண்டும்.
  • தகவல் தருபவரின் விபரங்கள் பாதுகாப்பு கருதி நாம் உறுதிப்படுத்திய பின்னரே பிரசுரிக்கப்படும்.
  • வழங்கப்பட்ட விபரங்களை உறுதிப்படுத்த தாமதம் ஏற்படின் பிரசுரிக்கும் நேரம் அதிகரிக்கலாம்.
  • பிரசுரிக்கப்படும் அறிவித்தலின்/ விளம்பரத்தின் கால எல்லையினை நீங்கள் குறிப்பிடலாம். கால எல்லை குறிக்கப்படாவிடின் இவ் அறிவித்தல் பகுதி உள்ளவரை அறிவித்தல்/ விளம்பரம் இருக்கும். (அதாவது நீக்கப்பட மாட்டாது).
  • ஒரு வாரத்தின் பின்னர் தொடர்புகளுக்கான தொலைபேசி இலக்கம் காண்பிக்கப்பட மாட்டாது.
  • பிரசுரிப்பில் தவறுகள் இருப்பின் எமக்கு தகவல் தந்தவர் எம்முடன் தொடர்பு கொண்டு திருத்தங்களைத் தர முடியும். திருத்தங்கள் செய்வதற்கும் எமக்கு கால அவசாகம் தேவை.
  • கிடைக்கப்பெறும் பணம் அனைத்தும் தாயகத் திட்டங்களுக்காக TNRA அமைப்பினால் பயன்படுத்தப்படும்.
  • விளம்பரதாரரோ அல்லது யாழ் இணையமோ TNRA அமைப்பு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு தடையாக இருக்கவோ அல்லது எவ்விதத்திலும் ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.
  • அறிவித்தல்/ விளம்பரத்தில் இணைக்கப்படும் பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் உரியவர்களின் அனுமதியுடனேயே தரப்பட வேண்டும். பதியப்படும் விபரங்கள் அனைத்திற்கும் தகவல் தருபவரே முழுப்பொறுப்பாளியாவார்.
  • அறிவித்தல்/ விளம்பரம் யாழ் இணையத்தில் பிரசுரிக்கப்படும்.
  • தொழிநுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல்/ விளம்பரம் பிரசுரிப்பதில் தாமதம் ஏற்படலாம்
  • யாழில் பிரசுரிக்கப்படும் அறிவித்தல் வாசகர்கள் மூலம் சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டால் அதற்கு யாழ் பொறுப்பேற்க முடியாது.
  • அறிவித்தல்/ விளம்பர வேலைகள் ஆரம்பிக்கப்படாதவிடத்து அறிவித்தலினை/விளம்பரத்தினை இடைநிறுத்தி முழுப்பணத்தினையும் மீளப்பெற்றுக் கொள்ள முடியும்.

அறிவித்தல் பகுதியில் இருந்து வெட்டி ஒட்டியுள்ளேன் 
தேவை இல்லை என்று கருதினால் அழித்துவிடவும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் ஊடாக என்னால் இயன்றதை செய்ய தயாராக உள்ளேன். ஊரில் யாசகம் செய்யும் தெரு வியாபாரம் செய்யும் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு நீண்ட கால வருவாய் ஒழுங்கில் ஒரு செயற்திட்டம் அமைந்தால் நல்லது. 

Link to comment
Share on other sites

  • 11 months later...

பொதுநல நோக்குடனும் தாயக மக்களின் மேம்பாட்டினைக் கருத்திற் கொண்டும் யாழிணையத்தில் 'கொரோனா விழிப்புணர்வு' விளம்பரம் ஒன்றிற்கான அனுசரணையை வழங்கிய உவகை நிர்வாகிக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.