Jump to content

ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3)

 

1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எழும் போது அவர்கள் இந்தியாவின் மானத்தை காக்கும் பொருட்டு கொந்தளிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஆண்-பெண் ஒழுக்கத்தை தற்காலிகமாய் வலியுறுத்த முயல்கிறார்கள்.

அடுத்து, இன்று பெண்கள் எல்லா தளங்களிலும் தமது அதிகாரத்தை செலுத்த, வலியுறுத்த முயன்று வருகிறார்கள். பண்பாட்டுத் தளங்களில், ஆண்-பெண் உறவு குறித்த எந்த வெளிப்படையான விவாதங்கள் நடந்தாலும் அவற்றை பெண்களுக்கு எதிரான ஆபாசமாய் சித்தரித்து போராடுவதை இந்த பெண் போராளிகளில் சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஒரு பெண் பாலியல் ரீதியாய் சித்தரிக்கப்படுவது, பெண் மீதான இச்சையை ஒரு படைப்பு சித்தரிப்பது நேரடியாய் பாலியல் குற்றங்களுக்கு காரணமாவதில்லை. மாறாக, பெண்ணுடல் மீது அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு பலாத்காரம் பயன்படும் போது பெண் துய்ப்பு கதையாடல்கள் அதற்கு துணைக்கருவியாகின்றன. ஆனால் துணைக்கருவியே பலாத்கார காரணம் அல்ல. பலாத்கார குற்றங்கள் நடப்புலகில் உள்ள ஆண்-பெண் பொருளாதார அரசியல் சமநிலையின்மையின் காரணமாகவே அதிகம் நடக்கின்றன. சமூக பொருளாதார மாற்றங்களே கலாச்சாரத்தை மாற்றுமே அன்றி நேர்மாறாக அல்ல. இதை பல சமயங்களில் நாம் புரிந்து கொள்வதில்லை. உதாரணமாய், சினிமாவில் பெண்கள் அதிகமாய் முடிவெடுக்கும் இடத்தில் இருந்தால் அங்கு பெண்கள் சுரண்டப்படுவது குறைவாகும். ஏனென்றால், ஏற்கனவே அதிகாரத்தில் கீழே உள்ளவர்களையே சுரண்ட முடியும். அப்படி சுரண்ட பாலியல் ஒரு வழிமுறை மட்டுமே. பாலியலுக்காக சுரண்டல் அல்ல சுரண்டலுக்காகவே பாலியல். இந்த நடப்பியல் பிரச்சனையை நம்மால் சுலபத்தில் சரி செய்ய முடியாது என்பதால் நாம் பாலியல் பண்பாட்டு சித்தரிப்புகளை தாக்குவதில் அதிக நேரத்தை செலுத்துகிறோம்.
 2003இல் ஷங்கரின் பாய்ஸ் படத்துக்கு எதிராய் தோன்றிய சர்ச்சைக்கும் இன்றைய ஹர்த்திக், ராகுல் சர்ச்சைக்கும் பெரிய வேறுபாடில்லை. ஷங்கரும் ஹர்த்திக் மற்றும் ராகுலும் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினார்கள். செக்ஸில் எப்போதுமே உடல் தான் பிரதானம். ஒரு பெண்ணை அவளது சுபாவத்துக்காக, ஆளுமைக்காக ஒரு பெண் இச்சிப்பதில்லை. அது இயல்பல்ல. பெண்கள் ஒரு ஆணைப் பற்றி அரட்டையடிப்பதை ஒட்டுக் கேட்பவர்கள் அவர்களும் ஆணின் நல்லியல்பைப் பற்றி அதிகம் பேசுவதில்லை; அவர்களும் ஒரு ஆண் “ஹாட்டாக” இருப்பதாய் சொல்லும் போது அவனது நல்ல மனத்தைப் பற்றி பேசுவதில்லை என அறிவார்கள். ஒரு பெண்ணுடலை அடைய வேண்டும் எனும் ஒரு ஆணின் அடிப்படையான இச்சையை நம் தமிழ் சினிமா என்றும் வெளிப்படையாக பேசினதில்லை. நமது ஹீரோ ஒரு பெண்ணை “உளப்பூர்வமாக” நேசிப்பான். அவளை முத்தமிடும் ஆசை கூட அவனுக்கு இராது. அவளை ஆடையின்றி பார்க்க ஏங்க மாட்டான். அந்த ஆசையை சில்க் ஸ்மிதா பாணியிலான குலுக்கு நடனக் காட்சிகள் அரங்கேற்றிட, ஹீரோவின் காதல் தூய்மையாகவே தக்க வைக்கப்படும். இந்த போலி பிம்பத்தை உடைத்தது ஷங்கரின் “பாய்ஸ்”. ஆனால் அதன் வெளிப்படையான பாலியல் உரையாடல்களை நம் கலாச்சார காவலர்களும் பெண்ணிய்வாதிகளும் கடுமையாய் எதிர்த்தனர். அவர்கள் “உளப்பூர்வ” காதலின் பாசாங்கையே விரும்பினர். ஷங்கர் அன்று பேசியதையே இன்று ஹர்த்திக்கும் செய்கிறார். செக்ஸே தனக்கு முக்கியம், பெண்ணை “உளப்பூர்வமாய்” நேசிப்பதல்ல என்கிறார். ஒரு நடன / மது விருந்தில் ஒரு பெண்ணைப் பார்க்கையில் அவளது பெயரோ முகமோ அல்ல, அவளது உடல்மொழி வெளிப்படுத்தும் இச்சையும் பாலியல் நோக்கமுமே தனக்கு முக்கியம் என்கிறார். இதில் என்ன தவறு? காதலித்த பின்பே செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என யார் இந்த காலத்தில் சொல்ல முடியும்?
 தற்காலிக பாலுறவுகளே இன்றைய நடைமுறை. உடல்ரீதியாய் ஈர்க்கப்படும் போது செக்ஸை நாடுவதும் அதனோடு உணர்வுரீதியாய் ஒரு பிணைப்பு ஏற்படும் போது காதலை நாடுவதுமே இன்றைய தலைமுறையினர் செய்வது. இதன்  ஆதாயம் என்னவென்றால் முந்தைய தலைமுறையினரைப் போல இவர்கள் காதலையும் காமத்தையும் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். எளிய உடல் ஈர்ப்புக்காக ஐ லவ் யூ சொல்லி ஒரு தேவையற்ற உறவில் போய் மாட்டிக் கொள்ள மாட்டார்கள். சமீபத்தில் “பியார் பிரேமா காதல்” இதையே நாயகியின் தரப்பாக முன்வைத்தது. இன்றைய ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் இப்படியே சிந்திக்கிறார்கள். கடந்த வருடம் நான் பதின்வயதான இன்றைய தலைமுறையினருடன் உரையாடிக் கொண்ட்டிருந்தேன். சில பெண்கள் மற்றும் ஒரு பையன் அந்த குழுவில் இருந்தார்கள். அந்த பையன் தான் சீக்கிரம் போக வேண்டும் என்றான். ஏன் என்றார்கள் அப்பெண்கள். ஒரு பையனை பார்க்க வேண்டும் என்ற அவன் அந்த பையனின் தோற்றத்தைப் பற்றி போகிற போக்கில் சொன்னான். அப்பெண்கள் அதைப் பிடித்துக் கொண்டு இருவரையும் சேர்த்து மிக ஆபாசமாய் பேசிக் கொண்டு போனார்கள். அந்த சீண்டல் பேச்சில் அவர்களுக்கு அப்பையன் மீதான இச்சை வெளிப்பட்டது. அவனது பாலுறுப்பை மறைமுகமாய் குறிப்பிட்டு அதற்கு ஆபத்து வரக்கூடாது என்றார்கள்; அவன் சந்திக்கப் போகும் ஆணுடன் ஓரின உறவு ஏற்பட்டு விடக் கூடாதே எனும் சின்ன பயம் அவர்களிடம் இருந்தது. இத்தகைய ஒரு வெளிப்படையான பேச்சை என் தலைமுறைப் பெண்கள் என் கல்லூரிப் பருவத்தில் நிச்சயமாய் பேசியிருக்க மாட்டார்கள். அவர்கள் பாலியல் பற்றி பட்டும் படாமல் பேசி நாணிக்கோணி சிரித்திருப்பார்கள். ஆனால் ஆணுடல் பற்றி இவ்வளவு வெளிப்படையாய் பேசியிருக்க மாட்டார்கள். இன்றைய பதின்வயதுப் பெண்களுக்கோ நான் அருகில் இருப்பது ஒரு பொருட்டே அல்ல.  ஏனென்றால் பாலியல் சாகசம் இன்று அவர்களின் அன்றாட கதையாடல்களின் பகுதியாகி இயல்பாகி விட்டது. அவர்களுக்கு இது ஆபாசமே அல்ல. ஆண்கள் இப்படித் தான் சிந்திப்பார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும்; தாம் இப்படி சிந்திப்பதில் தவறில்லை என்றும் தெரியும்.
 சுமந்த் சி ராமன் தன் பேட்டியில் “ஹர்த்திக் பேசுவதை கோடிக்கணக்கான இளைஞர்கள் கேட்கிறார்களே, அவர்கள் மனம் கெட்டு விடாதா? / கிரிக்கெட் வீரர்களை வழிபடும் எத்தனையோ இளம் பெண்கள் அவமானப்பட மாட்டார்களா?” எனக் கேட்கிறார். இன்றைய இளைஞர்கள் / இளைஞிகளைப் பற்றி அவருக்குத் தெரியாது என்பதையே இது காட்டுகிறது. ஹர்த்திக்கை நாடி வரும் இளம்பெண்களைப் பற்றி நாம் ஏன் இங்கு யோசிக்கக் கூடாது? எது அவர்களை ஈர்க்கிறது? ஹர்த்திக்கை மனமா? குணமா? அவரது பிம்பமமும் அதன் கலாச்சார அதிகாரமும் அவரது தோற்றமும் தானே? ஹர்த்திக் ஒரு பெண்ணின் உடல் பிம்பத்தைக் கொண்டு அவளை மதிப்பிடுகிறார் என்றால் அப்பெண் அவரது ஊடக பிம்பம், புகழ் மற்றும் பணத்தைக் கொண்டு அவரை மதிப்பிடுகிறார். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு டான்ஸ் கிளப்பின் காவலாளியிடம் இப்பெண்கள் பேசி போன் நம்பரைக் கொடுப்பார்களா? பிரபலமான மற்றும் பணம் படைத்த ஒருவரிடம் தானே செல்கிறார்கள். பெண்களும் ஆண்களைப் போன்றே பிம்பத்தைத் தாண்டி மனத்தை நாடுவதில்லை என்பதே உண்மை. அதுவே எதார்த்தம். அப்பெண்கள் அதை இங்கு வெளிப்படையாய் சொல்லப் போவதில்லை என்பதே அவர்களுக்கும் ஆண்களுக்குமான வித்தியாசம். இப்பெண்கள் ஹர்த்திக்கின் கருத்துக்களால் காயப்படும் வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவர்களே அதை நன்கு அறிவார்கள். ஹர்த்திக்கின் கருத்துக்கள் இன்றைய பதின் வயதினரை விட மூத்த வயதினரையே அதிகம் கலவரப்படுத்தி உள்ளது. அவர்கள் பார்க்க விரும்பாத, கேட்க விரும்பாத ஒரு உண்மையை ஹர்த்திக் அம்பலப்படுத்தி விட்டார்.
  ஹர்த்திக் பாண்டியாவும் ராகுலும் காமத்தையும் காதலையும் ஆரோக்கியமாக சரியாக புரிந்து கொண்டிருப்பதாகவே நான் நம்புகிறேன். உடலை மையப்படுத்தி சமூக அதிகாரத்தை வலியுறுத்தும் நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டோரால் மட்டுமே இதை ஏற்க முடியாது போகிறது.
இன்றைய ஊடகச் சூழல் எப்படியான ஒழுக்க அதிகாரத்தை நிறுவனங்களுக்கு கொடுக்கின்றன, இந்த அதிகாரத்தின் பின்புலத்தில் எப்படி பொதுமக்களின் அதிகாரமும் தனிமனிதர்களுக்கு எதிராய் செயல்படுகிறது என்பதை இப்போது கேட்க வேண்டும்.
இன்றைய சமூக வலைதள புரட்சி / போராட்ட சூழலில் அதிகாரம் ஒரு புதுவிதமாக நம்மை வந்தடைகிறது: முன்பு நேரடியாக நிறுவனங்கள் வழி நம்மை அதிகாரம் வந்து ஒடுக்கியது. இப்போது கண்ணுக்குப் புலனாகாத பல வழிகளில் அதிகாரம் கலாச்சார ஒழுக்கமாக தோன்றி வந்து ஒடுக்குகிறது. இந்த கலாச்சார ஒழுக்கம் பெண்ணியமாக, சமூக வலைதள போராட்டமாக, கொந்தளிப்பாக, வலதுசாரிகளின் இந்து பண்பாட்டு (சுமந்த் சி ராமன் ஹர்த்திக்கை விமர்சிக்கும் போது) முன்னெடுப்பாக இன்று திரண்டு வருகிறது. இந்த பன்முக ஒழுக்க அதிகாரம் ஒன்றோடு மற்றொன்று முரண்பட்டாலும் அதன் நோக்கத்தில் ஒன்று படுகிறது - அது தன் அதிகாரத்தை, தன் முடிவெடுக்கும் வலிமையை நிறுவனங்கள் மீது வலியுறுத்த விரும்புகிறது. இதனால் தான் முந்தைய நிறுவனத்தில் செய்த (அல்லது செய்ததாய் நம்பப்படுகிற) குற்றத்துக்காக சம்மந்தமில்லாத ஒரு நிறுவனம் விசாரணை செய்யும் நிலை இன்று தோன்றுகிறது. இதனால் தான் கிரிக்கெட்டை நிர்வாகிக்க வேண்டிய ஒரு நிறுவனம் ஒரு வீரரின் கருத்து வெளிப்பாட்டை நுணுகி ஆராய்ந்து அதற்காக அவரை தற்காலிக நீக்கம் செய்து தண்டிக்க  வேண்டி வருகிறது.

பெண் அதிகாரமும் வலதுசாரி அதிகாரமும் கும்பல் அதிகாரமாய் மாறி கோர முகம் காட்டும், ஊடகங்கள் வழியே கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த காலத்தில் பாசாங்கே, இரட்டை நிலையே நாம் அனைவரின் ஆயுதமாக இருக்க முடியும்; முகமூடிகளே இனி நம்மை பாதுகாக்கும். இந்த விவகாரம் குறித்த பேட்டியொன்றில் பாஸ்கி சொல்வது போல, இனி நாம் சிகரெட் பிடிக்கும் முன் “புகைபிடிப்பது உடல்நலத்துக்கு கேடு” எனும் எச்சரிக்கையை கழுத்தில் அட்டையொன்றில் எழுதி தொங்க விட வேண்டும். அப்படி செய்தால் நீங்கள் பொதுவிடத்தில் புகைபிடித்தால் கூட பாராட்டுவார்கள். இன்று நீங்கள் ஒரு பெண்ணை செக்ஷுவலாக அணுகி உறவு விட்டு, வெளியே அதைப் பற்றி பேசும் போது “பெண்களின் நல்ல சுபாவமும் பண்பும் ஆளுமையும் மட்டுமே என்னை ஈர்க்கிறது, நான் ஒரு பெண்ணின் கண்ணை நோக்கி உரையாடும் பண்பாளன்” என புருடா விட வேண்டும். ஹர்த்திக் மற்றும் ராகுலின் கருத்துக்கள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை, அவை கண்டிக்கத்தக்கவை என விராத் கோலி இச்சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தார். ஆனால் இதே கோலி இந்திய அணிக்கு ஆடத் துவங்கிய புதிதில் (சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு) அளித்த டிவி பேட்டி ஒன்றில், டேட்டிங் ஆப் மூலம் சந்திக்க நேர்ந்த ஒரு இளம்பெண்ணுடனான தனது அனுபவம் ஒன்றைப் பற்றி பேசுகிறார். “அந்த பெண்ணை நேரில் பார்த்த உடனே நான் திரும்ப ஓடி வந்து விட்டேன்.” பேட்டி எடுப்பவர் கேட்கிறார், “ஏன் மிஸ்டர் கோலி?” கோலி மறைக்காமல் சொல்கிறார், “அவள் முகம் ரொம்ப அசிங்கமாக இருந்தது.” இதையே கோலி இன்று சொல்லி இருந்தால் என்ன ஆகி இருக்கும்? பூஜை போட்டு பூசணிக்காய் உடைத்து சூலம் ஏற்றியிருப்பார்கள். ஹர்த்திக் சச்சையை ஒட்டி இந்த பல வருடங்களுக்கு முந்தைய குறும்பேட்டி சமீபத்தில் டிரெண்டிங் ஆனது. ஆனால் இன்றைய கோலியோ இப்படி நிச்சயம் பேச மாட்டார். அவர் இதையே இப்படி மாற்றி சொல்வார், “அப்பெண்ணை சந்தித்து உரையாடிய பின் அவருடன் என்னால் மனதளவில் உடன்பட முடியாது என உணர்ந்து கொண்டேன். அதனால் தான் நான் டேட்டிங்கை தொடர முடியாது எனக் கூறி வந்து விட்டேன்.” இப்படி “பொய்” பேசும் சாமர்த்தியத்தை கோலி இன்று பெற்று விட்டார். இன்று உலகமே ஒரு கண்காணிப்பு கோபுரம். ஆகையால், இன்று பொய்யும் புரட்டும் பெரும்பாலும் தேவைக்காக மட்டும் சொல்லப்படுவதில்லை; போலித்தனம் இன்று ஒரு பாதுகாப்பு அரணாக, அரசியல் சொல்லாடலாக மாறி விட்டது. பாசாங்கை பயிலாதவர்களுக்கு இன்று விசாரணைக் கமிஷன் தான்!
ஹர்த்திக்கின் பெற்றோர்கள் செய்த பெரிய தவறு தம் பிள்ளைக்கு பொய்யை கற்பிக்காதது தான். ஆனால் இத்தகைய சர்ச்சைகள் அவருக்கு பாடம் புகட்டி விடும். அப்படி பாடம் கற்று, “முதிர்ந்த” பின் தான் ஹர்த்திக் உண்மையில் ஆபத்தானவராக இருப்பார்!

நன்றி: உயிர்மை

http://thiruttusavi.blogspot.com/2019/04/3_11.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.