Jump to content

ராகுல் காந்தி - "தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல் காந்தி - "தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது"

ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராகுல் காந்தி

"தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது; தமிழர்களால் மட்டுமே அது முடியும்" என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

அடுத்த வாரம், அதாவது வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ளாத நரேந்திர மோதி வெறுப்புணர்வு அரசியலை கொண்டு தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது," என்று அவர் கூறினார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

அதுமட்டுமின்றி, பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தொழில்துறைகள் முடங்கியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

"ஆடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூர், பட்டுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் ஆகியவற்றிலுள்ள தொழில்துறைகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக முடங்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் செயலிழந்த தொழில்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்று ராகுல் காந்தி பேசினார்.

பண மதிப்பிழப்புபடத்தின் காப்புரிமைAFP

பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திரும்ப செலுத்தாமல் தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் சொகுசாக இருப்பதாகவும். ஆனால், ஆயிரக்கணக்கில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் சிறைக்குள் தள்ளப்படும் மோசமான நிலை இருப்பதாகவும் கூறிய ராகுல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அந்நிலையை மாற்றி காட்டுவோம் என்றும் கூறினார்.

"காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒத்த கொள்கைகளை கொண்டுள்ளன. இந்த கூட்டணி வெற்றிபெற்றால், தமிழர்கள் தமிழர்களால் ஆட்சி செய்யப்படுவார்கள். ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்," என்று அவர் மேலும் கூறினார்.

நாக்பூரிலிருந்து செய்யப்படும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மறைமுகமாக ராகுல் விமர்சித்தார்.

சேலத்தில் நடைபெற்ற திமுக கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒன்றாகக் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் இந்தத் தேர்தலில் கதாநாயகன் என்று கூறினார்.

அதே கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தத் தேர்தல் இரு கொள்கைகளுக்கு எதிரான தேர்தல் என்று கூறினார்.

https://www.bbc.com/tamil/india-47905548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேவையா? இல்லையா? என்பதை மாநிலங்கள் முடிவு செய்யும்: சேலத்தில் ராகுல் காந்தி பேச்சு

சேலத்தில் திமுக வேட்பாளர்களையும் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா இல்லையா என்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ள் அதிகாரம் அளிக்கப்ப்படும் என உறுதியளித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் வரவேற்புரையைத் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி நீட் பிரச்சினை, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, தொழில்துறை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். அவரது பேச்சை திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் மொழிபெயர்த்தார்.

 

ராகுல் காந்தி பேசியதாவது:

''இங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இந்த வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் தொலை தூரங்களிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 2019 தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான மோதலாக இருக்கிறது.

பாஜக ஒரே மொழி, ஒரே மதம், ஒற்றைக் கலாச்சாரம் என்ற சித்தாந்தத்தை முன்னெடுக்கிறது. இந்திய தேசத்தில் பல்வேறு கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள், பார்வைகள் இருக்கின்றன. இந்தப் பன்முகத்தன்மை ஒருங்கிணைந்ததுதான் இந்தியா என நம்புகிறோம். ஆனால், இந்த அடிப்படையை எதிர்க்கும் சித்தாந்தத்தை பாஜக முன்னிறுத்துகிறது. இதனை காங்கிரஸ் எதிர்க்கிறது.

அதிகாரப் பகிர்வு அவசியம்

பிரதமரின் அலுவலகம் தான் தமிழர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டியது பிரதமர் அலுவலக அதிகாரிகள் அல்ல. தமிழர்கள் தமிழர்களால் ஆளப்பட வேண்டும். இந்தியாவை வலுவான நாடாக நிலைநிறுத்த தமிழர்களின் குரல் அத்தியாவசியமானதாக உள்ளது.

அதற்கு மத்திய அரசிடமே எல்லா அதிகாரமும் குவிந்திருத்தல் கூடாது. அந்த அதிகாரப் பகிர்வைப் பற்றிதான் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். அதனை வலியுறுத்தியோ திமுக காங்கிரஸ் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பேசும்போது தனது தந்தையை அவமதித்தவர்கள் பற்றிப் பேசினார்.

உண்மையில் அவர்கள் ஸ்டாலினின் தந்தையை மட்டும் அவமதிக்கவில்லை. ஏனெனில் கருணாநிதி சாதாரண நபர் அல்ல. கருணாநிதியை அவமதித்தன் மூலம் தமிழர்களை அவமானப்படுத்தியிருக்கிறார்கள். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி ஸ்டாலின் பேசியதை என்னால் உணர முடிகிறது.

நீட் தமிழகம் முடிவு செய்யட்டும்

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பாஜகவைப் போல் ஒரு பூட்டப்பட்ட அறைக்குள் உருவாக்கப்பட்ட அறிக்கை அல்ல. எங்களுடைய தேர்தல் அறிக்கை என்பது வெளிப்படையானது. மக்களின் உணர்வுகளை உள்வாங்கியதாக உள்ளது. அப்படி மக்களின் எண்ணங்களை உள்வாங்கியபோது எனக்கு ஓர் இளம்பெண்ணின் பெயர் சொல்லப்பட்டது. அனிதா என்ற பெயர். அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வால் இனியும் அனிதாக்கள் தற்கொலை தமிழகத்தில் நடைபெறாது.  அதற்காகவே எங்கள் தேர்தல் அறிக்கையில், நீட் தேர்வு தேவையா இல்லையா? என்பதை மாநிலங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இந்தத் தேர்வின் காரணமாக இளம் மாணவிகள் தற்கொலை செய்வதை நாங்கள் விரும்பவில்லை.

மோடி கருத்துப் பரிமாற்றங்களில் நம்பிக்கையற்றவர்..

நாங்கள் கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் தீர்வுகளை எட்டமுடியும் என நம்புகிறோம். ஆனால் மோடியும் பாஜகவும் இதில் நம்பிக்கையற்றவர்கள். அதனால்தான் ஒருநாள் இரவு 8 மணிக்கு இந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கும் அறிவிப்பை மோடி வெளியிட்டார். ரூ.500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தார். அதனால்தான் திருப்பூர் என்ற ஆடை கேந்திரமும், பட்டுத் தொழிலின் தலைநகரான காஞ்சியும் வேதனைப்படுகிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் திறனை அழிக்க வேண்டும் என்று மோடி இதனைச் செய்தார்.

பணமதிப்பு நீக்கம் பற்றி மோடி யாரிடமாவது கேட்டாரா? எந்த சிறுதொழில் முதலாளியாவது அழைதுப் பேசினாரா? அவர் ஒருவேளை 12 வயது குழந்தையிடம் கேட்டிருந்தால் கூட பதில் சொல்லியிருக்கும்.

தமிழக விவசாயிகளை மோடி என்ன செய்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் ஆடையில்லாமல் போராடினார்கள். அவர்களை அழைத்து ஏன் போராடுகிறீர்கள் எனக் கேட்கும் நாகரிகம்கூட பிரதமருக்கு இல்லை. ஆனால், ஊழல்வாதிகளைக் கட்டித் தழுவுகிறார். நீரவ் மோடியுடன் அமர்ந்து போஸ் கொடுக்கிறார்.

பின்னர், கப்பார் சிங் கொள்ளைக்கார வரியை விதித்தார். 5 விதமான வரி. 28% வரி. நெசவாளிகள் நூல் வாங்க வரி செலுத்த வேண்டியுள்ளது. நெசவுத் தொழிலுக்கான கருவிகளை வாங்க வரி விதிப்பு உள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் உண்மையான ஜிஎஸ்டி வழங்குவோம். ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிமையான ஜிஎஸ்டி வரி என்ற சீர்திருத்தம் செய்வோம்.

ஏழை மக்களுக்கான ரூ.72,000

மோடி அம்பானிக்கும் அதானிக்கும் வங்கிக் கடன், சலுகைகள் எனப் பணம் கொடுத்தால், காங்கிரஸ் திமுக ஏழை மக்களுக்குக் கொடுக்கும். அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் நியாய் யோஜனா. இது ஒரு புரட்சிகரமான திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். பெண்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் செலுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.72,000 வீதம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பணம் செலுத்தப்படும்.

பெண்களே இந்தியாவின் பலம்

பெண்கள்தான் இந்தியாவின் பலம். ஆனால் அவர்களுக்கு மக்களவை, மாநிலங்களவையில் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. இதனை உறுதிப்படுத்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும். அதேபோல், மத்திய அரசு அலுவலகப் பணிகளில் 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மோடி என்ன செய்தார். உண்மையில் எதுவும் செய்யாமல் மோடி உங்களின் உணர்வைப் புண்படுத்தியிருக்கிறார். வெற்று அறிவிப்பை மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் அறிவித்தார்.

மோடி பணக்காரர்களுக்கு தொழில் வளர்ச்சிக்கு பணம் வழங்கினார். இளைஞர்களுக்கு என்ன செய்தார். மேக் இன் இந்தியா பேப்பரில் இருக்கிறது. ஆனால், நீங்கள் உங்கள் கையில் இருக்கும் செல்போன், நீங்கள் அணிந்திருக்கும் ஆடை, நீங்கள் போட்டிருக்கும் காலணியைப் பாருங்கள். எல்லாம் மேட் இன் சைனா என்று சொல்லும். நாங்கள், இளைஞர்கள் தொழில் தொடங்க வாய்ப்பளிப்போம். புதிதாக தொழில் முனைவோர் 3 ஆண்டுகளுக்கு எந்த ஒரு அரசுத் துறையிடமும் அனுமதி பெறும் கெடுபிடி இருக்காது''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26818175.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.