Jump to content

கோடை காலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலம் ——————————————————————————————————

 


என் வீட்டு வாசலில் பூக்கள் விரியும் 
முற்ரத்து மரங்களில் மூச்சுகள் கேக்கும் 
காலையில் வந்து இனி காக்கையும் குருவியும் பாடும்  
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் 

 

கானகம் போல் ஒரு சோலை விரியும் 
காலத்தின் பிறப்பு ஒன்றை சொல்லி சிரிக்கும் 
கள்ளமாய் வந்து இனி தேனீக்கள் 
காலை பூக்களில் காதல் கீதம் இசைக்கும் 

 

கண்ணை பறித்திடும் கன்னியின் கூந்தலில் 
காலை மலர்ந்திட்ட  மல்லிகை வாசம் 
எண்ணக் கனவினை சொல்லி சிரித்திடும் 
எங்கள் மங்கையர் கோலங்கள் வாசலில் பூத்திடும்  

 

தென்னம் தோப்பினில் தொட்டிலை கட்டி 
சிட்டு குருவின் சிரிப்பு ஒலி கேக்கும் 
வானை திறந்து ஒரு வானவில் பூக்கும் 
வா என்று கை தட்டி பூமி சிரிக்கும்  

 

கடல் கரையினில் காதல் கிளிகள் 
கடலின் அலையில் விழிகள் நனைத்து 
கண்ணின் இமையால் எதோ சொல்லி 
காதல் மொழியில் துணையை தேடும்  

 

தென்றல் வந்து இனி என்னோடு பேசும் 
தெம்மாங்கு பாடல்  காதினில் கேக்கும் 
காலை கனவினில் கவிதைகள் சொல்லும் 
என் கதவை திறந்து ஒரு சூரியன் பூக்கும் .


——————————————————————————————————————

பா .உதயகுமார் /Oslo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி குமாரசாமி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா வசந்தகாலத்தின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் .....எங்கள் வீடுகளில்  மாலையில் பூக்கும் மல்லிகையைத்தான் மனைவியர் சூடி மஞ்சத்துக்கு வருவார்கள்......!   👍

Link to comment
Share on other sites

எனக்குப் பொதுவாக இயற்கைக் கவிதைகள் பிடிக்கும். உள்ளத்தில் ஓருவகை மலர்ச்சியை ஏற்படுத்திய நல்லதோர் கவிதை இது. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை இல்லாமல் இந்த உலகுக்கு உயிர் இல்லை .மல்லிகை வாசம் உங்கள் பெயரில் இருந்தே தெரிகிறது நீங்கள் இயற்கையின் நண்பன் என்று . சுவி நீங்கள் மாலையில் பூக்கும் மல்லிகையை காதலிப்பது தெரிகிறது.கருத்துக்கு நன்றிகள் பல .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.