Jump to content

பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பளையில் நாய்கள் காப்பகம் திறந்து வைப்பு

April 12, 2019

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_2976.jpg?resize=800%2C534கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவில் இயக்கச்சி பகுதியில் சிவபூமி அமைப்பினரால் நாய்கள் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று( 12-04-2019 )பிற்பகல் நான்கு மணியளவில் சிவபூமி நாய்கள் சரணாலயம் வீடற்ற நாய்களின் காப்பகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அநாதரவாக தெருக்கள் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற நாய்கள் குறித்த காப்பகத்தில் பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சிவபூமி அமைப்பின் தலைவர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் ஆதீன குரு முதல்வர் , பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பளை பிரதேச செயலாளர் ஜெயராணி, பிரதேச சபை தவிசாளர் சுரேன், வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்

IMG_2964.jpg?resize=800%2C534IMG_2970.jpg?resize=800%2C534IMG_2971.jpg?resize=800%2C534  IMG_2978.jpg?resize=800%2C534IMG_2988.jpg?resize=800%2C534

 

 

http://globaltamilnews.net/2019/118197/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணை உள்ளம் கொண்டவர்கள்.......பாராட்டுக்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கருணை உள்ளம் கொண்டவர்கள்.......பாராட்டுக்கள்......!   👍

ஒரு சர்சையை கிளப்பா விட்டால் என்னவென்று கேழுங்கள் நாய் காப்பகம் அல்ல இந்த சிவசேனை என்ற அமைப்பை😋 வெயில் காலம் என்பதால் விசர்  அதிகரிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம். அதேவேளை யாழ் நகர் உட்பட வடக்குக் கிழக்கில்.. யாசகம் செய்யும் ஊதிபத்தி விற்கும் பாடசாலைச் சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு அமைப்பை உருவாக்கி உதவலாமே. நாம் வழங்கும் சிறுதொகை பணம் என்பது எவ்வளவுக்கு அவர்களுக்கு உதவும் என்பதற்கும் அப்பால்.. அவர்கள் உண்மையில் உண்மையைச் சொல்லியா செயற்படுகிறார்கள் என்ற சந்தேகமும் எழுகிறது. 

யாழ் நகரில் ஊதுபத்தி விற்ற ஓர் சிறுவனை விசாரித்த இடத்தில் அவன் தன் தங்கையின் பள்ளிக்கூட பாக் வாங்குவதற்காவும் செலவுக்காகவும் ஊதுபத்தி விற்பதாகச் சொன்னான். பள்ளிக்கூடம் முடிந்த கையோடு அந்தப் பையன் ஊதுபத்தி விற்கக் கண்டோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

ஊதிபத்தி விற்கும் பாடசாலைச் சிறுவர்களின் மறுவாழ்வுக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு அமைப்பை உருவாக்கி உதவலாமே. நாம் வழங்கும் சிறுதொகை பணம் என்பது எவ்வளவுக்கு அவர்களுக்கு உதவும் என்பதற்கும் அப்பால்.. 

யாழ் நகரில் ஊதுபத்தி விற்ற ஓர் சிறுவனை விசாரித்த இடத்தில் அவன் தன் தங்கையின் பள்ளிக்கூட பாக் வாங்குவதற்காவும் செலவுக்காகவும் ஊதுபத்தி விற்பதாகச் சொன்னான். பள்ளிக்கூடம் முடிந்த கையோடு அந்தப் பையன் ஊதுபத்தி விற்கக் கண்டோம். 

நெடுக்கர்,

எனது அபிப்பிராயம், இது போன்ற சிறுவர்களிடம், முடிந்த அளவு பொருட்களை வாங்கி ஊக்கிவிக்க வேண்டும். அவர்களை அதிலிருந்து வெளியேற வைக்கக்கூடாது. சிறுவன் பாடசாலை போவதும் சிறப்பானது.

உலக வரலாறில் பெரும் தொழிலதிபர்களின் ஆரம்பகாலம் இவ்வாறு தானே இருந்திருக்கிறது.

தமிழகத்தில் கூட, ஏழைகளிடம் பேரம் பேசாது வாங்க சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites



Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/

அன்பே சிவம் என்பர்.

கடவுளின் பெயரால் கோவில்களுக்கு கொட்டி,அள்ளி, கிள்ளிக் கொடுக்கின்றவர்களை விட, இறையின் பெயரால், மதத்தின் பெயரால் இவ்வாறான செயல்களை செய்கின்றவர்களை வணங்கி வாழ்த்தி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஊருக்கு போகும் ஒவ்வொரு தடவையும் தெருக்களில் விட்டேத்தியாக திரியும் நாய்களை கூட்டம் கூட்டமாக காணலாம். சும்மா இருக்காமல் தெருவில் போகும் வாகனங்களையும் தம் எல்லை வரை விரட்டிக் கொண்டு வந்து தாமும் அடிபட்டு, வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி இவை செய்யும் சேட்டைகள் கனக்க.

மாடாகவோ ஆடாகவோ பேட்டுக் கோழியாகவோ போன்ற பெறுமதிமிக்க உயிரினமாக இல்லாமல் மனுசருக்கு வெறுமனே நன்றியை தவிர வேறோன்றையும் தராத இந்த அப்பாவி உயிரினங்களுக்காக காப்பகம் ஒன்றை திறந்த சிவபூமி அமைப்பினருக்கு அன்பும் பாராட்டுகளும் நன்றியும்.



Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:


Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/

அன்பே சிவம் என்பர்.

கடவுளின் பெயரால் கோவில்களுக்கு கொட்டி,அள்ளி, கிள்ளிக் கொடுக்கின்றவர்களை விட, இறையின் பெயரால், மதத்தின் பெயரால் இவ்வாறான செயல்களை செய்கின்றவர்களை வணங்கி வாழ்த்தி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

ஊருக்கு போகும் ஒவ்வொரு தடவையும் தெருக்களில் விட்டேத்தியாக திரியும் நாய்களை கூட்டம் கூட்டமாக காணலாம். சும்மா இருக்காமல் தெருவில் போகும் வாகனங்களையும் தம் எல்லை வரை விரட்டிக் கொண்டு வந்து தாமும் அடிபட்டு, வாகனங்களையும் விபத்துக்குள்ளாக்கி இவை செய்யும் சேட்டைகள் கனக்க.

மாடாகவோ ஆடாகவோ பேட்டுக் கோழியாகவோ போன்ற பெறுமதிமிக்க உயிரினமாக இல்லாமல் மனுசருக்கு வெறுமனே நன்றியை தவிர வேறோன்றையும் தராத இந்த அப்பாவி உயிரினங்களுக்காக காப்பகம் ஒன்றை திறந்த சிவபூமி அமைப்பினருக்கு அன்பும் பாராட்டுகளும் நன்றியும்.



Copyright Global Tamil News

Read more at: http://globaltamilnews.net/2019/118197/

உங்களிற்க்கு உங்கள் பிரச்சனை.எது எப்படியோ அந்த அமைப்பிக்கு பாராட்டுக்கள்.அதோட பெட்டடை நாய் தாய்மார்களுக்கு கருத்தடை செய்வது இன்னும் பிரச்சனைகளை குறைக்க்கும்;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதி விபத்துகளில் முக்கியபங்கு நாய்களிற்கு இருக்கிறது, குறிப்பாக மோட்டார் சைக்கிள் செலுத்தும்போது திடீரென்று வந்து விபத்தினை ஏற்படுத்திவிடும்.
அநாதரவாய் இருக்கும் நாய்களை காப்பகத்தில் பராமரிப்பதன் மூலம் விசர் நாய்கடி போன்றவற்றை குறைக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த நாய்களுக்கெல்லாம் சைவ உணவா கொடுப்பினம் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

உந்த நாய்களுக்கெல்லாம் சைவ உணவா கொடுப்பினம் 🤔

ஒம்  ஒம்....சாம்பாறும் சோறும் என்று சொன்னவர் ....ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முறை பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன் ( ஐ மீன் உடைக்கிறன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

அடுத்த முறை பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன் ( ஐ மீன் உடைக்கிறன்)

தெருவில் நின்றால் கல்லெறிவோம்..
காப்பகத்தில் நின்றால் தேய்காய் ஏறிவோம் ...😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, putthan said:

தெருவில் நின்றால் கல்லெறிவோம்..
காப்பகத்தில் நின்றால் தேய்காய் ஏறிவோம் ...😀😁

வைரவர் சாமிக்கு தேங்காய் ..

"பளை வரட்டும் ஒரு கூடை தேங்காய் வாங்கி எறியுரன்" - இதற்கு இன்னும் ஒரு பின்னணி இருக்கிறது ... நாதமுனி, கு.சா அண்ணா மேலதிக தகவல் தருவார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தர்ப்பம் அந்த நாய்களுக்கு உணவளிக்க வந்தால் இந்த சிவசேனை அமைப்பின் வேலையை அந்த ஒரு நேர சாப்பாட்டுடன் முடித்து வைப்பன் .

மனிசன் சொந்த இடத்துக்கு போக முடியவில்லை இன்னும் தெரு தெருவா பிச்சை எடுக்காத குறையில் சிறுவர்கள் சிறுமிகள் நேற்று பிள்ளயார் கோவிலாக இருந்தது விடிந்ததும் புத்தர் கோவிலாகுது அதை தடுக்க வக்கில்லை நாய் வளர்த்து விளையாடினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அபராஜிதன் said:

எல்லாரையும் திருப்தி படுத்தணும்னா அது விபச்சாரியால தான் முடியும் 

அதென்னண்டு உங்களுக்கு தெரியும்? 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.