Jump to content

”அல்லா இதற்கான பதிலடியை கொடுப்பார்” - சவுதி வான்வழித் தாக்குதலால் வீழ்த்தப்படும் ஏமன் சிறார்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ngbjpg

சவுதி தாக்குதலில் பலியான தனது மகளை பார்த்து அழும் தந்தை

 

”எனது தங்கை எந்தத் தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும்  இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின்  தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை.

தென் மேற்கு ஆசிய  நாடான ஏமனில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே  உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு)  ஆதரவாக செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

இதுவரை உள்நாட்டுப் போர் காரணமாக 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வறுமையின் கொடிய பசியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இவர்களில் 50 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர்.

20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.

கடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும்.  அதில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்திருந்தது. அரசு - கிளர்ச்சியாளர்கள் இரண்டு தரப்பிலும் போர்க் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

இதன் காரணமாக உலகிலேயே ஏமன் மனிதாபிமான நெருக்கடி அதிகமுள்ள நாடாக இருக்கிறது.

njpg

ஏமனில் கடை வாசலில் குழந்தையுடன் உதவி கேட்டு நிற்கும் பெண்

 

தினம் தினம் வான்வழித் தாக்குதலை நடந்தும் சவுதி - கூட்டுப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தும் அவை தொடர்ந்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை ஏமன் அரசு படைக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் தொடர் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் சமீபத்தில் ஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்தது.

பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், மசூதிகள், சந்தைகள் என எந்த பரிவும் இல்லாமல் சவுதி கூட்டுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் கடந்த 9 ஆம் தேதி  ஏமன் தலை நகர் சனாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர்.  பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்த குழந்தைகளின் உடல்களை அப்பள்ளியில் பயின்ற குழந்தைகள் சுமந்து சென்ற புகைப்படங்கள் உலக நாடுகளின் மவுனத்தை கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது.

bfvdjpg

சவுதி வான்வழி தாக்குதலால் பலியான குழந்தைகளை சுமந்து செல்லும் பள்ளி சிறுவர்கள்

 

ஆனால் இது குறித்து சவுதி தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

வழக்கம்போல் நாங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என்று சவுதி கூறவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் கடந்த கால வரலாறுகளும் அவ்வாறுதான் உள்ளன.

அதுமட்டுமில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அனுப்பி வைக்கப்படும் உணவு மருத்துகள் செல்லும் கடல் வழி பாதையையும் சவுதி தடுத்து வைத்திருக்கிறது.

ரத்தான அமைதி பேச்சுவார்த்தை

கடந்த செப்டம்பர் மாதம் ஏமன் அரசுக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தது.  ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நாசம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்று கூறி  ஏமன் அரசுக் குழு இந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது.

உலக நாடுகளின் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்படுமா சவுதி?

பட்டினியாலும், வான்வழி தாக்குதலும் ஏமனில் இளம் தலைமுறைகள் பலியாகிக் கொண்டு வருவதையும் இனியும் கண்டு காணாமல் இல்லாமால் உலக நாடுகள் சவுதிக்கு எதிரான வலுவான குரலை கொடுக்க வேடும் என்று பல்வேறு குழந்தைகள் தன்னார்வ நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சிரியாவை போன்ற கவனம் ஏமனுக்கு கிடைக்குமா..? பொறுந்திருந்து பார்போம்...

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

https://tamil.thehindu.com/world/article26829198.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.