Jump to content

கொழுப்பைக் கொழுப்பால் குறைக்கலாம் - அனுபவப் பகிர்வு


Recommended Posts

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். 

keto_diet.jpg

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.
 

எச்சரிக்கை

இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
 

குறிப்பு

சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை.

img1b.png

உடலுக்கான சக்தியின் தேவை

பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 

1. முதலாவது காபோஹைதரேட்
இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. 

சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும்.  அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

  • ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 

2. இரண்டாவது கொழுப்பு.
முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும்.

  • ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும்.
     

வரலாற்றுக் குறிப்பு

ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 

20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். 

குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. 

இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது.
 

ஒப்பந்தம்

கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ?

இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை.  என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Pyramide2.png

 

சமன்பாடு

கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 
150 கிராம் கோழி = 350 கி.கலோரி 
ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி 

ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.

இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம்
.

அனுகூலங்கள்

கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன.

  • நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்
  • கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை
  • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides)
  • இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது
  • மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
  • சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது
  • சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும்
  • ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும்.
  • இன்னும் பல…
     

தீமைகள்

  • உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
  • நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்
  • கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
  • படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும்.

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.
தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.

தொடரும்.

Link to comment
Share on other sites

35 minutes ago, இணையவன் said:

அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

தொந்திக் கொழுப்பு கொழுப்பு உணவினால் மட்டுமே உருவாகிறது என இதுவரை எண்ணியிருந்தேன். 

நீங்கள் குறிப்பிட்டபடி காபோஹைட்றேற் ➡️குளுகோஸ் ➡️ கொழுப்பு மாற்றம் தான் உண்மையான காரணம் என அறிந்ததும் காபோஹைட்றேற் அளவைக் குறைக்க வேண்டிய அவசியம் இன்னும் நன்றாகப் புரிகிறது. 😊

43 minutes ago, இணையவன் said:

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.

இதை அறியத்தான் மிக ஆவலுடன் உள்ளேன். காபோஹைட்றேற்ஐக் கட்டுப்படுத்த எவ்வளவு முயன்றும் கடினமாக உள்ளது. பரம்பரை பரம்பரையான உணவுப்பழக்கமோ தெரியவில்லை! 😃

தொடருங்கள் அண்ணா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். 

keto_diet.jpg

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேலை நாடுகளில பரவி வருகிறது. நானும் இதனை முயன்று பார்க்கலாமே என்ற மூன்று மாதங்கள் இந்த முறையை பின்பற்றிய எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
நான் மருத்துவ நிபுணர் கிடையாது, வாசித்துக் கேட்டு அறிந்து கொண்டவற்றைக் கொண்டு பரீட்சித்துப் பார்த்து அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இதன் கருப் பொருளில் உறுதியாக இருந்தாலும் சில குறிப்புகளின் தவறுகள் இருக்கலாம். மருத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைத் தாராளமாகச் சுட்டிக் காட்டலாம்.
 

எச்சரிக்கை

இம் முறையைப் பின்பற்றுபவர்கள் இக் கட்டுரையை முழுமையாகப் படித்தபின் முடிவெடுங்கள். இணையத் தளங்களிலும் இது பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. இது பற்றி முழுமையான புரிதலின்பின் முயற்சி செய்யுங்கள். கொலஸ்ரரோல் நீரிழிவு தைரொயிட் போன்றவற்றிற்கு மருந்து பாவிப்பவர்கள் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றுங்கள்.
 

குறிப்பு

சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் உணவு முறை இன்றுள்ளதை விடத் முற்றிலும் மாறுபட்டதாக இருந்துள்ளது. அதாவது 20-40 வீதமாக இருந்த காபோஹைதரேற்றின் அளவு இன்ற 55 வீதத்தைத் தாண்டியுள்ளது. அதிலும் தமிழரின் உணவில் சுமார் 60 வீதத்துக்கு மேல் காபோஹைதரேட் உள்ளது. மனித வரலாற்றில் இதுவரை இந்த அளவு சீனி, மா, அரிசி போன்றவற்றை நாம் உண்டதில்லை என்றே தோன்றுகிறது. எனது பாட்டனார் தனது வாழ்நாள் முழுவதும் சாப்பிட்ட மொத்தச் சீனியை இன்று எனது பிள்ளை 7 வயதுக்குள் சாப்பிட்டு விடுகிறது. உடலுக்குப் பிரதான எதிரி சீனியே தவிர கொழுப்பில்லை.

img1b.png

உடலுக்கான சக்தியின் தேவை

பிரதானமாக இரண்டு வழிகளில் எமது உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. 

1. முதலாவது காபோஹைதரேட்
இதற்குள் அரிசி கோதுமை போன்ற தானியங்கள், சீனி மற்றும் பழங்களில் உள்ள இனிப்பு (fructose), பால் (lactose) போன்றவை பிரதானமானவை. இவை தவிர மரக்கறி வகைகளிலும் கணிசமான அளவு உண்டு. 

சுருக்கமாகச் செமிபாட்டினை விளக்குவதானால், காபோஹைதரேட்டின பெரும் பகுதி செமிபாட்டுத் தொகுதியால் குளுக்கோசாக மாற்றப்பட்டு இரத்தத்தில் ககலக்கப்படுகிறது. இரத்தத்திலிருந்து ஒரு பகுதி குளுக்கோசை ஈரல் சேமித்து வைத்திருக்கும். மீதியானவை தசைகளில் சேமிக்கப்படும். அளவுக்கு மிஞ்சிய குளுக்கோஸ் உடலுக்கு நஞ்சு போன்றது. இரத்தத்தில் அதிகமான சீனி ஈரலைப் பாதிக்கும். ஈரலுக்கு அதிக வேலைப்பளவைக் கொடுக்கும்.  அத்தருணத்தில் இன்சுலின் சுரக்கப்பட்டு மிதமிஞ்சிய குளுக்கோள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேமிக்கப்படும். சேமிக்கப்பட்ட இந்த வகையான கொழுப்ப்பபினை உடல் மீண்டும் சக்தியாக்கிப் பாவிக்கப் பஞ்சிப்படும். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேமிக்கப்படும் கொழுப்பால் தொந்தி ஏற்படும்.

  • ஒரு கிராம் காபோஹைதரேட் ஒட்சிசனோடு சேர்ந்து 4 கிலோ கலோரி (கி.கலோரி) சக்தியை வெளியிடுகிறது. 

2. இரண்டாவது கொழுப்பு.
முளுக்கோஸ் இரத்தத்தில் தீர்ந்துபோகும் தருணத்தில உடல் வேறு வழிகளில் சக்தியைத் தேடவேண்டிய தேவைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு அமிலங்கள் இரத்தத்தில் கலக்கத் தொடங்கும். இரத்தம் மூலம் இக் கொழுப்பு மூலக்கூறுகள் ஈரலைச் சென்றடைய அங்கு ஈரல் அதனை ketone கூறுகளாகப் பிரித்துவிடும். ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பதுபோல் குளுக்கோஸ் இல்லாமல் சக்திக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் உடல் ketone கூறுகளைச சக்திக்காகப் பயன்படுத்த ஆரம்பிக்கும். ஈரல் கொழுப்பை உருக்கும் கருவியாக மாறிவிடும்.

  • ஒரு கிராம் கொழுப்பு 9 கி.கலோரி சக்தியினை வெளியிடும்.
     

வரலாற்றுக் குறிப்பு

ரோமர் காலத்தில் சில சிறுவர்கள் பேய் அறைந்ததுபோல் இருந்தார்கள். அவர்களுக்குப் பேய் பிடிப்பதாகவே கருதப்பட்டது. பேயை அகற்றுவதற்காக அவர்களைகக் கூண்டில் அடைத்து வைத்துப் பட்டினி போடுவார்கள். சில நாட்களில் பேய் தானாகவே அகன்றுவிட அச் சிறுவர்கள் குணமடைந்தனர். 

20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் Russell Wilder என்ற வைத்தியர் இவ்வாறு பேய் பிடித்தவர்களை ஆய்வு செய்து பட்டினி போடாமல் பலவிதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார். அவ்வாறு ஒரு சாராருக்குக் கொழுப்பு உணவை மட்டும் கொடுக்கப்பட்டது. கொழுப்புணவை மட்டும் உட்கொண்டவர்கள் கணிசமான அளவு குணமடைவதை அவதானித்தார். 

குளுக்கோஸ் மூலம் இயக்கப்படும் மூளைக்கு குளுக்கோஸ் சரியான முறையில் வழங்கப்படுதலில் ஏற்படும் தடையால் epileptics என்ற இந்த நோய் உருவாகிறது. குளுக்கோசுக்குப் பதில் ketone மூலம் மூளைக்குப் போதுமான சக்தி கிடைத்ததும் மூளை சரியாக இயங்கத் தொடங்குகிறது. 

இன்று கூட குளுக்கோஸ் இல்லாமல் மூளை இயங்க முடியாது என்று பலரும் தவறாகக் கருதுகின்றனர். சில உறுப்புக்களுக்குக் குளுக்கோஸ் அத்தியாவசியமானது. அது முற்றாக இல்லாதபோது தேவையான சிறிதளவ குளுக்கோசினைப் புரதத்திலிருந்து உடல் தானாகவே உருவாக்கிக் கொள்கிறது.
 

ஒப்பந்தம்

கொழுப்பு மூலம் கொழுப்பைக் குறைக்கும் நுட்பம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். குளுக்கோசைத் தராது கொளுப்பை மட்டும் கொடுத்து உடலை ketone மூலம் மட்டுமே இயங்கப் பழக்கி விட்டால் பிரதான சக்தி வழங்கியாகக் கொழுப்பு மாறிவிடுகிறது. ஆகவே உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை உடல் தேவைப்படும்போது தானாகவே எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் இலகுவாக எடையைக் குறைக்கலாம் அல்லவா ?

இதன் மூலம் அனுகூலங்களும் தீமையும் உண்டு. அதனால்தான் இது பற்றிய பூரண அறிவு தேவை.  என்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம் எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடலைக் ketone நிலைக்கு மெதுமெதுவாகக் கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலும் 2 மாதங்கள் இந்த நிலையில் இருப்பது போதுமானது. சிலர் நிரந்தரமாக இதனைப் பின்பற்றுகின்றனர். 2 மாதங்களின்பின்னர் படிப்படியாகக் கொழுப்பைக் குறைத்துப பழைய நிலைக்கு மீண்டும் வராமல் கொழுப்பு / சீனி விகிதாசாரத்தை அரைவாசிக்குக் கொண்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

Pyramide2.png

 

சமன்பாடு

கொழுப்புச் சாப்பிட்டால் உடல் பெருக்கும் என்ற நம்பிக்கை பொதுவாக உண்டு. உண்மையில் கொழுப்பை விட காபோஹைதரேட்டே உடல் எடையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 2000 கி,கலோரி தேவைப்படும் என்று எடுத்துக் கொண்டால், அவரின் மதியச் சாப்பாடு பின்வருமாறு இருப்பதாக எடுத்துக் கொள்வோம்.

ஒரு கோப்பைச் சோறு 350 முதல் 400 கிராம் = 500 கி.கலோரி 
150 கிராம் கோழி = 350 கி.கலோரி 
ஏனைய மரக்கறிகள் (தாழித்த எண்ணை உட்பட) = 250 கி.கலோரி 

ஒரு நேரச் சாப்பாட்டிலேயே 1000 கி.கலோரிகள் தாண்டப்பட்டு விட்டன. இதில் சாப்பாட்டுக்குப் பின்னர் ஒரு பழம் அல்லது இனிப்புப் பலகாரம் ஒன்றைச் சாப்பிட்டால் கணக்கு எங்கோ போய்விடும். மேலதிகமான ஒவ்வொரு 90 கி.கலோரிகளும் 10 கிராம் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகிறது.

இதுவே காபோஹைதரேட் தவிர்ந்த உணவாக இருந்தால் 1000 கி,கலோரியை எட்டுவது கடினம். உடலுக்குத் தேவையான மிகுதி சக்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்பு உருக்கப்படுகிறது. மேலதிகமாகத் தேவைப்படும் ஒவ்வொரு 90 கி.கலோரியும் 10 கிராம் எடையைக் குறைக்கும். அதனால்தான் கொழுப்பு உணவை உட்கொண்டால் கலோரிகளை எண்ண வேண்டிய கவலை இல்லை. கண்ணை மூடிக் கொண்டு வயிறு நிறையச சாப்பிடலாம். அத்துடன் சிறிய உடற்பயிற்சி ஒன்றையும் செய்வீர்களாக இருந்தால் இரடிப்பு லாபம். ஒரே நாளில் உடலிலிருந்து சுமார் 100 கிராம் கொழுப்பு வரை வெளியேற்றலாம்
.

அனுகூலங்கள்

கொழுப்பு உண்பதால் வேறு பல நன்மைகளும் உள்ளன.

  • நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டே உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்
  • கலோரிக் கட்டுப்பாடு தேவையில்லை
  • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides)
  • இரத்தத்தில் சீனியின் அளவு குறைந்து விடுவதால் இன்சுலின் சுரப்பிக்கு அதி வேலை இல்லாமல் போகிறது
  • மேலே சொன்ன epileptics நோய் கட்டுப்படுத்தப் படுவதுபோல் குளுக்கோஸ் வழங்கல் தடையால் ஏற்படும் அல்சைமரின் ஆரம்ப நிலையிலும் இதனைக் கட்டுப்படுத்தலாம்.
  • சில வகையான புற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்கப்படலாம். ஏனைய உடல் கலங்கள் போல் புற்றுநோய்க் கலங்கள் புதுப்பிக்கப்படுவதும இல்லை இறப்பதும் இல்லை, இவை பெரும்பாலும் குளுக்கோசினால்தான் உயிர்வாழ்கின்றன, குளுக்கோஸ் இல்லாத கட்டத்தில் புற்றுநோய்க் கலங்கள் நலிவடைந்து மேலும் பரவாமல் தடுக்கபொபடுகிறது
  • சில வகையான கட்டிகள் வீக்கம் போன்றவை குறைந்து விடும்
  • ஈரல் வேலைப்பளு குறைந்து இலகுவாகச் செயல்படும்.
  • இன்னும் பல…
     

தீமைகள்

  • உடலில் நீர்த்தன்மை குறையும். தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும்
  • நார்ப்பொருள் குறைவாக உட்கொள்ளப்படுவதால் மலச்சிக்கல் ஏற்படலாம். போதுமான அளவு கீரை பச்சை மரக்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும்
  • கொழுப்பு உணவில் சில விற்றமின்களும் கனியுப்புகளும் குறைவாக இருக்கும், அதற்கேற்றவாறு உணவுகளைத் தெரிவு செய்ய வேண்டும்.
  • படிப்படியாகக் காபோஹைதரேட்டைக் குறைத்து keto diet இன் உச்ச நிலைக்குச் செல்லும்போது சிலருக்குக் களைப்பு போன்ற உணர்வு அல்லது காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம், இதனை ketone காய்ச்சல் என்று சொல்வார்கள். எந்த ஆபத்தும் இல்லை இரண்டு மூன்று நாட்களில் இல்லாமல் போய்விடும்.

இனி keto diet இனை எப்படிச் செயற்படுத்துவது, எதை உண்பது, எதைத் தவிர்ப்பது என்பதையும் எனது அனுபவத்தினையும் எழுதுகிறேன்.
தயவு செய்து இதன் இரண்டாம் பகுதியையும் எழுதியபின் உங்கள் கேள்விகளை முன்வையுங்கள்.

தொடரும்.

மிகச்சிறப்பான பதிவு.  நன்றாக தொகுத்துள்ளீர்கள். இப்பிடியான பதிவுகள் இதைப்பற்றி அறியாதவர்களுக்கு வேறு கோணங்களை காட்டும். 
எனக்கும் இந்த வகை diet இல் சிறிதளவு அனுபவம் உண்டு. 2011இல் தொடங்கி ஒரு மூன்று வருடங்கள் ஓரளவு கடுமையாக இருந்திருக்கிறேன். சில சூழ்நிலைகளால் தொடர முடியாமல் போய்விட்டது. அதன் பலன் இப்போது தெரிகிறது. இடைக்கிடை தொடங்குவதுண்டு ஆனால் தொடர முடிவதில்லை. இப்போதுகூட அப்பிடித்தான் இருக்கிறேன் ஆனால் ஏதாவது ஒரு ரெசிபியை பார்த்தவுடன் இடைக்கிடை செய்து சாப்பிட்டுவிடுவேன், அதனால் தகுந்த பலன் கிடைப்பதில்லை. அடிக்கடி இப்படி உணவு பழக்கத்தை மாற்றவும் கூடாது.
தொடருங்கள் 

Link to comment
Share on other sites

4 hours ago, மல்லிகை வாசம் said:

தொந்திக் கொழுப்பு கொழுப்பு உணவினால் மட்டுமே உருவாகிறது என இதுவரை எண்ணியிருந்தேன்.

 

5 hours ago, இணையவன் said:

 

  • இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறையும்  (triglycerides).

தொந்திக்கு காரணம் மாப்பொருள். மாப்பொருள் உடலில் ரைகிளிசரைட்(triglycerides) ஆக தொந்தியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பொருளை முற்றாக நிறுத்தும் வரை தொந்தி வளர்ந்து வரும். எனது மருத்துவர் இதை எனக்கு புரிய வைத்தபின் நான் சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றையும் விட்டு தாராளமாக மரக்கறி, பழங்கள், மீன், இறைச்சி சாப்பிட்டு நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேகமாக நடக்க தொந்தி மூன்று மாதத்தில் இறங்க ஆரம்பித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகள் கூட இறைச்சிவகைகளும் மரக்கறிகளும் உண்டு கணிசமான நிறையைக் குறைத்துவிட்டாள். என்னால்த்தான் சோற்றையும் மற்றைய உணவுகளையும் விட முடியவில்லை இன்னும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள கேள்வி எல்லாம் கேட்க மாட்டன் இணையவன். ஒரு விண்ணப்பம் மட்டும் 😊நீங்கள் எடை குறைச்சிட்டிங்கள் என்று சொல்கிறீர்கள்...உங்கள் முழுமையான படத்தை😍 போடுங்கள் நாங்கள் பார்த்திட்டு தொப்பை குறைஞ்சிட்டுதா இல்லையா என்று சொல்கிறேம் 🤗
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

19 hours ago, Jude said:

 

தொந்திக்கு காரணம் மாப்பொருள். மாப்பொருள் உடலில் ரைகிளிசரைட்(triglycerides) ஆக தொந்தியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பொருளை முற்றாக நிறுத்தும் வரை தொந்தி வளர்ந்து வரும். எனது மருத்துவர் இதை எனக்கு புரிய வைத்தபின் நான் சோறு, புட்டு, இடியப்பம் எல்லாவற்றையும் விட்டு தாராளமாக மரக்கறி, பழங்கள், மீன், இறைச்சி சாப்பிட்டு நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேகமாக நடக்க தொந்தி மூன்று மாதத்தில் இறங்க ஆரம்பித்தது.

உங்களின் ஒரு கிழமைக்கான தினசரி உணவுப்பட்டியலை இங்கே இணைக்க முடியுமா? 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

 

உங்களின் ஒரு கிழமைக்கான தினசரி உணவுப்பட்டியலை இங்கே இணைக்க முடியுமா? 

காலை ஓட்ஸ், ஒன்பது பாதாம் பருப்புகள் (almonds) மற்றும் கிரான் பெர்ரி   குறைவான கொழுப்புள்ள பாலுடன்.

மதியம் கத்தரிக்காயும் மாமிசமும் சேர்த்து மிகச் சிறிய அளவு உருளை கிழங்கும் சேர்த்து செய்த கறி மட்டும். 

சில நாட்களில் கோவா, கரட் மற்றும் மாமிசம் சேர்த்த கறி மட்டும்.

இடையில் இரண்டு வாழைப்பழம். தோடம்பழம். 

இரவில் நிறைய தண்ணீர். ஒரே ஒரு அவக்காடோ (விழாவுழி  பழம்).

நாள் முழுவதும் தாராளமாக தண்ணீர் குடியுங்கள்.

கடைகளில் எல்லா சாப்பாட்டிலும் சீனி கலக்கிறார்கள். 

இறைச்சி கறியில் கூட சீனி கலக்கிறார்கள். ஆகவே கடையில் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

தினமும் காலையில் எதுவும் குடிக்கவோ சாப்பிடவோ முதல் நிறையை அளவுங்கள். கூடி இருந்தால் கூட நடவுங்கள்.

சீனித் தேவைகளுக்கு Stevia பாவியுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்கின்றேன்... தேவையான‌ பதிவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

ஜஸ்டின்,
ஏன் நோயுற்றதாக கருதுகிறீர்கள்? இந்த வகை உணவு முறைகளில் கலோரி கட்டுப்பாடுகள் தேவையில்லை. இதில் எனது அனுபவத்தை பகிர்கிறேன். இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பின் நான் கார்போஹைட்ரட்  இற்கு பதிலா அதிகளவு saturated  கொழுப்பு, அதாவது கெட்ட கொழுப்பு என்று காலங்காலமாக சொல்லப்பட்ட கொழுப்பை மாற்றீடாக சேர்த்து கொண்டேன்.  தானிய வகைகள் கிட்டத்தட்ட சேர்ப்பதே இல்லை. மரக்கறி. மீன், bacon , கொழுப்பு கூடிய இறைச்சி வகைகள், organ meat , முட்டை (மஞ்சள் கரு தவிர்ப்பதே இல்லை) போன்றவை  பிரதானமாக இருக்கும். நெய், பட்டர், ஒலிவ் ஆயில் , heavy கிரீம் பால் போன்றவையும் தேவையை பொறுத்து இருக்கும். கலோரி அளவில் பார்த்தால் இலகுவாக 2500-3000 கலோரிகள் தாண்டிவிடும். முறைப்படி நிறை கூட வேண்டும் ஆனால் நிறை  குறைந்தது. ஆரம்பத்தில் அதிக கொழுப்பின் தயக்கத்தில் proteinஐ அதிகமாக சேர்த்ததுண்டு, பிறகு அது தவறு என்று தெரிந்து மாற்றிவிட்டேன். தற்பொழுது உடல் கலோரி எரிக்கும் முறை நாம் சாதாரணமாக கணிக்கும் முறையில் இல்லை என்று சிலர்/சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முதல் இரண்டு கிழமைகள் கொடூரமானவை, அதன் பிறகு பழகிவிடும், வயிறு எப்பவுமே நிறைந்தது போல ஒரு உணர்வு இருக்கும். நோயுற்ற உணர்வு இருப்பதில்லை. 

இதை இங்கே பகிருவதில் எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு குறைந்த வயதில் sugar பிரச்னை வந்துவிட்டது   (அப்பா, அம்மா இருவரது familyயிலும் உள்ளது). கொலஸ்டரோலும் ஓரளவுக்கு எகிறியிருந்தது. ஆரம்பத்தில் இந்த diet இல் தயக்கம் இருந்தது, மூன்று மாதங்களுக்கு பிறகு எனது  முதலாவது blood reportஇல் markerகள்  நம்ப முடியாத அளவுக்கு controlஇற்கு வந்தது.  இதற்கு பிறகு sugar மாத்திரையை நிறுத்த முடிந்தது, அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த diet இல் குழப்பம் வரும் வரைக்கும் எதுவித மாத்திரைகளும்  தேவைப்படவில்லை. வெறும் உணவு பழக்கத்துடன் , சிறிதளவு உடற்பயிற்சியுடன் சாதாரணமாக இருக்க முடிந்தது. நான் எதிர்பார்க்காத சில இன்ப அதிர்ச்சியும்  உண்டு. முன்பு சிறிது மந்தமாக இருக்கும் நிலை போய், மிகவும் தெளிவாக இருக்கும். இந்த dietஐ  சில சூழ்நிலைகளால் என்னால் கட்டுப்பாட்டுடன் தொடர முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதும் carb நிறைய சாப்பிடுவதில்லை. மீண்டும் தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை இணையவனின் இந்த பதிவு தருகிறது.

நீங்கள் இது ஒரு backup mechanism, பக்க விளைவுகள் இருக்கும் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். இது ஆராய்ச்சியில்  முழுமையாக நிரூபிக்கப்படாதவை என்று நினைக்கிறன் (பழைய புரிந்துணர்வு, myth என்கிறார்கள்). தற்போதைய சில ஆராய்ச்சிகளில், ஒரு உதாரணத்துக்கு  Alzheimer’s disease சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ketonகள் மூளையின் "preferred" energy source  ஆக அறியப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில்  மாச்சத்து ஒரு essential nutritionஆக  அறியப்படவில்லை. இந்த வகை diet இல் வரும் ketonகள்  சிறுநீரில் அமிலத்தன்மையை அந்த அளவுக்கு அதிகரிக்க போதாது என்று சொல்கிறார்கள். அது  ketoacidosis (இந்த diet இற்கு சம்பந்தம் இல்லாதது) என்ற நிலையிலேயே வரலாம் என்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தை/நிலைப்பாட்டை அறிய ஆவல். உங்களை challenge பண்ணும் நோக்கத்தில் எழுதவில்லை. 

நான் ஒரு மருத்துவன் கிடையாது, இது எனது வாசித்த, பின்பற்றிய அனுபவம் மாத்திரமே. பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. இணையவனின் இந்த பதிவு, மீண்டும் இதை பின்பற்றவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை தருகிறது. அவரது அனுபவத்தையம்  அறிய அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். தமிழர்களில் இந்த வகை diet பயன்படுத்துபவர்கள் அரிது , கனடாவில் இருந்து வந்த ஒரே ஒருவரை மாத்திரமே இதுவரை சந்தித்து, உரையாடி உள்ளேன்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நீர்வேலியான் said:

ஜஸ்டின்,
ஏன் நோயுற்றதாக கருதுகிறீர்கள்? இந்த வகை உணவு முறைகளில் கலோரி கட்டுப்பாடுகள் தேவையில்லை. இதில் எனது அனுபவத்தை பகிர்கிறேன். இந்த உணவு பழக்கத்துக்கு மாறிய பின் நான் கார்போஹைட்ரட்  இற்கு பதிலா அதிகளவு saturated  கொழுப்பு, அதாவது கெட்ட கொழுப்பு என்று காலங்காலமாக சொல்லப்பட்ட கொழுப்பை மாற்றீடாக சேர்த்து கொண்டேன்.  தானிய வகைகள் கிட்டத்தட்ட சேர்ப்பதே இல்லை. மரக்கறி. மீன், bacon , கொழுப்பு கூடிய இறைச்சி வகைகள், organ meat , முட்டை (மஞ்சள் கரு தவிர்ப்பதே இல்லை) போன்றவை  பிரதானமாக இருக்கும். நெய், பட்டர், ஒலிவ் ஆயில் , heavy கிரீம் பால் போன்றவையும் தேவையை பொறுத்து இருக்கும். கலோரி அளவில் பார்த்தால் இலகுவாக 2500-3000 கலோரிகள் தாண்டிவிடும். முறைப்படி நிறை கூட வேண்டும் ஆனால் நிறை  குறைந்தது. ஆரம்பத்தில் அதிக கொழுப்பின் தயக்கத்தில் proteinஐ அதிகமாக சேர்த்ததுண்டு, பிறகு அது தவறு என்று தெரிந்து மாற்றிவிட்டேன். தற்பொழுது உடல் கலோரி எரிக்கும் முறை நாம் சாதாரணமாக கணிக்கும் முறையில் இல்லை என்று சிலர்/சில ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. முதல் இரண்டு கிழமைகள் கொடூரமானவை, அதன் பிறகு பழகிவிடும், வயிறு எப்பவுமே நிறைந்தது போல ஒரு உணர்வு இருக்கும். நோயுற்ற உணர்வு இருப்பதில்லை. 

இதை இங்கே பகிருவதில் எனக்கு தயக்கம் இல்லை. எனக்கு குறைந்த வயதில் sugar பிரச்னை வந்துவிட்டது   (அப்பா, அம்மா இருவரது familyயிலும் உள்ளது). கொலஸ்டரோலும் ஓரளவுக்கு எகிறியிருந்தது. ஆரம்பத்தில் இந்த diet இல் தயக்கம் இருந்தது, மூன்று மாதங்களுக்கு பிறகு எனது  முதலாவது blood reportஇல் markerகள்  நம்ப முடியாத அளவுக்கு controlஇற்கு வந்தது.  இதற்கு பிறகு sugar மாத்திரையை நிறுத்த முடிந்தது, அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்த diet இல் குழப்பம் வரும் வரைக்கும் எதுவித மாத்திரைகளும்  தேவைப்படவில்லை. வெறும் உணவு பழக்கத்துடன் , சிறிதளவு உடற்பயிற்சியுடன் சாதாரணமாக இருக்க முடிந்தது. நான் எதிர்பார்க்காத சில இன்ப அதிர்ச்சியும்  உண்டு. முன்பு சிறிது மந்தமாக இருக்கும் நிலை போய், மிகவும் தெளிவாக இருக்கும். இந்த dietஐ  சில சூழ்நிலைகளால் என்னால் கட்டுப்பாட்டுடன் தொடர முடிந்ததில்லை. ஆனாலும் இப்போதும் carb நிறைய சாப்பிடுவதில்லை. மீண்டும் தொடரவேண்டும் என்ற உத்வேகத்தை இணையவனின் இந்த பதிவு தருகிறது.

நீங்கள் இது ஒரு backup mechanism, பக்க விளைவுகள் இருக்கும் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள். இது ஆராய்ச்சியில்  முழுமையாக நிரூபிக்கப்படாதவை என்று நினைக்கிறன் (பழைய புரிந்துணர்வு, myth என்கிறார்கள்). தற்போதைய சில ஆராய்ச்சிகளில், ஒரு உதாரணத்துக்கு  Alzheimer’s disease சம்பந்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் , ketonகள் மூளையின் "preferred" energy source  ஆக அறியப்பட்டுள்ளது. நான் அறிந்த வரையில்  மாச்சத்து ஒரு essential nutritionஆக  அறியப்படவில்லை. இந்த வகை diet இல் வரும் ketonகள்  சிறுநீரில் அமிலத்தன்மையை அந்த அளவுக்கு அதிகரிக்க போதாது என்று சொல்கிறார்கள். அது  ketoacidosis (இந்த diet இற்கு சம்பந்தம் இல்லாதது) என்ற நிலையிலேயே வரலாம் என்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தை/நிலைப்பாட்டை அறிய ஆவல். உங்களை challenge பண்ணும் நோக்கத்தில் எழுதவில்லை. 

நான் ஒரு மருத்துவன் கிடையாது, இது எனது வாசித்த, பின்பற்றிய அனுபவம் மாத்திரமே. பின்பற்ற விரும்புபவர்கள் மருத்துவர்களில் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது. இணையவனின் இந்த பதிவு, மீண்டும் இதை பின்பற்றவேண்டும் என்ற ஒரு ஊக்கத்தை தருகிறது. அவரது அனுபவத்தையம்  அறிய அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன். தமிழர்களில் இந்த வகை diet பயன்படுத்துபவர்கள் அரிது , கனடாவில் இருந்து வந்த ஒரே ஒருவரை மாத்திரமே இதுவரை சந்தித்து, உரையாடி உள்ளேன்.  

 

நீர்வேலியான், உங்கள் அனுபவப் பகிர்வுக்கும் தகவல்களுக்கும் நன்றி! கீற்றோன் உணவு முறை என்பது ஏன் நிரந்தர உணவு முறையாக எங்களுக்கு இருக்க முடியாது என்பதற்கு என்னிடம் பின் வரும் காரணங்கள் இருக்கின்றன. இவற்றை சில கட்டுரைகளின் அடிப்படையிலும் எனது இருபது வருடப் பழைய உயிர் இரசாயனவியல் பாட ஞாபகத்திலும் இருந்து தருகிறேன். ஆனால், இக்கருத்துக்கள் சிலவற்றை ஒரே இடத்தில் தந்திருக்கும் ஒரு அண்மைய ஆய்வுக் கட்டுரையையும் கீழே இணைத்திருக்கிறேன்:

1. இது நோய் நிலைமை அல்ல என்று நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரியான கூற்று. உடற்றொழியியல் ரீதியான கீற்றோசிஸ்  (physiological ketosis) நிலைக்குத் தான் இந்த உணவு முறை இட்டுச் செல்கிறது, இது டயபற்றிஸ் காரணமாக வரும் கீற்றோசிசை (diabetic ketosis) விட 1/3 பங்கு தீவிரம் குறைவானது!  ஆனால், தொடர்ந்து 8 மில்லிமோல் கீற்றோன்கள் இரத்தத்தில் பேணப் படும் போது(சாதாரண அளவு 0.3 மில்லிமோல்) , இதனால் வரும் அமிலத் தன்மையை சிறு நீரகம் சமாளிக்க முற்படும் போது தான் சிறு நீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறு நீரகக் கற்கள் உருவாக இது மட்டுமே காரணமாக இருக்காது, கல்சியம், குறைவான நீர் என்பனவும் சேரும் போது மட்டுமே இது பிரச்சினையாக வெளிப்படும். 

2. கீற்றோன்களை மூளை குளூக்கோஸ் தட்டுப் பாடான நேரத்தில் மட்டும் பயன் படுத்துகிறது என்பதாலேயே கீற்றோன்  ஒரு றிசேர்வ் சக்தி மூலமாக அடையாளம் காணப்படுகிறது. கீற்றோன் குளூக்கோசை விட வேகமாக மூளையால் பயன்படுத்தப் படலாம், ஆனால் குளூக்கோஸ் தான் மூளையின் சாதாரண சக்தி மூலம். கூர்ப்பு ரீதியில் பார்த்தால், மனிதனின் மிக முக்கியமான உறுப்பான மூளைக்கு கீற்றோன் தான் பிடித்தமான சக்தி மூலமெனில், நாம் ruminants  எனப்படும் ஆடு/மாடு/மான் போல நுண்ணங்கிகளால் செயற்படும் சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டிருப்போம் என நான் நினைக்கிறேன்! இந்த விலங்குகளில், அவற்றின் வயிற்றில் இருக்கும் நுண்ணங்கிகள் தாவரங்களில் இருந்து கீற்றோன்களையும் கொழுப்பையும் உருவாக்குகின்றன. இந்த நிலை பிறைமேற்றுகளில் இல்லை! இது myth அல்ல. 

3. இந்த கீற்றோன் டயற்றின் ஆரம்பமே 1920 இல், வலிப்பு (epilepsy) நோயால் அவதிப் படும் குழந்தைகளைக் குணமாக்கத் தான் உருவானது! எனவே நரம்பு மண்டலத்தில் கீற்றோன்களால் நீங்கள் குறிப்பிடும் நல்ல விளைவுகள் பல காலமாக அறிய பட்டவை தான். GABA எனப்படும் நியூரோன்களை அமைதிப் படுத்தும் நரம்புச் சுரப்பினை அதிகப் படுத்துவது ஒரு காரணம். அழற்சியைக் குறைத்தல், ROS எனப்படும் நச்சுப் பொருட்களைக் குறைத்தல் என்பன வேறு சில காரணங்கள். ஆனால், இந்த ஆய்வுகளில் பல விலங்குகளில் செய்யப் பட்டவை. மனிதர்களில் செய்த ஆய்வுகள் பலவும் நீண்ட கால ஆய்வாக இல்லாமல் குறுகிய கால விளைவுகளாக இந்த நன்மைகளை உறுதி செய்திருக்கின்றன. நீண்ட கால ஆய்வுகள் விரைவில் வெளிவரலாம், clinical trials பல நடந்து கொண்டிருக்கின்றன.

இயற்கை பிரதான சக்தி மூலமாக நிர்ணயிக்காத ஒரு பதார்த்தத்தை நாம் ஒரு நீண்ட கால உணவு முறையால் உடலில் கூட்டும் போது, அது அசாதரணமான ஒரு விடயம் என நினைக்கிறேன். பல மருந்துகள் உடலின் இயற்கையான நிலையை மாற்றுகின்றன தானே என நீங்கள் கேட்கலாம்! ஆனால், மருந்துகளை உடற்சமனிலை (homeostasis) பாதிக்கப் பட்ட நோய் நிலைமைகளில் மீள சமம் செய்ய மட்டுமே பாவிப்பதால் அவை தற்காலிக தீர்வாக ஓ.கே எனப்படுகிறது. இங்கே கீற்றோ முறைமூலம் நாம் உடலின் சமனிலையை குழப்பி எங்கள் நோக்கத்தை அடைவது தான் பிரச்சினை என நினைக்கிறேன்.

 https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6356942/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Justin said:

நீர்வேலியான், உங்கள் அனுபவப் பகிர்வுக்கும் தகவல்களுக்கும் நன்றி! கீற்றோன் உணவு முறை என்பது ஏன் நிரந்தர உணவு முறையாக எங்களுக்கு இருக்க முடியாது என்பதற்கு என்னிடம் பின் வரும் காரணங்கள் இருக்கின்றன. இவற்றை சில கட்டுரைகளின் அடிப்படையிலும் எனது இருபது வருடப் பழைய உயிர் இரசாயனவியல் பாட ஞாபகத்திலும் இருந்து தருகிறேன். ஆனால், இக்கருத்துக்கள் சிலவற்றை ஒரே இடத்தில் தந்திருக்கும் ஒரு அண்மைய ஆய்வுக் கட்டுரையையும் கீழே இணைத்திருக்கிறேன்:

1. இது நோய் நிலைமை அல்ல என்று நீங்கள் சொல்வது ஓரளவுக்கு சரியான கூற்று. உடற்றொழியியல் ரீதியான கீற்றோசிஸ்  (physiological ketosis) நிலைக்குத் தான் இந்த உணவு முறை இட்டுச் செல்கிறது, இது டயபற்றிஸ் காரணமாக வரும் கீற்றோசிசை (diabetic ketosis) விட 1/3 பங்கு தீவிரம் குறைவானது!  ஆனால், தொடர்ந்து 8 மில்லிமோல் கீற்றோன்கள் இரத்தத்தில் பேணப் படும் போது(சாதாரண அளவு 0.3 மில்லிமோல்) , இதனால் வரும் அமிலத் தன்மையை சிறு நீரகம் சமாளிக்க முற்படும் போது தான் சிறு நீரகக் கற்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகரிக்கும். சிறு நீரகக் கற்கள் உருவாக இது மட்டுமே காரணமாக இருக்காது, கல்சியம், குறைவான நீர் என்பனவும் சேரும் போது மட்டுமே இது பிரச்சினையாக வெளிப்படும். 

2. கீற்றோன்களை மூளை குளூக்கோஸ் தட்டுப் பாடான நேரத்தில் மட்டும் பயன் படுத்துகிறது என்பதாலேயே கீற்றோன்  ஒரு றிசேர்வ் சக்தி மூலமாக அடையாளம் காணப்படுகிறது. கீற்றோன் குளூக்கோசை விட வேகமாக மூளையால் பயன்படுத்தப் படலாம், ஆனால் குளூக்கோஸ் தான் மூளையின் சாதாரண சக்தி மூலம். கூர்ப்பு ரீதியில் பார்த்தால், மனிதனின் மிக முக்கியமான உறுப்பான மூளைக்கு கீற்றோன் தான் பிடித்தமான சக்தி மூலமெனில், நாம் ruminants  எனப்படும் ஆடு/மாடு/மான் போல நுண்ணங்கிகளால் செயற்படும் சமிபாட்டுத் தொகுதியைக் கொண்டிருப்போம் என நான் நினைக்கிறேன்! இந்த விலங்குகளில், அவற்றின் வயிற்றில் இருக்கும் நுண்ணங்கிகள் தாவரங்களில் இருந்து கீற்றோன்களையும் கொழுப்பையும் உருவாக்குகின்றன. இந்த நிலை பிறைமேற்றுகளில் இல்லை! இது myth அல்ல. 

3. இந்த கீற்றோன் டயற்றின் ஆரம்பமே 1920 இல், வலிப்பு (epilepsy) நோயால் அவதிப் படும் குழந்தைகளைக் குணமாக்கத் தான் உருவானது! எனவே நரம்பு மண்டலத்தில் கீற்றோன்களால் நீங்கள் குறிப்பிடும் நல்ல விளைவுகள் பல காலமாக அறிய பட்டவை தான். GABA எனப்படும் நியூரோன்களை அமைதிப் படுத்தும் நரம்புச் சுரப்பினை அதிகப் படுத்துவது ஒரு காரணம். அழற்சியைக் குறைத்தல், ROS எனப்படும் நச்சுப் பொருட்களைக் குறைத்தல் என்பன வேறு சில காரணங்கள். ஆனால், இந்த ஆய்வுகளில் பல விலங்குகளில் செய்யப் பட்டவை. மனிதர்களில் செய்த ஆய்வுகள் பலவும் நீண்ட கால ஆய்வாக இல்லாமல் குறுகிய கால விளைவுகளாக இந்த நன்மைகளை உறுதி செய்திருக்கின்றன. நீண்ட கால ஆய்வுகள் விரைவில் வெளிவரலாம், clinical trials பல நடந்து கொண்டிருக்கின்றன.

இயற்கை பிரதான சக்தி மூலமாக நிர்ணயிக்காத ஒரு பதார்த்தத்தை நாம் ஒரு நீண்ட கால உணவு முறையால் உடலில் கூட்டும் போது, அது அசாதரணமான ஒரு விடயம் என நினைக்கிறேன். பல மருந்துகள் உடலின் இயற்கையான நிலையை மாற்றுகின்றன தானே என நீங்கள் கேட்கலாம்! ஆனால், மருந்துகளை உடற்சமனிலை (homeostasis) பாதிக்கப் பட்ட நோய் நிலைமைகளில் மீள சமம் செய்ய மட்டுமே பாவிப்பதால் அவை தற்காலிக தீர்வாக ஓ.கே எனப்படுகிறது. இங்கே கீற்றோ முறைமூலம் நாம் உடலின் சமனிலையை குழப்பி எங்கள் நோக்கத்தை அடைவது தான் பிரச்சினை என நினைக்கிறேன்.

 https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6356942/ 

ஜஸ்டின், 
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. எனக்கு இந்த வகை dietஇன் நீண்ட கால விளைவுகள், இது சம்பந்தமான சம கால ஆராய்ச்சிகள், இதில் மற்றவர்களின் பார்வை, இதில் நான் தவறு செய்யும் இடங்கள்  போன்றவற்றை அறிவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நீங்கள் பகிர்ந்த ஆராய்ச்சி கட்டுரையை வாசித்தேன். Alzheimer, Parkinson போன்ற குறைபாடுகளுக்கு இந்த வகை டயட் குறுகிய காலத்தில் நல்லவிளைவுகளை தந்தாலும், நீண்ட கால விளைவுகள் சரியா அறியப்படவில்லை, malnutrition போன்ற குறைபாடுகள் வரலாம் என்பதாக இருக்கிறது. Keto diet இல், பல நீண்ட கால, கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் (controlled clinical trials) இப்போது நடத்தப்பட்டுக்கொண்டு இருப்பதாக அறிகிறேன். இவற்றின் முடிவுகள் சில விடயங்களை தெளிவு படுத்தும்.

நீங்கள் ஓர் balanced diet என்ற ஒரு conventional approach ஐ ஆதரிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த  keto diet நிபுணர்களின்/ஆதரவாளர்களின் பார்வையில் நாம் கூர்ப்பின் அடிப்படையில் எப்பிடி உருவானோமோ அதுவே balanced diet ஆகவே 10% இற்கு மேல் carb தேவையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. தற்போதைய பரிந்துரைகள் 50%இற்கு மேலாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட சில காரணங்களை வைத்து, குளுக்கோஸ்தான் பிரதான எரிபொருளாக இருக்க முடியும் என்று சொல்ல வருகிறீர்கள். உடல் குளுக்கோஸ் கிடைக்கும்பொழுது அதையே முதலாவதாக உபயோகிக்கும் என்பது உணமை, அதனால் அது பிரதான எரிபொருளாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறன். மது அருந்தும் பொழுது, நமது ஈரல் அதையே முதலாவதாக processபண்ணி (குளுக்கோஸ் இற்கு முதல்) அதன் சக்தியை பாவிக்கிறது இதன்படி பார்த்தல் மதுவும் பிரதான எரிபொருளாக கொள்ள முடியும் என்று வருகிறது (ஒரு வாதத்துக்காக). இதைவிட, அதிக மாச்சத்து உணவின் மூலம் வரும்பொழுது ஈரல் அதை ஒரு toxic ஆகவே  கருதி, கொழுப்பு, புரதங்களுக்கு முதல் அதை அகற்ற முனைகிறது. இந்த வகை பாதுகாப்பு கொழுப்பு /புரதம் போன்றவற்றுக்கு தேவைப்படவில்லை, இதுவும் ஒரு ஆதாரமாக, எமக்குரிய இயற்கையான உணவாக இந்த ஆதரவாளர்களால் முவைக்கப்படுகிறது. Ketonகள் குளுகோஸ் போல அன்றி, நீண்ட நேரமான (endurance), மாறாத (constant) சக்தியை வழங்குவதாகவும், efficient ஆனதாகவும் அறியப்பட்டுள்ளது. மூளையின் சக்தி தேவையில் 70% வரை ketonகளால் குளுக்கோஸ்ஐ  விட efficient ஆக வழங்க முடியும் அன்று அறியப்பட்டுள்ளது. மிகுதி 30% (உடனடியான) தேவையை குளுக்கோஸ் இனால் ஈடுகட்டலாம். இக்குளுக்கோஸ் மாச்சத்தினால்   வர வேண்டிய தேவையில்லை. எமக்கு தேவையான குளுகோஸ்ஐ நமது உடல் மேலதிக புரதம், கொழுப்புகளில் இருந்து உருவாகும் (நீங்கள் கூறியது போல), இதை ஒரு starvation நிலையாக கருத தேவையில்லை, இதுவே கூர்ப்பின் அடிப்படையில் இயற்கையானதாக (natural status ) கருதலாம். நாம் வேளா வேளைக்கு  சாப்பிடாத  வேட்டையாடும் விலங்குகளாகவே பரிணாமித்திருக்கிறோம் என்பது இவர்களின் நிலைப்பாடு. இன்னுமொரு ஆதாரமாக வைப்பது,  மாச்சத்தின் தேவை  இதுவரை அறியப்படவில்லை, ஆதாவது 0% மாச்சத்து இல்லாமல் உயிர்வாழமுடியும். ஆனால் புரதமும் கொழுப்பும் இல்லாமல் உயிர்வாழா முடியாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலால் உறிஞ்சப்படுகிறது. சில வகை கொழுப்புகள்  மூளையின் வளர்ச்சிக்கு, பாவனைக்கு  அத்தியாவசியமானது. இவைகள் ஆதரவாளர்களால் வைக்கப்படும் சில வாதங்கள். நான் வாசித்து அறிந்து கொண்டதை தொகுத்துள்ளேன். இது ஒரு முடிந்த முடிபு என்று சொல்ல முடியாது, இதற்கு எதிரானவர்களால் வைக்கப்படும்  சில சிறந்த வாதங்களையும் அறிந்துள்ளேன், ஆனால் இதை நோக்கியதாகவே இந்த துறை இப்போது போகிறது. 

கொழுப்பு உணவுகள் உடலுக்கு கேடானவை என்பதை சரியாக நிரூபிக்க முதல், சட்டரீதியான உணவு பரிந்துரைகள் 70களில் வந்துவிட்டன. நிறைய ஆராய்ச்சிகள் இப்பொழுது இருக்கும் பரிந்துரை தவறு என்று நிரூபித்தாலும். இது ஒரு மத நம்பிக்கை போல் இலகுவில் மாற்ற முடியாது. கொழுப்பின் மீதுள்ள நீண்டகால பயம்,  இந்த உணவு முறையில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. நான் இது பற்றி அறிய முற்பட்ட 2011இல் இப்பொழுது இருக்கும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளோ, கட்டுரைகளோ, பயன்படுத்துபவர்களோ கிடையாது. இப்பொழுது அப்படியல்ல. மாற்றங்களை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். இங்குள்ள பல மருத்துவர்கள் இந்த வகை உணவை இங்கு பரிந்துரைக்கிறார்கள். இதில் அவதனிக்க வேண்டிய ஒரு விடயம், இவர்களில் சிலர் டயாபடீஸ், இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெரிந்தும், பழைய, நிரூபிக்கப்படாத உணவு பரிந்துறைகைளை பின்பற்ற தேவையில்லை, "Ethical Practice"   செய்ய வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. உதாரணத்துக்கு, Dr Berstein என்ற பிரபலமான ஒரு மருத்துவர் இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு என்ஜினீயர், 1946இல் Type 1 டயாபடீஸ் இனால் பாதிக்கப்பட்டு,  அப்போது பரிந்துரைக்கப்பட்ட low fat முறையினால் எல்லாவகையான பாதிப்புக்குள்ளாகி, இறக்கும் நிலைக்கு சென்று, 46 வயதில் தனது சொந்த ஆராய்சியினால் இப்படியான ஒரு வகை உணவு பழக்கத்துக்கு மாறி, அதன்பிறகு medical college சென்று, இன்று டயாபடீஸ், மற்றும் இருதய நோய் போன்றவற்றுக்கு மருத்துவம் செய்கிறார். இவர் 1976களில் இருந்து  இப்படியான உணவு முறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கிறார்.  எனது சொந்த மருத்துவர் 2011இல் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை, அடுத்த சில வருடங்களில் அவரின் பார்வை மாறிவிட்டது. கிழே இணைத்திருக்கும் இந்த graph  நீங்கள் முன்பே பார்த்திருக்கலாம். கொழுப்பு உடலுக்கு கூடாது என்ற பரிந்துரை FDAஇனால் கொடுவரப்பட்டதன் பிறகு அமெரிக்காவில் obesity (உடல் பருமன்) எவ்வாறு அதிகரித்தது என்று தெளிவாக காட்டுகிறது.  

குறிப்பிட்ட காரணங்களை வைத்து உங்கள் நிலைப்பாடு புரிந்தது, எனது புரிதல்களையும் பதிந்துள்ளேன். இந்த வகையான உரையாடலை எத்தனை பேர் ஆர்வமாக வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.  இனி இணையவனின் அடுத்த பாகத்தை பார்த்துவிட்டு,  தொடர்கிறேன் 

HL128143-graph-2.jpg

Source: National Center for Health Statistics (US)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2019 at 10:47 AM, Jude said:

காலை ஓட்ஸ், ஒன்பது பாதாம் பருப்புகள் (almonds) மற்றும் கிரான் பெர்ரி   குறைவான கொழுப்புள்ள பாலுடன்.

மதியம் கத்தரிக்காயும் மாமிசமும் சேர்த்து மிகச் சிறிய அளவு உருளை கிழங்கும் சேர்த்து செய்த கறி மட்டும். 

சில நாட்களில் கோவா, கரட் மற்றும் மாமிசம் சேர்த்த கறி மட்டும்.

இடையில் இரண்டு வாழைப்பழம். தோடம்பழம். 

இரவில் நிறைய தண்ணீர். ஒரே ஒரு அவக்காடோ (விழாவுழி  பழம்).

நாள் முழுவதும் தாராளமாக தண்ணீர் குடியுங்கள்.

கடைகளில் எல்லா சாப்பாட்டிலும் சீனி கலக்கிறார்கள். 

இறைச்சி கறியில் கூட சீனி கலக்கிறார்கள். ஆகவே கடையில் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்.

தினமும் காலையில் எதுவும் குடிக்கவோ சாப்பிடவோ முதல் நிறையை அளவுங்கள். கூடி இருந்தால் கூட நடவுங்கள்.

சீனித் தேவைகளுக்கு Stevia பாவியுங்கள். 

உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு நன்றி.உணவு விடயத்தில் நான் வைத்தியர்களின் ஆலோசனைகளை நம்புவதில்லை. எவராக இருந்தாலும்  அனுபவப்பட்டவரின் ஆலோசனைகள் என்றும் சிறந்தது. மீண்டுமொருமுறை நன்றி.

நான் கடைகளில் சாப்பிடுவதில்லை. சீனிவகை உணவுகளும் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் உண்பதில்லை.மாமிசம் பற்றி கூறினீர்கள்.அது  எந்தவகையான மாமிசம்? நான் தினசரி 2லீட்டர் தண்ணீர் குடிப்பேன்.

ஆனால் நடப்பது????

ஏறினால் கார் இறங்கினால் காபெட்.  😃
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நீர்வேலியான் said:

ஜஸ்டின், 
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. எனக்கு இந்த வகை dietஇன் நீண்ட கால விளைவுகள், இது சம்பந்தமான சம கால ஆராய்ச்சிகள், இதில் மற்றவர்களின் பார்வை, இதில் நான் தவறு செய்யும் இடங்கள்  போன்றவற்றை அறிவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. நீங்கள் பகிர்ந்த ஆராய்ச்சி கட்டுரையை வாசித்தேன். Alzheimer, Parkinson போன்ற குறைபாடுகளுக்கு இந்த வகை டயட் குறுகிய காலத்தில் நல்லவிளைவுகளை தந்தாலும், நீண்ட கால விளைவுகள் சரியா அறியப்படவில்லை, malnutrition போன்ற குறைபாடுகள் வரலாம் என்பதாக இருக்கிறது. Keto diet இல், பல நீண்ட கால, கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகள் (controlled clinical trials) இப்போது நடத்தப்பட்டுக்கொண்டு இருப்பதாக அறிகிறேன். இவற்றின் முடிவுகள் சில விடயங்களை தெளிவு படுத்தும்.

நீங்கள் ஓர் balanced diet என்ற ஒரு conventional approach ஐ ஆதரிக்கிறீர்கள் என்று தெரிகிறது. இந்த  keto diet நிபுணர்களின்/ஆதரவாளர்களின் பார்வையில் நாம் கூர்ப்பின் அடிப்படையில் எப்பிடி உருவானோமோ அதுவே balanced diet ஆகவே 10% இற்கு மேல் carb தேவையில்லை என்பது அவர்களின் நிலைப்பாடு. தற்போதைய பரிந்துரைகள் 50%இற்கு மேலாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட சில காரணங்களை வைத்து, குளுக்கோஸ்தான் பிரதான எரிபொருளாக இருக்க முடியும் என்று சொல்ல வருகிறீர்கள். உடல் குளுக்கோஸ் கிடைக்கும்பொழுது அதையே முதலாவதாக உபயோகிக்கும் என்பது உணமை, அதனால் அது பிரதான எரிபொருளாக இருக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறன். மது அருந்தும் பொழுது, நமது ஈரல் அதையே முதலாவதாக processபண்ணி (குளுக்கோஸ் இற்கு முதல்) அதன் சக்தியை பாவிக்கிறது இதன்படி பார்த்தல் மதுவும் பிரதான எரிபொருளாக கொள்ள முடியும் என்று வருகிறது (ஒரு வாதத்துக்காக). இதைவிட, அதிக மாச்சத்து உணவின் மூலம் வரும்பொழுது ஈரல் அதை ஒரு toxic ஆகவே  கருதி, கொழுப்பு, புரதங்களுக்கு முதல் அதை அகற்ற முனைகிறது. இந்த வகை பாதுகாப்பு கொழுப்பு /புரதம் போன்றவற்றுக்கு தேவைப்படவில்லை, இதுவும் ஒரு ஆதாரமாக, எமக்குரிய இயற்கையான உணவாக இந்த ஆதரவாளர்களால் முவைக்கப்படுகிறது. Ketonகள் குளுகோஸ் போல அன்றி, நீண்ட நேரமான (endurance), மாறாத (constant) சக்தியை வழங்குவதாகவும், efficient ஆனதாகவும் அறியப்பட்டுள்ளது. மூளையின் சக்தி தேவையில் 70% வரை ketonகளால் குளுக்கோஸ்ஐ  விட efficient ஆக வழங்க முடியும் அன்று அறியப்பட்டுள்ளது. மிகுதி 30% (உடனடியான) தேவையை குளுக்கோஸ் இனால் ஈடுகட்டலாம். இக்குளுக்கோஸ் மாச்சத்தினால்   வர வேண்டிய தேவையில்லை. எமக்கு தேவையான குளுகோஸ்ஐ நமது உடல் மேலதிக புரதம், கொழுப்புகளில் இருந்து உருவாகும் (நீங்கள் கூறியது போல), இதை ஒரு starvation நிலையாக கருத தேவையில்லை, இதுவே கூர்ப்பின் அடிப்படையில் இயற்கையானதாக (natural status ) கருதலாம். நாம் வேளா வேளைக்கு  சாப்பிடாத  வேட்டையாடும் விலங்குகளாகவே பரிணாமித்திருக்கிறோம் என்பது இவர்களின் நிலைப்பாடு. இன்னுமொரு ஆதாரமாக வைப்பது,  மாச்சத்தின் தேவை  இதுவரை அறியப்படவில்லை, ஆதாவது 0% மாச்சத்து இல்லாமல் உயிர்வாழமுடியும். ஆனால் புரதமும் கொழுப்பும் இல்லாமல் உயிர்வாழா முடியாது. பல வைட்டமின்கள் கொழுப்பில் கரைக்கப்பட்டே உடலால் உறிஞ்சப்படுகிறது. சில வகை கொழுப்புகள்  மூளையின் வளர்ச்சிக்கு, பாவனைக்கு  அத்தியாவசியமானது. இவைகள் ஆதரவாளர்களால் வைக்கப்படும் சில வாதங்கள். நான் வாசித்து அறிந்து கொண்டதை தொகுத்துள்ளேன். இது ஒரு முடிந்த முடிபு என்று சொல்ல முடியாது, இதற்கு எதிரானவர்களால் வைக்கப்படும்  சில சிறந்த வாதங்களையும் அறிந்துள்ளேன், ஆனால் இதை நோக்கியதாகவே இந்த துறை இப்போது போகிறது. 

கொழுப்பு உணவுகள் உடலுக்கு கேடானவை என்பதை சரியாக நிரூபிக்க முதல், சட்டரீதியான உணவு பரிந்துரைகள் 70களில் வந்துவிட்டன. நிறைய ஆராய்ச்சிகள் இப்பொழுது இருக்கும் பரிந்துரை தவறு என்று நிரூபித்தாலும். இது ஒரு மத நம்பிக்கை போல் இலகுவில் மாற்ற முடியாது. கொழுப்பின் மீதுள்ள நீண்டகால பயம்,  இந்த உணவு முறையில் நிறைய கேள்விகளை எழுப்புகிறது. நான் இது பற்றி அறிய முற்பட்ட 2011இல் இப்பொழுது இருக்கும் அளவுக்கு ஆராய்ச்சி முடிவுகளோ, கட்டுரைகளோ, பயன்படுத்துபவர்களோ கிடையாது. இப்பொழுது அப்படியல்ல. மாற்றங்களை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். இங்குள்ள பல மருத்துவர்கள் இந்த வகை உணவை இங்கு பரிந்துரைக்கிறார்கள். இதில் அவதனிக்க வேண்டிய ஒரு விடயம், இவர்களில் சிலர் டயாபடீஸ், இதயநோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தெரிந்தும், பழைய, நிரூபிக்கப்படாத உணவு பரிந்துறைகைளை பின்பற்ற தேவையில்லை, "Ethical Practice"   செய்ய வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. உதாரணத்துக்கு, Dr Berstein என்ற பிரபலமான ஒரு மருத்துவர் இருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு என்ஜினீயர், 1946இல் Type 1 டயாபடீஸ் இனால் பாதிக்கப்பட்டு,  அப்போது பரிந்துரைக்கப்பட்ட low fat முறையினால் எல்லாவகையான பாதிப்புக்குள்ளாகி, இறக்கும் நிலைக்கு சென்று, 46 வயதில் தனது சொந்த ஆராய்சியினால் இப்படியான ஒரு வகை உணவு பழக்கத்துக்கு மாறி, அதன்பிறகு medical college சென்று, இன்று டயாபடீஸ், மற்றும் இருதய நோய் போன்றவற்றுக்கு மருத்துவம் செய்கிறார். இவர் 1976களில் இருந்து  இப்படியான உணவு முறையில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆரோக்கியமாக இருக்கிறார்.  எனது சொந்த மருத்துவர் 2011இல் எனக்கு ஆதரவாக இருக்கவில்லை, அடுத்த சில வருடங்களில் அவரின் பார்வை மாறிவிட்டது. கிழே இணைத்திருக்கும் இந்த graph  நீங்கள் முன்பே பார்த்திருக்கலாம். கொழுப்பு உடலுக்கு கூடாது என்ற பரிந்துரை FDAஇனால் கொடுவரப்பட்டதன் பிறகு அமெரிக்காவில் obesity (உடல் பருமன்) எவ்வாறு அதிகரித்தது என்று தெளிவாக காட்டுகிறது.  

குறிப்பிட்ட காரணங்களை வைத்து உங்கள் நிலைப்பாடு புரிந்தது, எனது புரிதல்களையும் பதிந்துள்ளேன். இந்த வகையான உரையாடலை எத்தனை பேர் ஆர்வமாக வாசிப்பார்கள் என்று தெரியவில்லை.  இனி இணையவனின் அடுத்த பாகத்தை பார்த்துவிட்டு,  தொடர்கிறேன் 

HL128143-graph-2.jpg

Source: National Center for Health Statistics (US)

நீர்வேலியான், நீண்ட பதிலுக்கு நன்றி. இரண்டாவது பந்தியில் இருக்கும் விடயங்கள் அடிப்படை உயிரியல் அறிவைப் பொறுத்த வரை தவறான புரிதல்கள். இதை எப்படித் தமிழில் விளக்குவது என்று தெரியவில்லை, எனினும் முயல்கிறேன்:

1. ஈரல் அல்கஹோலைப் பாவிப்பதால் அது பிரதானம் என்று வாதிட முடியாது என்கிறீர்கள். உண்மை, அல்ககோல் ஈரலுக்கு பிரதான எரிபொருள் அல்ல! அது மூளைக்கு கீற்றோன் போன்றது! ஈரல் அல்கஹோலைக் கண்டதும் அதைப் பயன்படுத்துவது அதைக் கிளியர் செய்து உடலை விட்டு அகற்றுவதற்காகவேயொழிய அது ஈரலுக்கு விருப்ப எரி பொருள் அல்ல! ஈரல் அப்படி அல்கஹோலை எரிக்கா விட்டால், அது வேறு பாதைகளில் அல்டிகைட் என்ற நச்சுப் பொருளாக மாறி விடக் கூடும். இதனால் குளுக்கோசை கொழுப்பாக மாற்றி விட்டு அல்கஹோலை சக்தித் தேவைக்குப் பாவிக்கிறது! இதனால் தான் பெருங் குடிப் பழக்கம் உடல் பருமனையும் அதிகரித்து சர்க்கரை நோயையும் உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

2. மாச்சத்து புரதமாகவும் கொழுப்பாகவும் மாறுவது அது கூடாத பொருளாக அகற்றப் படவேண்டிய தேவைக்காக அல்ல! பெரும்போசணைப் பொருட்களான (macro nutrients) மாச்சத்து, புரதம், கொழுப்பு இவை மூன்றுக்கும் எமது உடலின் தொழிற்பாட்டில் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது இருக்கும் உயிரியல் அறிவின் படி, குளூக்கோஸ் எங்கள் உடலின் பெரும்பாலான அங்கங்களின் சக்தி எரிபொருள். புரதம் தான் எங்கள் உடலின் கட்டுமானப் பொருள். சாப்பாட்டைச் செமிக்கப் பண்ணும் நொதியங்களும் புரதங்களே! கொழுப்பு எங்கள் உடலின் ஹோர்மோன்களை உருவாக்கும் மூலப் பொருள்! (பட்டினி கிடப்பதால் அல்லது கீற்றொ டயற்றினால் பெண்களில் மாதவிடாய் கருக்கட்டல் பிரச்சினைகள் வர இது காரணம்!). நீங்கள் வட அரைக்கோளத்தில் வாழ்ந்தால் கொழுப்பு குளிரில் இருந்து உங்களைக் காக்கவும் அவசியமாகிறது! எனவே, புரதத்தையும் கொழுப்பையும் சக்தித் தேவைக்காக உடல் பயன்படுத்துவது அசாதாரண நிலை! இது வீட்டுக் கூரையைப் பிடுங்கி அடுப்பு எரிப்பதற்குச் சமனானது!  இது அவசரத்திற்குச் செய்யலாம், ஆனால் அதுவே சாதாரண நிலை என்று பின்பற்ற இயலாது!

உங்கள் ஏனைய கருத்துகளை வாசிக்கவில்லை, பின்னேரம் பார்த்து பதில் தருகிறேன். ஆனால், மேலே நான் சொல்லியிருப்பது போல, உடல் economically smart ஆகத் தான் வடிவமைக்கப் பட்டிருக்கிறது! குழூக்கோசை விட கொழுப்பில் அதிக கலோரி கிடைக்கும் என்றாலும் கொழுப்பைப் பிரதானமாகப் பாவிக்காமல் இருக்க என்ன காரணம் இருக்கலாம்? பக்க விளைவுகள் கீற்றோன் போன்ற பக்க விளைவான பதார்த்தங்கள் உருவாகாமல் இருக்கத் தான் என்று என் உயிரியல் அடிப்படை சொல்கிறது! அந்த பக்க விளைவுகள் நீண்ட கால நோக்கில் ஆராயப் படவில்லை என்பது முக்கியமானது!

 உடற்பருமன் என்பது positive energy imbalance . உள்ளெடுப்பதைக் குறைத்து எரிப்பதைக் கூட்டினால் உடற்பருமன் இயற்கையான வழியில் குறையும் என்பது கிட்டத் தட்ட நூறு ஆண்டுகளாக மீள மீள நிரூபிக்கப் பட்ட உண்மை. இதை மறுதலிக்கும் எந்த ஆய்வையும் நான் இது வரை காணவில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேலியோ அல்லது குறை மாவு நிறை கொழுப்பை பற்றி ஆரோக்கியம் நல்வாழ்வு முகநூல் குழுவினர் வழியாக அறிந்து கொண்டேன்.

https://www.facebook.com/groups/tamilhealth/

உணவு உற்பத்தி மனிதர்களால் செய்ய தொடங்க முதல் அவர்களின் பிரதான உணவு கொழுப்புடன் கூடிய இறைச்சியே, பழங்கள், விதைகள் உப உணவாக இருந்திருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது குளுக்கோஸ்/மாப்பொருளைத் தானோ?

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதனை குறைக்க இன்சுலினை குளிகையாகவோ ஊசி மூலமோ எடுத்து கொள்ளும் மக்கள் ஏன் உணவில் மாப்பொருளை குறைத்து குளுக்கோசை குறைக்க முன்வருகிறார்கள் இல்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு நன்றி.உணவு விடயத்தில் நான் வைத்தியர்களின் ஆலோசனைகளை நம்புவதில்லை. எவராக இருந்தாலும்  அனுபவப்பட்டவரின் ஆலோசனைகள் என்றும் சிறந்தது. மீண்டுமொருமுறை நன்றி.

நான் கடைகளில் சாப்பிடுவதில்லை. சீனிவகை உணவுகளும் நூற்றுக்கு தொண்ணூறு வீதம் உண்பதில்லை.மாமிசம் பற்றி கூறினீர்கள்.அது  எந்தவகையான மாமிசம்? நான் தினசரி 2லீட்டர் தண்ணீர் குடிப்பேன்.

ஆனால் நடப்பது????

ஏறினால் கார் இறங்கினால் காபெட்.  😃
 

அண்ணா எலும்பில்லாத கோழியை கொஞ்சம் தண்ணீர் விட்டு [சொட்டு நல்லெண்ணெய் விட்டும் தாளிக்கலாம்.]அவிய விட்டு அரைவாசி அவிந்ததும் அதற்குள் கோவா,புரோக்களி,கோலிபுலவர்,செலரி,ப.மிளகாய்,வெங்காயம் போன்றவற்றை போட்டு அவியவிட்டு இறக்கு முன் கேல் அல்லது ஏதாவது கிரையைப் போட்டு இறக்குங்கோ...பால் விடாமல் தக்காளி போடுங்கோ..இதை மட்டும் தனிய சாப்பிடுவது என்றால் 2,3 பேபி உ.கிழங்கு சேருங்கோ...அல்லது ஒரு கைப்பிடியில் குறைவாக அரிசி அதற்குள் போட்டு அவிய விடுங்கோ...மஞ்சள்,உள்ளி,இஞ்சி மறக்காமல் சேருங்கோ...விரும்பினால் சரக்குத் தூள் போடுங்கோ 😑

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடம்பிற்கு கூடாது என்று கொஞ்ச பேர் சொல்லினம்...இது பற்றிய சரியான விளக்கம் ஜஸ்டின் அல்லது யாராவது தர முடியுமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

பேலியோ அல்லது குறை மாவு நிறை கொழுப்பை பற்றி ஆரோக்கியம் நல்வாழ்வு முகநூல் குழுவினர் வழியாக அறிந்து கொண்டேன்.

https://www.facebook.com/groups/tamilhealth/

உணவு உற்பத்தி மனிதர்களால் செய்ய தொடங்க முதல் அவர்களின் பிரதான உணவு கொழுப்புடன் கூடிய இறைச்சியே, பழங்கள், விதைகள் உப உணவாக இருந்திருக்கும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சென்பது குளுக்கோஸ்/மாப்பொருளைத் தானோ?

இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்தால் அதனை குறைக்க இன்சுலினை குளிகையாகவோ ஊசி மூலமோ எடுத்து கொள்ளும் மக்கள் ஏன் உணவில் மாப்பொருளை குறைத்து குளுக்கோசை குறைக்க முன்வருகிறார்கள் இல்லை?

இணையவனின் திரியில் நானும் நீர்வேலியானும் தேவைக்கதிகமாக எழுதுகிறோமோ என்று நினைக்கிறேன். இந்தப் பதிவோடு நிறுத்திக் கொள்கிறேன்:

ஏராளன், இந்த பேலியோ அல்லது குறைமாவு நிறை கொழுப்பு இந்தக் காலத்து மனிதருக்கு ஆரோக்கியமா என்று யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் இந்த நிறை கொழுப்பு உணவு முறை இருந்தது. 6000 வருடங்கள் முந்தைய அந்த நாட்களில் வேறென்ன இருந்தன? உணவுக்காகவும், ஆபத்தில் இருந்து தப்பவும் தினசரி மைல் கணக்கான ஓட்டமும் நடையும் இருந்தது. Little Ice Age எனும் காலத்தில் பூமியை மூடிய பனிப் படலம் 10,000 ஆண்டுகள் முன்பு தான் விலகியது, அதனால் பூமி வடதுருவம் போல பனியுறைந்தும் இருந்தது! இன்றும், வடதுருவத்தை அண்டிய பகுதிகளில் வாழும் Inuit மக்கள் நிறைய இறைச்சி, கொழுப்பு சாப்பிட்டும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எப்படி? உடற்சூட்டை உருவாக்க அவர்களுக்கு இந்தக் கொழுப்புணவு தேவை. இதனால் கொழுப்பு உடலின் பிழையான இடங்களில் சேராமல் இருக்கக் கூடும்.

எனவே, ஆதிமனிதனின் உணவை இன்றைய சொகுசு வாழ்வில் கொண்டு வந்தால் அது இதய நோய்களை, உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது! வேண்டுமானால், பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

32 minutes ago, ரதி said:

அதிகம் தண்ணீர் குடிப்பதும் உடம்பிற்கு கூடாது என்று கொஞ்ச பேர் சொல்லினம்...இது பற்றிய சரியான விளக்கம் ஜஸ்டின் அல்லது யாராவது தர முடியுமா?

 

உயிரியல் ரீதியில், நீங்கள் குடிக்கும் தண்ணீர் குடலுக்குப் போகும். அங்கே குடல் தேவையான அளவு உறிஞ்சிய  பின்னர், எஞ்சியது மலத்தோடு வெளியேறும்.  பின்னர் உடலினுள் சென்ற தண்ணீர் இரத்தத்தை ஐதாக்கி விடாமல் இருக்க சிறுநீரகம் தொழிற்பட்டு சிறுநீராக வெளியேற்றும்!  எனவே யாரும் அளவுக்கதிகமாக தண்ணீர் அருந்த முடியாது!

Link to comment
Share on other sites

வழமையாக 3 வேளை உண்ணும் உணவை 3 வேளை  6 வேளைகளாக பிரித்து உண்ணுதல் மிகச்சிறந்த பலனை தரும். அந்த ஆறு வேளைகளிலும் உடலுக்கு தேவையான தாதுப்பொருட் களை (காபோவைதரேட், கொழுப்பு) என பிரித்து உண்பதால் மேலும் உடல் நிறை கூடாமல் நிறையுணவை பெற்றதும் ஆகி விடும். போனசாக உடற்பயிற்சி செய்தால் மேலும் உடம்பு ஆரோக்கியமாகும்.

நன்றி இணையவன் உங்கள் பதிவுக்கு.

மேற் கூறிய முறை சிறுநீரகத்தை பாதிக்குமென அறிந்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

உண்மை தான், ஒரு நாளைக்கு 10000 தப்படி நடை பயிற்சியை வலியுறுத்துகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 8:24 PM, Justin said:

நல்ல பதிவிற்கு நன்றி!, கீற்றோ டயற் பற்றி அறிந்திருக்கிறேன். ஆனால், இந்த முறையில் உடலை ஒரு நோய் (pathological) நிலைக்குக் கொண்டு போவது தான் எனக்கு ஒப்புதல் இல்லாத விடயமாக இருக்கிறது. மூளை எங்கள் உடலின் சக்தித் தேவையில் 20% இனை விளுங்கிக் கொள்ளும் சதா பசியுடன் இருக்கும் ஒரு உறுப்பு! அதனால், பட்டினி கிடக்கும் ஒருவர் உடலில் பிரதான சக்தி மூலமான குளூக்கோஸ் இல்லாத போது, கீற்றோன் எனும் கொழுப்பை உடைப்பதால் வரும் பக்க விளைபொருளை மூளையின் நியூரோன்கள் பயன் படுத்தக் கூடியமாதிரி இயற்கை அமைத்திருக்கிறது! இதன் நோக்கம், கிட்டத் தட்ட காரில் எரிபொருள் தாங்கி வெறுமையான பிறகு, றிசேர்வில் இருந்து கொஞ்ச எரிபொருளைப் பாவித்து, அடுத்த காஸ் நிரப்பு நிலையம் வரை செல்ல உதவும் நோக்கத்திற்கு ஒப்பானது! எனவே, இது ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தான் இயற்கையில் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன்! கீற்றோன்கள் இரத்தத்தின் அமிலத் தன்மையை அதிகரிக்கக் கூடியவை என்பதால், ஒக்சலேற் கொண்ட சிறு நீரகக் கற்கள் ஏனைய நிலைமைகள் பாதகமாக இருக்கும் பட்சத்தில் ஏற்படக் கூடும் என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும், கீற்றோன்களை நியூரோன்கள் சக்தி உருவாக்கப் பாவித்தாலும், அதனால் நியூரோன்களுக்கு நீண்ட காலப் போக்கில் பாதிப்பிருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்!   

உடல் எடை குறைப்பு முறைகளில் மிகக் குறைத்த பக்க விளைவுகள் உள்ளதும் எளிமையானதும், மாச்சத்தை நன்கு குறைத்து, வாரம் 3 நாட்களாவது தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது தான் என்பது என் கருத்து! 

கற்காலத்தில் வேட்டையாடி மாமிசத்தைத்தானே மனிதர் உண்டர் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கற்காலத்தில் வேட்டையாடி மாமிசத்தைத்தானே மனிதர் உண்டர் . 

முந்தி ஆதிகாலத்திலையெல்லாம் இறப்பு வீதம் எக்கச்சக்கமாய் எல்லே இருந்தது.இப்ப நாங்கள் எங்கடை மருத்துவ கெட்டித்தனத்தாலை இறப்பு வீதத்தை குறைச்செல்லே சாதனை புரிஞ்சிருக்கிறம்.....ஆனால் இப்ப வீட்டுக்கு வீடு புற்றுநோயாலை காடாத்தல் நடக்கிறதை வெளியிலை சொல்லமாட்டம்....🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Justin said:

இணையவனின் திரியில் நானும் நீர்வேலியானும் தேவைக்கதிகமாக எழுதுகிறோமோ என்று நினைக்கிறேன். இந்தப் பதிவோடு நிறுத்திக் கொள்கிறேன்:

ஏராளன், இந்த பேலியோ அல்லது குறைமாவு நிறை கொழுப்பு இந்தக் காலத்து மனிதருக்கு ஆரோக்கியமா என்று யோசிக்க வேண்டும் என்பது என் கருத்து.

நீங்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல வேட்டையாடி வாழ்ந்த காலத்தில் இந்த நிறை கொழுப்பு உணவு முறை இருந்தது. 6000 வருடங்கள் முந்தைய அந்த நாட்களில் வேறென்ன இருந்தன? உணவுக்காகவும், ஆபத்தில் இருந்து தப்பவும் தினசரி மைல் கணக்கான ஓட்டமும் நடையும் இருந்தது. Little Ice Age எனும் காலத்தில் பூமியை மூடிய பனிப் படலம் 10,000 ஆண்டுகள் முன்பு தான் விலகியது, அதனால் பூமி வடதுருவம் போல பனியுறைந்தும் இருந்தது! இன்றும், வடதுருவத்தை அண்டிய பகுதிகளில் வாழும் Inuit மக்கள் நிறைய இறைச்சி, கொழுப்பு சாப்பிட்டும் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். எப்படி? உடற்சூட்டை உருவாக்க அவர்களுக்கு இந்தக் கொழுப்புணவு தேவை. இதனால் கொழுப்பு உடலின் பிழையான இடங்களில் சேராமல் இருக்கக் கூடும்.

எனவே, ஆதிமனிதனின் உணவை இன்றைய சொகுசு வாழ்வில் கொண்டு வந்தால் அது இதய நோய்களை, உடற்பருமன் பிரச்சினையைக் குறைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது! வேண்டுமானால், பேலியோ உணவோடு ஆதி மனிதனின் உடலுழைப்பு, சீதோஷ்ண நிலை என்பவற்றையும் சேர்த்தால் அதே விளைவு கிடைக்கலாம்! காலனிலையை மாற்ற முடியாது, எனவே மாச்சத்தைக் குறைத்து, உடற்பயிற்சியைக் கூட்டுதல் என்பதில் தான் கடைசியில் வந்து நிற்கிறது பேலியோ முறை!

உயிரியல் ரீதியில், நீங்கள் குடிக்கும் தண்ணீர் குடலுக்குப் போகும். அங்கே குடல் தேவையான அளவு உறிஞ்சிய  பின்னர், எஞ்சியது மலத்தோடு வெளியேறும்.  பின்னர் உடலினுள் சென்ற தண்ணீர் இரத்தத்தை ஐதாக்கி விடாமல் இருக்க சிறுநீரகம் தொழிற்பட்டு சிறுநீராக வெளியேற்றும்!  எனவே யாரும் அளவுக்கதிகமாக தண்ணீர் அருந்த முடியாது!

ஆம், இணையவனின் பதிவில் நாங்கள் தேவைக்கு அதிகமாக உரையாடுகிறோம் போலுள்ளது.  நானும் தற்போதைக்கு நிறுத்தி விடுகிறேன். ஒரு சிறப்பான உரையாடலுக்கு நன்றி 

முடிந்தால் தேவையை பொறுத்து உரையாடலாம். எனக்கு கீழ்வரும் விடயங்களில் ஆர்வம் உண்டு: மாச்சத்து பிரதான எரிபொருளாக இருந்தால் உடலின் இன்சுலின் விளைவுகள் ஏன் இப்படி வரவேண்டும், மாச்சத்தின் அத்தியாவசிய தேவை, குளுக்கோஸின் inflammatory (ஒவ்வாமை?) விளைவுகள் ஏன் இப்பிடி இருக்கிறது, diet heart எடுகோள் (hypothesis) எவ்வாறு, எதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது, இப்போது நடத்தப்படும் ஆய்வுகளின் முடிவுகள் ஏன் மீண்டும் மீண்டும் saturated fat பாதுகாப்பான எரிபொருள் என்பதாக வருகிறது. சில வேட்டுவ சமூகங்களின் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகள். சிலரின்  "சிறுநீரகத்துக்கு கட்டாயம் பாதிப்பு"  என்பது போன்ற அதீதமான, தவறான புரிதல்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

வழமையாக 3 வேளை உண்ணும் உணவை 3 வேளை  6 வேளைகளாக பிரித்து உண்ணுதல் மிகச்சிறந்த பலனை தரும். அந்த ஆறு வேளைகளிலும் உடலுக்கு தேவையான தாதுப்பொருட் களை (காபோவைதரேட், கொழுப்பு) என பிரித்து உண்பதால் மேலும் உடல் நிறை கூடாமல் நிறையுணவை பெற்றதும் ஆகி விடும். போனசாக உடற்பயிற்சி செய்தால் மேலும் உடம்பு ஆரோக்கியமாகும்.

நன்றி இணையவன் உங்கள் பதிவுக்கு.

மேற் கூறிய முறை சிறுநீரகத்தை பாதிக்குமென அறிந்தேன். 

சிறுநீரகத்துக்கு மட்டும் இல்லை. பெண்களுக்கு மாதவிடாய் போன்ற விடயங்களில் எல்லாம் பாதிப்பு வரும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.