Jump to content

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

newyear-3.jpg

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றதோடு தமிழ் சிங்கள புத்தாண்டினை அமைதியாக வரவேற்கின்றனர்.

அவ்வாறே கிளிநொச்சியிலும் சித்திரை புத்தாண்டு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இன்று காலை மருத்து நீர் தேய்த்து புத்தாடை அணிந்து மக்கள் வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று காலைமுதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி பிள்ளையார் கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அதேபோல் வவுனியா மாவட்டத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோன்று கிழக்கிலங்கையிலும் மக்கள் சித்திரை புத்தாண்டை விமர்சியாக கொண்டாடியதோடு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மலையக மக்களும் புத்தாண்டை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று புத்தாண்டை வரவேற்ற மக்கள் மிகவும் அமைதியான முறையில் சிங்கள தமிழ் பத்தாண்டை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சித்திரை-புத்தாண்டை-முன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

முருகபெருமானுக்கு இரெண்டு மனைவிகள். போருக்கு பிறகு அங்கு விதவைகள் தனியாக குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் பாதுகாப்பு இல்லாமலும் துன்ப படுகிறார்கள். ஆண்கள் இவ்வாறான விதவைகளை இரெண்டவது மனைவியாக்கி வாழ்வு கொடுக்கலாமே? முருக பெருமான் காட்டிய வழிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

முருகபெருமானுக்கு இரெண்டு மனைவிகள். போருக்கு பிறகு அங்கு விதவைகள் தனியாக குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் பாதுகாப்பு இல்லாமலும் துன்ப படுகிறார்கள். ஆண்கள் இவ்வாறான விதவைகளை இரெண்டவது மனைவியாக்கி வாழ்வு கொடுக்கலாமே? முருக பெருமான் காட்டிய வழிதானே?

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம்.

சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) 

எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா).

இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை).

இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!   😁

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

முஸ்லிம்களுக்கு சட்ட சிக்கல் இல்லையே? 

உண்மையில் எங்கள் உலகம் இன்னமும் ஆணாதிக்க உலகமாக தான் இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஆணாதிக்க சிந்தனை - அல்லாவிட்டால் பாஞ்சாலி போல ஒருத்தி பல கணவர்களை கொள்ளும் உரிமையை கொண்டிருப்பாள். பழைய சிங்களவர்கள் மத்தியிலும் மலையாள நம்பூதிரிகள் மத்தியிலும் ஒரு பெண் பல கணவர்களை ஒரே காலத்தில் கொண்டு இருக்கும் பண்பாடு இருந்தது - ஐரோப்பியர் அதை தடை செய்யும் வரை. இந்த கணவர்கள் சகோதரர்கள். சொத்து பிரியாமல் இருக்க ஒரே பெண்ணை திருமணம் செய்தார்கள்.

போர் காரணமாக   ஆண்கள் இறந்து போக பெண்களுக்கு பாதுகாப்பு தேடி  முகம்மது நபி பல தார விவாகத்தை ஊக்குவித்தார். அதனால் முஸ்லிம் சமுதாயம் பலுகிப் பெருகி பூமியை நிரப்பியது. இன்று ஈழத்தமிழ் இனம் போரினால் அழிந்து மூன்றாவது சிறுபான்மை ஆகி நிற்கிறது.  இந்த நிலையில்இருந்து மீள முகம்மது நபி பயன்படுத்தி வெற்றி கண்ட வழியில் முருகப்பெருமானின் ஆசியுடன் ஏன் எங்கள் மக்கள் முயற்சிக்க கூடாது? எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

 

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

2. எங்கள் ஆண்களின் முதல் தாரங்கள் உலகே அழிந்தாலும் தங்கள் கணவர்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

இங்கே எங்கே ஆணாதிக்கம்? எனக்கு தெரிவது பெண்ணாதிக்கம் தான். இதற்கும் நபிகள் நாயகத்தின் தீர்வுதான் தேவை போலும்.  கல் மனம் கொண்ட, சுயநலமும் பொறாமையும் நிறைந்த முதல் தாரத்தை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டு இரெண்டு விதவை குடும்பங்களுக்கு எங்கள் ஆண்கள் வாழ்வளிக்க முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

அதே தான்...

ஆனால் இதில் பலர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது வேதனைக்குரியது. 

Link to comment
Share on other sites

9 hours ago, சுவைப்பிரியன் said:

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

இந்த தெய்வங்கள் வந்தாவது உங்களுக்கு கனவான்களுக்கும் கணவனுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரியவைப்பார்கள் என்ற நப்பாசை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 

ம்ம் அங்கேயும் மெனக்கெட்டு கன சனங்கள் பூசை பண்ணியது அது போக தைபொங்கலுக்கும் பொங்கி கொண்டாடினர் கன சனங்கள் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தில் அங்கு நின்றவர்கள்  ஆண்கள் பல பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்து 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தை காட்டுவது போல விதவை பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் தானே     ரதி அதை சொல்ல வந்தேன்

6 hours ago, ரஞ்சித் said:

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

ம்ம் இப்ப வரைக்கும் ஊர் அப்படித்தான் இருக்கிறது ரகுநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

 

கிரியாசக்தி ....தெய்வானை
இச்சாசக்தி .....வள்ளி 
ஞானாசக்தி ....வேல்

மனிதன் தனது செயல்,ஆசை இரண்டையும் அடக்கி ஞானம் அடையளாம் என்று காட்டவே இரு பெண்களை காட்டியுள்ளார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் பிடித்தால் மாறி மாறி  மதம் மாறலாம் தப்பில்லை....மதம் பிடிக்காவிட்டால் எப்படி மதம் மாறுவது....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

முப்பது வருடங்களுக்கு முதலே தமிழ் பகுதிகளில் பத்து பெண்களுக்கு ஒரு ஆண் என்று விகிதாசாரம் வந்து விட்டது. இப்போது பெண்கள் தொகை இன்னும் அதிகமாகி ஆண்கள் தொகை  நன்கு குறைந்து இருக்கும். இப்போது முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். தமிழர் இரேண்டாவது சிறுபான்மையாகி விட்டார்கள். நிலைமைகள் மாறும் போது பாதிப்புகளை தாக்குபிடித்து நிலைத்து நிற்க மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி மாற மறுப்பவை அழிந்து போவது இயற்கை. இதை தான் "தக்கன பிழைக்கும்" என்ற உயிரியல் தத்துவம் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Jude said:

முப்பது வருடங்களுக்கு முதலே தமிழ் பகுதிகளில் பத்து பெண்களுக்கு ஒரு ஆண் என்று விகிதாசாரம் வந்து விட்டது. இப்போது பெண்கள் தொகை இன்னும் அதிகமாகி ஆண்கள் தொகை  நன்கு குறைந்து இருக்கும். இப்போது முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். தமிழர் இரேண்டாவது சிறுபான்மையாகி விட்டார்கள். நிலைமைகள் மாறும் போது பாதிப்புகளை தாக்குபிடித்து நிலைத்து நிற்க மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி மாற மறுப்பவை அழிந்து போவது இயற்கை. இதை தான் "தக்கன பிழைக்கும்" என்ற உயிரியல் தத்துவம் சொல்கிறது.

அழிந்து போவதுதான் நடக்கும் என்றால் அதை யாராலும்தடுக்க முடியாது....முஸ்லிம்கள் முதலாவது சிறுபான்மையினராக வ‌ருகின்றார்கள் என்றால் நல்லது தானே...அவர்களாலும் தமிழ்மொழி வளரும்...பாராட்ட பட வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

ஓம்  அண்ண ஆனால் மதம் முட்டாள்தனாமானது என்று சொல்பவன் அந்த மதத்தின் குறைகளை காவித்து திரிகிறான் என்றால் அவன் எவ்வளவு முழுமுட்டாளா இருப்பான் .

தன்ற பல்லை தட்டி மோந்து பார்ப்பது போலதான்:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.