Jump to content

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

newyear-3.jpg

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் சிறப்பு வழிபாடுகள்

சித்திரை புத்தாண்டு நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பு, வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் சகல பிரதேச மக்களும் விகாரி வருடத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள இந்து ஆலயங்களிலும் விகாரைகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

தமிழர் தாயகமெங்கும் சித்திரை புதுவருட பிறப்பை மக்கள் சிறப்பாக கொண்டாடினர். அத்தோடு கோயில்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராக வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த பூஜையில் ஏராளமான பக்த அடியார்கள் பங்கேற்றதோடு தமிழ் சிங்கள புத்தாண்டினை அமைதியாக வரவேற்கின்றனர்.

அவ்வாறே கிளிநொச்சியிலும் சித்திரை புத்தாண்டு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இன்று காலை மருத்து நீர் தேய்த்து புத்தாடை அணிந்து மக்கள் வணக்கஸ்தலங்களில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்தோடு இன்று காலைமுதல் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. கிளிநொச்சி பிள்ளையார் கோயில், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பல ஆலயங்களில் வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மக்களும் புத்தாண்டை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

அதேபோல் வவுனியா மாவட்டத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

அதேபோன்று கிழக்கிலங்கையிலும் மக்கள் சித்திரை புத்தாண்டை விமர்சியாக கொண்டாடியதோடு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் மலையக மக்களும் புத்தாண்டை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தில் குருக்கள் பாலசுப்பிரமணிய சர்மாக குருக்கள் தலைமையிலும், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலும், கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும், விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. அத்தோடு ஹட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கோயில்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று புத்தாண்டை வரவேற்ற மக்கள் மிகவும் அமைதியான முறையில் சிங்கள தமிழ் பத்தாண்டை கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சித்திரை-புத்தாண்டை-முன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு அரோகரா.........!   🌺

நன்றி தமீழ்சிறி.....! 😁  

முருகபெருமானுக்கு இரெண்டு மனைவிகள். போருக்கு பிறகு அங்கு விதவைகள் தனியாக குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் பாதுகாப்பு இல்லாமலும் துன்ப படுகிறார்கள். ஆண்கள் இவ்வாறான விதவைகளை இரெண்டவது மனைவியாக்கி வாழ்வு கொடுக்கலாமே? முருக பெருமான் காட்டிய வழிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

முருகபெருமானுக்கு இரெண்டு மனைவிகள். போருக்கு பிறகு அங்கு விதவைகள் தனியாக குடும்பத்தை பராமரிக்க முடியாமலும் பாதுகாப்பு இல்லாமலும் துன்ப படுகிறார்கள். ஆண்கள் இவ்வாறான விதவைகளை இரெண்டவது மனைவியாக்கி வாழ்வு கொடுக்கலாமே? முருக பெருமான் காட்டிய வழிதானே?

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

ஆனாலும் முயற்சித்து கொண்டுதான் இருக்கின்றோம்.

சமீபத்தில் இம் முயற்சியில் நான் ஊர் போயிருந்தபோது, என்னை கண்டதும் அப் பெண் பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்.....! (திவ்யதேசம்) 

எனது நண்பர் இதற்காக தனது மனைவியையும் அழைத்து கொண்டு ஊருக்கு சென்றபோது அவரது காதலி அவரை தெரியாது என்றே கூறிவிட்டார்.....!(கலா).

இன்னொரு நண்பர் கடிதத் தொடர்பில் இருக்கிறார்.கதை முடியும்போதுதான் தெரியும் அவருக்கு என்ன மாதிரியான முடிவு என்று.....! ( அன்புள்ள பரிமளம். இன்னும் முடிவு த எட்டப்படவில்லை).

இதற்கான ஆவணங்கள் யாழ் அக்காவை 21ல் காணக் கிடைக்கிறது. தேடித் பார்க்கவும்.....!   😁

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

நண்பரே இது ஒரு ஆணாதிக்க சிந்தனையாக இருந்தாலும் கூட அரைவாசி ஆண்கள் இதை மறுக்க மாட்டார்கள். ஆனால் யாழில் பெண்கள் ஒத்து வருவார்களா கத்தியால் குத்த வருவார்களா என்பதற்கு என்ன உத்தரவாதம். இதை நானோ நீங்களோ தீர்மானிக்க முடியாதுதானே..... சட்ட சிக்கல் வேற இருக்கு.....!

முஸ்லிம்களுக்கு சட்ட சிக்கல் இல்லையே? 

உண்மையில் எங்கள் உலகம் இன்னமும் ஆணாதிக்க உலகமாக தான் இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஆணாதிக்க சிந்தனை - அல்லாவிட்டால் பாஞ்சாலி போல ஒருத்தி பல கணவர்களை கொள்ளும் உரிமையை கொண்டிருப்பாள். பழைய சிங்களவர்கள் மத்தியிலும் மலையாள நம்பூதிரிகள் மத்தியிலும் ஒரு பெண் பல கணவர்களை ஒரே காலத்தில் கொண்டு இருக்கும் பண்பாடு இருந்தது - ஐரோப்பியர் அதை தடை செய்யும் வரை. இந்த கணவர்கள் சகோதரர்கள். சொத்து பிரியாமல் இருக்க ஒரே பெண்ணை திருமணம் செய்தார்கள்.

போர் காரணமாக   ஆண்கள் இறந்து போக பெண்களுக்கு பாதுகாப்பு தேடி  முகம்மது நபி பல தார விவாகத்தை ஊக்குவித்தார். அதனால் முஸ்லிம் சமுதாயம் பலுகிப் பெருகி பூமியை நிரப்பியது. இன்று ஈழத்தமிழ் இனம் போரினால் அழிந்து மூன்றாவது சிறுபான்மை ஆகி நிற்கிறது.  இந்த நிலையில்இருந்து மீள முகம்மது நபி பயன்படுத்தி வெற்றி கண்ட வழியில் முருகப்பெருமானின் ஆசியுடன் ஏன் எங்கள் மக்கள் முயற்சிக்க கூடாது? எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

எங்கள் பெண்கள் விரும்ப மாட்டார்கள் என்றவாறாக எழுதி இருந்தீர்கள். விதவைகள் தற்கொலை செய்கிறார்கள், விபச்சாரம் செய்கிறார்கள் - இவற்றிலும் பார்க்க இரெண்டாம் தாரமாக வாழ அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் - அது தவறான கருத்தா?

 

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

Link to comment
Share on other sites

1 hour ago, ஏராளன் said:

இரண்டாம் தார மணத்திற்கு விதவை பெண்கள் சம்மதிக்கலாம், ஆண்களும் ஆர்வ கோளாறில் சம்மதிக்கலாம்!
முதல் தாரமாக இருக்கும் மனைவி எனும் பெண் சம்மதிக்கமாட்டார் யுவர் ஆனர்!

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

2. எங்கள் ஆண்களின் முதல் தாரங்கள் உலகே அழிந்தாலும் தங்கள் கணவர்களை எவருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

இங்கே எங்கே ஆணாதிக்கம்? எனக்கு தெரிவது பெண்ணாதிக்கம் தான். இதற்கும் நபிகள் நாயகத்தின் தீர்வுதான் தேவை போலும்.  கல் மனம் கொண்ட, சுயநலமும் பொறாமையும் நிறைந்த முதல் தாரத்தை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்து விட்டு இரெண்டு விதவை குடும்பங்களுக்கு எங்கள் ஆண்கள் வாழ்வளிக்க முன்வர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

மதமும் மனையும் அவரவர் தனிப்பட்ட விடயம். இனமென்று பார்த்தால் நான் தமிழன்.

தைத்திருநாளும்   சித்திரை திருநாளும் இயற்கை தந்த பருவகாலங்களை வைத்தே உருவானது.

அதே தான்...

ஆனால் இதில் பலர் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பது வேதனைக்குரியது. 

Link to comment
Share on other sites

9 hours ago, சுவைப்பிரியன் said:

கலியானம் கட்டித்தான் விதவைப் பெண்களுக்கு உதவ வேண்டும் இல்லை அதுக்கு பல வழிகள் உண்டு.அதே போல் கலியானம் கட்டாமல் விதைவைப் பெண்களுக்கு சேவை செய்ய பல புலம்பெயர்ந்த கணவாண்கள் முயல்வதும் கண்குடு.இதுக்கு எதற்க்கு முருகனையும் அல்லாவையும் இன்னும் மற்ற தெய்வங்களையும் இழுக்க வேணும்.

இந்த தெய்வங்கள் வந்தாவது உங்களுக்கு கனவான்களுக்கும் கணவனுக்கும் இடையேயான வித்தியாசத்தை புரியவைப்பார்கள் என்ற நப்பாசை தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இன்று குருத்தோலை ஞாயிறு..அவர்களது விரத காலம்...ஈஸ்டர் வருகுது அல்லவா🙂 
 

ம்ம் அங்கேயும் மெனக்கெட்டு கன சனங்கள் பூசை பண்ணியது அது போக தைபொங்கலுக்கும் பொங்கி கொண்டாடினர் கன சனங்கள் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தேவாலயத்தில் அங்கு நின்றவர்கள்  ஆண்கள் பல பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்து 

ஒரு கன்னத்தில் அறைந்தால் மற்ற கன்னத்தை காட்டுவது போல விதவை பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் தானே     ரதி அதை சொல்ல வந்தேன்

6 hours ago, ரஞ்சித் said:

குருக்கள் மடத்திற்கும் தேற்றாத்தீவிற்கும் சிலமுறை வந்திருக்கிறேன். 89 இல் என்று நினைவு. மிக்கேல் கல்லூரியில் என்னுடன் படித்த ஜெயந்தன், ஜோன் கென்னத் போன்ற நண்பர்கள் இங்கிருந்துதான் தினமும் பள்ளிக்கு வந்து செல்வார்கள். அழகிய ஊர்கள்!!!

ம்ம் இப்ப வரைக்கும் ஊர் அப்படித்தான் இருக்கிறது ரகுநாதன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

நீங்கள் சொல்வது உண்மையானால்:

1. எங்கள் ஆண்கள் ஆர்வக் கோளாறினால் மட்டுமே இரெண்டாம் தாரத்தை ஏற்று கொள்வார்களே அன்றி அந்த விதவைகளில் உள்ள இரக்கத்தாலோ அல்லது எங்கள் இனம் அழிந்து  போகக்கூடாது  என்ற  நோக்கத்தாலோ அல்ல.

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

 

கிரியாசக்தி ....தெய்வானை
இச்சாசக்தி .....வள்ளி 
ஞானாசக்தி ....வேல்

மனிதன் தனது செயல்,ஆசை இரண்டையும் அடக்கி ஞானம் அடையளாம் என்று காட்டவே இரு பெண்களை காட்டியுள்ளார்கள்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் பிடித்தால் மாறி மாறி  மதம் மாறலாம் தப்பில்லை....மதம் பிடிக்காவிட்டால் எப்படி மதம் மாறுவது....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்றைய நாளில் கூட சித்திரைப்புத்தாண்டுக்கு குருத்து கட்டி பல கிறிஸ்த்தவர்கள் திருப்பலி செய்து அவர்கள் சாமிக்கும் பூஜையில் ஈடுபட்டு வழிபட்டுக்கொண்டிருந்தார்கள் பல தேவாலயங்களில் நான் பார்த்தது தேத்(ற்)தாத்தீவு மற்றும் குருக்கள் மடத்தில்  இன்னும் பல இடங்களில் இன்று ஞாயிறு என்பதாலா என்று எனக்கு தெரியவில்லை 

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

Link to comment
Share on other sites

1 hour ago, putthan said:

நானும் உண்மையை சொல்லட்டே ......முதல்தாரத்தையே ஆர்வகோளாறிலதான் க‌ட்டுறோம்....10 வயதில தொடங்கின ஆர்வக்கோளாறு 30 வயதில கரை காணும் .....

இன்னோரு இனத்தை பார்த்து வாழவேண்டிய நிலையில் இருந்திருந்தால் எப்பவோ சிங்களவராக மாறியிருப்பார்கள்.....இவ்வளவு அழிவுகளின் பின்பு கோயில்களையும் ,தேவாலய‌ங்களையும் கட்டி வாழ நினைக்கிறார்கள்....

முப்பது வருடங்களுக்கு முதலே தமிழ் பகுதிகளில் பத்து பெண்களுக்கு ஒரு ஆண் என்று விகிதாசாரம் வந்து விட்டது. இப்போது பெண்கள் தொகை இன்னும் அதிகமாகி ஆண்கள் தொகை  நன்கு குறைந்து இருக்கும். இப்போது முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். தமிழர் இரேண்டாவது சிறுபான்மையாகி விட்டார்கள். நிலைமைகள் மாறும் போது பாதிப்புகளை தாக்குபிடித்து நிலைத்து நிற்க மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி மாற மறுப்பவை அழிந்து போவது இயற்கை. இதை தான் "தக்கன பிழைக்கும்" என்ற உயிரியல் தத்துவம் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Jude said:

முப்பது வருடங்களுக்கு முதலே தமிழ் பகுதிகளில் பத்து பெண்களுக்கு ஒரு ஆண் என்று விகிதாசாரம் வந்து விட்டது. இப்போது பெண்கள் தொகை இன்னும் அதிகமாகி ஆண்கள் தொகை  நன்கு குறைந்து இருக்கும். இப்போது முதலாவது சிறுபான்மையாக முஸ்லிம்கள் வந்து விட்டார்கள். தமிழர் இரேண்டாவது சிறுபான்மையாகி விட்டார்கள். நிலைமைகள் மாறும் போது பாதிப்புகளை தாக்குபிடித்து நிலைத்து நிற்க மாற்றங்களை செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. அப்படி மாற மறுப்பவை அழிந்து போவது இயற்கை. இதை தான் "தக்கன பிழைக்கும்" என்ற உயிரியல் தத்துவம் சொல்கிறது.

அழிந்து போவதுதான் நடக்கும் என்றால் அதை யாராலும்தடுக்க முடியாது....முஸ்லிம்கள் முதலாவது சிறுபான்மையினராக வ‌ருகின்றார்கள் என்றால் நல்லது தானே...அவர்களாலும் தமிழ்மொழி வளரும்...பாராட்ட பட வேண்டிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

அது குருத்தோலை ஞாயிறு தனி...... அன்று தேவாலயங்களில் விசேஷமான பூசைகள் செய்வார்கள். ஈஸ்ட்டருக்கு முன் வரும் .ஜீசஸ் ஜெருசலேமுக்குள் வரும்பொழுது மக்கள் அவரை கழுதையின் மீது அமரச்செய்து அழைத்து செல்கிறார்கள். அப்பொழுது கையில் கிடைத்த சிறிய கொப்புகளை ஒலிவ் இலைகளை எல்லாம்  ஒடித்து பாடல்கள் பாடி அவரை அழைத்து செல்கிறார்கள். எங்கள் நாடுகளில் ஒலிவ் இல்லாததால் குருத்தோலைகளை பாவிக்கிறார்கள். என்றுதான் நினைக்கிறேன்.....!  🌺

ஓம்  அண்ண ஆனால் மதம் முட்டாள்தனாமானது என்று சொல்பவன் அந்த மதத்தின் குறைகளை காவித்து திரிகிறான் என்றால் அவன் எவ்வளவு முழுமுட்டாளா இருப்பான் .

தன்ற பல்லை தட்டி மோந்து பார்ப்பது போலதான்:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.