Jump to content

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?


Recommended Posts

இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம்.  இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை.  பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள்  என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை   

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய 
சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ 
பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய  

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
1 hour ago, tulpen said:

ஒரு தமிழ் பெயரும் இல்லாத தமிழ்புத்தாண்டு. இது எப்படி சாத்தியப்பட்டது. 

என்ன செய்வது... ஆங்கிலக் கலண்டர், மேலைத்தேய உடை இப்படியானவை எல்லாம் எப்படி நம்மால் தவிர்க்க முடியாத விடயங்கள் ஆகிவிட்டனவோ இவ்வாறான பண்டிகைகளும் அப்படியே.

காலங்காலமாக நிகழ்ந்த கலாச்சாரக் கலப்புகளின் விளைவே இன்றைய நமது கலாச்சாரம் ஆகிவிட்டது. பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாக நிகழ்ந்த இந்த கலாச்சார மாற்றங்களை ஆராய்வதே இடியப்பச்சிக்கலான விடயம். நூல்நூலாக இழுத்து ஆராய நம் ஆயுள் போதாது.

பண்டிகைகளைக் கொண்டாடி வாழ்த்தி மகிழாமல் எதிர்வினையாற்றுதல் எதிர்மறையான, ஆரோக்கியமற்ற அதிர்வலைகளை மனிதர்களிடையே விதைத்துவிடும் என்பது என் அபிப்பிராயம். 😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

Link to comment
Share on other sites

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

Link to comment
Share on other sites

3 hours ago, tulpen said:

பிள்ளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள்

நியாயமான கோரிக்கை தான். ஆனால் இந்துக்கள் அல்லாத தமிழர்கள் ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய நாட்டு மத / கலாச்சார வழி வந்த பெயர்களை வைத்தால் அவர்கள் தமிழர் இல்லையா? வடமொழிப்பெயர்கள் மட்டுமே தமிழரிடையே கலந்து காணப்படுகிறது என்கிறீர்களா? 😊

பண்டிகைகளைக் கொண்டாடுவதில் குறைபிடிப்பது அதைக் கொண்டாடுபவர்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும். நம்மில் அனேகர் பல்லினக் கலாச்சார நாடுகளில் வாழ்கிறோம் என நினைக்கிறேன். அங்கெல்லாம் மதங்களுக்கிடையே, மக்களிடையே நல்லிணக்கம் இருக்கிறதென்றால் பரஸ்பரம் மத நம்பிக்கைகளை மதித்து நடத்தலால் தான் என நம்புகிறேன். பாரபட்சமாகக் குறைகண்டுபிடித்தலால் அல்ல! 😊

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

இங்கு நம் மொழியையும் மதவிழாக்களையும் தவறாகக் கலந்து குழப்பிக்கொள்கிறோம். சித்திரைப் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, சித்திரைப் புத்தாண்டைத் தமிழர்களாகிய நாம் கொண்டாடுவது தவறு என்பது தமிழ்க் கிறிஸ்தவ நண்பர்கள் ஆங்கிலப்புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் பண்டிகைகளைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வதற்கு ஒப்பானது. அதைத் தவறாக நான் கருதவில்லை - அந்த நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. தமிழர் பண்டிகை என்றால் அது என்றிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்ற என்ற கேள்வி எழுகின்றது? ஏன் அதற்கு தமிழ் அல்லாத பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது என ஆராய வேண்டி வருகின்றது. அவ்வாறு ஆராயும் போது அப்பெயர்கள் எல்லாம் வக்கிரமான காரணங்களினூடாக கதைகளினூடாக வருகின்றது என்பதை அறியக் கூடியதாக இருக்கின்றது. நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி அண்மையில் கூட விஞ்ஞான பூர்வமாக நிறுவிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்படி கொள்ளுபட கோவில்கள் பக்கம் கொஞ்சம் எட்டி பார்த்தால் சப்பாத்துக்கள் கழட்டி வைக்கும் ராக்குகள் நிரம்பி வழிகின்றன வெம்பிளி ஈழபதீஸ்வரர்க்கு அய்யர் மார் விழுந்து விழுந்து மணி அடிச்சு பூசை செய்வது வெளியில் இருந்தே பார்க்க கூடியதாக இருக்கு .

நாங்கள் என்ன குத்தி முறிந்தாலும் சனம் கோவிலுக்கு தீபாவளிக்கும் போகுதுகள்  ஆங்கில வருடபிறப்புக்கும் போகுதுகள் தைபொங்கலுக்கும் போகினம் சித்திரை வருசமான இன்றும் அய்யர் கூட்டத்தின் கல்லாவை நிரப்ப அடிபட்டுக்கொண்டு வரிசையில் நிக்குதுகள் . இதுகளை திருத்த நூறு சீமான் வந்தாலும் காணாது . போற போக்கிலை குருக்கள் எனும் ஐயரிடம் தைப்பூசம் எண்ணத்துக்கு கொண்டாடுறாங்கள் என்று கேட்டு துலைக்க ஐயர் எஸ்கேப் எனக்கும் உண்மயில் எனக்கும் தெரியாது இங்கு யாருக்கும் தெரியுமா ?

மொரிசியஸ் தமிழை மறந்த தமிழர் ஒவ்வொரு வருடமும் ஆர்ச்வே முருகனுக்கு காவடி எடுப்பார் அவரிடமும் கேட்டன் அவரும் தனக்கு தெரியாது தன் பெற்றோர் தைபூசம் நாளில் கும்பிடுறவை நானும் கும்பிடுறன் என்கிறார் . இப்படித்தான் எங்கடை எதிர்கால சந்ததியும் இருக்கும் போல் தென்படுது . உங்களின் வருடபிறப்பு எப்ப என்று கேட்டால் முழித்துகொண்டு நிக்க வேண்டியது தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியங்களை வரலாற்றை தொலைத்த சமூகமாக மாறிவிட்டோம், தமிழ் முதல் மாதம் தை முதலாம் நாளில் வருவதே தமிழர்களின் புத்தாண்டு என்று நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

இது எல்லோராலும் முடியாது, குறிப்பாக தமிழ் பெண்கள் மத்தியில். பச்சை முடிந்துவிட்டது.  

Link to comment
Share on other sites

3 hours ago, மல்லிகை வாசம் said:

ஆனால், நமது தமிழ் கலாச்சாரத்தில் இவ்வாறான மேலைத்தேய மதப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதை ஆதரிக்கும் நாம் அதற்கு முதலே பலநூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வந்த சித்திரைப் புத்தாண்டை, தீபாவளியைக் கொண்டாடுவது தவறு என்று சொல்வது நம்மை நாமே இழிவுபடுத்தும் செயலாகும். ஏன் இந்த முரண்பாடு? 

(மீண்டும் சொல்கிறேன், நான் பிற மதங்களுக்கு எதிரானவன் அல்ல. எல்லாப் பண்டிகைகளையும் மதிப்பவன். ஆனால், நமது கலாச்சார விழுமியங்களைக் கேள்வி கேட்கும் போது ஓர் நடுநிலைப் பார்வை அவசியம் என நம்புகிறேன்.) 😊

மல்லிகை வாசம் நீங்கள்  எமது  கலாச்சாரம் விழுமியங்கள் என்று  ஒரு விடயத்தை கூறும் போது அதன் வரலாறு என்ன என்று தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் உலகில் வாழும் எல்லா இனங்களும் தமது கலாச்சாரத்திற்கு ஏதோ ஒரு வரலாற்றை வைத்திருக்கிறார்கள். அப்படி எமக்கும் ஒரு வரலாறு நிச்சயம் இருந்திருக்கும். 

 தற்போது கொண்டாடப்பட்டு வரும் தமிழ் புத்தாண்டு எந்த வருடத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது?

அதன் வரலாறு என்ன? ஆண்டு காலம் என்ன?

அதை கவலை பட தேவையில்லை . ஏதே நாம் வாழும் காலத்தில் இப்படி தான் சொல்லி கொடுக்க பட்டிருக்கிறது. அதை கேள்வி கேக்காமல் நாமும் பின்பற்றுவோம் என்று நீங்கள் சொல்லுவீர்களாக இருந்தால் கலாச்சார விழுமியங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகிகாகமல் தமிழராகிய எமக்கு சொந்தமாக எந்த கலாச்சார வரலாறும் இல்லை என்று ஏற்று கொள்ள வேண்டி இருக்கும். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

எனக்கு ஒரு சந்தேகம் இன்று சமஸ்கிரத புத்தாண்டு என்டால் அதை வட இந்தியர்களும்,,சமஸ்கிரதம் பேசுபவர்கள் புத்தாண்டாய் கொண்டாடுகிறார்களா  ?

 புத்தாண்டின் பெயர்களில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லை என்பதால் நகைச்சசுவையான அப்படி குறிப்பிட்டேன்.  ஆதி காலத்தில் எமது முன்னோர்கள் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சிகளில் எடுக்கபட்ட பொருட்களில் இருந்து கூறபட்டாலும் இடைக்காலத்தில் வாழ்ந்த எமது முன்னோர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருந்த‍தால் தமது பெருமை மிக்க கலாச்சார பெருமையை மறந்து அதன் வரலாற்றை கூட பாதுகாக்கமால்  ஆரியரின் கலாச்சசாரத்தை  அப்படியே ஏற்றுகொண்ளுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

நாம் யாதும் ஊரே யாவரும் கேளீர் என பெரிய மனதுடன் செயற்பட இடையில் வந்தவர்கள் எம் தலை மீது மிளகாய் அரைத்து விட்டார்கள். விழித்தெழ் வேண்டியவர்கள் நாங்கள் தான்.

Link to comment
Share on other sites

1832  ம் ஆண்டு கலண்டர். 1832 ம் ஆண்டு பிராமணிய புது வருடமாக கொண்டாடப் பட்ட புதுவருடம் இன்று தமிழ் புதுவருடமாக மாறியது ஏன்? 

 

8-F7-F8-E1-B-4-E87-4-D73-8-C35-A0-AB0-A2-BB850.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் மாதங்களாக நாம் எண்ணுபவை வடமொழிப் பெயர்களால் ஆனவை. சித்திரை மாதம் தமிழ்ப் புத்தாண்டு சோழ மன்னர் காலத்தில் ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாகத்தான் கூறுகின்றனர். கோயில்களில் மருத்து நீர் வாங்குவது தொடங்கி எல்லாம் அவர்களின் முறைதான். ஆதித் தமிழர்கள்  இயற்கையை வணங்கினார்கள் என்பதுதானே வரலாறு. நான் கோயில்களுக்குச் செல்வதுமில்லை. இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதுமில்லை.

வருடா வருடம் நீங்கள் கொண்டாடும் பண்டிகைகளை சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

நீங்கள் குறிப்பிட்டவாறு கிறிஸ்தவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு, நத்தார், ஈஸ்டர் என்பனவற்றை மத பண்டிகைகளாகவே கொண்டாடுகின்றனர். தம் இனத்தின் கொண்டாட்டமாக அல்ல.

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

இங்கு நாம் சித்திரை புத்தாண்டு என்று கொண்டாடப்படுவது தமிழர் பண்டிகை என்ற அடிப்படையில் என்று ஏனைவர்கள் குறிப்பிடும் போதுதான் அது தமிழ் பண்டிகையா என கேள்வி எழுகின்றது. 

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

20 hours ago, நிழலி said:

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

Link to comment
Share on other sites

20 hours ago, நிழலி said:

அவ்வாறு கேள்வி கேட்கும் போது அதை கொண்டாடுகின்றவர்களின் மனம் புண்படும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அந்தளவுக்கு பூஞ்சையான மனதா அவர்களிடம் இருக்கின்றது? விமர்சனங்களை கண்டு மனம் புண்படும் என்பது ஆரோக்கியமான ஒரு சமூகத்திடம் இருக்க முடியாத ஒரு பண்பு. அப்படிப்பட்ட பண்பு இருக்குமாயின் அதுவும் களைந்தெடுக்கப்பட வேண்டியதே.

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

Link to comment
Share on other sites

நான் முன்பு குறிப்பிட்ட படி சிக்கலான முடிவு காண முடியா ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறு என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கொண்டாடுவது அவர்களின் உரிமை. வரலாற்று ஆராய்ச்சிகளில் இருந்து நாம் கற்க வேண்டியது, காலம் காலமாக பேணிய நல்ல கலாச்சார அம்சங்களை தூக்கியெறிவதல்ல. கொண்டாடுவதும், வாழ்த்தி மகிழ்தலும் நல்ல பண்புகள்.

நாம் கற்க வேண்டியது என்னவென்றால் எந்த மதங்களிலுமுள்ள நற்பண்புகளை மட்டும் இனங்கண்டு மதிப்பதே ஆகும். அதை விடுத்து இவ்வாறான குற்றச்சாட்டுகள்தேவையற்ற மதத் துவேஷங்களுக்கே வழிகோலும். 

எம்மதமும் சம்மதமே! 😊

கொண்டாடிய அனைவருக்கும் மீண்டும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நன்றி 😊

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்து தமிழரும் மதக் கொண்டாடமாகத் தான் தமிழ் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவக் கொண்டாட்டங்கள் தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. 

உங்களின் பிரச்சனை என்னவெனில் கிறித்தவ மதத்துக்கு எதிரான மனனிலையுடன் என் கருத்துக்களை அணுகுவதே.

மல்லிகை வாசம் இதை இந்து மதம் சார்ந்து கொண்டாடுகின்றார் என்பதற்காக இப் பண்டிகை இந்துப் பண்டிகை ஆக உலகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

இது இலங்கை யிலும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பாகத் தான் அடையாளபடுத்தப்படுகின்றது. பெளத்த இந்து பண்டிகையாக அல்ல. மகிந்தவும் அவ்வாறு தான் சொல்கிறார், அவுஸ்திரேலிய பிரதமரும் இதை தமிழ் புதுவருட பிறப்பாக கருதிதான் வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.

கிறிஸ்தவ பண்டிகை ஒன்றை அல்லது தமிழ் பேசும் முஸ்லிம்கள் தம் பண்டிகை ஒன்றை தமிழர் பண்டிகை என அடையாளப்படுத்த முயன்றால், அப்பவும் இதே போன்ற எதிர்வினை தான் என்னிடமும் என்னை போன்றவர்களிடமும் இருந்து வெளிப்படும்.

 

 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சிக்கலான முடிவு காணமுடியா ஆராய்ச்சிகள். (ஆராய்ச்சி தவறு என்று சொல்லவில்லை). ஆரியர்கள் மட்டுமே தமிழரை அடிமைப்படுத்தினார்களா? 

கி.பி 1505-1948 வரை ஈழத்தை ஆக்கிரமித்த ஐரோப்பியர் அப்போது இந்துக்களாக இருந்த ஈழத் தமிழரை அடிமைப்படுத்தவில்லையா? அவர்கள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றனவா? மக்களின் மதச் சுதந்திரம் பறிக்கப்பட்டு அவர்களின் மதம் திணிக்கப்பட அவர்கள் செய்த கொடுமைகள் எத்தனை. இவை எல்லாம் அண்மைய வரலாறுகள். நமது பாட்டன், முப்பாட்டனைக் கேட்டாலும் சொல்வார்கள். இப்படியான அந்நியர் பரப்பிய மத விழாக்களைக் கொண்டாடுவதும் தவறு என்று சொல்லுவீீீ்ர்களா? பழைய ஆராய்ச்சிகளை மேற்கோள் காட்டி இந்துமதப் பண்டிகைகளை எதிர்க்கும் நீங்கள் இவற்றை மட்டும் நியாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஐரோப்பியர் மதம் பரப்ப வந்த காலத்துக்கும் மிக மிக மிகத் தொன்மையானது.

நான் எழுதியவற்றின் அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாதளவுக்கு உங்கள் புரிதல் இருக்கின்றது.

எந்த பண்டிகையை கொண்டாடுவது தவறு என்று குறிப்பிட்டு இருக்கின்றேன் என சான்று காட்டவும்.

நீங்கள் எந்த பண்டிகையும் தாரளமாக கொண்டாடுங்கள். ஆனால் அதை தமிழர் பண்டிகை என குறிப்பிடும் போது, அது தமிழர்களின் பண்டிகையாக இல்லாத ஒன்றாயின் கண்டிப்பாக கேள்விகுட்படுத்துவோம்.

தமிழர் நாகரீகம் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது, அதை வெறும் ஆயிரத்தில் சுருக்க வேண்டாம். இந்த சுருக்கல்களை தான் இந்திய மத்திய அரசுகளும், வட மானிலத்தவரும், சிங்களமும் செய்கின்றது...நீங்களும் செய்கின்றீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

ஒருவரது / ஒரு குழுவினது மத நம்பிக்கையை அவமதிப்பது நாகரீகமடைந்த முன்னேறிய சமுதாயத்தின் நற்பண்பு அல்ல. அது மிருகத்தனமானது. மற்றவர்கள் சுதந்திரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைப்பது. அன்று ஆரியர் செய்வதாக நீங்கள் கூறும் அநியாயத்துக்கு ஒப்பானது. அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொடுமையை சீர்திருத்தம் என்று போர்வையில் இந்து தமிழர்களின் நம்பிக்கையை புண்படுத்துவது கேவலமானது. எனவே களையப்பட வேண்டியது உங்களைப் போன்றவர்களின் மூக்கு நுழைத்தல்கள் தான்!😊

மீண்டும் என் கருத்துகளை வாசிக்கவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.