Jump to content

இன்று தமிழ்ப்புத்தாண்டா? அது உண்மையா?


Recommended Posts

5 hours ago, மல்லிகை வாசம் said:

கி.பி 1505க்கு முன்னர் ஐரோப்பியர் ஈழத்தில் தமது மதத்தைத் திணிக்கும் முன்னர் அங்கு வாழ்ந்த இந்துத் தமிழர் கொண்டாடிய புத்தாண்டு என்பதால் தமிழ்ப் புத்தாண்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. அக் காலத்தில் இப்போது நாமெல்லாம் வாயைப் பொத்திக்கொண்டு பின்பற்றும் ஆங்கில கலண்டரின் சனவரி 1ஆம் திகதியைக் கொண்டா டியது இல்லை தானே? இப்போது அதையும் கொண்டாடுவதால் அன்றைய தமிழர் கொண்டாடிய புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று வேறுபடுத்திக் காட்டவேண்டியிருக்கிறது.

மல்லிகை வாசம் ஆங்கில கலண்டர் என நாம்  அழைக்கும் கலண்டர் முறை எல்லோரும் பின்பற்றுவதற்கு காரணம் எவரது வற்புறுத்தலும் இல்லை. அதை எல்லோரும்  விரும்பிப்  பின்பற்றுவதற்கு காரணம் அது காலக்கணிப்பை துல்லியமாக காட்டக்கூடியவாறு அறிவுபூர்வமாக உருவாக்கப்பட்டதால் ஆகும். சித்திரைப்புத்தாண்டு போல்  முட்டாள்த்தனமாக 60 ஆண்டு என்ற சுழற்சியில் அறிவு கெட்ட முறையில் உருவாக்கப்படவில்லை.  சித்திரைப் புத்தாண்டுத்  திகதியில் உங்கள் பிறந்த திகதியை எழுத  முடியுமா? அதை வைத்து உங்கள் வயதையோ வாழும் காலப்பகுதியையோ கணிக்க முடியுமா? அறிவில் சிறந்து விளங்கியதாக கூறப்படும் தமிழர்களால் இவ்வாறான பைத்தியக்கார கலண்டர்முறையை உருவாக்கினார்கள் என்பது எமக்கு பெருமையா? நிச்சயமாக இல்லை. 

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தது:

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... #நமத#முன்னோர்கள் "#தன்னிகரற்ற"

#மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🌍

Link to comment
Share on other sites

11 hours ago, Sasi_varnam said:

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

"சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே
"

இது தமிழ் மந்திரம் அல்ல, சசி வர்ணம். நீங்கள் குறிப்பிட்ட ஆரியரின் சமஸ்கிருத மந்திரம். அதற்காக உங்களின் பெயரை மாற்றும்படி யாரும் கேட்க மாட்டோம். இது போல தவிர்க்க முடியாத கலப்புகள் - அவை பெயராகட்டும், மதச்சடங்குகள் ஆகட்டும் - தமிழ் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்து விட்டன. ஐரோப்பிய கலண்டர், ஆட்சி முறை போன்றவை பின்னர் நம்மிடையே கலந்தது போல. ஆகவே, தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது தவறல்ல என்பதே என் வாதம். புரிந்ததா சசி வர்ணம்.

தமிழ் ஆரியத்துக்கும் மிக மிக மூத்தது என நன்கு புரியும். ஆனால் விவாதம் அதுவல்ல. தமிழை முன்னிலைப்படுத்த இது தான் வழி அல்ல. 

Link to comment
Share on other sites

4 hours ago, Nathamuni said:

வாசித்தது:

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்.. தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம் இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத உண்மைகள். சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...? "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம். என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.... ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!

பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்? சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox) அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice) மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox) மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice) இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

#சித்திரை (vernal equinox) - புத்தாண்டு.

#ஆடி 18 (summer solstice) - ஆடிப்பிறப்பு.

#ஐப்பசிஅமாவாசை(autumn equinox)- தீபாவளி.

#தை 1(winter solstice) - பொங்கல். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்... #நமத#முன்னோர்கள் "#தன்னிகரற்ற"

#மாபெரும் #அறிவாளிகள் . #மிகவும் #மகத்தானவர்கள்.

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்🌍

நாத முனி  நீங்கள் வாசித்த இத்தகவலை முகநூலில் நானும் பார்த்தேன். இது  60 ஆண்டுகளுக்கு மேல் எந்த கால கணிப்பையும் காட்டமுடியாத பைத்தியக்கார சித்திரை கலண்டரை உருவாகியவர்கள் அறிவாளிகள் என்று நினைக்கும் அளவுக்கு இதை முகநூலிலில Share பண்ணும் பேதைகளாக நம்மவர்கள. உள்ளார்கள். சூரியன் கிழக்கில் உதிப்பதாக இலங்கை இந்தியாவில் தான் கூறுவார்கள். அதற்கு காரணம் மத்திய கோட்டுக்கு அண்மையாக இந்த பிரதேசம் அமைந்திருப்பதால். இங்கு ஐரோப்பியர் யாரும் அப்படி கூறுவதில்லை. அது தெரிந்தும் ஐரோப்பியர் மேல் சகட்டு மேனிக்கு பழிபோட்டுள்ளார் முகநூலில் இதை எழுதியவர். எப்போது பார்தாலும் எங்கள் இந்து மத்ததில் எல்லாம் அறிவு பூர்வமாக எப்போது எழுதி வைத்துள்ளார்கள் என்று புலம்புவது முக நூல்களில் ஒரு வாடிக்கை ஆகிவிட்டது.

Link to comment
Share on other sites

எனது கேள்விக்கு மல்லிகை வாசத்திடம் பதில் இல்லை.  அதனால் அதை தவிர்துததுள்ளார்.  பொதுவாகவே அறிவபூரவமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பத்தாம் பசலித்தனத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் இருந்து  தகுந்த பதிலை எதிர பார்கக முடியாது. புத்தாண்டு கொண்டாடப்படுவது அல்ல இங்கு பிரச்சனை.  அதை தெளிவாக விளக்கியும் திரும்ப திரும்ப அதை மட்டும் கிளிப்பிள்ளை போல்  கூறுவதன் நோக்கமே அறிவு பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை- தமிழர் புத்தாண்டு

 
புத்தாண்டுக்கு சித்திரை முதல் தேதியாக இருந்தால் என்ன? தை மாதமாக இருந்தால் என்ன என்கிற மனநிலைதான். முந்நூற்று அறுபத்தைந்து நாட்களில் ஏதோவொன்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? ஆனால் இதில் அரசியல் சாயம் புகுந்து விளையாடுகிறது.  ஒரு தரப்பு தை தான் தமிழர் புத்தாண்டு என்று சொல்ல, பாரம்பரியமாக சித்திரைதானே புத்தாண்டு என்று இன்னொரு தரப்பு மல்லுக்கட்ட என்னதான் இருக்கிறது என்று மண்டை காயாமல் இல்லை. 
 
வானியல் சாஸ்திரம் பற்றிப் பேசக் கூடிய, ஜோதிட நண்பர்கள் உட்பட சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வழியாக சில தரவுகளைத் தேடிப் பார்த்தால் மிக நம்பகமான ஒன்றாக Perihelion/Aphelion-ஐ எடுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 
அது என்ன Perihelion?
perihelion.jpg
 
 
பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதை நீள்வட்டம் என்றாலும் கூட, நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இருப்பதில்லை. இந்த நீள்வட்டத்தில் சுற்றுகிற புவியானது வருடத்தில் ஒரு நாள் சூரியனுக்கு மிக அருகாமைக்கு வருகிறது. இந்த அருகாமையை Perihelion என்கிறார்கள். சூரிய அண்மைப்புள்ளி. டிசம்பர் மாதத்தில் பூமியின் வடதுருவத்தில் அவ்வருடத்திற்கான மிக நீண்ட இருள் நாள் வரும். அந்த நாளுக்கு சற்றேறக்குறைய இரண்டு வாரங்கள் கழித்து சூரியனுக்கு மிக அருகில் புவி செல்கிறது. Perihelion. கணக்குப் போட்டுப் பார்த்தால் மார்கழி கடைசி வாரம் அல்லது தை முதல் வாரம்.  
 
(ஆறு மாதம் கழித்து புவியானது சூரியனுக்கு வெகு தொலைவில் அமைகிற புள்ளி Aphelion)
 
சரி; புவி சூரியனுக்கு மிக அருகில் சென்றுவிட்டால் அதனை எப்படி புத்தாண்டு என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கேட்கலாம்.
 
சூரியனானது தினசரி நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கு நோக்கிப் பயணிக்கிறதா? ஆறு மாதங்கள் வடகிழக்கில் உதிக்கும் சூரியன் அடுத்த ஆறு மாதங்கள் தென்கிழக்கில் உதிக்கும். எப்படி சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்கிறது?
 
december-solstice-illustration.png

பூமியானது 23.4 டிகிரி சாய்ந்த வாக்கில் சூரியனைச் சுற்றி வருகிறது. இந்த நீள்வட்டத்தின் அரை பாதியில் சுற்றும் போது வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்ந்திருக்கும். அப்பொழுது பூமத்திய ரேகைக்கு மேற்புறமுள்ள வடக்குப் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். அடுத்த ஆறுமாதங்கள் நீள்வட்டத்தின் இன்னொரு பாதியில் சுழலும் போது பூமியானது சூரியனை விட்டு வெளியில் சாய்ந்திருக்கும். அந்த ஆறு மாதங்கள் தென்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த சாய்வு சூரியனை நோக்கியும், சூரியனிடமிருந்து விலகியும் இருப்பதால்தான் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.  சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகரும் ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்கிறார்கள். (உத்தரம்: வடக்கு). இந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்- தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி. வெப்பம் மிகுந்த காலகட்டம். 
 
சூரியன் தெற்கு நோக்கிப் பயணிக்கும் போது அதனை தட்சிணாயனம் என்கிறார்கள். அந்த ஆறு மாத காலத்தில் வரக்கூடிய மாதங்கள்தான் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,மார்கழி- சூறைக்காற்று, மழை, அடைமழை, குளிர், கடுங்குளிர் என்ற பருவம் மாறி இளவேனில் தொடங்குவதை ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்கிறார்கள். 
 
இதையெல்லாம் ஓரளவுக்கு புரிந்து வைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. வானியல் ரீதியிலாக எடுத்துக் கொண்டாலும் சரி, தமிழர்களின் வேளாண்மை வாழ்வியல் சார்ந்து எடுத்துக் கொண்டாலும் சரி- தை மாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. சங்க இலக்கியங்களில் தைப் பொங்கல் குறித்தான ஏதேனும் குறிப்புகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை ஆனால் தை மாதம் குறித்தான குறிப்புகள் புறநானூற்றில் இருக்கிறது. பொங்கல் குறித்தான குறிப்புகளோ, பிற மாதங்கள் குறித்தான குறிப்புகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள்.
 
நானொன்றும் வானியல் வல்லுநர் இல்லை. ஆனால் தை மாதம் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது சரியா தவறா என்று குழப்பம் வரும் போது கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு நமக்குத் தெரிந்த வரை சரியான வல்லுநர்கள் வழியாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என நினைக்கிறேன். அப்படியான புரிதலின் வழியாக தை ஒன்றாம் தேதியைப் புத்தாண்டு என எடுத்துக் கொள்வது மிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை தமிழகம் பூமத்திய ரேகைக்குத் தெற்காக இருந்திருந்தால் இந்த கணக்கு முறையே வேறானதாக இருந்திருக்கக் கூடும். 
 
இத்தகைய விவகாரங்களில் மறைமலையடிகள் உட்பட எந்த அறிஞரைச் சுட்டிக் காட்டினாலும் யாராவது சண்டைக்கு வருவார்கள். அதை முன்வைத்தே உடைக்கவும் செய்வார்கள். யாரையும் சுட்டிக் காட்ட வேண்டியதில்லை. மேற்சொன்ன புரிதலிலிருந்தே பேசலாம். அப்படியும் சம்மதமில்லை என்றாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.
 
மீண்டுமொருமுறை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
 
Link to comment
Share on other sites

35 minutes ago, tulpen said:

எனது கேள்விக்கு மல்லிகை வாசத்திடம் பதில் இல்லை.  அதனால் அதை தவிர்துததுள்ளார்.  பொதுவாகவே அறிவபூரவமாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பத்தாம் பசலித்தனத்தை தூக்கி பிடிப்பவர்களிடம் இருந்து  தகுந்த பதிலை எதிர பார்கக முடியாது. புத்தாண்டு கொண்டாடப்படுவது அல்ல இங்கு பிரச்சனை.  அதை தெளிவாக விளக்கியும் திரும்ப திரும்ப அதை மட்டும் கிளிப்பிள்ளை போல்  கூறுவதன் நோக்கமே அறிவு பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்பதற்காக தான். 

கேள்விகளை நீங்கள் மட்டும் கேட்கவில்லை. நிழலியும் கேட்டுள்ளார். நீங்கள் நாத்திகப் பார்வையில் இருந்தும், நிழலி தமிழ் தேசியப் பார்வையில் இருந்தும் கேள்வி கேட்டீர்கள். எனவே திரியை முழுவதுமாக வாசித்து கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள். உங்களுக்கான பதில்களும் அங்கே கிடைக்கும்.

கிளிப்பிள்ளைத் தனம் என்பது ஒவ்வொரு வருடமும் நாம் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் போது உங்களைப் போன்றோர் மீண்டும் மீண்டும் இப்படியான வீணான குற்றச்சாட்டுகளை வைப்பது தான். போதிய அளவுக்குப் பதில் சொல்லிவிட்டோம். ஆக வேண்டிய செயல்கள் நிறைய உண்டு. வீண் விவாதத்துக்கு நேரம் இல்லை.

 

Link to comment
Share on other sites

8 minutes ago, மல்லிகை வாசம் said:

கேள்விகளை நீங்கள் மட்டும் கேட்கவில்லை. நிழலியும் கேட்டுள்ளார். நீங்கள் நாத்திகப் பார்வையில் இருந்தும், நிழலி தமிழ் தேசியப் பார்வையில் இருந்தும் கேள்வி கேட்டீர்கள். எனவே திரியை முழுவதுமாக வாசித்து கொடுக்கப்பட்ட பதில்களைப் பாருங்கள். உங்களுக்கான பதில்களும் அங்கே கிடைக்கும்.

கிளிப்பிள்ளைத் தனம் என்பது ஒவ்வொரு வருடமும் நாம் பண்டிகைகளைக் கொண்டாடி மகிழும் போது உங்களைப் போன்றோர் மீண்டும் மீண்டும் இப்படியான வீணான குற்றச்சாட்டுகளை வைப்பது தான். போதிய அளவுக்குப் பதில் சொல்லிவிட்டோம். ஆக வேண்டிய செயல்கள் நிறைய உண்டு. வீண் விவாதத்துக்கு நேரம் இல்லை.

 

இங்கு நாத்திக பார்வையோ தமிழ் தேசிய பார்வையோ இல்லை. அறிவு பூர்வமான கேள்வியே கேட்கப்பட்டது.  சித்திரை கலண்டர் என்பது பைத்தியக்காரத்தனமானது என்து தெளிவானது. ஒருவரது பிறந்த தினத்ததை சித்திரை கலண்டரில் எழுதி அதை வைத்து அவரின் வயதையோ வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்பது வெரி சிம்பிள்  கேள்வி. 

Link to comment
Share on other sites

5 minutes ago, tulpen said:

இங்கு நாத்திக பார்வையோ தமிழ் தேசிய பார்வையோ இல்லை. அறிவு பூர்வமான கேள்வியே கேட்கப்பட்டது.  சித்திரை கலண்டர் என்பது பைத்தியக்காரத்தனமானது என்து தெளிவானது. ஒருவரது பிறந்த தினத்ததை சித்திரை கலண்டரில் எழுதி அதை வைத்து அவரின் வயதையோ வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்பது வெரி சிம்பிள்  கேள்வி. 

அது இன்னொரு கலண்டர் முறை. இன்னொரு கணிப்பு முறை. எனவே அதை மேலைத்தேய கலண்டருடன் ஒப்பிட்டு அவரின் வயதையோ, வாழ்ந்த காலத்தையோ கணிக்க முடியுமா என்று கேட்பது வேடிக்கையானது. 

16 hours ago, நிழலி said:

மகிந்தவும் அவ்வாறு தான் சொல்கிறார், அவுஸ்திரேலிய பிரதமரும் இதை தமிழ் புதுவருட பிறப்பாக கருதிதான் வாழ்த்துகள் தெரிவிக்கின்றார்.

ஆக, உங்களைப் பொறுத்தவரையில் மகிந்தவும், அவுஸ்திரேலியப் பிரதமரும் தான் தமிழரின் பிரதிநிதிகள். அப்படித் தானே? வேடிக்கையாக இல்லை??? 😁

ஒரு இந்து மதத் தலைவரைக் கேட்டிருக்கலாம். ஏன் சாதாரண இந்து மக்களைக் கேட்டிருக்கலாம். தெளிவாக விளக்கியிருப்பார்கள். அது மதப் பண்டிகை தான்.

Link to comment
Share on other sites

16 hours ago, நிழலி said:

மல்லிகை வாசம் இதை இந்து மதம் சார்ந்து கொண்டாடுகின்றார் என்பதற்காக இப் பண்டிகை இந்துப் பண்டிகை ஆக உலகம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. 

இது இலங்கை யிலும் தமிழ் சிங்கள புதுவருடப் பிறப்பாகத் தான் அடையாளபடுத்தப்படுகின்றது.

நானோ, என் போன்ற பலரோ இதை இந்துப் பண்டிகையாகத் தான் கொண்டாடுகிறோம். நமது கொண்டாட்டத்தை உலகம் ஏற்க மறுக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. பிற மதப் பண்டிகைகளை இவ்வாறு தான் கொண்டாட வேண்டும் என நாம் ஆணையிடுகிறோமா??? அவ்வாறு தமிழ் பண்டிகையாக அடையாளப்படுத்தியது இந்துப் பண்டிகையாகக் கொண்டாடுபவர்களின் தவறல்ல.

கோவிலில் மருந்து நீர் வாங்கி நீராடி, கோவிலில் பூசைகள் செய்து, வீட்டில் சுவாமி அறையில் கைவிசேஷம் கொடுத்து / வாங்கி, பொங்கி, இறைவனுக்குப் படைத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுகிறோம். எனவேே இது இந்துப் பண்டிகை தான்.

Link to comment
Share on other sites

16 hours ago, நிழலி said:

கடந்த ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததை திணிப்பு என சொல்லும் நீங்கள் அதற்கும் முன் நிகழ்ந்த ஆரியத் திணிப்பை பற்றி கதைக்கும் போது மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்.

ஆரியத் திணிப்பு பற்றி எனக்கு நன்கு தெரியும். ஒரு போதும் மறுத்தது இல்லை. வரலாறு என்பது ஆரியத் திணிப்பை மட்டும் கொண்டதல்ல. அதற்கு முன்னும் பின்னுமான - இன்றைய திகதி வரையான சம்பவங்களையும் உள்ளடக்கியது. எனவே, எல்லாத் திணிப்புகளையும் ஆராயப் போனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டால் நாம் கொண்டாடுவதற்கு ஏதும் மிஞ்சாது.

ஐரோப்பிய திணிப்பான ஜீன்ஸ், ஷேர்ட், ரை இவற்றை களைந்து விட்டு அலுவலகத்துக்கு கோவணத்துடன் போவதே நியாயம் என்று உங்களுக்கு யாரும் சொன்னால் செய்வீர்களா? இன்னும் நிறைய உதாரணம் சொல்லலாம். ஆகவே புத்தாண்டில் பிழை பிடித்து ஒதுக்கும் நீங்கள் நீங்கள் பயன்படுத்தும் பலவற்றைத் தூக்கி எறிய வேண்டும். பல பழக்க வழக்கங்களை ஆதித் தமிழர் போல் மாற்ற வேண்டும். ஆயத்தமா???

16 hours ago, நிழலி said:

நீங்கள் வாயை பொத்திக் கொண்டு ஆங்கில காலண்டரை ஏற்க வேண்டும் என எவரும் வற்புறுத்தவில்லை. இன்னும் காலம் கடக்கவில்லை, இன்றிலிருந்து தாரளமாக ஆரிய காலண்டரை பின்பற்றி நேற்றில் இருந்துதான் இவ் வருடம் பிறந்தது என பின்பற்றுங்கள்.

நான் ஆங்கிலக் கலண்டரைக் காலத்தின் நிர்ப்பந்தத்தில் பயன்படுத்துகிறேன்.

ஆரியக் கலண்டர் என்று சொல்லி எதிர்க்கும் நீங்கள் தான்,  ஆங்கில கலண்டரையும் எதிர்த்து ஆதி தமிழர் கலண்டரைக் கண்டு பிடித்து அதைப் பின்பற்ற வேண்டும். ஒரு முன்னுதாரணமாக நீங்கள் செய்யத் தயாரா???

Link to comment
Share on other sites

16 hours ago, நிழலி said:

நான் தமிழர் நாகரீகம் முப்பது நூற்றாண்டுகளுக்கும் முற்பட்டது, தொன்மையானது, முதல் நாகரிகங்களில் ஒன்று என்பதை உணர்ந்து அந்த தொன்மையை உலகிற்கு சொல்ல முற்படுகின்றவர்களுடன் என்னை இணைத்துக் கொள்கின்றேன், நீங்கள் தமிழர் நாகரீகம் என்பது ஆரியரது நாகரீகத்திற்கு பிறகானது என்கின்றீர்கள். 

ஆரியம் தான் பழமையானது என்று நான் ஒரு போதும் குறிப்பிட்டதில்லை. மீண்டும் வாசித்துப் பாருங்கள்.

நமது தமிழ் 3000 ஆண்டுகள் மட்டுமல்ல அதற்கும் அதிகமான ஆண்டு கால பழமையாக இருக்காதா என ஏங்குபவன் நான்.

லெமூரியாக் கண்டம் சம்பந்தப்பட்ட சரியான ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் முடிவுகளைக் காண ஆவலாயுள்ளேன். இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆண்டு மூத்த தமிழ் எனப் பெருமை கொள்ளலாம். ஆனால் இது சிக்கலான ஆராய்ச்சி. அதன் பின்னாலுள்ள பல்வேறு அரசியல் தலையீடுகள் இதைச் சாத்தியமாக்குமா என்ற வேதனையும் உண்டு.

Link to comment
Share on other sites

On 4/15/2019 at 1:26 AM, நிழலி said:

நாம் இப்படியான வக்கிரமான கதைகளினூடாகவா எம் கலாச்சாரத்தினை பேணுகின்றோம் என அதிர்ச்சிக்குள்ளாகும் போது 'இல்லை' இது இடையில் புகுத்தப்பட்டது என கண்டறியப்படுகின்றது. இடையில் யாரால் / எவரா/ ஏன் / எதற்காக / எப்படி என்று கேள்விகளினூடாக அணுகும் போது நாம் / தமிழர்கள் ஆரியர்களாலும் அடிமைகளாக்கப்பட்டதன் வரலாறு முன்னால் விரிகின்றது.

தமிழர் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் என்று ஆதிச்சநல்லூர் அகழ்வாராச்சி அண்மையில் கூட விஞ்ஞான பூர்வமாக நிறுவிக் கொண்டு இருக்கும் காலகட்டத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் புகுத்தப்பட்ட ஒன்றை கேள்வி கேட்பது தவறாகாது.

இங்கு தான் நீங்கள் கேட்ட தமிழ் புத்தாண்டு போன்ற  பண்டிகைகள் தவறு என்பதற்கான ஆதாரம் உண்டு. பண்டிகைகளைக் கொண்டாடும் கலாச்சாரம் பற்றிப் பேசும் போது நீங்கள் எழுதியது.

Link to comment
Share on other sites

39 minutes ago, மல்லிகை வாசம் said:

நானோ, என் போன்ற பலரோ இதை இந்துப் பண்டிகையாகத் தான் கொண்டாடுகிறோம். நமது கொண்டாட்டத்தை உலகம் ஏற்க மறுக்க மற்றவர்களுக்கு உரிமை இல்லை. பிற மதப் பண்டிகைகளை இவ்வாறு தான் கொண்டாட வேண்டும் என நாம் ஆணையிடுகிறோமா??? அவ்வாறு தமிழ் பண்டிகையாக அடையாளப்படுத்தியது இந்துப் பண்டிகையாகக் கொண்டாடுபவர்களின் தவறல்ல.

கோவிலில் மருந்து நீர் வாங்கி நீராடி, கோவிலில் பூசைகள் செய்து, வீட்டில் சுவாமி அறையில் கைவிசேஷம் கொடுத்து / வாங்கி, பொங்கி, இறைவனுக்குப் படைத்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாடுகிறோம். எனவேே இது இந்துப் பண்டிகை தான்.

அது இந்து பண்டிகை என்பது தெரிந்ததே. இப்படிப்பட்ட மூடத்தனமான கலண்டர்முறையை ஆரிய இந்து மதத்தால் மட்டுமே உருவாக்க முடியும் அது ஒன்றே போது அது இந்து பண்டிகை தான் என்பதற்கு. உங்களை கொண்டாட வேண்டாம் என்று யாரும் அங்கு ஆணையிடவில்லை. சும்மா உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்கக பொய்களை கூற வேண்டாம். 

நீங்கள்  ஆங்கில கலண்டரை எவரது  நிர்பந்தத்தில் பயன்படுத்தவில்லை. உதவாக்கரை இந்து கலண்டரமுறையால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதால் அறிவு பூர்வமான ஆங்கில கலண்டர் முறையை நாம் எல்லோரும் பயன் படுத்துகிறோம். அறிவு பூர்வமானது உலகில் எங்கு இருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுவோம். ஆரிய திணிளப்புகள் அத்தனையும் காட்டு மிராண்டித்தனமானது. ஆகவே தான்  அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கிறோம். 

ஐரோப்பியர் அறிமுகப் படுத்திய ஜீன்ஸ். கோட் ஆகியவற்றை களைய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாகரீகமானது எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் ஆரிய பத்தாம் பசலித்தத்தை எமது கலாச்சார விழுமியங்கள்  என்று புகழ்ந்தீர்கள் 

 

Link to comment
Share on other sites

7 minutes ago, tulpen said:

ஆரிய திணிப்புகள் அத்தனையும் காட்டு மிராண்டித்தனமானது. ஆகவே தான்  அதை சுட்டிக்காட்டி கேள்வி கேட்கிறோம். 

நீங்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருங்கோ. வாழ்க்கை முழுவதும் கேள்வி கேட்டலாகவே இருக்கும். வாழ்க்கையை அனுபவிக்க நேரம் கிடைக்காது. வாழ்த்துக்கள்! 😊

Link to comment
Share on other sites

10 minutes ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருங்கோ. வாழ்க்கை முழுவதும் கேள்வி கேட்டலாகவே இருக்கும். வாழ்க்கையை அனுபவிக்க நேரம் கிடைக்காது. வாழ்த்துக்கள்! 😊

வாழ்கையை மிக சந்தோசமாக அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். . கோடை காலம் தொடங்கினால் மிக ஜாலியாக ஊர் சுற்றுவோம். ஆரிய இந்து பத்தாம் பசலித்தனத்தை விட்டு வெளியே வந்தாலே ஒரு ஜாலிதான். நெருப்பை நெருப்பு என்று சொல்லுவோம் அக்னிபகவான்  என்று உளற மாட்டோம்.

தாங்கள் இன்று கேட்கும் கேள்ளிபோல் பல மடங்கு கேள்வியை எமது எதிர்கால சந்ததி கேட்கும். அப்போது பத்தம் பசலித்தனம் மறைந்து போகும். 

 

Link to comment
Share on other sites

2 minutes ago, tulpen said:

நெருப்பை நெருப்பு என்று சொல்லுவோம் அக்னிபகவான்  என்று உளற மாட்டோம்.  

அப்படியா Tulpen? தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். உங்கள் அழகான தமிழ் பெயரை மற்றவர்கள் முன்னுதாரணமாகப் பின் தொடரட்டும்! நன்றி 😊

Link to comment
Share on other sites

Just now, மல்லிகை வாசம் said:

அப்படியா Tulpen? தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று முன்பு சொன்னீர்கள். உங்கள் அழகான தமிழ் பெயரை மற்றவர்கள் முன்னுதாரணமாகப் பின் தொடரட்டும்! நன்றி 😊

உங்களுக்கு புரிதல மிக குறைவு என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது. மீண்டும் நான் என்ன கூறினேன் என்று வாசித்து புரிந்துவிட்டு பதில் எழுதுங்கள். ஒரு வசனத்தை வாசிக்கும் பொது அதன அர்ததத்தை புரிந்து கொள்ளவது உங்களுக்கு கடினமாக உள்ளதா? 

Link to comment
Share on other sites

Just now, tulpen said:

உங்களுக்கு புரிதல மிக குறைவு என்பது இந்த பதிலில் இருந்து தெரிகிறது. மீண்டும் நான் என்ன கூறினேன் என்று வாசித்து புரிந்துவிட்டு பதில் எழுதுங்கள். ஒரு வசனத்தை வாசிக்கும் பொது அதன அர்ததத்தை புரிந்து கொள்ளவது உங்களுக்கு கடினமாக உள்ளதா? 

முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானாகவே திருந்தும். 

எனக்குப் புரிந்து தான் உங்களுடன் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தேன். 

அவனுக்கு அக்னிபகவான் என்றால் உங்களுக்கு என்ன? எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் ஆரியத் திணிப்பு பற்றி பேசலாம். *அதுவும் நேரவிரயம் தான். )

Link to comment
Share on other sites

2 minutes ago, மல்லிகை வாசம் said:

முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். உலகம் தானாகவே திருந்தும். 

எனக்குப் புரிந்து தான் உங்களுடன் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தேன். 

அவனுக்கு அக்னிபகவான் என்றால் உங்களுக்கு என்ன? எனது கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். அப்புறம் ஆரியத் திணிப்பு பற்றி பேசலாம். *அதுவும் நேரவிரயம் தான். )

தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக நீங்கள் கூறிய பொய்யை பற்றி தான் நான் கேட்டேன்.   மற்றப்படி நெருப்பை அக்னி பகவான் என்று ஒரு பைத்தியக்காரன் உளறிக்கொட்டினால் அதனால் எனக்கு ஒன்றும் இல்லை.  

Link to comment
Share on other sites

3 minutes ago, tulpen said:

தமிழில் பெயர் வைக்கவேண்டும் என்று தான் வலியுறுத்தியதாக நீங்கள் கூறிய பொய்யை பற்றி தான் நான் கேட்டேன்.

 

On 4/14/2019 at 8:36 PM, tulpen said:

இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை.  பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள்  என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை   

நீங்கள் புலம்பெயர் தமிழ் அபிமானி இல்லையா?

Link to comment
Share on other sites

5 minutes ago, மல்லிகை வாசம் said:

 

நீங்கள் புலம்பெயர் தமிழ் அபிமானி இல்லையா?

இல்லை. நான் அவ்வாறு வலியுறுத்துவது இல்லை. என்றுமே இல்லை. தமிழர்கள் மற்றய சமுதாயத்தால் கெளரவமாக பார்ககபட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனாலேயே தமிழர் மத்தியில் உள்ள ஆரிய மூடப்பழக்கங்களுக்கு எதிராக உள்ளேன். 

Link to comment
Share on other sites

6 minutes ago, tulpen said:

இல்லை. நான் அவ்வாறு வலியுறுத்துவது இல்லை. என்றுமே இல்லை. தமிழர்கள் மற்றய சமுதாயத்தால் கெளரவமாக பார்ககபட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனாலேயே தமிழர் மத்தியில் உள்ள ஆரிய மூடப்பழக்கங்களுக்கு எதிராக உள்ளேன். 

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மூடநம்பிக்கைகள் எல்லா இனங்களிலும், மதங்களிலும் உண்டு. ஆதலால் கவலை வேண்டியதில்லை. அதற்காக நம் முன்னோர் பழக்கங்கள் எல்லாம் மூடநம்பிக்கை இல்லை. சில வெளிப்படையாக தெரியும். இன்னும் பல ஆராய்ச்சிக்குரியவை. இந்தத் திரி போல நீண்டு செல்லும் ஆராய்ச்சி. முடிவே கிடையாது.

Link to comment
Share on other sites

30 minutes ago, மல்லிகை வாசம் said:

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மூடநம்பிக்கைகள் எல்லா இனங்களிலும், மதங்களிலும் உண்டு. ஆதலால் கவலை வேண்டியதில்லை. அதற்காக நம் முன்னோர் பழக்கங்கள் எல்லாம் மூடநம்பிக்கை இல்லை. சில வெளிப்படையாக தெரியும். இன்னும் பல ஆராய்ச்சிக்குரியவை. இந்தத் திரி போல நீண்டு செல்லும் ஆராய்ச்சி. முடிவே கிடையாது.

நன்றி மல்லிகை வாசம். இது உங்களுக்கும் எனக்குமான  தனிப்பட்ட விவாதம் அல்ல. உங்களை convince செய்வது எனது  நோக்கம் அல்ல. இது ஒரு இணையப்  பதிவு. இதை வாசிக்கும்  பல்லாயிரக்கணக்கான யாழ்கள வாசகர்களிடம் பழமை வாதத்தை களையெடுப்பதற்கான ஊக்கப்படுத்தல் நிகழும். அவர்களிடம் புதிய கேள்விகள் எழும். அறிவிற்கு சிறிதும்  பொருத்தமற்ற பல பழக்கங்களை கொண்டிருக்கும் எமது சமுதாயத்தில் நிச்சயம் மாற்றம் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎14‎/‎2019 at 8:56 PM, tulpen said:

 புத்தாண்டின் பெயர்களில் ஒரு தமிழ் பெயர் கூட இல்லை என்பதால் நகைச்சசுவையான அப்படி குறிப்பிட்டேன்.  ஆதி காலத்தில் எமது முன்னோர்கள் சிறந்த நாகரீகத்துடன் வாழ்ந்தார்கள் என்று அகழ்வு ஆராய்ச்சிகளில் எடுக்கபட்ட பொருட்களில் இருந்து கூறபட்டாலும் இடைக்காலத்தில் வாழ்ந்த எமது முன்னோர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருந்த‍தால் தமது பெருமை மிக்க கலாச்சார பெருமையை மறந்து அதன் வரலாற்றை கூட பாதுகாக்கமால்  ஆரியரின் கலாச்சசாரத்தை  அப்படியே ஏற்றுகொண்ளுள்ளார்கள் என்று நினைக்கிறேன். 

இதை உங்களிடம் மட்டும் கேட்கவில்லை...உங்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதும் சுமோ , நிழலி போன்ற எல்லோரிடம் தான் கேட்கிறேன்... வருசத்தில் பெயர்கள் வேண்டுமானால் சமஸ்கிரதமாக இருக்கலாம். ஆனால் இந்த விழாக்கள் எங்களுக்கு உரியது ..உப்ப எதெற்கெடுத்தாலும் ஆங்கில பெயர்களை சூட்டுவது மாதிரி அந்தக் காலத்து தமிழர்கள் சமஸ்கிரத பெயர்கள் ஸ்டைலாய் இருக்குது என்று சூட்டி இருக்கலாம்(அது சரி என்று சொல்ல வரவில்லை). ஆனால் பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டு இது எங்களுடைய வருடப் பிறப்பு இல்லை என்று சொல்வது முட்டாள்தமானது...இங்க பிறக்கின்ற பிள்ளைகளுக்கு ஆங்கில,பிரென்சு பேர்களை வைக்கினம் அதற்காக அவர்கள் எங்கட பிள்ளைகள் இல்லையா? 

சீனர்கள் தொடங்கி அரபிகள் வரை தங்களுக்கு என்று கலண்டர் வருசம் தொடங்கி அதை கடைப் பிடிக்கினம்...ஆனால் தமிழன் செய்யும் போது தான் 1008 முட்டுக்கட்டைகளும்,நொண்டிச் சாட்டுகளும்,குறைகளும் உங்களை போன்ற ஆட்கள் சொல்ல தொடங்குவார்கள் .உங்கள் இன,கலாச்சாரத்தை மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. தயவு செய்து அழிக்காதீர்கள்..மூட நம்பிக்கைகள் பிடிக்கவில்லை அதை தடுக்க வேண்டும் என்று நினைப்பது வேறு. ஆனால் எப்ப பார்த்தாலும் உங்களை மட்டும் புத்திசாலியாய் நினைத்துக் கொண்டு வ.பிறப்பு எங்களுடையது இல்லை. தீபாவளி எங்களுடையது இல்லை. ...சரி அப்ப எது  எங்கள் உடையது?

ஒரு  பக்கத்தால் கிறிஸ்தவர்கள் மதம் மாற்றுகிறார்கள். இன்னொரு பக்கத்தால் முஸ்லீம்கள் மதம் மாற்றுகிறார்கள்...இன்னொரு பக்கத்தால் சிங்களவர்கள் அடியோடு அழிக்கிறார்கள்  ..நீங்கள் செய்வது   இவர்களையும் விட கேவலமானது.இதுவும் ஒரு வித இன, மத அழிப்பு தான் ....நீங்கள் தெரிந்தோ,தெரியாமலோ உங்களை புத்திசாலியாய் காட்ட இந்த அழிப்பிற்கு துணை போகிறீர்கள்.

உங்களுக்கு இப்படியானவற்றை கொண்டாட விருப்பமில்லா விட்டால் கொண்டாட வேண்டாம்...வெளிநாட்டில் இருக்கிறோம் வெள்ளையன் தான் அறிவாளி என்று அவன்ட காலை  பிடிச்சு கொண்டு இருங்கோ ..அல்லாட்டில் சுமோவை மாதிரி நான் இதெல்லாம் கொண்டாடுவதில்லை 😋என்று சொல்லி கொண்டு கொண்டாடுகிறீர்களோ தெரியாது...ஆனால் தயவு இன, மத சம்மந்தமான கருத்துக்களை எழுதும் போது பொறுப்புணர்ந்து செயற்படுங்கள் 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.