Jump to content

தன்னம்பிக்கைப் பெண் சந்திராவின் கனவு: "இழுத்தடிக்காமல் விவசாயக் கடன், விளை பொருளுக்கு நியாய விலை"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கைப் பெண் சந்திராவின் கனவு: "இழுத்தடிக்காமல் விவசாயக் கடன், விளை பொருளுக்கு நியாய விலை"

அபர்ணா ராமமூர்த்திபிபிசி தமிழ்
சந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம் Image captionசந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம்

"இரவு 12 மணிக்கு பூப்பறிக்க போவேன். அப்போதுதான் சம்பங்கிப்பூவை பறிக்க முடியும். இரவுதான் அது மலரும். பூக்களை பறித்து முடிக்க காலை ஐந்தரை அல்லது ஆறு மணியாகிவிடும். பின்னர் வேனில் பூவை ஏற்றி மதுரைக்கு அனுப்புவோம். எவ்வளவு சீக்கிரம் பூவை அனுப்பி வைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு பணம் கிடைக்கும்" என்கிறார் விவசாயி சந்திரா

இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவரை திருமணம் ஆன சில ஆண்டுகளில் இழந்துவிட்ட சந்திரா, தன்னம்பிக்கையோடு விவசாயம் பார்த்து தன் வாழ்க்கையை நடத்துகிறார்.

இரவு முழுக்க பூப்பறித்தால் எப்போது தூங்குவீர்கள் என்று கேட்டதற்கு, "கஷ்டம்தான். காலைல சமைக்கும்போதுல்லாம் சில சமயம் தூங்கியிருக்கேன்" என்கிறார்.

சிவகங்கை மாவட்டம் மேலக்காடு கிராமம். பச்சை பசேலென்று இல்லை என்றாலும், ஆங்காங்கே விவசாய நிலங்கள்.

சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம் Image captionசிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம்

வாகனங்கள் போகவே கடினமாக இருக்கும் சாலைகள். அங்கு ஒரு ஓட்டு வீட்டில் வசிக்கிறார் சந்திரா. இரண்டு குழந்தைகள். மேலும் ஆடு, மாடு, முயல், நாய்க்குட்டிகள், தனது நிலம் என்று தன் வாழ்க்கையை வாழ்கிறார்.

"திருமணாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணமான சில ஆண்டுகளில் என் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு, என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள விவசாயம்தான் கைகொடுத்தது" என்கிறார் சந்திரா.

இவர் தனது விவசாய நிலத்தில் சம்பங்கிப்பூ போட்டிருக்கிறார்.

இரவு பூக்களை பறிக்க கடினமாக இருக்காதா? ஒரு பெண்ணாக இதை எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "ஒரு மாதத்திற்கு முன்பாக பாம்பு கடித்துவிட்டது. ஆனால், அப்படித்தான். வேறு வழியில்லை. இரவு லைட்டு வெச்சுதான் பூப்பறிக்க போவோம். காலில் ஷூ அணிந்து கொள்வோம். வேறு எதுவும் செய்ய முடியாது. இந்த பூ இரவுதான் மலரும். இங்கே ஐந்தரை மணியளவில் பூவை ஏற்றி அனுப்பினால், மதுரை சென்று சேர ஏழு மணியாகிவிடும்" என்று கூறினார்.

தண்ணீர் பிரச்சனை

சந்திராவின் வீடு Image captionசந்திராவின் வீடு

தற்போதைய காலகட்டத்தில் கணவர் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்கூட குடும்பத்தை சமாளிப்பது கடினம். இங்கு நான் ஒருத்திதான் என்று தெரிவிக்கிறார் சந்திரா.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் காய்கறி போட்டிருந்த சந்திரா தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது சம்பங்கி போட்டிருக்கிறார்.

"என் போன்ற விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் அரசு கடனுதவி செய்ய வேண்டும்" என்று கோருகிறார்.

"மூன்று ஆண்டுகளாக இங்கு நல்ல மழை இல்லை. வறட்சிதான்" என்று கூறும் சந்திரா, அங்கு நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையையும் தனி ஒரு ஆளாக சமாளிக்கிறார்.

சந்திரா

"சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு மாணியம் வழங்குகிறார்கள். ஆனால், நான் பட்டர் ஃப்ளை பைப் (நீர் தெளிப்பான்) போட்டுள்ளேன். அதற்கு மானியம் கேட்டேன். கிடையாது என்றார்கள். இங்கு தண்ணீர் பற்றாற்குறை அதிகம் இருப்பதினால், இந்த முறையை பயன்படுத்தும் போது, இது குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும். மேலும் நீரை சேமிக்க முடியும்" என்கிறார்.

சொட்டு நீர் பாசனத்தை எடுத்துக் கொண்டால், ஒரு ஏக்கருக்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், இதற்கு அவ்வளவு நேரமாகாது.

"பூச்சிக் கொல்லி விலைதான் உயர்கிறது… என் பூ விலை உயரவில்லை"

சந்திரா

விவசாயத்திற்கு தேவையான கருவிகளை அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சந்திரா.

"பூக்கள் எந்த விலைக்கு விற்றாலும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லியின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. ஐந்து ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லியின் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், எனது வருமானமோ குறைகிறதே தவிர, உயரவில்லை."

சில நேரம் நல்ல வருமானம் இருக்கும். சில நேரம் இருக்காது. இல்லாத நேரத்தில் அருகில் கடன் வாங்கிதான் வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. தங்களின் உற்பத்தி பொருளுக்கு அரசு ஒரு நல்ல விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

இலங்கை இலங்கை

தகுந்த நேரத்தில் ஏன் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை?

வங்கியில் கடன் வாங்கச் சென்றால், அதற்கு குறைந்தது ஆறு ஏழு மாதங்கள் ஆகின்றன. திடீரென்று தண்ணீர் பிரச்சனை. ஏதாவது கோளாறு என்றால், அந்த நேரத்திற்கு காசு கிடைக்காமல், அவர்கள் நடைமுறை எல்லாம் முடிந்து ஐந்தாறு மாதங்களுக்கு பிறகுதான் கடன் தருகிறார்கள் என்று கூறும் சந்திரா, அவரது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு முறை தண்ணீர் சுத்தமாக வரவில்லை. கேனி வெட்ட பணம் வேண்டும் என்று லோன் எடுக்க போனேன். இரண்டு மாதங்கள் அதற்காக அலைந்தேன். எனினும், நான் கேட்ட தொகையை வழங்க அவர்கள் தயாராக இல்லை. அந்த நடைமுறை எல்லாம் குறைத்து, தகுந்த நேரத்தில் அரசு கடன் வழங்க வேண்டும்" என்று கோருகிறார்.

சந்திரா

ஒரு நாள் 300 ரூபாய், அடுத்த நாள் 30 ரூபாய்

மாத ஊதியம் மாதிரி கிடையாது. பூக்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விலை போகும் என்று சந்திரா கூறுகிறார்.

"சமீபத்தில் சம்பங்கிப்பூ கிலோ 20 ரூபாய் அல்லது 30 ரூபாய்க்கு விலை போனது. இதுவே முகூர்த்த நாள் என்றால், 100 அல்லது 150 ரூபாய் விலை போகும். விழாக்காலங்களில் 250ல் இருந்து 300 ரூபாய் வரை இருக்கும். ஆனால், இது குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான். பெரும்பாலான நாட்களில், 20 அல்லது 30 ரூபாய்தான்."

சந்திரா

எப்படி இருந்தாலும், தன் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தன்னால் முடிந்தவரை உழைத்துக் கொண்டிருக்கிறார் சந்திரா.

https://www.bbc.com/tamil/india-47894909

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.