Jump to content

நான் செய்த கடலைவடையும் பக்கோடாவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

விளப்பமா, தேவையான பொருட்களை, அளவுகளுடன் 'எழுத்தாக' தாங்கோ.

விடீயோவில சொன்ன மாதிரி தெரியவில்லை.

தாறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலை வடை

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு - 500g

பெரிய வெண்காயம் - இரண்டு

பச்சை மிளகாய் - 6 ( உங்கள் உறைப்புக்கு ஏற்றபடி கூட்டலாம்.

உப்பு - 1 மேசைக்கரண்டி( கூட்டிக் குறைக்கலாம் உங்கள் சுவைக்கேற்ப)

களிவேப்பிலை - 6 கெணுக்கு

இஞ்சி - சிறிய துண்டு

பெருஞ்சீரகம் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 1/2 - 1 லீற்றர் பாத்திரத்தின் அளவுக்கேற்ப

பாத்திரம் - அகலதான உயரம் குறைந்ததாக இருப்பது முக்கியம். 

செய்முறை

கடலைப் பருப்பை 3 அல்லது 4 மணிநேரம் ஊறவிட்டு ஒரு சிறங்கை கடலையை அரைக்காது எடுத்து வைத்துவிட்டு மிகுதியை தண்ணீர் விடாது இருவல் நெருவலாக அரைத்து வையுங்கள்.

வெண்காயத்தையும் இஞ்சியையும் தோலை நீக்கிச் சிறிதுசிறிதாக வெட்டுங்கள்.

பச்சை மிளகாயையும் கறிவேப்பிலையையும் சிறிதாக அரியுங்கள்.

பின் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துவிட்டு எண்ணெய்ச் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணை கொதித்ததும் உருட்டிய உருண்டைகளை தட்டையாகத் தட்டிப் போட்டு ஒன்றிரண்டு தடவைகள் பிரட்டிவிட்டுப பொன்னிறமாகப் பொரிந்தபின் கண்அகப்பையால் வடித்து எடுங்கள். 

 

 

 

 

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்ப பிறியாணி எப்ப வரும் லண்டன் பிறியாணியை ஒரு தடவை பார்க்கணூம் 

வாங்கோ சுடச்சுடப் பிறியாணி செய்துதரலாம்.

இந்தத்தடவை வீடியோ எடுக்க மறந்திட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜெகதா துரை said:

 வீடியோ மூலம் பதிவிட்ட  உங்கள் முதன்முயற்சிக்கு வாழ்த்துக்கள். வடை, பகோடா இரண்டிற்கும் சின்னவெங்காயம் போட்டுப் பாருங்கள். இன்னும் சுவையாக இருக்கும்,

அது தெரிந்தாலும் உரிக்கும் பஞ்சியில் வாங்கவில்லை. 😀

On 4/14/2019 at 6:30 PM, ஏராளன் said:

இதுக்கு தான் வீடியோ எப்படி இணைக்கிறது என்று விசாரித்தீர்களா?
வீட்டில் எல்லோரும் ரசித்து ருசித்தார்களா?!

வடை சுடேக்க கமராவும் கையுமா தான் நிக்கிறா அக்கா!
வடை ஒன்றும் முறுகி கடிக்கேலாமல் வரேல தானே?

ஒரு வடையும் முறுகிக் கடிக்கேலாமல் வரேல்லை. வந்தாலும் காட்டவாபோறன்?????😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நம்பாட்டிப் போங்கோ🧐

அப்பிடி இருந்தும் ரதி இன்னும் கடலை வடை சுட்டுப் பழகேல்லையாம். நன்றி சுவைப்பிரியன்.🙂

மற்றவர்களுக்கு சோ காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/14/2019 at 1:20 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.

கடலைவடை எப்படி செய்வதென எழுதிய நில்மினிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ம் பார்க்க நல்லாத் தான் இருக்கு.வீட்டிலுள்ளவர்கள் தனியே அமுக்காமல் நண்பர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

மற்றவர்களுக்கு சோ காட்டி நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை🙁

மற்றவைக்குக் காட்டிட வேண்டாம் ரதி. சுட்டுப்போட்டு என்னைக் கூப்பிடுங்கோ 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் யாழுக்குப் புதுசா ஈழப்பிரியன் அண்ணா ?? நில்மினி எழுத முதல் நாங்கள் எல்லாம் கடலை வடை என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தோமா என்ன ??? அல்லது முதல் முதல் கடலை வடையை நில்மினிதான் யாழில் போட்டாரா என்ன ???? புதிதாக ஒரு பெண் வந்தால் அவர் கிழவியா குமரியா என்றுகூடத் தெரியாமல் கடலை  வடையைச் சாட்டாக வைத்து எல்லாரும் கும்மியடித்தது சாதாரணமாக நடக்கும் விடயம் தான். அதுக்காக என் திரியிலேயே எனக்கு சொற்பொழிவா ??? எதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் நான் ?????


ஏற்கனவே நீங்கள் கடலை வடைச் செய்முறையை யாழில் போட்டதையே மறந்துபோய் விட்டீர்கள் போல.

 

கீழே உள்ளது தமிழரசு 2013 ம் ஆண்டு போட்டது.

 

 

இது 2010 புரட்சிகரத் தமிழ்த் தேசிகன் போட்டது.

 

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

கடலைவடை எப்படி செய்வதென எழுதிய நில்மினிக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ம் பார்க்க நல்லாத் தான் இருக்கு.வீட்டிலுள்ளவர்கள் தனியே அமுக்காமல் நண்பர்களுக்கும் கொடுத்து சாப்பிடுங்கள்.

மேலே எழுதியது உங்களகானது 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடை வடையாம் சுட்டு வந்தாள் வாயாடிக் கிழவி 😃👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

வடை வடையாம் சுட்டு வந்தாள் வாயாடிக் கிழவி 😃👌

வடை சுடுவது பெரிய விஞ்ஞானமாகப் போய்விட்டது! என்னதான் வடை சுட்டாலும் காக்கா தூக்காவிட்டால் அது திறமான வடை இல்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Sasi_varnam said:

வடை வடையாம் சுட்டு வந்தாள் வாயாடிக் கிழவி 😃👌

அடடே இதுவரை கேட்காத பாட்டாய் இருக்கே சசி. முழுசாய் பாடினால் நாங்களும் தெரிந்துகொள்ளலாம் 🤗🤩

12 minutes ago, கிருபன் said:

வடை சுடுவது பெரிய விஞ்ஞானமாகப் போய்விட்டது! என்னதான் வடை சுட்டாலும் காக்கா தூக்காவிட்டால் அது திறமான வடை இல்லை!


அதுக்காக வெட்டைவெளியில அடுப்பை வச்சுச் சுடச்சொல்லுறியளாகும். காகம் கத்தினாலும் வராது இந்தக் குளிரில. :innocent:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.