Jump to content

இத்தாலி பீசா சரிந்த கோபுரம்


Recommended Posts

பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார்.

சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்...

"பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு.

"ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துõண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத் தாங்குகின்றன. விசித்திரம் என்னவென்றால், இத்தனை உயர கோபுரத்துக்கு மூன்று மீட்டர் ஆழம் தான் அஸ்திவாரம் போட்டாங்களாம்...

"கோபுரம் இன்று செங்குத்து நிலையிலிருந்து நாலு மீட்டர் சாய்ந்து நிற்கிறது. உள்ளுக்குள் 293 படிகளைக் கொண்ட சுழல் மாடிப்படி அமைந்திருக்கிறது. உச்சியில் ஒரு மணிக்கூண்டு இருக்கிறது...

"சாய்ந்த கோபுரத்தை இன்று ஆராய்ந்து பார்க்கிற விஞ்ஞானிகள், அதைக் கட்டி முடித்தவனின் மேதா விலாசத்தை எண்ணி, எண்ணி பிரமித்துப் போறாங்களாம்...

"கோபுரம் சரியும் என்பது இதைக் கட்டியவர்களுக்கு தெரிந்தே இருந்தது. சாய்ந்தாலும் சரிந்துவிடக் கூடாது என்று திட்டமிட்டு வேலை செய்திருக்கின்றனர் என்பது இக்கட்டடத்தை ஆராயும் போது புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் "பேராசிரியர் பர்லண்டு.

உதாரணமாக, தென் பகுதியில் இருப்பதை விடவும் வடக்குப் பகுதியில் உள்ள சுண்ணாம்புக் கல் பாளங்கள் ஒரு செ.மீ., மெல்லியதாக உள்ளன. நாலாவது மாடியை அவர்கள் அடைந்தபோது திட்டமிட்டுப் பத்து செ.மீ., கனம் குறைவான பாளங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்..

இதிலிருந்தே சாய்மானத்தைத் தடுக்க முயன்றிருக்கின்றனர் என்பது புரிகிறது...'

ஐந்தாவது மாடியைக் கட்டும் போது ஒரு விசித்திரம் நிகழ்ந்ததாம்... கோபுரம் நேராக நிமிர ஆரம்பித்ததாம்... இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லையாம். ஒருவேளை, சதுப்பு நிலத்தின் களிமண் கெட்டிப்பட்டிருக்கலாம் என்கின்றனர்... கட்டி முடிக்கப்பட்ட போது கோபுரம் வடக்குப் புறமாகத் தான் லேசாகச் சாய்ந்திருந்ததாம்... இப்போதுள்ளது போல் தெற்குப்புறம் அல்லவாம்...

"சரிவைச் சரி செய்து விடலாம் என்று சிலர் முயற்சி எடுத்த போதெல்லாம் கோபுரம் மேலும் சற்றுச் சரிந்து பீதி கிளப்பியிருக்கிறதாம்...

உதாரணமாக, 1920ல் கோபுரத்தைச் சுற்றி ஒரு நடைபாதை தோண்டினார்களாம்... உடனே கோபுரத்தின் சரிவு கூடியது. 1930ல் முசோலினி இந்தக் கோபுரத்தின் அஸ்திவாரத்துக்குள் 800 டன் சிமென்ட்டை விசைப் பம்புகளைப் பயன்படுத்திச் செலுத்தினாராம்...

"அஸ்திவாரத்தைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தில் எடுக்கப்பட்ட இந்த முயற்சி, கோபுரம் மேலும் சற்று சரியவே காரணமாயிற்றாம்... சமீபத்தில், கோபுரத்தில் பல நவீன கருவிகளைப் பொருத்தி ஆராய்ந்தனராம்... கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்பட்ட இந்த அதி நவீன தானியங்கிக் கருவிகள், மேலும் பல அதிசயத் தகவல்களை விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்தனவாம்...

"அதாவது, சூரியோதயத்துக்குப் பிறகு, வெயில் ஏற, ஏற, கோபுரம் லேசாக அரை மில்லி மீட்டர் அளவுக்கு சுழல்கிறது என்பது தான். இதன் காரணமாகவே கோபுரம் அதிர்கிறது என்றும் கண்டுபிடித்தார்களாம்!

"தற்போது இரண்டு தற்காலிக ஏற்பாடுகளையும் செய்துள்ளனர் கோபுரம் சாயாமலிருக்க! எஃகு கம்பிகளை பிளாஸ்டிக் உறையிட்டுத் தயாரித்து, அவற்றை அடிவாரத்தில் கோபுரத்தைச் சுற்றிப் பிணைத்திருக்கின்றனர். இது கோபுரத்தின் சாய்மானத்தைக் கணிசமாகத் தடுக்கும் என்று கருதப்படுகிறது.

"பிளாஸ்டிக் உறையிலிருப்பதால் கம்பி சுற்றியிருப்பதே பார்வையாளருக்குத் தெரியாது. தவிர, தென்புறம் அஸ்திவாரத்தின் மீது ஏற்படும் அழுத்தத்தைச் சமன் செய்ய, வடக்குப்புறம் 800 டன் எடையில் ஈயம் பூமிக்குள் இறக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்...'

நன்றி அந்துமணி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.