Jump to content

மாட்டைக் குளிப்பாட்டியவரை கடித்த முதலை : சாதுரியாமாக செயற்பட்டதால் உயிர் தப்பினார் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடிதத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

cot.jpg

யாழ்ப்பாணம், மட்டுவில் கிழக்கை சேர்ந்த நாகநதி கிருஷ்ணமூர்த்தி (வயது 58) என்பவரே படுகாயமடைந்தவராவார். 

குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வயல் குளத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாடுகளை குளிப்பாட்டிக்கொண்டு இருந்த வேளை குளத்தில் இருந்த முதலை அவரது தொடை பகுதியை கெளவி பிடித்துள்ளது.

உடனே விரைந்து செயற்பட்ட அவர் முதலையின் தாடை பகுதியை கைகளால் இழுத்து பிழந்து முதலையை தூக்கி குளத்திற்கு வெளியே வீசியுள்ளார். 

அதன் பின்னர் தொலைபேசி ஊடாக உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனை அடுத்து அங்கு விரைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

http://www.virakesari.lk/article/53983

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Nathamuni said:

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

சிங்கள முதலை போல😯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ஆறே இல்லாத யாழ்ப்பாணத்தில், முதலையா?

எப்படி?

அது சரி.... மோட்டு முதலை, மாட்டை  விட்டுட்டு, மனுசனை கெவ்வி  இருக்குதே....

சின்ன முதலை போல இருக்கு.... பெரிசு எண்டால்.... 'death rool' செய்து  ஆளை முடித்திருக்கும்.

ஊரில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரணைமடுக் குளத்தில் ஆட்களை முதலைகள் விழுங்கிய செய்திகளைப் படித்தது ஞாபகம். 

யாழ்ப்பாணத்தில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், குளங்கள் உள்ள பகுதிகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது, யாராவது வேறிடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கே போட்டிருக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நகரில் யாழ் மணிக்கூட்டுக் கோபுரத்தை அண்டி அசோகா ஹொட்டலுக்கு அருகில் உள்ள குளத்தில் முதலை இருந்துள்ளது.

அதேபோல் கல்வியங்காட்டில் முதலை இருந்துள்ளது.

சாவகச்சேரியில்.. நிறையக் குளங்களில் முதலை இருந்துள்ளது.

முதலை யாழ் மாவட்டத்தில் மனிதர்களை கடிப்பது இது முதற்தடவையும் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

முதலைகள் விரைவில்...  இனப்பெருக்கம் செய்து, பெருகக்  கூடியவை.
ஆதலினால்... காணுகின்ற இடத்தில் அடித்து, கொன்று விட வேண்டும்.
இல்லாவிடில்..  குளத்தில் இறங்கும்  ஆட்களின்... கை, கால்களை  முதலை சாப்பிட்டு விடும். ☹️

இப்ப,  "முதலையை... காப்போம்"  என்று ஒரு கோஸ்டி  வரவேணுமே....  எப்பிடியும்  வரும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

முதலைகள் விரைவில்...  இனப்பெருக்கம் செய்து, பெருகக்  கூடியவை.
ஆதலினால்... காணுகின்ற இடத்தில் அடித்து, கொன்று விட வேண்டும்.
இல்லாவிடில்..  குளத்தில் இறங்கும்  ஆட்களின்... கை, கால்களை  முதலை சாப்பிட்டு விடும். ☹️

இப்ப,  "முதலையை... காப்போம்"  என்று ஒரு கோஸ்டி  வரவேணுமே....  எப்பிடியும்  வரும். :grin:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

முதலைகள் விரைவில்...  இனப்பெருக்கம் செய்து, பெருகக்  கூடியவை.
ஆதலினால்... காணுகின்ற இடத்தில் அடித்து, கொன்று விட வேண்டும்.
இல்லாவிடில்..  குளத்தில் இறங்கும்  ஆட்களின்... கை, கால்களை  முதலை சாப்பிட்டு விடும். ☹️

இப்ப,  "முதலையை... காப்போம்"  என்று ஒரு கோஸ்டி  வரவேணுமே....  எப்பிடியும்  வரும். :grin:

 
 
 
12 minutes ago, suvy said:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

கபரகொய்யாவா... விஷம் கொண்டது..... தென் இலங்கையில் காணப்படுகிறது...

சிறியர்...

முதலை இறைச்சி சீனாக்காரனின் விசேட உணவு.

கென்யா, தென் ஆபிரிக்கா பண்ணைகள் வைத்து, முதலை இறைச்சி  ஏற்றுமதி செய்கின்றன.

வியாபாரம் $240மில்லியன் தாண்டியவுடன், பார்த்தார்கள், அமெரிக்கர்கள்.....

முதலைகள் நிறைந்த புளோரிடாவில், பண்ணைகள் முளைத்து விட்டன.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் முதலைப் பண்ணைகள் ஆரம்பிக்க ஐடியா சொல்லுவியள் எண்டு பார்த்தால், கொல்ல ஐடியா கொடுக்கிறீர்கள். 

 

crocodile-barbecue-shandong-province-liaocheng.jpg?quality=75&strip=all&w=450&h=300&crop=1

Ready....

https://www.cnbc.com/2017/07/01/thailands-has-a-thriving-industry-of-crocodile-farms.html

தாய்லாந்தும் இப்போது பண்ணைகள் ஆரம்பித்துள்ளன... ஆஸ்திரேலியாவும் தொடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/15/2019 at 9:05 PM, ரஞ்சித் said:

ஊரில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இரணைமடுக் குளத்தில் ஆட்களை முதலைகள் விழுங்கிய செய்திகளைப் படித்தது ஞாபகம். 

யாழ்ப்பாணத்தில் முதலைகள் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆனால், குளங்கள் உள்ள பகுதிகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம். அல்லது, யாராவது வேறிடத்தில் இருந்து கொண்டுவந்து இங்கே போட்டிருக்கலாம். 

வன இலாகவினர் இப்ப முதலைகளை கொண்டு சிறு சிறு குளங்களில் விடுவதைக்கண்டுளேன் காரணம் அதிகம் பெருகியுள்ளமையால் அண்மையில் மட்டக்களப்பில்  கடுக்காமுனைப்பகுதியில் ஒரு வயது போன அம்மாவை கடித்தது இறந்துவிட்டார் மீன் பிடிக்கு சென்ற போது  அவாவை போராடித்தான் அதன் வாயிலிருந்து எடுத்தார்கள் ஆனால் மூச்சு திணறி இறந்துவிட்டார் அவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

வந்ததுட்டன்...... முதலைக்கும்  இவ்வுலகில் வாழ உரிமையுண்டு அதை நீங்கள் எப்படி மறுக்கலாம். அது என்ன அவரின் வீட்டுக்கு போய் காலிங் பெல் அடித்து விட்டா கடித்தது. அது வசிக்கிற இடத்தில மோட்டுத்தனமாக போய் மாட்டுடன்  நின்றால்  அதுதான் என்ன செய்யும்.முதலை இருக்கும் குளத்தில் குரங்கு கூட லேசில் இறங்காது. மேலும் கடித்தது முதலையா கபரகொய்யாவா... முதலைபோல் இருக்கும் கபரகொய்யாவும் குளங்களில் நிறைய உண்டு.......!   🐊  

ஆனால அவைகள் நீண்ட நேரம் நீருக்குள் இருக்காது வெளியில் நடமாடும் முதலை போன்ற பற்கள் இல்லை கடித்து குதற

Image result for Marsh crocodile lizards sri lanka

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பன்.......குடத்தனை எண்டு அந்த கண்டல்காட்டு சேத்துக்குள்ளை நிறைய முதளையள் இருக்காம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.