Jump to content

போதைப் பாவ­னை­யில்­தான் யாழ்.மாவட்­டம் முன்­னிலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் காலத்­தில் இலங்­கை­யின் கல்­வி­யில் முதற்­த­ர­மாக இருந்த யாழ்ப்­பாண மாவட்­டம், தற்­போது கல்­வியை விட போதைப் பொரு­ள் பாவ­னை­யில் முதற்­தர மாவட்­ட­மா­கப் பதி­வா­கி­யுள்­ளது. இவ்­வாறு வடக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர் சபா.குக­தாஸ் தெரி­வித்­தார்.

அச்­சு­வேலி– தம்­பாலை இளை­ஞர் கழ­கத்­தின் அபி­வி­ருத்தி சார் கூட்­டம் நேற்­று­ முன்­தி­னம் நிலை­யத் தலை­வர் இ.தனு­சன் தலை­மை­யில் நடை­பெற்­றது.
அதில் சிறப்பு விருந்­தி­னர் உரை­யாற்­று­கை­யில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இன்­றைய சூழ­லில் பிள்­ளை­க­ளுக்கு பெற்­றோர்­தான் நூறு­வீத பாது­காப்பு, பிள்­ளை­க­ளைக் கண்­கா­ணிக்­கத் தவ­று­வீர்­க­ளாக இருந்­தால் நீங்­கள் வாழ்­கின்ற காலத்­தில் எமது இனத்­துக்­குத் தலைமை தாங்க வேண்­டிய சந்­ததி அழிந்து போவதை உங்­கள் கண்­முன்­னால் பார்க்க வேண்­டிய துர்ப்­பார்க்­கிய நிலை­யேற்­ப­டும்.

தற்­போது தாய­கப்­ப­கு­தி­யில் உயிர் மாய்ப்­போ­ரில் 90 வீதமானவர்கள் 35 வய­துக்கு உட்­பட்­ட­வர்­களே.

சமூ­கக் கட்­டுப்­பா­டு­கள் இன்­மை­யும் அர­சி­யல் தலை­மைத்­து­வங்­க­ளின் சுய­லாப நோக்­கங்­க­ளும் இளையோரின் தெளி­வற்ற பய­ணத்­துக்­குக் கார­ணம் – –என்­றார்.
நிகழ்­வில் மாகாணசபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா ­ஜி­லிங்­கம், விந்­தன் கன­க­ரட்­ணம், வலி.கிழக்கு பிர­தேச சபை தவி­சா­ளர் தி.நிரோஷ் ஆகி­யோ­ரும் உரை­யாற்­றி­னர்.

https://newuthayan.com/story/10/போதைப்-பாவனையில்தான்-ய.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையானோர் குடிப்பதால் யாழ்ப்பாணம் முதலிடம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் , தரவுகள் நல்ல வளர்ச்சி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.