Jump to content

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின் இடம்பெறும் முதலாவது தேர்தல் - எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின்  இடம்பெறும் முதலாவது தேர்தல் -  எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் இரு நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்கவுள்ள முதல் தேர்தல் இது.

lik-shaba-election.jpg

இந்நிலையில், மத்தியில் அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதை தமிழகம் தீர்மானிக்க உள்ளது. தமிழக அரசியல் நிலை மற்றும் லோக்சபா தேர்தல் நிலவரங்களை வைத்து, தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி.டிவி-யின் குழு ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

அதன் விவரம் வருமாறு; 

இந்தியாவில் 1952 முதல் 2014 வரை அதிக வாக்குப்பதிவு நடந்து, தனிஒரு கட்சிக்கு அதிக இடங்கள் கிடைத்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. (தமிழகம் - 94 சதவீதம், பீகார் - 88 சதவீதம், மத்திய பிரதேசம் - 88 சதவீதம், கர்நாடகா - 81 சதவீதம், மகாராஷ்டிரா - 81சதவீதம்).

அதுபோல், கட்சிக்கு அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுத் தந்த ‘டாப் 5’ மாநிலங்களிலும் தமிழகம் இடம்பிடித்துள்ளது. (மகாராஷ்டிரா - 23 சதவீதம், அரியானா - 22 சதவீதம், கர்நாடகா - 20 சதவீதம், தமிழகம் - 20 சதவீதம், அசாம் - 19 சதவீதம்).

தமிழகத்தில், 1980 முதல் திராவிடக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தேசியக் கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு பதிவான வாக்குகள் சரிவடைந்து வந்துள்ளன. 

1980 மற்றும் 1990களில் 75 சதவீதம் வாக்குகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-விற்கே பதிவாகி உள்ளது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் 20ல் இருந்து 4 ஆக சரிந்துள்ளது. பா.ஜ.க வாக்கு சதவீதம் 2ல் இருந்து 3 ஆக அதிகரித்துள்ளது.

ஜெயலலிதா இருந்த வரை, 10 சதவீதம் பெண்கள் வாக்கிலேயே முன்னிலையில் இருந்துள்ளது அ.தி.மு.க. இதே போன்று, 2014 தேர்தலில் தி.மு.க 2 சதவீதம் ஆண்கள் வாக்கில் முன்னிலையில் இருந்தது. தென்னிந்தியாவை பொருத்தவரை, பெண்கள் வாக்கு அதிகம் பதிவாகும் மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த முறை அ.தி.மு.க. பா.ஜ.க-வுடனும், தி.மு.க, காங்கிரஸுடனும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இவர்கள் தவிர, கமலின் மக்கள் நீதி மையம் கட்சி, தினகரனின் அ.ம.மு.க ஆகியவை தனித்து களம் காண்கின்றன. ரஜினி, கமல் வருகையால் அதிமுக - திமுக.,வுக்கு மாற்றாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடம் நிரப்பப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இவர்களில் கமல் மட்டுமே தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க - தி.மு.க தவிர, கமல் மற்றும் தினகரனின் கட்சிகளும் தனியாக போட்டியிடுவதால், முந்தைய தேர்தல்களை விட இந்தத் தேர்தலிலும் அதிக எண்ணிக்கையில் வாக்குப் பதிவு நடக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

 

http://www.virakesari.lk/article/53992

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.