Jump to content

பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ

paris-fire-720x450.jpg

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்பட்டது. வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் இங்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ரத்துசெய்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தீ ஏற்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

http://athavannews.com/பரிஸில்-850-வருடங்கள்-பழையா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

 

இப்படியான  வதந்திகள் உலாவருவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் தேவாலாயத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அங்கு தீப்பிடிக்க சாத்தியங்கள் அதிகம் இருந்திருக்கலாம். விசாரணை நடந்து எல்லாம் வெளிவரும்தானே.

Link to comment
Share on other sites

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சியின் பலனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆலயத்தின் பிரதானமாக பகுதிசேதமடைய வில்லை என கூறுகிறார்கள் .
 ஆலயத்தின் கூரையொன்று தீயினால் கருகி விழும் காட்சியைப் பார்க்கும்போது  கவலையாக  இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலை தரும் ஒரு அழிவு! இரு நூற்றாண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளுக்குரிய மக்கள் கட்டிய அற்புதமான மத்திய கால ஐரோப்பாவின் கட்டிடக் கலை சின்னம் இந்த ஆலயம்!. சில ஆண்டுகள் முன்பு கள உறவு கலைஞன் Ken Follett எனும் வெல்ஷ் எழுத்தாளரின் வரலாற்று நாவல்களை இங்கு அறிமுகம் செய்தார். இந்த எழுத்தாளர் எழுதிய  "Pillars of the Earth" என்ற நாவலில் எவ்வாறு நொட்ரே டாம் போன்ற ஒரு பேராலயத்தை மத்திய கால ஐரோப்பாவில் கட்டுகிறார்கள் என அழகாக விபரித்திருப்பார். Rib vault, flying buttresses எனப் பல மத்திய ஐரோப்பிய கால பொறியியல் சாதனைகளுக்கு உதாரணமாக விளங்கியது இந்த ஆலயம்.

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.

நேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, இணையவன் said:

உலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.

நேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

உண்மைதான் அந்த விபத்தை தொலைக்காடசியில் பார்க்கும்போதும் உயர்ந்த கோபுரம் உடைந்து விழும்போதும் மனம் பேதலித்துப்போய் கிடந்தது......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெப்போலியன் முடி சூடிக் கொண்டதும், 
10,000  மக்கள் உள்ளே இருக்கும் அளவிற்கு பெரிதானதும்... இந்தத் தேவாலயம்  என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

பகிரங்கமாக ஒரு தலைமை அல்லது கழகம் நேரடியாக ஈடுபட்டால் சகலதும் சாத்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் பிரான்சின் நோர்மண்டி பகுதியில் இருந்து வந்த வில்லியம் என்ற குறுநில மன்னன் 1066 ஆண்டில் இங்கிலாந்தினை கைப்பற்றி, கட்டிய வின்சர் கோட்டை ஒரு 27 வருசத்துக்கு முன்னர் 1992ல் எரிந்தது. 

பிரிட்டிஷ் ராணியம்மாவின் வீடு எரிஞ்சு போட்டுதே என்று  குயோ, முறையோ எண்டு, உலகெங்கும் இருந்து காசு கொட்டியது.

அந்த மாதிரி கட்டி விட்டினம்.

அதேபோல தான், உதையும் கட்டுவினம். 

Image result for when windsor castle burned

Image result for windsor castle

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது உண்மையான விபத்தா அல்லது திருத்தி கட்ட காசு காணாததால் இப்படி ஒரு விபத்தை அவர்களே ஏற்படுத்தினார்களோ தெரியவில்லை...எது எப்படி இருந்தாலும் இந்த ஆலயம் எரிஞ்சது என்று ஒப்பாரி வைக்கும் பிரென்ஞ் மக்களை பார்க்கும் போது இங்கிருக்கும் சிலருக்கு மூட  நம்பிக்கையாய் தெரியாது 
"எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

உங்களுக்கு பிரச்சினைகள் பலதும் பத்தும் கூடிப் போயிட்டுது.. 😁

Link to comment
Share on other sites

On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

பிரெஞ்சு மக்களுக்கு என தேசம் இருக்கின்றது. அவர்கள் போரிட்டு வென்ற விடுதலை இருக்கின்றது. மற்ற நாடுகளில் இருந்து பிழைப்புக்கு வரும் மக்களுக்கும் அகதிகளுக்கும் மீள் வாழ்வு கொடுக்கும் அளவுக்கு வளம் இருக்கின்றது, எனவே அவர்கள் மீள கட்டுவதில் பிரச்சனை இல்லை.

கோவில்களுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்க வீடு அற்ற நிலையில் அகதிகளாக எம்மவரும் இருக்கும் நிலையில் ஓர் கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ வீணாக வளம் கொட்டப்படுமாயின் துள்ளி குதித்து எதிர்க்க தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கிருக்கும் பல சிரியா அகதிகள் பிரெஞ்சு விமானப்படை  குண்டுவீசி அழித்த நகரங்களின் படங்களை என்னிடம் காட்டினார்கள். அதை விட இந்த தேவாலய அழிவு எனக்கு பெரிதாக தெரியவில்லை.

தேன் கூடுமாதிரி இருந்த இனத்தை சிதறடித்த பெருமை பிரான்ஸ் மற்றும் வல்லரசுகளுக்கு உண்டு.

 இங்கே இரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள் ஈராக் சிரியா லிபியா போன்ற நாடுகளில் குண்டு வீசி தாக்கிய இடங்களையும் பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.