Jump to content

பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பரிஸில் 850 வருடங்கள் பழைமையான கட்டிடத்தில் தீ

paris-fire-720x450.jpg

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள நோட்ரே டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமையான குறித்த கட்டிடம் ஐரோப்பிய கட்டிட கலையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வானுயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில், சற்றுமுன்னர் இந்த தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ கொளுந்துவிட்டு எரிந்துவரும் நிலையில், தீயை அணைக்க மீட்புப் படையினர் போராடி வருகின்றனர். தீ ஏற்பட்ட சில நிமிடங்களில் கூரை சரிந்து விழுந்துள்ளது. பின்னர் ஏனைய பகுதிகள் கட்டிம் கட்டிமாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

தீ விபத்தினால் பரிஸின் பெரும்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

12ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிடம் வரலாற்று பொக்கிஷமாக காணப்பட்டது. வருடந்தோறும் மில்லியன் கணக்காக பார்வையாளர்கள் இங்கு பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையை ரத்துசெய்த ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், தீ ஏற்பட்ட பகுதிக்கு பயணித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

http://athavannews.com/பரிஸில்-850-வருடங்கள்-பழையா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சில நேரம் முஸ்லீம் தீவிரவாதிகளின் செயலாக இருக்குமென்று இங்கு ஒருசிலர் கதைக்கின்றனர்.

 

இப்படியான  வதந்திகள் உலாவருவதில் ஆச்சரியமில்லை.

ஆனால் தேவாலாயத்தில் திருத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அங்கு தீப்பிடிக்க சாத்தியங்கள் அதிகம் இருந்திருக்கலாம். விசாரணை நடந்து எல்லாம் வெளிவரும்தானே.

Link to comment
Share on other sites

இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சியின் பலனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆலயத்தின் பிரதானமாக பகுதிசேதமடைய வில்லை என கூறுகிறார்கள் .
 ஆலயத்தின் கூரையொன்று தீயினால் கருகி விழும் காட்சியைப் பார்க்கும்போது  கவலையாக  இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலை தரும் ஒரு அழிவு! இரு நூற்றாண்டுகளாக மூன்று நான்கு தலைமுறைகளுக்குரிய மக்கள் கட்டிய அற்புதமான மத்திய கால ஐரோப்பாவின் கட்டிடக் கலை சின்னம் இந்த ஆலயம்!. சில ஆண்டுகள் முன்பு கள உறவு கலைஞன் Ken Follett எனும் வெல்ஷ் எழுத்தாளரின் வரலாற்று நாவல்களை இங்கு அறிமுகம் செய்தார். இந்த எழுத்தாளர் எழுதிய  "Pillars of the Earth" என்ற நாவலில் எவ்வாறு நொட்ரே டாம் போன்ற ஒரு பேராலயத்தை மத்திய கால ஐரோப்பாவில் கட்டுகிறார்கள் என அழகாக விபரித்திருப்பார். Rib vault, flying buttresses எனப் பல மத்திய ஐரோப்பிய கால பொறியியல் சாதனைகளுக்கு உதாரணமாக விளங்கியது இந்த ஆலயம்.

Link to comment
Share on other sites

உலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.

நேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, இணையவன் said:

உலகிலேயே அதிக மக்களைக் கவரும் பழமைவாய்த கட்டிடங்களில் முதல் நிலையில் (வருடாந்தம் 12 மில்லியன் பேர் இங்கு வருகின்றனர்) இருந்த கட்டடம். உலகிலேயே மிகப் பழமையான கூரையைக் கொண்ட கட்டடம். மத பேதங்களைத் தாண்டி அனைவரையும் கவலையடைய வைத்தது.

நேற்றுத் தொலைக்காட்சியில் நேரடியாக எரியும் காட்சியைப் பார்த்துப் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதில் ஒருவரது கருத்து, ‘பல நூற்றாண்டுகளாகப் பலதரப்பட்ட போர்களையும் பிரெஞ்சுப் புரட்சி புரட்சியையும் உலகப் போரின் குண்டு வீச்சுக்களையும் தாண்டி வாழ்ந்த கட்டடத்தை இவ்வளவு வசதிகள் உள்ள 21 ஆம் நூற்றாண்டில் பலிகொடுக்கிறோம். தொலைக்காட்சியில் நேரடியாக அது எரிவதைப் பார்த்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவர்களாகத் தவிக்கிறோம் ’ என்றார்.

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

உண்மைதான் அந்த விபத்தை தொலைக்காடசியில் பார்க்கும்போதும் உயர்ந்த கோபுரம் உடைந்து விழும்போதும் மனம் பேதலித்துப்போய் கிடந்தது......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெப்போலியன் முடி சூடிக் கொண்டதும், 
10,000  மக்கள் உள்ளே இருக்கும் அளவிற்கு பெரிதானதும்... இந்தத் தேவாலயம்  என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இணையவன் said:

இக் கருத்து முள்ளிவாய்க்கால் முடிவை நினைவுபடுத்தியது.
ஆனால் ஒரே வித்தியாசம், அடுத்த நாளே மக்கள் முழுவதும் ஒன்றுதிரண்டு அக் கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப முன்வந்துள்ளனர். மரப் பலகை வினியோகித்தர்கள் ஒன்றுசேர்ந்து கட்டுமானத்துக்குத் தேவையான அத்தனை மரங்களையும் தருகிறோம் என்றனர். பலதரப்பட்டவர்களின் உதவித் தொகை ஒரே நாளில் 700 மில்லியன் யூராக்களைத் தாண்டியுள்ளது. தோல்வியிலும் அழிவிலும் இருந்துதான் பல நாடுகளும் இனங்களும் வேகமாக முன்னேறியுள்ளன. எம்மால் மட்டும் இது முடியாமல் போனது.

பகிரங்கமாக ஒரு தலைமை அல்லது கழகம் நேரடியாக ஈடுபட்டால் சகலதும் சாத்தியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் பிரான்சின் நோர்மண்டி பகுதியில் இருந்து வந்த வில்லியம் என்ற குறுநில மன்னன் 1066 ஆண்டில் இங்கிலாந்தினை கைப்பற்றி, கட்டிய வின்சர் கோட்டை ஒரு 27 வருசத்துக்கு முன்னர் 1992ல் எரிந்தது. 

பிரிட்டிஷ் ராணியம்மாவின் வீடு எரிஞ்சு போட்டுதே என்று  குயோ, முறையோ எண்டு, உலகெங்கும் இருந்து காசு கொட்டியது.

அந்த மாதிரி கட்டி விட்டினம்.

அதேபோல தான், உதையும் கட்டுவினம். 

Image result for when windsor castle burned

Image result for windsor castle

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது உண்மையான விபத்தா அல்லது திருத்தி கட்ட காசு காணாததால் இப்படி ஒரு விபத்தை அவர்களே ஏற்படுத்தினார்களோ தெரியவில்லை...எது எப்படி இருந்தாலும் இந்த ஆலயம் எரிஞ்சது என்று ஒப்பாரி வைக்கும் பிரென்ஞ் மக்களை பார்க்கும் போது இங்கிருக்கும் சிலருக்கு மூட  நம்பிக்கையாய் தெரியாது 
"எனக்கு வந்தால் இரத்தம் உனக்கு வந்தால் தக்காளி சட்னி".

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

உங்களுக்கு பிரச்சினைகள் பலதும் பத்தும் கூடிப் போயிட்டுது.. 😁

Link to comment
Share on other sites

On 4/17/2019 at 2:33 PM, ரதி said:

கவலை தரக் கூடிய விடயம்...எப்படித் தான் திருத்தி அமைத்தாலும் பழைய கட்டிட கலைக்கு ஈடாகாது...இதே எங்கள் புகழ் பெற்ற சைவ கோயிலுக்கு ஏதாவது நடந்திருந்தது எம் மக்கள் திருத்த வெளிக்கிட்டால் இங்கிருப்பவர்கள் துள்ளி குதிச்சசிருப்பினம்

பிரெஞ்சு மக்களுக்கு என தேசம் இருக்கின்றது. அவர்கள் போரிட்டு வென்ற விடுதலை இருக்கின்றது. மற்ற நாடுகளில் இருந்து பிழைப்புக்கு வரும் மக்களுக்கும் அகதிகளுக்கும் மீள் வாழ்வு கொடுக்கும் அளவுக்கு வளம் இருக்கின்றது, எனவே அவர்கள் மீள கட்டுவதில் பிரச்சனை இல்லை.

கோவில்களுக்கு முன் பிச்சை எடுக்கும் நிலையில் போரால் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்க வீடு அற்ற நிலையில் அகதிகளாக எம்மவரும் இருக்கும் நிலையில் ஓர் கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ வீணாக வளம் கொட்டப்படுமாயின் துள்ளி குதித்து எதிர்க்க தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இங்கிருக்கும் பல சிரியா அகதிகள் பிரெஞ்சு விமானப்படை  குண்டுவீசி அழித்த நகரங்களின் படங்களை என்னிடம் காட்டினார்கள். அதை விட இந்த தேவாலய அழிவு எனக்கு பெரிதாக தெரியவில்லை.

தேன் கூடுமாதிரி இருந்த இனத்தை சிதறடித்த பெருமை பிரான்ஸ் மற்றும் வல்லரசுகளுக்கு உண்டு.

 இங்கே இரத்தக்கண்ணீர் வடிப்பவர்கள் ஈராக் சிரியா லிபியா போன்ற நாடுகளில் குண்டு வீசி தாக்கிய இடங்களையும் பாருங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.