Jump to content

பாதி – ஷக்திக சத்குமார : தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாதி

– ஷக்திக சத்குமார

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

பிக்கு ஹல்வெல்ல கஸ்ஸப ஹிமி, கஸான் பலிஹவடனவாக மாறியது சமூக வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல. தவிரவும் அவருக்கு துறவு வாழ்க்கையிலும் பற்றேதுமிருக்கவில்லை. துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பிறகு தொடர்ந்தும் அப் பல்கலைக்கழகத்தின் பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருக்க அவர் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் பிக்குவாகப் பிரவேசித்து துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பலரும் அப்போதும் கூட பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருந்தார்கள்.

பிக்கு தம்மஸ்ஸர ஹிமி, கஸான் அருகில் வரும்போது அவர் பழைய குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“தப்பிச்சுட்டான்… தப்பிச்சுட்டான்… கஸான் என்றால் தப்பிச்சுட்டான். நீ விடுதியில் தொடர்ந்தும் இருப்பாய்தானே…? இனி சமரிக்காக கடைக்குப் போக வர இரவாகும்வரைக்கும் காத்திருக்கத் தேவையில்லை. இல்லையா?” என்றவாறு பிக்கு தம்மஸ்ஸர ஹிமி கஸானின் அறைக்குள் நுழைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் அமர்ந்து கொண்டார். கட்டிலில் சாய்ந்திருந்து ‘புதுன்கே ரஸ்தியாதுவ (புத்தரின் அலைச்சல்)’ நாவலை வாசித்துக் கொண்டிருந்த பிக்கு மேதானந்த ஹிமி, பிக்கு தம்மஸ்ஸர ஹிமியின் குரலைக் கேட்டு நூலை வலது கையில் ஏந்தியவாறு எழுந்து நின்றார்.

“எங்க பௌத்த சேனா படையால் இந்தப் புத்தகத்துக்கு எதிரா ஒரு வழக்குத் தொடரவிருக்கிறோம்.. இது முற்றுமுழுதா அடிப்படைவாதிகளோட வேலை’ புதுன்கே ரஸ்தியாதுவ நூலைக் காட்டியவாறு பிக்கு மேதானந்த ஹிமி கூறினார்.

“கஸான் வேறொரு அறைக்குப் போறதாச் சொல்றான்… அவனுக்கு காவியுடை மட்டுமில்ல எங்களையும் பிடிக்கலையோ என்னமோ?” என்றவாறு அப்போதுதான் அறைக்குள் வந்த பிக்கு சுமேத ஹிமியின் குரல் கஸான் செய்து கொண்டிருந்த வேலையை சற்று இடைநிறுத்தியது.

“அப்படில்லாம் ஒண்ணுமில்ல… நான் இந்த விடுதியை விட்டுப் போனாலும் கூட அடிக்கடி உங்களையெல்லாம் பார்த்துப் போக வருவேன்” என்று கூறிய கஸானின் குரலில் கவலை நிரம்பியிருந்தது.

“சரி சரி… இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே… எங்க போனாலும் பரவாயில்லை பட்டப்படிப்பை கை விட்டுடாம ஒழுங்காப் படிச்சுக்கோ…”

***

திடீரென நான் துறவு வாழ்க்கையைக் கைவிட்டவனென்று வெளிப்படுத்த முடியாததால்தான் நான் இக் கதையை இவ்வாறாக ஆரம்பித்திருந்தேன். எனினும் நான் துறவு வாழ்க்கையைக் கை விட்டவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். நான் எதற்காக துறவு வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டேன் என்பதை நான் அறியேன். ஏன் அதைக் கை விட்டேன் என்பதுவும் எனக்குத் தெரியாது. தலைமைப் பிக்கு காலமானதற்குப் பிறகு, காவியுடையை தொடர்ந்தும் நான் அணிந்திருக்க வேண்டியதற்கான எந்தக் காரணமும் எனக்கிருக்கவில்லை.

லொயிட் அண்ணனின் அறைக்குச் செல்ல நான் தீர்மானித்தது, ஆழமாக யோசித்துச் செய்ததல்ல. எனினும் நான் இருந்த சூழலை விட்டும் தப்பித்துச் செல்லும் தேவை எனக்கிருந்தது. லொயிட் அண்ணனை முதன்முதலாக நான் சந்தித்தது எமது எதிரியாகத்தான். இப்போது அவர் எனது சினேகிதன் என்றபோதும், பௌத்த சேனா படைக்கு இப்போதும் கூட அவர் எதிரிதான்.

லொயிட் அண்ணன் ஒரு அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனமான N.G.O வில் வேலை பார்த்து வந்தார். ஒரு தடவை பௌத்த சேனா படையோடு நாங்கள் லொயிட் அண்ணனின் அலுவலகத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோம்.

“நீங்க எல்லோரும் வெளிநாட்டுக் காசுல வாழ்ந்த விடுதலைப் புலித் தலைவர்களோட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறதாச் சொல்றாங்க… நிஜமா?”

பிக்கு ஞானசாரவின் குரலுக்கு அலுவலகத்திலிருந்த அனைவரும் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். கேமராக்கள் சூழ்ந்திருந்த ஊடகவியலாளர்கள் எம்முடனிருந்தார்கள்.

“மன்னிக்கணும் சாமி… நாங்க யுத்தத்துல வீடுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்குத்தான் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம்” என்றவாறு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் முன்னால் வந்தார்.

“நீ யாரு?”

“நான் லொயிட். இங்க வேலை செய்றேன்.”

***

“கஸான் பலமான யோசனையில் இருக்கீங்க போல… நான் வரத் தாமதிச்சுட்டேனா?” என்றவாறு லொயிட் அண்ணன் என் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். நான் பையை எடுத்துக் கொண்டு சைக்கிளின் பின்னால் ஏறிக் கொண்டேன்.

“கஸானுக்கு காவியுடுப்பை விடவும் ஜீன்ஸ் அழகாயிருக்கு” லொயிட் அண்ணன் சைக்கிளைத் திருப்பும் போது கூறினார். நான் மெலிதாகப் புன்னகைத்தேன். அக் கணத்தில் நான் ஈருலகத்திலிருந்தேன்.

“கஸான் ராத்திரிக்கு என்ன சாப்பிடுவீங்க? நான் வழமையா இடியாப்பக் கொத்து ஒரு முழுப் பார்சல் சாப்பிடுவேன்” என க்ரீன் கார்டன் ஹோட்டலுக்கருகில் சைக்கிளை நிறுத்தும் போது லொயிட் அண்ணன் கேட்டார்.

“எனக்கு அரைப் பார்சல் போதும்” என்று மெதுவாகக் கூறினேன்.

***

காவியுடையில் வாழ்ந்த காலத்தில் இந்தச் சமூகம் மிகவும் சீரழிந்து போய் விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது அவ்வாறில்லை என இப்போது எனக்குத் தோன்றுகிறது. இச் சமூகத்தில் அனைவரும் காவியைக் கை விட்டவன் என்று என்னைப் புறந் தள்ளுவார்கள் என்ற பயம் எனக்கிருந்தது. எனினும் அவ்வாறெல்லாம் எதுவும் ஆகவில்லை. சமூகத்தில் அனைவரும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பல்கலைக்கழகத்தைப் போலவே அவ் விடுதியும் ஏனைய நாட்களை விடவும் எனது விருப்பத்துக்குரியவையாக எப்போதும் இருந்தன.

“கஸான் நான் சிறுகதையொண்ணு எழுதத் தொடங்கினேன். நல்லாருக்கான்னு பாரு…” என்ற லொயிட் அண்ணன் கையால் எழுதப்பட்ட காகிதங்கள் சிலவற்றை எனது மேசை மீது வைத்தார். தலைப்பற்ற அக் கதையை நான் மெதுவாக வாசிக்கத் தொடங்கினேன்.

            யஷோதரா விம்மிக் கொண்டிருந்தாள்சன்னவின் செயலைத் தடுக்கமுடியுமாக இருந்த போதிலும்தான் பொறுமையாக இருந்தது ஆழ் மனதில்அதற்கொரு இச்சையுமிருந்ததால்தான் என யஷோதராவுக்குத் தோன்றியதுசித்தார்த்தன் குடும்ப வாழ்க்கையைத் துறந்து சென்றது ராகுலன் அவரதுகுழந்தையல்ல என்பதை அறிந்ததாலாசித்தார்த்தனால் நான்திருப்தியடையவில்லை என்பதை அவர் அறிந்திருந்தாராபெண்ணொருத்தியைத்திருப்தியடையச் செய்யும் திறமை அவருக்கு இருக்கவில்லை என்பது நிஜம்தானேயஷோதராவின் உள்ளம் தொடுத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில்களைத்தேடுவதற்குப் பதிலாக அவள் நீண்ட பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயற்சித்தாள்.

“ஐயோ! இந்தக் காகிதங்களை எரிச்சிடுங்கண்ணா…” ஒரு பந்தியை வாசித்த நான் லொயிட் அண்ணனுக்கு விடயத்தைத் தெளிவுபடுத்த எழுந்து நின்றேன்.

“ஏன் ஒரு படைப்பாக இதை இச் சமூகம் ஏற்றுக் கொள்ளாதா? இல்லேன்னா நரகத்துக்குப் போயிடுவேனோ? இது மஹாயான பௌத்தத்துல இருக்குற ஒரு எண்ணக் கரு ” என்றவாறு சிகரெட்டொன்றைப் பற்ற வைத்துக் கொண்ட லொயிட் அண்ணனின் உதடுகளில் கேலிப் புன்னகையிருந்தது. புகை வளையங்கள் சுதந்திரமாக அந்த அறைக்குள் மிதக்கத் தொடங்கின.

“ஆனா இது ஒரு தேர வாத பௌத்த நாடு” எனத் தானாகக் கூறி விட்டேன்.

“ஆமா… பெயரளவில் மாத்திரம்.”

***

இருவரால் இழுத்துச் செல்லப்பட்ட நான் இருண்ட அறையொன்றுக்குள் தள்ளப்பட்டேன். வீசப்பட்டுப் போய் தரையில் விழுந்தேன். அத்தோடு கதவு தாழிடப்பட்டது. அரையிருளில் நான் அறை முழுவதும் நோட்டமிட்டேன். அறையின் ஒரு மூலையில் தலைமைப் பிக்கு படுத்திருப்பதை நான் அக் கணம் கண்டேன். அவர் மிகுந்த அசௌகரியமாக இருப்பது தென்பட்டது. நான் மெதுவாக அவரருகே சென்றேன். படுத்திருந்த போதும், அவர் உறங்கியிருக்கவில்லை. கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. என்னைக் கண்டதும் தலைமைப் பிக்கு சடுதியாக எழுந்து நின்றார். அவரது கால்களிரண்டின் இடையிலிருந்து இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்வது கண்டு நான் மிகுந்த அச்சமுற்றேன்.

‘ஐயோ என்ன சாமி இது?’ என நான் பலமாக ஓலமிட்டேன். எனினும் ஓசை வெளிவரவில்லை. நின்றிருந்த தலைமைப் பிக்கு எனது புறமாகத் திரும்பி காவியுடையை உயர்த்திக் காட்டினார். அவரது ஆணுறுப்பு அறுத்துப் போடப்பட்டிருந்தது. அதிலிருந்து இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது.

“யார் இந்தக் குற்றத்தைச் செய்தது..?”

“ஹேய் ஹேய் கஸான் ஏன் இந்த நடுச் சாமத்துல கத்துறே?” என்ற லொயிட் அண்ணனின் குரலுக்கு நான் விழித்துக் கொண்டேன். அறையில் மின்குமிழ் எரிந்து கொண்டிருந்தது.

“நான் சின்னதா ஒரு கனவு கண்டேன்” என்று கூறியவாறு நுளம்பு வலையைத் தூரமாக்கி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.

“உனக்கு ரொம்ப வியர்த்திருக்கு” என்ற லொயிட் அண்ணன் மேசை மீதிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து என்னிடம் எறிந்தார். போத்தலை இரு கைகளாலும் பிடித்துக் கொண்ட நான் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். அறையின் கதவைத் திறந்த லொயிட் அண்ணன் என்னைச் சிரித்துக் கொண்டே பார்த்துக் கேட்டார்.

“நீ இப்பவும் நரகத்துலதான் இருக்கியா?”

பதில் எதையும் கூறாமல் நான் இருளிலேயே நீர்க் குழாயருகே சென்றேன். முகம், வாயைக் கழுவிக் கொண்ட பிறகு சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். வந்து திரும்பவும் நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்டேன். மெல்லிய குரலில் பாடலொன்றை முணுமுணுத்தவாறு லொயிட் அண்ணன் அறையின் கதவைத் தாழிட்டு, மின்குமிழை அணைத்து விட்டு வந்து அருகே படுத்துக் கொண்டார். சற்று நேரத்துக்குப் பிறகு அவரது முனகல் ஒலி எனது காதருகே கேட்கத் தொடங்கியது. தலைமைப் பிக்குவின் உடலில் எழுந்த வியர்வை கலந்த வாசனையை லொயிட் அண்ணனின் உடலிலிருந்தும் நான் உணரத் தொடங்கினேன். மெதுவாக கண்களை மூடிக் கொண்டேன்.

—————–

shakthika_sathkumara_.jpg

எழுத்தாளர் பற்றிய குறிப்பு 

            இலங்கை பொல்கஹவல பிரதேச சபையில் அரச அலுவலராக பணி புரியும் ஷக்திக சத்குமார நவீன தலைமுறையைச் சேர்ந்த சிங்கள இலக்கியவாதிகளில் ஒருவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சாகித்திய இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.

            அண்மையில் அவர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்ட சிறுகதையே ‘பாதி’ எனும் இச் சிறுகதை. இச் சிறுகதை வெளியானதன் பிறகு பௌத்த சங்கங்களால் பல தொந்தரவுகளுக்கு அவர் ஆளாகி வருவதோடு, அவரது எழுத்துக்கள் பௌத்த மதத்துக்கு நிந்தனையாக அமைவதாக ‘பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும் இளைஞர் முன்னணி’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வெளியே வர முடியாதவாறு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

            இவர் சிறையிலடைக்கப்படக் காரணமான ‘பாதி’ எனும் இச் சிறுகதை சிறிய கதை என்றபோதிலும், இதன் ஒவ்வொரு வரிகளிலும் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், இலவசமாகவும் இலகுவாகவும் பட்டப்படிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டி காவியுடையை அணிந்துகொள்ளும் பௌத்த பிக்குகள், விலைமாதுக்களுடனான அவர்களது இராக் காலத் தொடர்புகள், மத நிந்தனை எனும் பெயரில் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படுவது, வடக்கில் அநாதரவான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற பல விடயங்கள் வாசகர்களின் ஆழமான சிந்தனைக்கு வேண்டி இச் சிறுகதையின் அர்த்தங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன.

            இலங்கையில் இவ்வாறானதொரு சிறுகதைக்கு தடை விதிப்பதையும், எழுத்தாளரை பிணையில் வெளிவர விடாத சட்டங்களையிட்டு சிறையிலடைப்பதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பௌத்த பிக்குகளின் பாலியல் உறவுகளைக் குறித்து எழுதவே கூடாதென்றால், பௌத்த மத ஜாதகக் கதை நூலை முதலில் எரிக்க வேண்டும். தற்கால இலக்கியப் புனைவுகளை இலக்கியமாக மாத்திரம் பார்க்காது அவற்றின் மீது தீவிரவாதப் போக்கைப் பிரயோகிப்பதன் மூலம் பிற்போக்குத்தனமான அரசியலைத் திணித்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.

            இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களிலும் பௌத்த பிக்குகள் பரவலாகக் காணப்படுகின்றார்கள் என்பதால், அவர்களை வைத்து எழுதப்படும் புனைவுகளும் அநேகமானவை. அவற்றை எழுதுவதற்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் பறித்துக் கொள்வது எந்தளவு நியாயமானது? இலங்கை இலக்கியவாதிகளின் படைப்புச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நீதிமன்ற முறைப்பாடுகளே தீர்மானிக்குமென்றால் அது எந்தளவு மோசமான நிலைப்பாடு?

            இலக்கியத்தில் முன்வைக்கப்படும் தர்க்க நியாயங்களை, கருத்து வேறுபாடுகளை காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லாமல், ஆரோக்கியமான இலக்கியக் கூட்டங்களில் அப் பிரதிகள் கலந்துரையாடப்பட்டால், விவாதிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா? இத் தலைமுறை எழுத்தாளர்களாக நாம் அதைத்தான் செய்ய வேண்டும். அதுதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.

            இச் சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலமாக, இலங்கையில் படைப்புச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நிலைநாட்ட எழுத்தாளருடன் கை கோர்க்கிறேன் – எம்.ரிஷான் ஷெரீப் (மொழிபெயர்ப்பாளர்)

 

https://m.jeyamohan.in/120839#.XLT3_y_TVR4

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கதையை எழுதினத்திற்கே அவரைப் பிடிச்சு உள்ளுக்கை போட்டவங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ரதி said:

உந்த கதையை எழுதினத்திற்கே அவரைப் பிடிச்சு உள்ளுக்கை போட்டவங்கள் 
 

ஓம்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பெண்டில் பிள்ளையை விட்டுப் புத்தர் ஓடிவந்தது இதனால்தானா???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.