Jump to content

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட செயற்கைகோள்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள் நாளைய தினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

குறித்த செயற்கைகோள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கனஸ் என்ற ரொக்கட் ஊடாக இந்த செயற்கைகோள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான தரிது ஜயரத்ன என்ற மாணவன் மற்றும் தாய்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற துலானி சாமிகா என்ற மாணவியும் இணைந்து இந்த செயற்கை கோளை தயாரித்துள்ளனர்.

1000 சென்றி மீற்றர் வரை சிறியதாக காணப்படும் இந்த செயற்கைக்கோள் 1.1 கிலோகிராம் நிறையை கொண்டுள்ளது.

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://lankasee.com/2019/04/16/இலங்கையில்-முதல்-முறையா-5/

Link to comment
Share on other sites

23 hours ago, colomban said:

இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்ட ராவணா- 01 எனப் பெயரிடப்பட்டுள்ள செயற்கைகோள் நாளைய தினம் விண்ணுக்கு ஏவப்படவுள்ளது.

23 hours ago, colomban said:

ஜப்பான் தொழில்நுட்ப நிறுவனத்தில் வைத்து இந்த செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள-பௌத்த இனத்தின் போலியாக புனையப்படும் மாகாபொய் வம்ச வரலாற்றில் இன்னொரு பக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ravana-1-1024x384-720x450.jpg

இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த செய்மதி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.

ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் அது விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையின்-முதல்-செய்மதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஸ்ரி லங்கன்:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.