Jump to content

தமிழகத்தின் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம்..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை..? இதோ ஷாக் ரிப்போர்ட் ..!

votr4564-1555423953.jpg

சென்னை: என்னப்பா.. விலைவாசி எல்லாம் ஏறி போச்சு..! இப்ப வந்து இந்த விசுகோத்து காசை கொடுக்கிறீங்களே.. ! என்ற அங்கலாய்ப்புகள் தமிழகத்தின் பல தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாயில் இருந்து எதிரொலித்துக் கொண்டுள்ளன.காரணம்.. இந்த லோக்சபா தேர்தலில், ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் பணத்தின் அளவு 300 என்ற அளவில் குறைந்து போனதுதானாம்.

பெரம்பலூர், மதுரை, அரக்கோணம், தூத்துக்குடி தொகுதிகளில் ஓட்டுக்கு 300 ரூபாய் என்று ரேட் ஃபிக்ஸ் செய்துள்ளதாம் அந்த "மூன்றெழுத்து" முக்கிய கட்சி.

பணம் குறைவு

நான்கு எழுத்து கட்சி, தேனி மாதிரி தொகுதிகளில் ஓட்டுக்கு, ஆயிரம் ரூபாய் அள்ளி வீசி உள்ளது.. நீங்கள் என்னடா என்றால், உங்கள் பழைய தலைவரைப் போல, கையிலிருந்து பணத்தை எடுக்க மாட்டேன் என்கிறீர்களே.. ! என்று, மூன்று எழுத்து கட்சியின் முக்கிய பிரமுகர்களிடம் அங்கலாய்த்துக் கொள்கிறார்கள் திருவாளர் பொது ஜனங்கள்.

சமாதானங்கள்

என்னப்பா பண்ணுவது.. ஆட்சியில் இருப்பவர்கள் எளிதாக கொண்டு சென்று கொடுக்க முடிகிறது.. நமக்கு ஆயிரத்தெட்டு கெடுபிடி.. என்று சமாதானம் சொல்கிறார்கள் மூன்றெழுத்து கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள்.

சமத்துவம் இல்லையேப்பா..

அதற்குள் அந்த பக்கம் ஒரு களேபரம். சோளிங்கர் தொகுதியில் ஓட்டுக்கு, 2000 ரூபாய் கொடுக்கிறார்கள் என்று ஒரு தகவல் பரவிவிட, என்னப்பா.. பக்கத்து அரக்கோணத்துல, 300 ரூபாய், சோளிங்கரில் 2000 ரூபாயா.. இதிலும் சமத்துவம் கிடையாதா.. சின்சியாரிட்டிக்கும், சீனியாரிட்டிக்கும் என்னப்பா மரியாதை என்று அங்கலாய்த்துக் கொள்ளும் வாக்காளர்களையும் பார்க்க முடிகிறது.

தொழில் ரகசியம்

இன்று இரவு மற்றும் நாளை இரவுக்குள், பிற தொகுதி ரேட் நிலவரமும் தெரியவந்துவிடத்தான் போகிறது. அது 1000 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, 300 ரூபாய் கொடுக்கும் கட்சியோ, ஆனால் ஒருவருக்கு ஒருவர் கையும் களவுமாக பிடித்து கொடுப்பதில்லை என்பதில் தான் அடங்கியுள்ளது, அந்த அரசியல் கட்சிகளின் இத்தனை ஆண்டுகால தொழில் ரகசியம்.

https://tamil.oneindia.com/news/chennai/in-tamilnadu-what-is-the-vote-rate-347112.html

டிஸ்கி :

மூன்றெழுத்து கட்சி .. ( ??)

1 ) பெரம்பலூர் -- புதிய தலைமுறை தொலைக்காட்சி அதிபர் பாரிவேந்தர்..

2) மதுரை -- எழுத்தாளர் வெங்கடேசன் ( கம்யூனிஸ்ட்)

3) தூத்துகுடி -- கவிஞர் (?) கனிமொழி.

4) அரக்கோணம் -- சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன் ..

நான்கெழுத்து கட்சி ( ?? )

5) தேனி -- துணை முதல்வரிண்ட மகன் ரவீந்தரநாத்து.. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும்  இருக்கின்றதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன்று இரவு... மின்சாரத்தை துண்டித்து விட்டு, பணம் கொடுக்கின்ற திட்டமும்  இருக்கின்றதாம்.

500 ரூபாவை கைக்குள் வைத்துவிட்டு 5000 ரூபா என்றும் சொல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண வினியோகத்தில் கை வைத்த அதிமுக நிர்வாகி... பொங்கி எழுந்த மக்கள்.. தேனியில் நடந்த கூத்து..!

money_1200x630xt.jpg

வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதைத் தடுக்க அதிரடி சோதனைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டியில் முழு பணத்தையும் வினியோகிக்காத அதிமுக நிர்வாகி வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் பணபட்டுவாடா செய்யப்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

அதிமுகவின் பணப்பட்டுவாடாவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.
இந்நிலையில் தேனி தொகுதிக்கு உட்பட்ட உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூரில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வினியோகித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் அதிமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாயை "ஸ்வாகா" செய்துவிட்டு வாக்காளர்களுக்கு 500 ரூபாய் மட்டும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பொதுமக்களில் சிலர், பணப் பட்டுவாடா செய்த அதிமுக கிளைச் செயலாளர் வீட்டை முற்றுகையிட்டனர்.

பெண்கள் அதிக அளவு முற்றுகையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் ஆத்திரத்தில் வாக்குவாதம் செய்ததால், முழுத் தொகையை பட்டுவாடா செய்வதாக அந்த நிர்வாகி உறுதியளித்ததாகத் தெரிகிறது. அதிமுக நிர்வாகியின் உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தச் சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.asianetnews.com/politics/admk-functionary-money-distribute-in-theni-pq3718

டிஸ்கி :

 

வாழ்க ஜ(ப)ணநாயகம் ..!  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை ஐயாவும் இல்லை அம்மாவும் இல்லை பார்ப்பம் என்ன நடக்குது என்று .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.