Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

குரங்குகளின் மூளையில் மனிதனின் ஜீன்... சீனாவின் 'விபரீத' பரிசோதனை!

னித வரலாற்றில் நவீன கால அறிவியல் கொண்டுவந்துள்ள முக்கியமான ஆராய்ச்சிகளுள் ஒன்று மரபணு ஆராய்ச்சி. நமது மூதாதையர்களைப் புரிந்துகொள்ள, மனிதனின் உயிர்க்கூறு பண்புகளைத் தெரிந்துகொள்ள, நோய்களை எதிர்கொள்ள எனப் பல்வேறு வகைகளில் இந்த மரபணு ஆராய்ச்சி நமக்குக் கைகொடுத்துவருகிறது. மனிதர்களின் இயல்பையே மாற்றும் அளவுக்கு வல்லமை வாய்ந்த ஆராய்ச்சி இது என்பதால், எப்போதும் இதுகுறித்த சர்ச்சைகளும் வந்துகொண்டே இருக்கும். ஒருபக்கம் விஞ்ஞானிகள் ஆதரிப்பதும் இன்னொருபக்கம் எதிர்ப்பதுமாக அந்த விவாதங்கள் இருக்கும். தற்போது மீண்டும் அப்படி ஒரு ஆராய்ச்சி உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சீன விஞ்ஞானிகள், மனித மூளையின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய மரபணுக்களைக் குரங்குகளில் செலுத்தி சோதனை செய்திருக்கிறார்கள். இதன்மூலம் மனித மூளையில் ஏற்படும் வளர்ச்சிகளைப் போலவே குரங்குகளின் மூளையும் வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கிறார்கள். அந்நாட்டின் தேசிய அறிவியல் மதிப்பாய்வு நிறுவனத்திடம், குரங்குகளில் மனித மரபணு குறித்த ஆய்வுகளைச் சீன விஞ்ஞானிகள் சமர்ப்பித்திருக்கிறார்கள். அதில் எவ்வாறு குரங்குகளில் மனித மரபணுக்களைச் செலுத்தினார்கள், அப்படி மனித மரபணுக்கள் செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் குரங்குகள் இப்போது இருக்கும் நிலை என அனைத்தையும் தெரிவித்துள்ளனர். 

மனித மூளையிலிருக்கும் மரபணுவான மைக்ரோசிபாலின் (microcephalin) MCPH1-ஐ சீன விஞ்ஞானிகள் 11 ரீசஸ் குரங்களுக்குச் செலுத்தியுள்ளனர். ரீசஸ் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர்களைப் போன்று செயல்படக்கூடியவை என்பதால் அந்தக் குரங்குகளுக்குச் செலுத்தியுள்ளனர். இதன்மூலம் 'மனிதன் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தான்' என்பதைக் கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மரபணு மாற்ற பரிசோதனை மேற்கொள்ளப்படும் குரங்குகள்

Photos: Reuters

குரங்குகள் கருப்பையில் கருவாக இருக்கும்போதே மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு, குட்டிகள் உருவாக்கும் வேலைகள் தொடங்கப்பட்டன. அவ்வளவு ஏன், குரங்குகள் கருத்தரிப்பதிலிருந்தே அவர்களின் ஆய்வு தொடங்கிவிடுகிறது. பெண் குரங்குகளின் கருமுட்டைகளுக்குள் இந்த MCPH1 என்ற ஜீனை ஒரு வைரஸ் மூலம் உள்ளே செலுத்துகிறார்கள். இது அந்த ஜீனை குரங்குகளில் மூளைக்குக் கொண்டு செல்கிறது. அதன் பிறகு தாய்க் குரங்குகளிடமிருந்து அறுவைசிகிச்சை மூலம் பிறக்க வைக்கும் குரங்குக் குட்டிகள் இன்குபேட்டரில் வைத்து வளர்க்கப்பட்டன. வளர்ந்த சில நாள்களுக்குப் பிறகு ஒரு சில விஷயங்களில் மனிதர்களைப் போன்றே குரங்குகள் செயல்படத் தொடங்கியுள்ளன. மூளை வளர்ச்சி, நினைவாற்றல், முடிவு எடுக்கும் திறன் போன்றவை மற்ற குரங்குகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தன. ஜீன் செலுத்தப்பட்டவுடன் 11 குரங்குகளில் ஆறு குரங்குகள் இறந்திருக்கின்றன. மீதமுள்ள ஐந்து குரங்குகளை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். 

இந்த மரபணுவைக் குரங்குகளுக்குச் செலுத்திய பின்னர், குரங்குகளின் மூளை வளர்ச்சி அடைவது அவற்றின் இயல்பான வேகத்தில் இல்லாமல், மனிதனின் மூளை வளர்ச்சிபோல நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதும் சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மூளை வளர்ச்சியைக் கண்டறிய குரங்குகளுக்கு MRI ஸ்கேனும் செய்யப்பட்டுள்ளது. குரங்குகளின் மரபணுக்களில் மனித மரபணுக்களைச் செலுத்தி அவற்றின் தன்மையையே மாற்றியமைத்துள்ளார்கள் சீன ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், குரங்குகளுக்கு மனித மூளையின் மரபணுவைச் செலுத்தியது தொடர்பாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள். 

 

 

குரங்குகள்

கோப்புப் படம்

இந்த ஆராய்ச்சி தவறானது என்று ஒரு குழுவும், அறிவியலில் இதுவொரு முக்கியமான ஆய்வு என்றும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பரிசோதனை பொறுப்பற்றது. மரபணு மாற்றத் தொழில்நுட்பத்துக்கான நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆச்சர்யம் என்னவென்றால் அந்தச் சீன விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றிய ஓர் ஆராய்ச்சியாளரே அதைத் தவறு என்று விமர்சனம் செய்திருக்கிறார். ஆராய்ச்சியில் இருந்து பின்வாங்க முடிவெடுத்துள்ளார்.

மரபணு மாற்றம் என்பது என்ன? 

ஓர் உயிரினத்தின் மரபணுவில் உள்ள டி.என்.ஏ-வை நீக்குதல், சேர்த்தல் மற்றும் அழித்தல் என்று மரபணு அமைப்பையே மாற்றியமைப்பதை 'மரபணு மாற்றம்' என்று அழைக்கிறது அறிவியல். மனிதர்களுக்கு இருக்கும் நோய்களை விரட்டவும், நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கவும் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. இது அசாத்திய திறன்களைக் கொண்ட சூப்பர்ஹீரோ மனிதர்களை உருவாக்கப் பயன்படும் என்பதும் சிலரது கருத்தோட்டமாக உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் அதிகமான மோப்பத் திறனும், கூர்மையான இரவுப் பார்வையும் உருவாக்க முடியும். மரபணு மாற்றத்துக்காக உலக ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விதிகளை வகுத்திருக்கிறார்கள். உலக அளவில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் இந்த விதிகளைப் பின்பற்றித்தான் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், உலக அளவில் அபாயகரமான ஆராய்ச்சிகளில் ஒன்றாக மரபணு மாற்ற ஆய்வு பார்க்கப்படுகிறது. மேலும், இது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிச் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும். 

குரங்குகள்

இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது விலங்குகளை அழிவுப்பாதையை நோக்கி அழைத்துச்செல்லும். இது விலங்குகள் துன்புறுத்தலை மேலும் அதிகரிக்கவே செய்யும். இந்தச் சோதனைகள் ஒருவிதமான ஆர்வத்தால் மட்டுமே செய்யப்படுகின்றன. உண்மையில் விலங்குகள் இயற்கையான வாழ்விடங்களில் மட்டுமே இருக்க வேண்டும். இப்போது உருவாக்கியிருக்கும் குரங்குகள் எங்கு தங்கும், எப்படிச் சிந்திக்கும், என்ன செய்யும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையில்லை. ஒருவேளை இந்தக் குரங்குகளுக்கு மனிதர்களைப் போன்ற மூளை வளர்ச்சி ஏற்பட்டால் அவையும் மனிதர்களைப் போலவே வாழ முடிவுசெய்தால் அவை வாழ்வதற்கான இடம் இங்கு ஏது? மனிதர்களின் எண்ணிக்கையே சராசரி அளவைவிட அதிகமாகிவிட்ட நிலையில் குரங்குகளையும் மனிதர்களைப் போல் மாற்றிக்கொண்டிருந்தால் என்ன மாதிரியான விளைவுகளை நாம் சந்திப்போம் என்று யூகங்களின் அடிப்படையிலாவது ஏதேனும் திட்டமிடுதல் இருக்கின்றதா. இவையெல்லாம் நாளையே நடக்கக்கூடியதா என்றால், இல்லைதான். ஆனால், எதிர்காலம் நாம் யூகிப்பதைவிடவும் ஆபத்தானதாக இருந்தால் என்ன செய்வது என்ற அச்சமும் எழாமல் இல்லை.

ஹாலிவுட்டில் 'தி பிளானட் ஆப் தி ஏப்ஸ்' என்றொரு திரைப்படம் உண்டு. அதில் இதே போன்றதொரு ஆராய்ச்சியால் குரங்குகள் தனி நாகரிக சமுதாயமாக மாறி மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் வாழ்விடச் சண்டைகள் நிகழத் தொடங்கி அதுவே போர் வரைக்கும் இட்டுச்செல்லும். ஒருவேளை அறிவு வளர்ச்சியடைந்த குரங்குகள் மனிதர்களைத் தாக்கினால் என்ன ஆகும்? "உடனே இந்த ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். சீன ஆராய்ச்சியாளர்கள் உயிரினங்களையும் அவற்றின் தன்மையையும் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அவர்களின் இதுபோன்ற ஆய்வுகள் நமக்குக் காட்டுகின்றன" என்று சமூக ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி விகடனுக்கு 

https://www.vikatan.com/news/miscellaneous/155269-chinese-scientists-placed-human-genes-into-monkeys-brain-for-research.html?fbclid=IwAR0jCGTJ4wqKPMm-mzMOYlgUCaDW07HOB7V5wc9lRXOjTq6bZcUTSweMqII

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

இது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கிச் சமத்துவமின்மைக்கும் வழிவகுக்கும். 

இணைப்பிற்கு நன்றி பெருமாள்.
 இனி குரங்குகளும் கதைக்க வெளிக்கிட்டால் நாங்கள் எங்கை போறது? :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு நன்றி பெருமாள்.
 இனி குரங்குகளும் கதைக்க வெளிக்கிட்டால் நாங்கள் எங்கை போறது? :grin:

நெடுக்கரை தேடுறன் குமரா சாமி நெடுக்குதான்   இதுக்கு சரியான விளக்கம் குடுக்கும்  ஆள் அவர்தான்  அவரின் முகப்பு படத்திலே இந்த வில்லங்கம் பிடிச்ச பூனையும் இருக்கு இப்ப குரங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Related image

ஆர்வ கோளாறில் மேல் உள்ள படத்தை முழு படமும்  பார்த்து துளைத்து விட்டன் இன்றைக்கு கனவு முழுக்க சீசர் எனும் கதாநாயக குரங்கின் அட்டகாசம் தான் .😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.