Jump to content

52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை


Recommended Posts

52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை

 

 

 

rainy weather

கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

http://www.dailyceylon.com/180975

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

52 நாள் வரட்சியின் பின்னர் வடக்கில் ஐஸ் மழை

 

 

 

rainy weather

கடுமையான வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்துடன் யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஐஸ் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் நீர்வேலி உட்பட பல பிரதேசங்களுக்கு இந்த ஐஸ் மழை பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 52 நாட்களின் பின்னரே இப்பிரதேசத்துக்கு மழை பெய்துள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்தும் அப்பிரதேசத்துக்கு கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் அபாயம் உள்ளதனால், இது குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

http://www.dailyceylon.com/180975

ஆகா, எனது ஊரில் ஐஸ் மழை பெய்துள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 7.1 மில்லி மீற்றர் மழை..

April 17, 2019

raining.jpg?resize=794%2C542

யாழில்.கடந்த சில மாதங்களாக கடும் வெயிலான கால நிலை நிலவி வந்த நிலையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.நகரை அண்டிய புறநகர் பகுதிகளில் மழை வீழ்ச்சி காணப்பட்டது.

கடும் வெப்பத்தால் மக்கள் தவித்து வந்த நிலையில் பலத்த இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. நேற்றைய தினம் 7.1 மில்லி மீற்றர் மழை பெய்த்துள்ளது என வானிலை அவதான நிலையத்தின் யாழ்.பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதேவேளை வடக்கில் இடை நிலை பருவ பெயர்ச்சி ஆரம்பித்துள்ளதாகவும் , அதனால் மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உண்டு. குறிப்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மாலை வேளைகளில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக காணப்படும். அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என யாழ்.பிராந்திய காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில்.நேற்றைய தினம் பெய்த மழையின் போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/118453/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நீர்வேலியான் said:

ஆகா, எனது ஊரில் ஐஸ் மழை பெய்துள்ளது!

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

அண்ணை,
வருஷத்திலே ஒரு நாள் பெய்யிறதால வாழைக்குலை தப்பிவிடும். நீர்வேலி யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

Link to comment
Share on other sites

9 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை,
வருஷத்திலே ஒரு நாள் பெய்யிறதால வாழைக்குலை தப்பிவிடும். நீர்வேலி யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

அப்படியானால் நீர்வேலி யாழ்பபாணத்தின் பூந்தோட்டம்.  💐 🌹  🌸 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தம்பி நீர்வேலி!  ஐஸ் மழை தோட்டக்காரருக்கு கூடாதையா....
பொயிலை எல்லாத்தையும் கிழிச்சுப்போடும்....அதேமாதிரி வாழை இலையையும்....
மரக்கறியளின்ரை பூ குருத்துக்களையெல்லாம் நாசமக்கிப்போடும் ஐயா...

கொஞ்சம் இந்தப்ப்பக்கம் திருப்பி விடுங்கள் ஐயா வெக்கையால இருக்க முடியல  கோவணம் தான் சரிவரும் போல இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/18/2019 at 6:01 AM, நீர்வேலியான் said:

யாழ்ப்பாணத்திலே ஒரு Switzerland மாதிரி எண்டு சொல்ல வந்தனான்  😎

இனி பெயரை மாற்றி விடுவோம் .....ஐஸ் வேலி என்று.....😀

எங்களுக்கு யாழ்ப்பாணத்து பச்சை பசேள் என்ற நீர்வேலிதான் வேண்டும் ஐஸ்கொட்டும் சுவிஸ் வேண்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, putthan said:

இனி பெயரை மாற்றி விடுவோம் .....ஐஸ் வேலி என்று.....😀

எங்களுக்கு யாழ்ப்பாணத்து பச்சை பசேள் என்ற நீர்வேலிதான் வேண்டும் ஐஸ்கொட்டும் சுவிஸ் வேண்டாம்

நன்றி புத்தன். ஆம் நீர்வேலி பச்சை பசேலான இடம்தான். பருத்தித்துறை வீதி பக்கத்தை தாண்டி உள்ளுக்கை போனா, செம்பாட்டு மண்ணும், அடர்ந்து படர்ந்த வாழை தோட்டங்களும், அவற்றுக்கு இடையில் வெங்காயம், மரவள்ளி, தக்காளி, மிளகாய் என்று... அந்த காலம் ஒரு சொர்க்கம்.  வசதிகள் குறைவு, தேவைகள் குறைவு, கட்டுப்பாடுகளோ அதிகம்,  ஆனால் அனுபவித்ததோ அடங்காதவை.  

On 4/18/2019 at 1:45 AM, தனிக்காட்டு ராஜா said:

கொஞ்சம் இந்தப்ப்பக்கம் திருப்பி விடுங்கள் ஐயா வெக்கையால இருக்க முடியல  கோவணம் தான் சரிவரும் போல இருக்கு 

கோவணத்தை காட்டிக்கொண்டு இருந்தீங்கள் எண்டால், அதையும் உருவி விட்டுவிடுவாங்கள் (அரசியல்வாதிகள்)🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆலங்கட்டி மழை என்றுதான் நினைக்கின்றேன்.  முன்பும் எப்போதாவது இப்படி மழை பெய்யும்..... பனிப்பொழிவு பஞ்சுபோல் பொழியும்.....!   😄

 

Link to comment
Share on other sites

சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

Ãhnliches Foto

இந்த ஆலங்கட்டி மழை  சில நேரங்களில்... தேசிக்காய் அளவிற்கு, 
கார்களின் மேல் விழுந்து, பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நீர்வேலியான் said:

கோவணத்தை காட்டிக்கொண்டு இருந்தீங்கள் எண்டால், அதையும் உருவி விட்டுவிடுவாங்கள் (அரசியல்வாதிகள்)🤣

நீங்க டூ லேட் ஐயா ஆட்கள் பார்ப்பார்கள் என்றதற்க்காக அதை வச்சிருக்கிறம்  ஒரு துண்டு கோவணத்தையெல்லாம் உருவி கனகாலம் ஆச்சுது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.