Jump to content

கிளிநொச்சியை வாட்டியெடுக்கின்றது வறட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நிலவி  வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில்  பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன.

மக்கள் குடி நீர்  உள்ளிட்ட நீர்த்  தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பெரும்  சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.   சிறியளவிலான நீர்த்தேக்கங்களில்  நீர் வற்றியயதனால் கால்நடைகளும் குடிநீரின்றி அவதியுற்றுள்ளன.

DSC00227.JPG

அந்த  வகையில் கிளிநொச்சி  பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவர்  பிரிவுகளில் 15 கிராம அலுவலர் பிரிவுகள் வறட்சியினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

DSC00220.JPG

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பூநகரி பிரதேசத்தில் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டச் செலயகம் ஊடாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

DSC00203.JPG

அத்தோடு  பூநகரி பிரதேச  சபை தங்களுடைய வழமையான செயற்பாட்டில்  குடிநீர் விநியோகித்தை மேற்கொண்டு வருகின்றனர் இது பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு  பகுதியின் தேவையினையே பூர்த்தி செய்கிறது.எனவும் தெரிவித்தார்.

மக்கள் தங்களுக்கு  தேவையான குடி நீர் மற்றும் ஏனைய த் தேவைகளுக்கு  நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத  நிலையில்  காணப்படுகின்றனர்.

DSC00191.JPG

 பூநகரி பிரதேச சபை வாரத்தில் இரண்டு தடவைகள் குடிநீரை விநியோகிக்கிறது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு 60 லீற்றர் வீதம் இதற்காக லீற்றர் ஒன்றுக்கு ஐம்பது சதம் பிரதேச சபைக்கு பொது மக்களால் வழங்கப்படுகிறது. 

இதேவேளை வசதியுள்ள பொது மக்கள் தனியாரிடம் இருந்து லீற்றர் ஒன்றுக்கு ஒரு ரூபா செலுத்தி  தங்களது நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர் என பூநகரி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/54101

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.