Jump to content

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலை இழப்பு: ஆய்வில் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2016-ம் ஆண்டு நவம்பர், 8-ம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நாட்டில் அறிவித்தபின் கடந்த 2 ஆண்டுகளில் 50 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு

 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி கொண்டுவந்தார். கறுப்புபணம், ஊழல், கள்ளநோட்டு ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்ததாக பிரமதர் மோடி தெரிவித்தார். இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிதாக ரூ.500, ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

50 நாட்களில் மக்களிடையே பணப்புழக்கம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று அரசு கூறிய நிலையில், இயல்புக்கு வர 6 மாதங்கள் ஆகியது. வங்கிகளிலும், தபால்நிலையங்களிலும் பணத்தை பெறவும், எடுக்கவும் வரிசையில் நின்று நாடுமுழுவதும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
VDO.AI

பெங்களூரில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம்(ஏபியு) 'ஸ்டேட் ஆப் ஒர்க்கிங் இந்தியா' என்ற தலைப்பில் அந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வாளர்கள், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தில்(சிஎம்ஐஇ) இருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இருந்தே வேலையின்மை அளவு படிப்படியாக அதிகரித்து, பணமதிப்பிழப்புக்குபின் 2018-ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 6 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுக்கு இடையே நாட்டின் வேலையின்மை இருமடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமங்கள் வேலையில் இருப்போரில் சதவீதம் அடிப்படையில் பணமதிப்பிழப்புக்கு முன் அதாவது 2016 ஜனவரி முதல் ஏப்ரல் இடையே 78 சதவீதமாக இருந்தது. ஆனால், 2018, டிசம்பர் மாதத்தில் 68 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல நகர்புறங்களிலும் வேலைசெய்வோரின் எண்ணிக்கையும் சதவீதம் அடிப்படையில் 68 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

இதுகுறித்து 'ஸ்டேட் ஆப் வொர்க்கிங் இந்தியா"'அறிக்கையை தயாரித்த அமித் பசோல் கூறுகையில், " பணமதிப்பிழப்புக்குப் பின் வேலைவாய்ப்பில் புயல்போன்ற பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள், படித்துமுடித்து கனவுகளுடன் வரும் இளைஞர்கள் ஒருபுறம் அதிகரித்து வருகின்றனர்.

ஆனால், அவர்களுக்கு வேலைதரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் உருக்குலைந்து போய்விட்டன,  தனியார் நிறுவனங்களுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையிலான தொடர்பும் பலவீனமடைந்து வேலைஉருவாக்கும் சக்தியை இழந்துவிட்டன.

 காரணம், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவைதான். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டில் அமல்படுத்தப்பட்டபின், நாட்டில் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, அதன்பின் முழுமையாக சீரான, இயல்பு நிலைக்கு வரவில்லை. ஏற்குறைய பணமதிப்பிழப்புக்குப்பின் 50லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர் " எனத் தெரிவித்தார்.

அதிகமான வேலையிழப்பு

இந்த அறிக்கையில், குறிப்பாக, கிராமப்புறங்களில் 20 வயது முதல் 24 வயதுடைய பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து 35வயதுக்கு கீழ்பட்ட நிலையில் உள்ள இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது.

நாடுமுழுவதும் அதிக அளவில் நன்கு படித்தவர்கள், இளைஞர்கள் இடையேதான் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிலும் பெண்கள் மிகமோசமாக வேலையிழப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக அமைப்பு சாரா தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய தொழிலாளர் சந்தையிலும், புள்ளிவிவர அமைப்பு முறையிலும் மிகப்பெரிய கொந்தளிப்பு நிலவுகிறது என்று அறிக்கையின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட மறுப்பு

சமீபத்தில் தேசிய புள்ளியியல் ஆணையத்தில் இருந்து பி.சி. மோகனன் பதவிவிலகினார். கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதிமறுக்கிறது என்பதாக குற்றம்சாட்டி அவர் பதவிவிலகினார். மேலும், பிஎல்எப்எஸ்(Centre’s Periodic Labour Force Survey (PLFS) ) அறிக்கையின்படி, நாட்டில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுகிறது என்று கசிந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அப்போது பி.சி.மோகனன் கூறுகையில், " கிராமபுற வேலையின்மை என்பது சிறியவயதுள்ள அதாவது 15 முதல் 29 வயதுள்ள பிரிவினரிடையேதான் 80 சதவீதம் இருக்கிறது. நகர்புறங்களில் இது 77 சதவீதமாக இருக்கிறது. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு முடித்து வெளியேறும் இளைஞர்களிடையேதான் வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது " எனத் தெரிவித்தார்.

எப்படி சமாளிக்கலாம்

தேசிய நகர்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் மூலம் இந்த வேலையின்மை சூழலை கையாளமுடியும். உதாரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டத்தை செயல்படுத்தி வேலையின்மை அளவைக் குறைக்கலாம் என்று ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆலோசனைப்படி, நகர்புறங்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் தரும் வகையில், 100 நாட்களுக்கு வேலை வழங்கலாம். குறிப்பாக அரசு கட்டிடங்களை  பராமரித்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் பணிகளில் ஈடுபடுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் ஹரினி நாகேந்திரா கூறுகையில், " அடுத்த சில 10 ஆண்டுகளில் நாட்டின் பாதியளவு மக்கள்தொகை நகர்புறங்களில்தான் வசிக்கப்போகிறார்கள். ஆதலால், தனியார் துறைகள்தான் இதுவரை அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்த நிலையில் இந்த திட்டம் அரசு துறையில்வேலைவாய்ப்பை உருவாக்கும்" எனத் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/india/article26863679.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.