Jump to content

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது 2,430 கோடி ரூபாய்!

66.jpg

மக்களவைத் தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மினி சட்டமன்ற இடைத் தேர்தலும் நடப்பதால் மத்திய ஆட்சி, மாநில ஆட்சி இரண்டுக்குமான பரீட்சையாக அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல். வாக்குக்கு பணம் என்பது வெளிப்படையாக எல்லோராலும் கண்டிக்கப்பட்டாலும், இன்னொரு பக்கம் பெரும்பாலான கட்சிகள் வாக்குக்கு பணம் கொடுப்பதை தேர்தல் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாகவே வைத்திருக்கின்றன.

பொதுவாக மக்களவைத் தேர்தல் என்றால் ஒரு தொகுதிக்கு அதிகபட்சம் பத்து லட்சம் வாக்காளர்கள், சட்டமன்றத் தேர்தல் என்றால் அதிகபட்சம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்பதுதான் தேர்தல் களக் கணக்கு.

வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவு வரம்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி செய்யப்படும் இந்த செலவுகள் பற்றிய ஒரு கணக்குக் கண்ணோட்டத்தைப் பார்ப்போம்.

அதிமுக: 960 கோடி ரூபாய்

எட்டு வருடமாக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதிமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறது என்ற புகார் மிகப் பரவலாக எழுந்திருக்கிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர் பையன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனியில் ஆரம்பித்து பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடந்திருக்கிறது.

அதிமுக சார்பில் முதலில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு 500 ரூபாய் கொடுப்பதாக திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்க, நெருங்க களத்தின் நிலையை உணர்ந்த அதிமுக மேலிடம் 500 வேண்டாம் 300 ரூபாய் போதும் என்று முடிவெடுத்துவிட்டனர்.

அதன்படி அதிமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கும் சேர்த்தால் மொத்தம் 600 கோடி ரூபாய் ஆகிறது.

சட்டமன்ற இடைத்தேர்தல்:

சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிகபட்சம் ஒரு லட்சம் பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வாரி வழங்கியிருக்கிறது அதிமுக. அதன்படி ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் ஆகிறது. 18 தொகுதிக்கும் கணக்குப் பார்த்தால் 360 கோடி ரூபாய். ஆக அதிமுகவின் உத்தேச வாக்காளர் பண செலவு 960 கோடி ரூபாய் என்று ஆகிறது. இது சராசரி குறைந்தபட்ச கணக்கீடுதான். ஒவ்வொரு தொகுதியிலும் அந்த வேட்பாளரின் செழிப்புக்கு ஏற்ப பண விநியோகம் இன்னும் அதிகமாகிறது. அது இந்தக் கணக்கில் வரவில்லை.

திமுக- 490 கோடி

திமுக சார்பில் ஒரு மக்களவைத் தொகுதிக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால் பத்து லட்சம் வாக்காளர்களுக்கு தலா 100 அளிக்க முடிவு செய்திருக்கிறது அக்கட்சி. இதுவும் அக்கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான கணக்கு அல்ல. விஐபி வேட்பாளர்களுக்கு இது கூட போய் சேரவில்லை. ஆனால் திமுகவின் அனைத்து வேட்பாளர்களும் சராசரியாக ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாக வைத்துக் கொண்டால் தொகுதிக்கு 20 கோடி வருகிறது. அதன்படி 20 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் மொத்தம் 400 கோடி ரூபாய்.

சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக ஓரு ஓட்டுக்கு 500 ரூபாய் வீதம் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு வழங்குகிறது என்பது கணக்கு. அதன்படி ஒரு தொகுதிக்கு 5 கோடி ரூபாய். 18 தொகுதிகளுக்கும் கணக்கிட்டால் 90 கோடி ரூபாய். ஆக திமுகவின் மொத்த செலவு 490 கோடி ரூபாய்.

அமமுக-580 கோடி ரூபாய் 

அமமுக சார்பில் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கு மட்டுமே தலைமை வாக்காளர்களுக்கு பணம் வழங்க நிதி ஒதுக்கியிருப்பதாகக் கேள்வி. ஆனாலும் அக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் எம்பி தேர்தலுக்கு ஓட்டுக்கு 200 ரூபாய் வழங்கி வருவதாக களத்தில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. அதன்படி சராசரி பத்து லட்சம் ஓட்டுக்கு 200 என்றால் 20 கோடி ஆகிறது. அமமுக 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் பணம் கொடுக்கவில்லை. எனவே திமுக, அதிமுக போல 20 தொகுதிகள் என்று கணக்கிட்டாலும் 20 தொகுதிக்கு 20 கோடி வீதம் 400 கோடி செலவாகிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் அள்ளித் தருகிறது. அதாவது ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் எனில், மொத்தம் 10 கோடி ரூபாய். 18 தொகுதிகளுக்கும் சேர்த்து 180 கோடி ரூபாய். மொத்தம் 20 எம்.பி, 18 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் சேர்த்து அமமுகவின் சராசரி செலவு 580 கோடி ரூபாய். ஆக மொத்தம் 580 கோடி ரூபாய்.

ஆக அதிமுக 960 கோடி ரூபாய், திமுக 490 கோடி ரூபாய், அமமுக 580 கோடி ரூபாய் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தம் 2 ஆயிரத்து 30 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுக்கிற பணம் மட்டுமே வருகிறது. இது மிக மிகக் குறைந்த பட்ச பணம்.

தவிர திமுக, அதிமுக ஆகிய போட்டியிடும் 20 தொகுதிகளுக்கு மட்டுமே கணக்கிடப்பட்டிருக்கிறது. அதிமுக அணியில் போட்டியிடும் பாமக தர்மபுரி, அரக்கோணம் உள்ளிட்ட சில தொகுதிகளில் வாரி வழங்குவதாக சொல்கிறார்கள் மக்கள். அதேபோல தேமுதிக போட்டியிடும் தொகுதிகளிலும் வாக்குக்கு பணம் வழங்கப்படுகிறது.

திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லிம் லீக் ராமநாதபுரத்தில் செழிப்பாக இருப்பதாக வாக்காளர்கள் சொல்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் சிற்சில இடங்களில் கொடுக்கப்படலாம். கம்யூனிஸ்டுகளுக்கு வழியில்லை. ஆக மொத்தம் கூட்டணிக் கணக்கு 400 கோடி ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட தமிழகத்தில் இந்த தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் சுமார் 2,430 கோடி என்பதுதான் குறைந்தபட்சக் கணக்கீடு.

‘நீயும் நானும் செத்துப் போனா

நெத்தியில ஒத்த ரூபா...

நம்ம

ஜனநாயகம் செத்துப் போச்சே- அது

நெத்திக்குதான்

இந்த கத்தை ரூபா!

 

https://minnambalam.com/k/2019/04/17/66

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.