Jump to content

கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Kilinochchi-Karadippokku-Peoples-Protest-1-700x450.jpg

கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் மதுபானசாலை அமைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் பொலிஸார், மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மதுபானசாலையை அமைக்க வேண்டாம் எனத் தெரிவித்து பலமுறை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், மதுபானசாலை ஒன்றை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக பிரயத்தனம் செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Kilinochchi-Karadippokku-Peoples-Protest-2.jpg

Kilinochchi-Karadippokku-Peoples-Protest-3.jpg

http://athavannews.com/கிளிநொச்சியில்-புதிய-மத/

Link to comment
Share on other sites

19 hours ago, தமிழ் சிறி said:

மதுபானசாலை ஒன்றை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக பிரயத்தனம் செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகவிரோதி டக்ளஸ் தேவானந்தா வழியில் பயணிக்கின்றனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகவிரோதி டக்ளஸ் தேவானந்தா வழியில் பயணிக்கின்றனர்!

Ãhnliches Foto

சுமார்  ஒரு வருடத்துக்கு முன்...   தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்பவர்,
யாழ்பாணத்தில் பல  மதுபானசாலைகள்  உள்ளன. கிளிநொச்சிக்கும்   புதிய மதுபானசாலை வேண்டும் என்று, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த செய்தியை.. யாழ். களத்தில்  நான் படித்தேன்.

தமிழரசுக் கட்சியினரை....  சாராயக் கடையை... திறக்கச் சொல்லியா...
பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள் தமிழ் மக்கள்.

பொது அறிவு கேள்வி: மேலே  படத்தில்... ஸ்ரீதரனுக்கு பின்னால், மறைந்து  இருக்கும் முகம் 🧐 யார் என்று கண்டு பிடித்தால்.... நீங்கள், இலங்கை தமிழ் அரசியலில் கெட்டிக்காரர். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சுமார்  ஒரு வருடத்துக்கு முன்...   தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் என்பவர்,
யாழ்பாணத்தில் பல  மதுபானசாலைகள்  உள்ளன. கிளிநொச்சிக்கும்   புதிய மதுபானசாலை வேண்டும் என்று, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்த செய்தியை.. யாழ். களத்தில்  நான் படித்தேன்.

தமிழரசுக் கட்சியினரை....  சாராயக் கடையை... திறக்கச் சொல்லியா...
பாராளுமன்றத்துக்கு அனுப்பினார்கள் தமிழ் மக்கள்.

பொது அறிவு கேள்வி: மேலே  படத்தில்... ஸ்ரீதரனுக்கு பின்னால், மறைந்து  இருக்கும் முகம் 🧐 யார் என்று கண்டு பிடித்தால்.... நீங்கள், இலங்கை தமிழ் அரசியலில் கெட்டிக்காரர். :)

சுமத்திரன் 😁
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரதி said:

சுமத்திரன் 😁
 

ரதி.... நீங்கள், கெட்டிக்காரி.
உங்களிடம்.. பல அவதானிப்புகள் உள்ளது. பாராட்டுக்கள்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

ரதி.... நீங்கள், கெட்டிக்காரி.
உங்களிடம்.. பல அவதானிப்புகள் உள்ளது. பாராட்டுக்கள்.:)

உது நக்கல் தானே 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உது நக்கல் தானே 🤣

நிச்சயமாக,  இல்லை... ரதி.
ஒரு நிகழ்வின் பின்னால்... ஆயிரம் சக்திகள் இயங்கிக் கொண்டு இருக்கும்.
அதனை... பகுப்பாய்வு  அறிந்து, வடி கட்டி.... ஒரு முடிவுக்கு வர  எல்லா மனிதராலும்  முடியாது.

சில புகைப்பட சம்பவங்கள்.... அத்தனையும், மீறி வெளி வந்தாலும்,
ஏதோ.. ஒரு புகைப்படம் தானே... என்று கடந்து செல்பபவர்கள் தான், அதிகம்.

அதனால் தான்.... அரசியல் வாதிகள் எல்லோரும், "கள்வர் கூட்டமாக"  மக்கள் மத்தியில்  வலம் வருகின்றார்கள். இது, ஈழ அரசியலுக்கு... மிக ஆபத்தானது.

"வாயாடி... வடைக்  கிழவிக்கு"   கேட்ட கேள்வியை ரசித்தேன்.     
"ஆபிரிக்கர்களை போல்....  தமிழர்களையும், முகவரி  அற்ற  மனிதர்களாக்க விரும்புகின்றீர்களா?" என்றது  எனக்கு பிடித்து இருந்தது.

மினக்கெட்டு... வடை சுட்ட மனிசி,  வயித்து  எரிச்சலில்...   கருத்து எழுதியவர்களையும்... கேவலப் படுத்திப் போட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பொது அறிவு கேள்வி: மேலே  படத்தில்... ஸ்ரீதரனுக்கு பின்னால், மறைந்து  இருக்கும் முகம் 🧐 யார் என்று கண்டு பிடித்தால்.... நீங்கள், இலங்கை தமிழ் அரசியலில் கெட்டிக்காரர். :)

அகில இலங்கை தமிழர்களின் பிரதிநிதி.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையனதொரு சமூகப் போராட்டம். யாழ்ப்பாணத்தில் இருக்கிறது, ஆகவே கிளிநொச்சிக்கும் வேண்டும் என்று வாதாடுவதற்கு மதுபானம் அத்தியாவசியச் சேவைகளுக்குள்ளோ அல்லது அத்தியாவசியப் பொருட்களுக்குள்ளோ நுழைந்து விட்டதா என்ன?

சமூகச் சீர்கேடுகளுக்கும், வறுமைக்குள் வாழும் அன்றாடங் காய்ச்சிகளின் மடியில் கைவைக்கும் அயோக்கியத்தனதிற்கும் இது வழிகோலப் போகிறது.

சிறிதரனின் சாராய லைசென்ஸ் வீணாய்ப் போனாலும் பரவாயில்லை, ஒரு மாவட்டத்தையாவது விட்டு வைய்யுங்கள்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.