Jump to content

ஒரே வாரத்தில்... தொப்பை குறைய, இந்த தேனீர் குடியுங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு... ஒரு  கிளாஸ் போதும்.  உங்களது பெரிய வயிறு காணாமல் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுவிஷேசக்காரர்களின் அற்புதம் காட்டும் காணொளி மாதிரி இருக்கே! 

சீரகத்தண்ணியை தேநீர் என்று சொல்லலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இது சுவிஷேசக்காரர்களின் அற்புதம் காட்டும் காணொளி மாதிரி இருக்கே! 

சீரகத்தண்ணியை தேநீர் என்று சொல்லலாமா?

கிருபன் ஜீ ..... எனக்கு, வண்டி (தொப்பை)  இல்லாததால்.  இதனை குடித்துப் பார்த்து, 
வண்டி குறைந்து விட்டதா... என்று,  உறுதி செய்ய முடியாமல் உள்ளது. :grin:

உங்களுக்கு தெரிந்தவர்கள், பெரிய வண்டியுடன் இருந்தால்...
அவர்களை, ஒரு கிழமை மட்டும் குடித்து பார்க்கச் சொல்லி விட்டு,
வயித்துப் பகுதியை... உன்னிப்பாக அவதானித்து பார்த்து,
"சக்ஸஸ்"  என்றால்.... எனக்கு ஒரு வார்த்தை சொல்லுங்களேன். :grin:

தலைப்பிலை... "தேநீர்"  என்று  போட்டால் தான்....  ஆக்கள் உள்ளுக்கு வந்து பாப்பினம். 
சீரகத் தண்ணி என்றால்....  ஒரு சனமும்  உள்ளுக்கு வராது. 😝 இது எல்லாம்...  பார்வையாளர்களிடம், தகவல்களை கொண்டு போய் சேர்க்கும்,  தொழில் ரகசியம் (பிசினஸ் ரெக்னிக்) அதை நீங்கள் கண்டுகொள்ளப் படாது. 😎

இதற்கு தேவையான... நற்சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி  எல்லாம்...  சர்வ சாதாரணமாக என்றும் வீட்டில் இருப்பவை. ஆனால்... கருஞ் சீரகத்தை இலங்கையிலும், இங்கும்  நாங்கள் பாவிக்கவில்லை, 
தமிழ் கடைகளில்....  அது விற்கிறார்களா என்றும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ ..... எனக்கு, வண்டி (தொப்பை)  இல்லாததால்.  இதனை குடித்துப் பார்த்து, 
வண்டி குறைந்து விட்டதா...  உறுதி செய்ய முடியாமல் உள்ளது.

எங்கை ஒருக்கா படத்தைப் போடுங்க பார்க்கலாம்.
அதுக்கு பிறகு நீங்க குடிக்க வேண்டுமா இல்லையா என்று நாங்க முடிவு சொல்லுவோம்.

44 minutes ago, தமிழ் சிறி said:

இதற்கு தேவையான... நற்சீரகம், பெருஞ்சீரகம், இஞ்சி  எல்லாம்...  சர்வ சாதாரணமாக என்றும் வீட்டில் இருப்பவை. ஆனால்... கருஞ் சீரகத்தை இலங்கையிலும், இங்கும்  நாங்கள் பாவிக்கவில்லை, 
தமிழ் கடைகளில்....  அது விற்கிறார்களா என்றும் தெரியவில்லை.

கருஞ்சீரகத்தில் நிறைய விடயம் உள்ளதாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்கை ஒருக்கா படத்தைப் போடுங்க பார்க்கலாம்.
அதுக்கு பிறகு நீங்க குடிக்க வேண்டுமா இல்லையா என்று நாங்க முடிவு சொல்லுவோம்.

கருஞ்சீரகத்தில் நிறைய விடயம் உள்ளதாமே?

Bildergebnis für camera light gif

ஈழப்பிரியன்.....   கமெராவால்,  "பளிச் பளிச்"  என்று படம் எடுத்தால், 
ஆயுள் குறைந்து போகும் என்பதால்... இது வரை நான் ஒரு படமும் எடுக்கவில்லை. 🤣
எனது... "பாஸ் போட்" படம் அனுப்பலாம்தான்... 
ஆனால்... அதில், வண்டி தெரியாது என்பதால், அதை  அனுப்பி பிரயோசனம் இல்லை.  :grin:

 

Bildergebnis für Schwarzkümmel,

ஓம்... ஈழப்பிரியன். கருஞ் சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உண்டு என்று,
பல ஜேர்மன் ஆட்கள் சொல்கிறார்கள்.  எமக்குத்தான்... நல்ல விடயங்கள் தெரியாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கருஞ் சீரகத்தை இலங்கையிலும், இங்கும்  நாங்கள் பாவிக்கவில்லை, 
தமிழ் கடைகளில்....  அது விற்கிறார்களா என்றும் தெரியவில்லை.

நான் இருக்குமிடத்தில் இருந்து பொடிநடையில் உள்ள தமிழ்க்கடையில் கருஞ்சீரகம், கொள்ளு, கசகசா, மற்றும் இன்னோரன்ன பொருட்களை வாங்கலாம்!

தே இலை இல்லாததை தேத்தண்ணி என்று பேக்காட்டி குடிக்கப்பண்ண ஏலாது!

நான் காலையில் விரும்பிக் குடிக்கும் பானம் செய்வது இலகு! மிதமான சூடுள்ள வெந்நீரில் மனூக்கா தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு நுள்ளு மஞ்சள், அரைத் தேசிக்காய் சாறு இவற்றை கலக்கி குடித்தால் எல்லா சள்ளையும் காணாமல் போகுமாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

நான் இருக்குமிடத்தில் இருந்து பொடிநடையில் உள்ள தமிழ்க்கடையில் கருஞ்சீரகம், கொள்ளு, கசகசா, மற்றும் இன்னோரன்ன பொருட்களை வாங்கலாம்!

தே இலை இல்லாததை தேத்தண்ணி என்று பேக்காட்டி குடிக்கப்பண்ண ஏலாது!

நான் காலையில் விரும்பிக் குடிக்கும் பானம் செய்வது இலகு! மிதமான சூடுள்ள வெந்நீரில் மனூக்கா தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு நுள்ளு மஞ்சள், அரைத் தேசிக்காய் சாறு இவற்றை கலக்கி குடித்தால் எல்லா சள்ளையும் காணாமல் போகுமாம்!

எங்க சள்ளை இல்லாத மூஞ்சியை ஒருக்கால் பார்ப்பம் 😶
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் இருக்குமிடத்தில் இருந்து பொடிநடையில் உள்ள தமிழ்க்கடையில் கருஞ்சீரகம், கொள்ளு, கசகசா, மற்றும் இன்னோரன்ன பொருட்களை வாங்கலாம்!

தே இலை இல்லாததை தேத்தண்ணி என்று பேக்காட்டி குடிக்கப்பண்ண ஏலாது!

நான் காலையில் விரும்பிக் குடிக்கும் பானம் செய்வது இலகு! மிதமான சூடுள்ள வெந்நீரில் மனூக்கா தேன் ஒரு தேக்கரண்டி, ஒரு நுள்ளு மஞ்சள், அரைத் தேசிக்காய் சாறு இவற்றை கலக்கி குடித்தால் எல்லா சள்ளையும் காணாமல் போகுமாம்!

கிருபன் ஜீ.... நீங்கள் இங்கிலாந்தில் வசிக்கின்றீர்கள்.
என்னைப்  பொறுத்தவரையில்.. இங்கிலாந்து என்பது, குட்டி இந்தியா.
அங்கு  இந்தியாவில் உள்ள பொருட்கள் எல்லாம் வாங்கலாம் தானே...

ஆண்களுக்கு..... 40 வயதிற்கு மேல், வண்டி வைக்கப் பார்க்கும்.
அவர்கள்  எல்லோரின் உணவு பழக்க வழக்கங்களும், அவர்களின் அன்றாட  வேலை எப்படிப் பட்டது, என்பதைப்   பொறுத்தே... வண்டி, தொந்தி, சள்ளை, தொப்பை... எல்லாம் வரும்.  

இதற்காக... ஒவ்வொருவரும்... ஒவ்வொரு மருத்துவ வழிகளை தேடுவார்கள்.
சிலது... உடனே அவர்களுக்கு, வெற்றியளிக்கும்.

இரண்டு நாட்களுக்கு, ஒரு முறை, காலையில்  எழும்பியவுடன்,
100 கிராம் இஞ்சியை வெட்டி, தேநீருக்குள்  போட்டு, கடித்து சாப்பிடுவேன்.
அத்துடன், சில நிமிட இடை வெளிகளில் சிறு துண்டு பாண், அதற்கு மேல்.... கடைகளில் வாங்கும் சீரக தேநீர் போன்றவற்ரை  குடித்து விட்டு, வேலைக்குப் போனால்.... உடம்பில், ஒரு புது உற்சாகம் பிறக்கும்.

எனக்கு வேலை ஆரம்பிப்பது.. காலை 7:30 மணி என்றால்... இவைகளை எல்லாம் ரசித்து, குடித்து.... அன்றைய  செய்திகளை,  வாசித்து, கருத்து எழுதி, செய்திகளை பகிர்வது போல்  "இன்பம்" எனக்கு இருப்பதால், காலை  3:30 மணிக்கே எழுந்து விடுவேன். 

இவ்வளவிற்கும்... வேலை இடம்,  நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் தான் உள்ளது.
ஆறுதலாக போனாலும்...  ஐந்து நிமிடத்தில், அங்கு நின்று விடுவேன்.

மனிசி... முந்தி, எனக்கு  "லூஸ்" எண்டு பேசினவ. 🤠
"நாய் வாலை, நிமித்த முடியாது" என்று,  தெரிந்து விட்டது போலை... 🤣
இப்ப....  ஒண்டும் சொல்லுறதில்லை.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Bildergebnis für camera light gif

ஈழப்பிரியன்.....   கமெராவால்,  "பளிச் பளிச்"  என்று படம் எடுத்தால், 
ஆயுள் குறைந்து போகும் என்பதால்... இது வரை நான் ஒரு படமும் எடுக்கவில்லை. 🤣
எனது... "பாஸ் போட்" படம் அனுப்பலாம்தான்... 
ஆனால்... அதில், வண்டி தெரியாது என்பதால், அதை  அனுப்பி பிரயோசனம் இல்லை.  :grin:

 

Bildergebnis für Schwarzkümmel,

ஓம்... ஈழப்பிரியன். கருஞ் சீரகத்தில் பல மருத்துவ குணங்கள் உண்டு என்று,
பல ஜேர்மன் ஆட்கள் சொல்கிறார்கள்.  எமக்குத்தான்... நல்ல விடயங்கள் தெரியாமல் உள்ளது.

சிறி ,
உங்கள் வண்டியின் படத்தையாவது எடுத்துப்போடுங்கள், அது உங்களதுதானா என்று ஊகிக்கலாம். படமெடுப்பதால் வண்டிக்கு ஆயுள் குறையாது என்று நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தமிழ் சிறி said:

மனிசி... முந்தி, எனக்கு  "லூஸ்" எண்டு பேசினவ. 🤠
"நாய் வாலை, நிமித்த முடியாது" என்று,  தெரிந்து விட்டது போலை... 🤣
இப்ப....  ஒண்டும் சொல்லுதில்லை.  :grin:

வீட்டுக்கு வீடு வாசல் படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நீர்வேலியான் said:

சிறி ,
உங்கள் வண்டியின் படத்தையாவது எடுத்துப்போடுங்கள், அது உங்களதுதானா என்று ஊகிக்கலாம். படமெடுப்பதால் வண்டிக்கு ஆயுள் குறையாது என்று நினைக்கிறன் 

Ãhnliches Foto

நீர்வேலியான்... நீங்கள், கேட்ட படியால்....
வண்டியின் படத்தை, சுடச் சுட படம் எடுத்து அனுப்பியுள்ளேன். :)

ஹ்ம்ம்... என்னவோ... நீங்கள், நாவூறு படுத்திப் போடுவீங்களோ... என்று பயம்மாய்.  இருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நீர்வேலியான்... நீங்கள், கேட்ட படியால்....
வண்டியின் படத்தை, சுடச் சுட படம் எடுத்து அனுப்பியுள்ளேன். :)

ஹ்ம்ம்... என்னவோ... நீங்கள், நாவூறு படுத்திப் போடுவீங்களோ... என்று பயம்மாய்.  இருக்கு. :grin:

உண்மையிலேயே பொறாமையாதான் உள்ளது.........

உடனடியாக சுட்டு போடும் உங்கள் திறமையை பார்க்க வயிறு பத்தி எரியுது.😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு, ஒரு முறை, காலையில்  எழும்பியவுடன்,
100 கிராம் இஞ்சியை வெட்டி, தேநீருக்குள்  போட்டு, கடித்து சாப்பிடுவேன்.

இஞ்சி திண்ட குரங்கு மாதிரி ஆகிவிடுவீர்களே!

நானும் 2017இல் ஆரோக்கியம் முக்கியம் என்று நல்ல சாப்பாடுகளை ஒரு மூன்று மாதம் தொடர்ந்து உண்டு நல்ல பயனையும் பெற்றேன். ஆனால் உணவுகளை மாற்றி மாற்றி சாப்பிடவேண்டும். இல்லையேல் உடல் பழக்கப்பட்டு ஆரோக்கியம் இல்லாமல் போய்விடும்!

அந்த மூன்று மாதங்களில் தேநீரோ, கோப்பியோ அருந்தவில்லை ( ஆனால் அப்படி ஒரு கட்டுப்பாடும் இருக்கவில்லை). சீனி இல்லாமல் தேநீர், கோப்பி குடித்துப் பழக்கம் இல்லாததால் முற்றாகக் கைவிட்டிருந்தேன். எனினும் சீரகத்தண்ணி, தேனும் எலுமிச்சைப் பழமும் கலந்த மிதச்சூடுள்ள நீர், இன்னும் பல காலையில் குடித்துவந்தேன்!

 

இப்போது பழையபடி வேதாளம் முருங்கைமரத்தில் ஏறியமாதிரி தினமும் பல சொக்கிலேற் சாப்பிட்டு உடம்பைத் தேற்றிவருகின்றேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நீர்வேலியான்... நீங்கள், கேட்ட படியால்....
வண்டியின் படத்தை, சுடச் சுட படம் எடுத்து அனுப்பியுள்ளேன். :)

ஹ்ம்ம்... என்னவோ... நீங்கள், நாவூறு படுத்திப் போடுவீங்களோ... என்று பயம்மாய்.  இருக்கு. :grin:

எல்லோரும் சிக்ஸ் பாக்குக்கு அலையுறாங்கள் இங்க டுவல் பாக்காய் கிடக்கு.மிளகாய் சுத்தி போடுங்கோ......!  👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு வேலை ஆரம்பிப்பது.. காலை 7:30 மணி என்றால்... இவைகளை எல்லாம் ரசித்து, குடித்து.... அன்றைய  செய்திகளை,  வாசித்து, கருத்து எழுதி, செய்திகளை பகிர்வது போல்  "இன்பம்" எனக்கு இருப்பதால், காலை  3:30 மணிக்கே எழுந்து விடுவேன். 

தம்பி படிக்கிற காலத்தில இப்படி எழும்பியிருந்தால் இன்று பெரிய நிபுணராக வந்திருக்கலாம்.
எழுப்ப எழுப்ப இழுத்து போர்த்திக் கொண்டு படுத்துவிட்டு
இப்ப படு படு என்னும் போது எழும்பி இருக்கிறீர்கள்.
ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

6 hours ago, suvy said:

எல்லோரும் சிக்ஸ் பாக்குக்கு அலையுறாங்கள் இங்க டுவல் பாக்காய் கிடக்கு.மிளகாய் சுத்தி போடுங்கோ......!  👍

சுவி இது சிறியின் மகனின் படம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.